அப்பருடைய இந்த கோலத்தை கண்டு மனம் பொறாமல் ஈசன் ஒரு முனிவர் வடிவில் அங்கு தோன்றினார் . அங்கு ஒரு குளத்தையும் உண்டாக்கினார் . அவர் அப்பர் இருக்குமிடம் சென்று அவரை நோக்கி ' ' எங்கே இத்தனை கடுமையான பாதையில் இந்த பரிதாபமான கோலத்தில் செல்கிறீர்கள் ?' என்று வினவினார் . எம்பிரான் உமை அன்னையுடன் அருட்காட்சி அருளும் கைலாயத்தை நோக்கி செல்கிறேன் என்று அப்பர் பெருமையுடன் பதிலுரைத்தார் . முனிவர் கலகல என்று நகைத்து ' உம்மை காண பரிதாபமாக இருக்கிறது . கைலாயம் செல்வது சாதாரண காரியமா ? விண்ணவர்களுக்கும் மிக அரிதான கைலாயத்தை மானிடராக காண நினைப்பது பேதைமை . திரும்பி சென்று விடுங்கள் . அதுதான் உமக்கு நல்லது என்று உரைத்தார் . அப்பர் முகம் வாடியவராய் இத்தனை சிரமப்பட்டு இத்தனை தூரம் வந்து விட்டேன். அக்காட்சியை காணாமல் போவதாக உத்தேசம் இல்லை . என்று பிடிவாதமாக உரைத்தார் . அவர் உறுதியை கண்டு ஈசன் மகிழ்ந்து மறைந்து போனார் .
Saturday 30 June 2018
Friday 29 June 2018
கைலை காட்சியை காணும் ஆவல் மனமெல்லாம் நிறைந்திருக்க அவர் கங்கை நதியை கடந்து நடக்கலானார் . காடு ,மேடு பள்ளம் கல் முள்ளு எதாலும் அவர் கவனத்தை சிதற அடிக்க முடியவில்லை . வாயில் பஞ்சாக்ஷரமும் மனதில் வேறு சிந்தனையும் இன்றி இரவு பகல் பசி தாகம் எதுவும் பாராமல் நடந்தார் . சில காலம் கிடைத்த கனிகளை உண்டார் . பிறகு அதையும் தவிர்த்தார் . நடந்து நடந்து அவர் பாதங்கள் தேய்ந்து உதிரம் கொட்டியது. அதற்குமேல் நடக்க இயலாமல் கைகளை ஊன்றி தவழ தொடங்கினார் . முழங்காலும் தேய்ந்து பழுதாக மார்பால் தேய்த்து நகர்ந்தார் உருண்டார் . உடல் முழுவதும் ரத்தவெள்ளமாக ஆயிற்று . ஆனாலும் அவருடைய உள்ளம் தளர்ந்தார் இல்லை .
Tuesday 26 June 2018
அப்பர்பெருமான் காளத்திநாதரை சேவித்ததும் அவர் மனதில் எம்பெருமான் கைலாயநாதராக காட்சி அளிக்கும் கோலத்தை காண பெரும் ஆவல் எழுந்தது . மனதில் பொங்கி எழுந்த ஆவலை அடக்கமுடியாதவராய் உடனே புறப்பட்டார் . மனதில் ஐயனின் நினைவும் உதடுகளில் அவர் நாமமுமாக பல மலைகள் பல நதிகளை கடந்து வாரணாசி வந்து சேர்ந்தார் . அங்கு எம்பெருமானை மனம் குளிர சேவித்துக்கொண்டு தன்னுடன் வந்தவர்களை அங்கேயே விட்டு விட்டு அவர் கயிலையை நோக்கி புறப்பட்டார் . கைலை பயணமென்றால் சாதாரணமா ? அவர் பட்ட துன்பம் எத்தனை கல் நெஞ்சங்களையும் உருக வைக்கும் .
Saturday 23 June 2018
காஞ்சி ஏகாம்பரேஸ்வரரை மனதார தொழுத பின் அருகில் எம்பிரான் தேவர்களை காக்க பண்டாசுரனை ஹவிஸாக்கி ஹோமத்தீயிலிட்டு அழித்த கச்சிமயானம் மற்றும் திருமேற்றளி போன்ற இடங்களை சேவித்துக்கொண்டு முறுபடி காஞ்சி திரும்பினார் . பிறகு மயிலை , திருக்கழுக்குன்றம், திருவான்மியூர் , திருவொற்றியூர் முதலிய தலங்களை சேவித்துக்கொண்டு திருக்காளத்தியை அடைந்தார் . பொன்முகலி நதியில் நீராடி காளத்திநாதரையும் அவர் பக்கம் நிற்கும் கண்ணப்பரையும் சேவித்துக்கொண்டார் .
Monday 18 June 2018
கிடைக்கப்பெறாத இப்பேறை பெற்ற அப்பர்பெருமான் திருப்பைஞிலி பெருமானை மனமுருக தொழுது பதிகங்கள் பாடி மகிழ்ந்தார். அங்கு சில நாட்கள் உழவார பணி செய்து பிறகு தொண்டைநாட்டு திருத்தலங்களை சேவிக்க புறப்பட்டார் . அயனும் மாலும் அடிமுடி காண முடியாத பெரும் ஜோதியாக நின்ற எம்பெருமான் கோயில்கொண்டிருக்கு திருவண்ணாமலையை சேவித்து மகிழ்ந்தார் . பிறகு காஞ்சி அடைந் தார் . சமணர்களின் போதனையால் பல்லவ மன்னனால் பலவித சித்திரவதைக்கு ஆளாகி அத்தனையிலிருந்தும் ஈசனின் பெரும் கருணையால் மீண்டுவந்த அதிசயத்தை கேள்விப்பட்டிருந்த மக்கள் அவரை வரவேற்க பெரும் திரளாக கூடி இருந்தனர் . அதை கண்டு அப்பர் மெய்சிலிர்த்து போனார் . பதிகங்களும் தாண்டகங்களும் பாடி ஈசனை மகிழ்வித்து பக்திக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்த அப்பெருமகனை மக்கள் ஆரவாரத்துடன் எதிர்கொண்டு வரவேற்றனர் . அவரும் ஏகாம்பரேஸ்வரரை மனமுருக பாடி தொழுது ஆனந்தம் எய்தினார் .
Tuesday 12 June 2018
கரடுமுரடான அப்பாதையில் அப்பர் நடந்து மிக களைத்து போனார் . ஆனாலும் விடாது தொடர்ந்து நடக்கலானார் . ஈசன் பக்தனின் இந்த அவதியை காண பொறுப்பாரா? உடனே அப்பாதையில் சிறு சோலையையும் ஒரு தெளிந்த நீர் குளத்தையும் அமைத்தார் . பக்தனுக்காக கட்டு சோறையும் கையில் எடுத்துக்கொண்டு அப்பர் முன் சென்று உங்களை பார்த்தால் மிகவும் களைத்துப்போய் பசியுடன் இருப்பதாக தெரிகிறது . . அங்குள்ள குளத்தில் கை கால் சுத்தம் செய்து கொண்டு வாருங்கள் . என்னிடம் உள்ள அன்னத்தை உண்டு பசியாருங்கள் என்று அன்புடன் அழைத்தார் . நாவுக்கரசரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் . இருவரும் பேசிக்கொண்டே சிறிது நேரம் கழித்தனர் . அப்பர் திருப்பைஞிலி செல்வதாக கூறினார் . தானும் அவ்வழிதான் செல்வதாக கூறி சேர்ந்தே செல்லலாம் என்று கூறி இருவரும் நடந்தனர் . கோயிலை நெருங்கும்போது திடீரென அவர் மறைந்தார். அவர் ஆ லையத்துள் சென்று மறைந்தார் . அப்போதுதான் அப்பர் தன்னுடன் இததனை நேரம் இருந்தது தன் பசி தாகம் உணர்ந்து தாயினும் பரிவுடன் தன் பசியாற்றியது ஈசனே என்று உணர்ந்து மெயசிலிர்த்து போனார் . உள்ளம் உருக பாடி தொழுதார் .
Sunday 10 June 2018
சமணர்களிடமிருந்து வடதளி ஆலயத்தை மீட்டு அங்கு எம்பெருமானுக்கு வழிபாடுகள் குறைவர தொடங்கியதும் மன நிம்மதி அடைந்த அப்பர் பெருமான் தன் தலயாத்திரையை மீண்டும் தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள க்ஷேத்திரங்களை சேவிக்க யாத்திரையை தொடர்ந்தார் . ஒரு சிலந்தியும் யானையும் ஐயன் மீதுள்ள பக்தியால் போட்டியில் மடிய அவ்விரு ஜீவன்களுக்கும் உயர் பிறவி அளித்த ஜம்புகேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் திவானைக்காவலை அடைந்து அங்கு துதித்து மகிழ்ந்தார் . தொடர்ந்து திருச்சி , பராய்த்துறை போன்ற தலங்களை சேவித்து கொண்டு பதிகங்கள் பாடி துதித்து மன நிறைவு பெற்றார் . பிறகு காவிரியை கடந்து திருப்பைஞிலியை நோக்கி புறப்பட்டார் . அப்பாதையில் தான் அவர் யாருக்கும் அரிதான அப்பெரும்பேரை ஐயனிடமிருந்து பெற்றார் .
Tuesday 5 June 2018
வடதளி ஆலயத்திற்கு அப்பர் வரப்போகிறார் என்ற செய்தி கேட்டு மக்கள் பெரும் நம்பிக்கையுடன் இனி தங்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என்று பெரும் ஆவலுடன் அவருக்கு பெரும் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யலானார்கள் . அப்பரும் மக்களின் இந்த வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றார் . மக்கள் அங்குள்ள நிலைமையை கூறியதை கேட்டு மிக்க அதிர்ச்சி அடைந்த நாவுக்கரசர் அங்கு சமணர்களால் ஏற்பட்ட இக்கொடுமையை தீர்க்காமல் அங்கிருந்து நகருவதில்லை என உறுதி பூண்டார் . அவர் ஆலயம் சென்று 'ஐயனே சமணர்களால் இத்தகைய பெரும் துன்பத்திற்கு ஆளாகி உன்னை தரிசிக்க முடியாமல் தவிக்கும் அப்பாவி மக்களை நீ இவ்விதம் சோதிக்கலாமா ? அவர்கள் துயரை தீர்க்கும்வரை நான் உணவு அருந்த மாட்டேன் . இது சத்தியம் ' என்று கூறி அங்கு தங்கினார் . மக்கள் அவர் உணவு அருந்தாமல் பட்டினி கிடப்பதை காண சகியாமல் தவித்தனர் . இதற்கு மேல் ஐயன் சோதிப்பாரா? அன்றிரவு ஈசன் அரசனின் கனவில் தோன்றி ' அரசனே உன்கடமையை மறந்து சமணர்களால் மக்கள் படும் துன்பத்தை அறிந்தும் கடமையை செய்ய தாமதம் செய்யலாமா' என்று கூறி தன் திருமேனி புதைத்து வைக்கப்பட்ட இடத்தையும் அவருக்கு காட்டிக்கொடுத்து மறைந்தார் . அரசன் திடுக்கிட்டு எழுந்து தன் தவறை உணர்ந்து உடனே ஆலயத்திற்கு சென்று அப்பரை வணங்கி அவருடன் ஈசன் அடையாளம் காட்டிய இடத்திற்கு சென்று அத்திருமேனியை மீட்டு அப்பர் அடிகளால் மறுபடி பிரதிஷ்டை செய்வித்து மகிழ்ந்தார் மக்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர் . இதற்கு காரணமான சமணர்களும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர் .
Monday 4 June 2018
நாவுக்கரசர் சம்பந்தரை பற்றிய கவலையில் மனசோர்வுடன் திருமறைக்காட்டிலிருந்து புறப்பட்டு தல யாத்திரையில் திருநாகைக்காரோணம் திருவீழிமழலை முதலிய இடங்களை தரிசித்து கொண்டு திரு ஆவடுதுறையை அடைந்து சம்பந்தருக்கு ஆயிரம் பொன் அளித்து அருளிய கருணையை போற்றி 'மாயிருஞாலம் எல்லாம் ' எனும் பதிகம் பாடி ஐயனை மகிழ்வித்தார் . அங்கிருந்து பழையாறை சென்றார் . அப்போது அங்கு சமணர்கள் ஆதிக்கம் ஓங்கி இருந்தது . அவர்களின் சூழ்ச்சியால் வடதளி ஆலயத்தில் ஐயனின் லிங்க திருமேனி களவாடப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது . ஆதலால் பூஜை நிறுத்தப்பட்டிருந்தது . மக்கள் பெரும் துக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள் . நாவுக்கரசர் வருகிறார் எனும் செய்தி அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளித்தது .
Friday 1 June 2018
அப்பர்பெருமான் மனம் நிறைவோடு திருவாய்மூர் ஐயனை தரிசித்து ஆனந்தம் அடைந்தார் . பிறகு சம்பந்தரோடு மடத்தில் தங்கிவிட்டு காலை திருமறைகாடை அடைந்தனர் . அங்கிருக்கும்போது மதுரையிலிருந்து அரசி மங்கையற்கரசியரும் அமைச்சர் குலச்சிறையாரும் அனுப்பியதாக தூதர்கள் சம்பந்தரை தேடி வந்தனர் . பாண்டிய மன்னன் சமணர்களுக்கு அடிமையாக இருப்பதால் சைவர்கள் பெரும் துன்பம் அடைவதால் சம்பந்தர் வந்து சைவம் மறுபடி தழைக்க செய்ய வேண்டும் என்று அரசி மிக பணிவோடு வேண்டி கொள்வதாக கேட்டுக்கொண்டனர் . அப்பர் சம ணர்களிடம் தான் அனுபவித்த கொடும் துன்பங்களை கூறி அங்கு செல்ல வேண்டாம் என்று சம்பந்தரிடம் மன்றாடி கேட்டுக்கொண்டார் . ஆனால் சம்பந்தர் சைவர்களின் துயர் துடைப்பது தமது தலையாய கடமை என்று கூறி மிக பணிவோடு மறுத்துவிட்டார் . அப்பர் மனக்கவலையோடு திருமறைக்காட்டை விட்டு கிளம்பி தன் தலயாத்திரையை தொடர்ந்தார் .
Subscribe to:
Posts (Atom)