மறுநாள் சிவகோசரியார் பூஜைக்கு வந்தவர் மறுபடி வழக்கம் போல் மாமிச துண்டங்களும் அருவெறுப்பான காட்சியை கண்டு மிக மனவருத்தம் கொண்டு எத்தனை நாட்கள் இந்த மாதிரியான வெறுக்கத்தக்க காட்சிகளை காண வேண்டுமோ என்று மனம் நொந்து ஈசனிடம் புலம்புகிறார் . ஈசனை கண்டுகொள்ளாமல் சகித்து கொண்டு இவ்வாறு தம்மை சோதிப்பது தகுமோ என்று தன் மன வருத்தத்தை சொல்லி அழுதார் . பின் தன் கடமையை மனசோர்வுடன் முடித்துவிட்டு சென்றார் . அன்று இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன் அந்த வேடனின் செய்கைகளை கண்டு அவனுடைய பக்தியை சாதாரணமாக எடை போடாதீர்கள் என்று சொல்லி நாளை தம் சன்னதிக்கு வந்து மறைந்து நின்று கவனிக்குமாறு அந்தணருக்கு ஆணை இடுகிறார்.
No comments:
Post a Comment