Saturday, 25 November 2017

மானக்கஞ்சாறர்   வெட்டிய   கூந்தலை   கையில்   எடுத்து   இதோ   பிடியுங்கள்   என்று   அடியாரிடம்   நீட்டினார் .  அதை   அடியார்   வாங்கி   கொள்வார்   என்று   திரும்பியவர்   அவர்   மறைந்து   விட்டது   கண்டு   திகைத்தார் .  கூந்தலும்   பழையபடி   தன்   பெண்ணின்   தலையில்   இருப்பதை   கண்டார் .  அப்போது   ஈசன்   வானில்   தோன்றி   ''அப்பனே   உன்   உயரிய   பக்தியை   உலகுக்கு   காட்டவே   இவ்வாறு   செய்தோம் .''   என்று   கூறி   மறைந்தார் .  மானக்கஞ்சாறர்   மெய்சிலிர்த்து   பலவாறு   ஐயனை   போற்றி   துதித்தார் .  மானக்கஞ்சாறரின்   பெண்ணின்   கூந்தல்   முன்னினும்   அதிக   காந்தியுடன்   விளங்கியது .  இதனிடையே   மணமகனின்   வீட்டார்   மண வீட்டை   நெருங்கி   கொண்டிருந்தனர் .  அவர்கள்   மணமகளின்   கூந்தலை   வெட்டி   கொடுத்த   செய்தியை   கேள்விப்பட்டு   கூந்தலில்லாத   மணப்பெண்ணை   மணப்பது   சாஸ்திர   விரோத மாயிர்றே   என்று   கவலை   கொண்டனர் .  ஆனால்   சிறிது   நேரத்தில்   வந்தது   சிவபெருமானே   என்றும்   பெண்ணின்   கூந்தல்   இப்போது   அதிக   காந்தியுடன்   இருப்பதாக   கேள்விப்பட்டு   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தனர் .  திருமணம்   இனிதே   நடந்து   முடிந்தது .
இதன்   பிறகு   மானக்கஞ்சாறர்   இன்னும்   பக்தியுடன்   சிவனடியார்களுக்கு   சிறந்த   சேவை   செய்து   சில  காலம்   வாழ்ந்து   பிறகு   சிவனடி   சேர்ந்தார் .  

No comments:

Post a Comment