வந்தவரை வரவேற்று உள்ளே உட்காரவைத்து உள்ளே சென்ற மாறனாருக்கு அப்போதுதான் நினைவு வந்தது வீட்டில் உண்ண ஏதும் இல்லாத காரணத்தால் இவரும் இவர் மனைவியும் இரண்டு நாட்களாக பட்டினி என்பது . யோசனையில் ஆழ்ந்தார் . அப்போது கணவரையும் மிஞ்ச கூடிய அன்புள்ளம் கொண்ட அவர் மனைவி அவருக்கு நினைவூட்டினாள் . இரண்டு நாள் முன்புதான் அவர்கள் விதைத்த நெல் இந்த பெரும் மழையில் மண் கரைந்து முளைவிட்டு தண்ணீரில் மிதந்து கொண்டிருக்கும் , அதை ஒரு கூடையில் அள்ளி வந்தால் அதை குத்தி அரிசியாக்கி சமைக்கலாம் என்று அறிவுறுத்தினாள் . மகிழ்ச்சி அடைந்த அவர் அவ்வாறே விதை நெல்லை எடுத்து வந்தார் . விறகு இல்லை என்ற பிரசினை எழுந்தபோது கூரையை தாங்கும் கட்டைகள் உதவின . இவ்வாறு அரிசி சோறு தயாரானதும் அதற்கு ருசியூட்ட அதற்கும் அம்மாதரசி நினைவூட்டினாள் .. தோட்டத்தில் முளைத்திருக்கும் கீரையை பறித்து வர சொன்னால் . அவரும் அந்த இருட்டில் அவ்வப்போது வரும் மின்னல் ஒளியின் உதவியால் கீரை பறித்துவந்தார். அதையும் சமைத்தாள் மனைவி . இருவரும் நிம்மதியுடன் அடியாரை அழைக்க சென்றனர் . உறங்கி கொண்டிருந்த அவரை 'ஸ்வாமி உணவு உண்ண வாருங்கள் ' என்று எழுப்பினர் . எழுந்த அவர் உடனே மாயமாய் மறைந்தார் . அற்புத ஒளி தோன்றியது . அம்மையுடன் ஈசன் தோன்றி "மாரனாறே எந்த நிலையிலும் அடியார்களுக்கு விடாமல் அன்னமிடும் உங்கள் இருவர் திருப்பணியை கண்டு யாம் பூரிப்படைந்தோம் . உங்களை ஆட்கொள்ளவே யாம் வந்தோம் . இனி எக்காலமும் என்னுடனேயே இருப்பீர்கள் ' என்று கூறி மறைந்தார் . இவ்வாறு மாறன் தன் மனைவியுடன் ஐயன் அடி சேர்ந்தார்
Saturday 25 February 2017
Friday 24 February 2017
வாயிற்கதவை திறந்த மாறனார் அங்கு வயது முதிர்ந்த ஒரு சிவனடியாரை கண்டு வியப்படைந்தார் . ஸ்வாமி இந்த மழையில் தாங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்? . உள்ளே வாருங்கள். உள்ளே வந்து இந்த ஈர உடைகளை களைந்து வேறு ஆடைகளை அணியுங்கள் . அதற்குள் உணவு தயாராகிவிடும் என்று உபசரிக்கிறார் . அத்தகைய இக்கட்டிலும் சிவனடியார் ஒருவர் உணவு அருந்த வந்ததில் அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி . வந்தவர் நானொரு யாத்திரீகன் . ஊர் ஊராய் சுற்றி வருபவன் . இந்த ஊர் வந்தபோது பெரும் மழை பிடித்து கொண்டது . பசி வாட்டுகிறது . இந்த ஊரில் எல்லோரும் உன் வீட்டில் ஒரு போதும் பசி என்று வந்தவர்கள் உண்ணாமல் போனதே கிடையாது என்று என்னை இங்கே அனுப்பினார்கள், என்று கூறினார் . மாறனார் உடனே உள்ளே அமருங்கள் உணவு தயாரானதும் அருந்தலாம் என்று உபசரித்தார் .
Thursday 23 February 2017
மாறனாருக்கு சோதனை காலம் துவங்கியது .. வயலில் விளைச்சல் குறைய ஆரம்பித்தது . ஆனால் அவருடைய விருந்தோம்பல் குறைவில்லாமல் தொடர்ந்தது . கையிலுள்ள செல்வம் கரைந்தது . வீட்டிலுள்ள பண்டங்கள் காசாக மாறி விருந்தோம்பல் தொடர்ந்தது . எல்லா பொருளும் தீர்ந்ததும் அக்கம்பக்கத்தில் கைமாறாக பணம் வாங்கி சில நாட்கள் தொடர்ந்தது . சோதனையாக இரண்டு நாட்கள் விடாமல் அடைமழை பெய்து கணவன் மனைவி இருவரும் பட்டினி கிடைக்க நேர்ந்தது . இருவரும் பட்டினியுடன் படுத்தனர் . நடு நிசியில் வாசல் கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டு எழுந்த மாறனார் கதவை திறந்தார் .
Wednesday 22 February 2017
மாற னாரின் மனைவியும் அவரைப்போலவே அதிதிகளை மகிழ்விப்பதில் துளியும் அலுப்பில்லாமல் அவருக்கு ஏற்றபடியே இணைந்து செயலாற்றி வந்தார் . வந்தவர்களுக்கு அறுசுவை உணவை அளிப்பதில் தவறியதே இல்லை ...ஈசன் தன் அடியார்களுக்கு இவர்களின் சேவையை கண்டு மிக்க மகிழ்ச்சி கொண்டார் . இவர்கள் தன்னை வந்தடையும் மார்க்கத்தை காண்பிக்க தன் சோதனையை துவக்கினார் . சோதனைக்கு பின் தானே சாதனை .
Tuesday 21 February 2017
" இளையான் தன் குடிமாறன் அடியார்க்கு அடியேன் "
அடுத்து இளையான்குடி மாறனார் நாயனாரை தெரிந்து கொள்வோம் .பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர் மாறனார் . வசதியான குடும்பம் . நிலபுலன்கள் உள்ளவர் . நல்ல உழைப்பாளி . தில்லை நடராஜப்பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர் . சிவனடியார்கள் கண்டால் மிக்க மகிழ்ச்சியுடனும் அன்புடனும் அறுசுவை உணவு அளிக்க தவறுவது கிடையாது .
Saturday 18 February 2017
இவ்வாறு இயற்பகையார் இயற்பகை நாயனார் ஆகிறார் . இந்த வரலாறு மூலம் நாம் காணும் வியக்க வைக்கும் செய்தி ஈசன் தன் அடியானின் பெருமையை உலகறிய வைக்க தன்னை எத்தனை தாழ்த்தி கொள்கிறார் என்பதுதான் . எத்தனை கீழ்த்தர செயல்கள் செய்யவும் தயங்குவதில்லை என்பதை காண்கிறோம் . ஜனங்களின் கல்லடி கூட தாங்க தயக்கமில்லை . காண தேகம் புல்லரிக்கிறது .பக்தன் ஐயனுக்காக எதையும் செய்ய துணிவதை காண்கிறோம் .. இவ்வாறு சில சரிதைகளில் ஈசன் பக்தனுக்காக எதையும் செய்வதை காண்கிறோம் .''ஈசன் தொண்டரத்தம் உள்ளத்து ஒடுக்கம் . தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே ''
Friday 17 February 2017
இயற்பகையார் இனி அவள் உமக்கு உரியவள். அழைத்து செல்லலாம் . வேறு ஏதாவது சேவை தேவையா ? என வினவுகிறார் . உடனே அடியார் இனி தான் நான் கேட்க போவது பெரிய உதவி . அதை செய்தால் போதும் என்கிறார் . உடனே இயற்பகையார் சொல்லுங்கள் செய்ய காத்திருக்கிறேன் என்கிறார் . உடனே சிவனடியார் அப்பனே, உன் மனைவியை நான் அழைத்துக்கொண்டு இந்த ஊரை தாண்ட முடியுமா? உங்கள் சுற்றத்தாரும் ஊர் மக்களும் என்னை சும்மா விடுவார்களா ? என வினா எழுப்பினார் . எங்களை பத்திரமாக ஊர் எல்லை வரை கொண்டுபோய் விடு என்கிறார் . அவரும் இதை எப்படி மறந்து போனேன் என்று தம்மையே நொந்துகொண்டு கவலை வேண்டாம் சுவாமி நான் உங்களை பத்திரமாக வழி அனுப்புகிறேன் என்று சொல்லி தன் வாளுடன் அவர்களுக்கு காவலாக முதலில் செல்கிறார் . எதிர்பார்த்தபடி உறவினர்கள் திரண்டு வந்து எதிர்க்கின்றனர் . இயற்பகையார் கத்தியை சுழற்றியபடி எல்லோரையும் எதிர்த்து வீழ்த்தியபடி முன்னேறினார் சினடியாரும் இயற்பகையார் மனைவியும் பின் தொடர்ந்தனர் . ஊர் எல்லை தாண்டியவுடன் இயற்பகையார் சிவனடியாரை வணங்கி விட்டு திரும்பி கூட பார்க்காமல் திரும்ப புறப்பட்டார் . அவர் சிறிது தூரம் வந்தபோது இயற்பகையாரே என்ற குரல் கேட்டு திரும்பினார் . என்ன ஆச்சர்யம் ! ஈசன் அம்மையுடன் காட்சி தந்தார் . ''இயற்பகையார் உமது மனஉறுதியும் பற்றற்ற நிலையம் எம்மை அதிசயிக்க வைக்கிறது . நீர் உம்மனைவியுடன் சுகமாக வாழ்ந்து பிறகு எம்மை வந்தடைவீர் . '' என்று வாழ்த்தி அவர் வாளுக்கு இறையானவர்களை பிழைக்க செய்கிறார் .
Wednesday 15 February 2017
சிவனடியார் இவ்வாறு கேட்டுவிட்டு இயற்பகையார் முகத்தை கவனித்தார் . அவர் முகத்தில் ஒருவித சலனமும் இல்லை . தன்னிடம் உள்ளதை கேட்டாரே என்ற மன நிம்மதி மட்டும் தான் இருந்தது . என்னிடம் உள்ளதை கேட்டு என்னை நிம்மதி கொள்ள செய்துவிட்டீர் . என்று கூறி விட்டு உள்ளே சென்று தன் மனைவியை நோக்கி இந்த சிவனடியாருக்கு உன்னை நான் அளித்து விட்டேன் . இனி அவருடன் செல்வது தான் முறை . என்று கூறு கிறார். அந்த அம்மையாரும் எவ்வித சலனமும் இல்லாமல் கணவனின் பாதங்களில் வீழ்ந்து நமஸ்கரித்துவிட்டு குனிந்த தலையுடன் சிவனடியார் பக்கம் போய் நின்றாள் . சிவனடியார் சலனமில்லாத அவள் முகத்தை கவனித்தார் .
Monday 13 February 2017
சிவனடியார் உடனே எனக்கு ஒரு காரியம் ஆகவேண்டும் . அது உன்னிடம் வந்தால்தான் நிறைவேறும் என்று கேள்விப்பட்டேன் . அதனால்தான் உன்னிடம் வந்தேன் என்கிறார் . இயற்பகையார்க்கு மிக்க மகிழ்ச்சி . மகிழ்வோடு என்னிடம் உள்ளது எதுவானாலும் தயக்கமே வேண்டாம் , கேளுங்கள் என்று வற்புறுத்தி சொன்னார் . சிவனடியார் நன்றாக யோசித்து சொல்லும், பிறகு வார்த்தை தவற கூடாது என்று எச்சரிக்கிறார் .மேலும் இத்தனை காலமாக வறண்டு கிடந்த வாழ்வை வளமாக்க எண்ணுகிறேன் என்கிறார் . இயற்பகையார் சுவாமி காலம் தாழ்த்த வேண்டாம் என்னிடமுள்ள எதுவாயினும் தயங்காமல் கேளும் . என்று வற்புறுத்துகிறார் . உடனே சிவனடியார் இத்தனை காலமாக பிரம்மச்சர்யத்தை கடைப்பிடித்து அலுத்து விட்டேன் . இனி எனக்கு துணையாக நீ பிரியமுடன் வாழ்ந்து வரும் உன் மனைவியை கேட்கத்தான் நான் வந்தது என்றார் .
Saturday 11 February 2017
சிவபெருமான் அழகிய வாலிபனாக மாறினார் . மிக்க தேஜஸுடன் சிவனடியார் உடைகளுடன் காண்போரை கவரும் வண்ணம் இயற்பகையார் வீட்டின் முன் நின்றார் . இயற்பகையார் வெளியே வந்தார் . உடனே 'தாங்கள்தான் இயற்பகையார் என்பவரா ? தங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் . தாங்கள், சிவனடியார்கள் எதை யாசித்தாலும் மறுக்கமால் தருவீர்கள் என்று ' என வினவினார் . இயற்பகையார் மிக பணிவுடன் பதிலுரைத்தார் "என்னிடம் உள்ள எல்லாம் அந்த ஈசன் அளித்ததே . ஆக அதை அவரடியார்களுக்கு கொடுத்து மிஞ்சியதே என்னை சாரும் . ஆகையால் தங்கள் தயக்கமின்றி தங்களுக்கு வேண்டியதை கேட்கலாம் ". என்று பதிலளிக்கிறார் .
Thursday 9 February 2017
இயற்கையாக மனித இனத்தை ஆட்டி படைக்கும் ஆசாபாசங்கள் அவரை எந்த சமயத்திலும் பாதித்ததே இல்லை .சலனமே இல்லா மனத்தோடு சிவபெருமானையும் அவர் அடியார்களையும் பூசிப்பதே தன் வாழ்வின் லட்சியமாக வாழ்ந்து வந்தார் . அவருடைய மனைவியும் அதற்கு சிறிதும் குறைவில்லாத பக்தியுடனும் பற்றற்ற நிலையுடனும் கணவன் சொல்லே வேதவாக்காக எண்ணியே அவருக்கு உறுதுணையாய் அமைதி யுடன் வாழ்ந்து வந்தார் . இத்தகைய ஆபூர்வ தம்பதிகளின் பெருமை இவ்வாறு குடத்திலிட்ட விளக்காக இருப்பது ஐயன் மனத்திற்கு பொறுக்கவில்லை . இதை உலகத்திற்கு உணர்த்த தன் திருவிளையாடலை துவக்குகிறார் .
Tuesday 7 February 2017
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்||
காவிரி நதி கடலோடு சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கும் நகரம்
காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . அங்கு வணிகர் குலத்தில் பிறந்தவர் இயற்பகை நாயனார் ஆவர் . பரம்பரையாக பெரும் செல்வம் படைத்தவர்கள் . வணிக குலத்திற்கு இவரே தலைவர் ..இத்தனை செல்வம் படைத்தும் அவருக்கு அதில் பற்றில்லாமல் வாழ்ந்தார் .ஈசனிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்கள் யார் எதை யாசித்தாலும் மறுக்காமல் வழங்கும் வழக்கத்தை ஒரு தவமாக கடைப்பிடித்து வந்தார் .சிவபெருமானை தவிர வேறு எதிலும் பற்று அற்றவராக பெயருக்கு ஏற்றவாறு இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வந்தார் .
காவிரி நதி கடலோடு சங்கமமாகும் இடத்தில் அமைந்திருக்கும் நகரம்
காவிரிப்பூம்பட்டினம் ஆகும் . அங்கு வணிகர் குலத்தில் பிறந்தவர் இயற்பகை நாயனார் ஆவர் . பரம்பரையாக பெரும் செல்வம் படைத்தவர்கள் . வணிக குலத்திற்கு இவரே தலைவர் ..இத்தனை செல்வம் படைத்தும் அவருக்கு அதில் பற்றில்லாமல் வாழ்ந்தார் .ஈசனிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . சிவனடியார்கள் யார் எதை யாசித்தாலும் மறுக்காமல் வழங்கும் வழக்கத்தை ஒரு தவமாக கடைப்பிடித்து வந்தார் .சிவபெருமானை தவிர வேறு எதிலும் பற்று அற்றவராக பெயருக்கு ஏற்றவாறு இயற்கைக்கு புறம்பாக வாழ்ந்து வந்தார் .
Friday 3 February 2017
நிலகண்டரின் சரிதத்தை காணும்போது ஈசன் தம் தொண்டர்களின் இதயத்தில் வாழ்கிறார் எனும் அவ்வை யின் கூற்றிலுள்ள பெரும் உண்மை நன்கு புலப்படும் . அவர் ஐயன் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதில் ஐயம் இல்லை . அதை அவர் வெளி காட்டிய விதம் நம்மை வியக்க வைக்கிறது . சிவனடியார்களை அவர் ஈசனுக்கு சமமாகவே பாவித்து அவர்களுக்கு தொண்டு செய்வதையே தவமாக செய்து வந்தார் . ஐயன் மீது சத்தியம் என்ற அந்த வார்த்தைக்கு கட்டுப்பட்டு அத்தனை ஆண்டுகள் புலன்களை கட்டுப்படுத்தி மனதில் ஒரு சிறிதும் சலனமில்லாமல் பக்தியே துணையாக வாழ்ந்த அந்த பாங்கு நம்மை மெயசிலிர்க்க வைக்கிறது . இவர் காட்டிய பக்தியை காட்டிலும் ஈசன் இவர் மீது காட்டிய அன்பு நம்மை பெரிதும் வியக்க வைக்கிறது . "தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே "
Subscribe to:
Posts (Atom)