Monday, 30 October 2017

மறுநாள்   சிவகோசரியார்  பூஜைக்கு   வந்தவர்   மறுபடி   வழக்கம்   போல்   மாமிச   துண்டங்களும்   அருவெறுப்பான   காட்சியை   கண்டு   மிக   மனவருத்தம்   கொண்டு  எத்தனை   நாட்கள்   இந்த   மாதிரியான   வெறுக்கத்தக்க   காட்சிகளை   காண   வேண்டுமோ   என்று   மனம்   நொந்து   ஈசனிடம்   புலம்புகிறார் .  ஈசனை   கண்டுகொள்ளாமல்   சகித்து   கொண்டு   இவ்வாறு   தம்மை   சோதிப்பது   தகுமோ   என்று   தன்   மன   வருத்தத்தை   சொல்லி   அழுதார் .  பின்   தன்   கடமையை   மனசோர்வுடன்   முடித்துவிட்டு   சென்றார் .  அன்று   இரவு   அவர்   கனவில்     தோன்றிய   ஈசன்   அந்த   வேடனின்   செய்கைகளை   கண்டு   அவனுடைய   பக்தியை   சாதாரணமாக   எடை   போடாதீர்கள்  என்று   சொல்லி   நாளை   தம்   சன்னதிக்கு   வந்து   மறைந்து   நின்று   கவனிக்குமாறு   அந்தணருக்கு   ஆணை   இடுகிறார்.

No comments:

Post a Comment