Thursday, 23 November 2017

பெற்றோர்     தகுந்த   இடத்தில்   மகளை   மணமுடித்து   கொடுக்க  ஆவல்   கொண்டனர்.  தகுந்த   மாப்பிள்ளையை   தேடினர் .  அப்போது பக்கத்து   ஊரிலிருந்து   அவளை   பெண்கேட்டு   வந்திருந்தனர் .  அவர்களும்   இவர்களுக்கு   சம   அந்தஸ்து   உடையவர்கள்.  ஏயர்கோன் கலிக்காமர்   என்ற   அவரும்   சேனைத்தலைவர் .  நல்ல   குடும்பத்தை   சேர்ந்தவர் .  மானக்கஞ்சாறருக்கு   பரிச்சியமானவர் .  எல்லாம்   நல்லபடியாகவே   முடிய   அவர்கள்   பேசி   நல்ல   நாள்   குறித்து   மணமுடிக்க   நிச்சயித்தனர் .  மணநாளும்   வந்தது .  சேனாதிபதி   வீட்டு   திருமணம்.  ஏற்பாடுகள்  கோலாகலமாக   நடைபெற்றன .  மாப்பிள்ளை   வீட்டார்   திருமணம்   முடித்து   செல்ல   கோஷ்டியுடன்   வந்து   கொண்டிருந்தனர் .

No comments:

Post a Comment