தட்சிணா மூர்த்தியின் சின்முத்திரை அதையே விளக்குகிறது . அவர் சொல்லாமல் சொல்லும் விளக்கம் இது . பசு பதியுடன் இணைந்து அவருள் ஐக்கியமாவது . அந்நிலை அடைய திருமுலர் நமக்கு அளிக்கும் உபதேசம் திருமந்திரமாகும் .
Friday 29 January 2016
Wednesday 27 January 2016
pasupathi
திருமூலரின் உபதேசம் நாம் உய்வதற்கு பெரும் வழிகாட்டி . பசு , பதி .பாசம் இவை பற்றி விளக்குகிறார் . பதி சிவம் . பசு ஆன்மாக்கள் . பாசம் மாயை . இம்மூன்றுமே அநாதியானது . அழிவில்லாதது . அந்த ஈசன் அருளால் ஆன்மாக்கள் அவரவர் பாவபுண்ணியங்களை பொறுத்து இம்மண்ணில் பிறவி எடுக்கின்றன . இவ்வுலகில் மாயையில் சிக்குண்டு பல வகை பாவ புண்ணியங்களுக்கு ஆளாகின்றன . ஈசனால் உண்டாக்கப்பட்ட வேத ஆகமங்கள் நமக்கு வழி காட்டுகின்றன . அதையே அடிப்படையாக கொண்டு திருமுலர் நமக்கு இவ்வுபதேசத்தை வழங்குகின்றார் . இதை பின்பற்றி வாழ்பவர்கள் பிறவா நிலை எய்துகின்றனர் .
Friday 22 January 2016
திருமந்திரம் என்கிற நூலை நமக்கு அளித்த பெருமானார் 'தான் பெற்ற இன்பம் பெருக இவ்வயகம் ' என்ற தம் கூற்றுக்கு ஒப்ப தாம் நந்தி தேவரிடம் கற்ற அனைத்தையும் இவ்வுலகம் உய்வதற்கு நமக்கு கொடையாய் அளித்துள்ளார் . எவ்வாறு பெரும் யோகிகள் பல்லாண்டு எவ்வித பிணியும் இல்லாமல் நீண்ட ஆயுளுடன் நலமாக பலவிதமான யோக சித்திகளுடன் வாழ்கிறார்கள் என்பதை விளக்குவதே இவ்வரிய நூல் . நிறைய அரிய பயிற்ச்சிகள் தேவை படுவதை விளக்குகிறார் .
Friday 15 January 2016
திருமூலர் திருமந்திரத்தை தை மாதம் முதல் நாள் எழுத தொடங்கியதாக கூறப்படுகிறது . தன்னுடைய இப்பெரும் படைப்பை சிவபிரானின் பெருமையை சொல்லி தொடங்குகிறார் . நந்தி தேவரை ஈசனுக்கு ஒப்பானவராகவே குறிப்பிடுகிறார் . நந்தி தேவரிடம் கல்வி பெற்றதை விளக்குகிறார் .
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடெண் மரு மாமே |
சனகாதி முனிவர்கள் நால்வர் , சிவயோக மாமுனி , பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதர் போன்றோருடன் எண்மர் நந்தி தேவரிடம் ஆகமங்கள் பயின்றதாக குறிப்பிடுகிறார் .
நந்தி அருள் பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி
மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடெண் மரு மாமே |
சனகாதி முனிவர்கள் நால்வர் , சிவயோக மாமுனி , பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாதர் போன்றோருடன் எண்மர் நந்தி தேவரிடம் ஆகமங்கள் பயின்றதாக குறிப்பிடுகிறார் .
Sunday 10 January 2016
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
ஈசனை அடைய ஒரே மார்க்கம் அன்பு, அனபு ஒன்றே . அது அன்றி வேறில்லை .
''அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி '' வேறு யார்க்கும் எய்த ஒண்ணாதே . என்று அழுத்தமாக கூறுகிறார் . உடலை வருத்தி செய்யும் எவ்விதமான பிரார்த்தனைகளோ , சடங்குகளோ ஈசனை குளிர வைக்காது , அன்பே அவரை மகிழ்விக்கும் .அன்புக்கு கட்டுப்படும் அவர் தம் அடியோர்களுக்காக எத்தனை இறங்கி வருகிறார் என்பதை நாயன்மார்கள் கதைகளில் நாம் கண்டோம் . கூலி ஆளாக வந்து பிரம்படி படுகிறார் . பொதி சோறு சுமக்கிறார் . வீதியில் நடந்து தூது போகிறார் .அன்புக்கு அடிபணிந்து எதையும் செய்ய தயங்காதவர் . திருமூலர் இதையே அழுத்தமாக கூறுகிறார் .
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
ஈசனை அடைய ஒரே மார்க்கம் அன்பு, அனபு ஒன்றே . அது அன்றி வேறில்லை .
''அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி '' வேறு யார்க்கும் எய்த ஒண்ணாதே . என்று அழுத்தமாக கூறுகிறார் . உடலை வருத்தி செய்யும் எவ்விதமான பிரார்த்தனைகளோ , சடங்குகளோ ஈசனை குளிர வைக்காது , அன்பே அவரை மகிழ்விக்கும் .அன்புக்கு கட்டுப்படும் அவர் தம் அடியோர்களுக்காக எத்தனை இறங்கி வருகிறார் என்பதை நாயன்மார்கள் கதைகளில் நாம் கண்டோம் . கூலி ஆளாக வந்து பிரம்படி படுகிறார் . பொதி சோறு சுமக்கிறார் . வீதியில் நடந்து தூது போகிறார் .அன்புக்கு அடிபணிந்து எதையும் செய்ய தயங்காதவர் . திருமூலர் இதையே அழுத்தமாக கூறுகிறார் .
Tuesday 5 January 2016
thirumandiram
திருமுலர் தன் திருமந்திரத்தை சிவபெருமானின் பெருமைகளை சில பாடல்களின் மூலம் உரைக்கிறார் .
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவள சடைமுடி தாமரையானே | (பாடல் 5)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன ன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே |(6)
அன்பே சிவம் என்று வலியுறுத்தி சொல்கிறார் . ஈசனை அடைய அன்பே சிறந்த மார்க்கமாக திட்டமாக உரைக்கிறார் . உடலை வருத்தி செய் யும். தவம் தேவையில்லை . மனமுருக பக்தியுடன் போற்றுதலே ஈசனை குளிர்விக்கும் என்பதை அழுத்தமாக பல பாடல்களில் கூறுகிறார் .
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை ,
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவள சடைமுடி தாமரையானே | (பாடல் 5)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன ன்றி செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன்றில்லை
அவனன்றி ஊர் புகுமாறு அறியேனே |(6)
அன்பே சிவம் என்று வலியுறுத்தி சொல்கிறார் . ஈசனை அடைய அன்பே சிறந்த மார்க்கமாக திட்டமாக உரைக்கிறார் . உடலை வருத்தி செய் யும். தவம் தேவையில்லை . மனமுருக பக்தியுடன் போற்றுதலே ஈசனை குளிர்விக்கும் என்பதை அழுத்தமாக பல பாடல்களில் கூறுகிறார் .
Subscribe to:
Posts (Atom)