Tuesday, 11 April 2017

அவ்வூரில்   சிவகாமியாண்டார்   என்றொரு   பக்தர்   வாழ்ந்து   வந்தார் . அவர்   நந்தவனங்கள் தோறும்   சென்று   மலர்களை   சேகரித்து   மாலையாக   தொடுத்து   ஈசனுக்கு   அவைகளை   சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் ..  தினந்தோறும்   அதிகாலை   எழுந்து   ஆற்றில்   நீராடி   வாயில்   ஒரு   துணியை   சுற்றிக்கொண்டு   மலர்களை   கொய்து   மாலையாக   தொடுப்பார் .  ஒரு   கூடையில்   அடுக்கி   எடுத்துக்கொண்டு   கோவிலுக்கு   சென்று   மாலைகளை   ஐயனுக்கு   சாற்றி   அழகு   பார்த்து   மகிழ்வார் .  அவர்   முதுமை   அடைந்துவிட்ட   போதிலும்   விடாது   இச்சேவையை   செய்து   வந்தார் .

No comments:

Post a Comment