ஏனாதியார் சொன்னபடி ஒரு மைதானத்தில் இரு கட்சியினரும் மோதினர் . எதிர்பார்த்தபடி ஏனாதியின் கட்சி பெருத்த வெற்றி பெற்றது . அதிசூரன் கட்சி பெருத்த சேதத்துடன் தோல்வியுற்றது . அதிசூரன் ஏனாதியரை வெற்றி பெறுவது எளிதல்ல என்பதை அறிந்து கொண்டான் . அவரை சூழ்ச்சி செய்து வெற்றி அடைவது என்று தீர்மானித்தான் . அதை நிறைவேற்ற யோசனையில் ஆழ்ந்தான் . ஏனாதியர் சிவனடியார்கள் மீது கொண்ட அதீத பக்தியை உபயோகிக்க முடிவு செய்தான் . அவன் ஏனாதியரை அழைத்து இவ்வாறு பலர் பலியாவதை தவிர்க்க தாம் இருவரும் மட்டுமே போரிட்டு தீர்த்துக்கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்தான் . அவரும் ஒப்புக்கொண்டார் .
No comments:
Post a Comment