Friday, 12 May 2017

ஏனாதியார்   சொன்னபடி   ஒரு   மைதானத்தில்   இரு   கட்சியினரும்    மோதினர் .   எதிர்பார்த்தபடி   ஏனாதியின்   கட்சி   பெருத்த   வெற்றி   பெற்றது .  அதிசூரன்   கட்சி   பெருத்த   சேதத்துடன்   தோல்வியுற்றது .   அதிசூரன்   ஏனாதியரை   வெற்றி   பெறுவது   எளிதல்ல   என்பதை   அறிந்து   கொண்டான் .  அவரை   சூழ்ச்சி   செய்து   வெற்றி   அடைவது   என்று   தீர்மானித்தான் .  அதை   நிறைவேற்ற   யோசனையில்   ஆழ்ந்தான் .  ஏனாதியர்   சிவனடியார்கள்   மீது   கொண்ட   அதீத   பக்தியை   உபயோகிக்க   முடிவு   செய்தான் .  அவன்   ஏனாதியரை   அழைத்து   இவ்வாறு   பலர்   பலியாவதை    தவிர்க்க   தாம்   இருவரும்   மட்டுமே   போரிட்டு   தீர்த்துக்கொள்ளலாம்   என்று   யோசனை   தெரிவித்தான் . அவரும்   ஒப்புக்கொண்டார் .

No comments:

Post a Comment