Monday, 13 March 2017

விறன்மிண்டர்   சுந்தரர்   அவ்வாறு   அந்த   மண்டபத்திலுள்ள   அத்தனை   அடியார்களையும்   வணங்காமல்   தாண்டி   சென்றது   அவருக்கு   பெரும்   கோபத்தை   ஏற்படுத்தியது .  கோபம்   தாளாமல்   இத்தகைய   அடியார்கள்   கூட்டத்தை   மதியாமல்   தாண்டி   சென்ற   வன்தொண்டர்   சுந்தரர்   நமக்கு   தேவை   இல்லை   என்று   சுந்தரர்   காதில்   விழுமாறு   உரக்க   சொன்னார் .   அதை   செவிமடுத்த   சுந்தரர்   அதிர்ந்து   போனார் .  மனத்தால்   தான்   அவர்களிடம்   இத்தனை   மரியாதை   வைத்தும்   புற  வணக்கத்தையே   மதித்து   அவர்   சொன்ன   சொற்கள்   அவரை   முள்ளாக   தைத்தன .  விறன்மிண்டர்   அதோடு   நிறுத்தாமல்   இவ்வாறு   செய்த   சுந்தரரை   ஆட்கொண்ட     சிவபெருமானும்   தேவை   இல்லை   என்று   உரக்க    சொன்னார் .  

No comments:

Post a Comment