முத்தநாதன் யோசித்து யோசித்து சேதி அரசனை வீழ்த்த வழி தேடினான் . அரசனின் சிவபக்தியும் அவன் சிவனடியார் மீது கொண்டிருந்த அளவிலா மதிப்பும் அவனுக்கு நினைவு வந்தது . அதுவே அவனுக்கு ஒரு மார்க்கம் காட்டிற்று . உடனே அதை செயல் படுத்தினான் . உடலெல்லாம் திருநீறு பூசி காவியணிந்து சிவனடியாராகவே மாறினான் . குறு வாளை ஒரு பட்டு வஸ்திரத்தில் புத்தகம் போல சுற்றி எடுத்துக்கொண்டு அரண்மனையை நோக்கி வேகமாக நடந்தான் . அரசனின் மெய்காப்பாளன் தத்தன் என்பவன் முத்தநாதனை கண்டதும் சந்தேகம் எழ அவனை நிறுத்த முற்பட்டான் . ஆனால் முத்தநாதனோ என்னை தடுக்காதே , நான் முக்கியமாக யாரும் இதுவரை கண்டிராத புதிய ஆகம நூலை அரசனுக்கு போதிக்க வந்திருக்கின்றேன் என்று வேகமாக அரசன் மனைவியுடன் இருக்கும் அறைக்குள் நுழைந்து விட்டான் .
No comments:
Post a Comment