பெற்றோர் தகுந்த இடத்தில் மகளை மணமுடித்து கொடுக்க ஆவல் கொண்டனர். தகுந்த மாப்பிள்ளையை தேடினர் . அப்போது பக்கத்து ஊரிலிருந்து அவளை பெண்கேட்டு வந்திருந்தனர் . அவர்களும் இவர்களுக்கு சம அந்தஸ்து உடையவர்கள். ஏயர்கோன் கலிக்காமர் என்ற அவரும் சேனைத்தலைவர் . நல்ல குடும்பத்தை சேர்ந்தவர் . மானக்கஞ்சாறருக்கு பரிச்சியமானவர் . எல்லாம் நல்லபடியாகவே முடிய அவர்கள் பேசி நல்ல நாள் குறித்து மணமுடிக்க நிச்சயித்தனர் . மணநாளும் வந்தது . சேனாதிபதி வீட்டு திருமணம். ஏற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்றன . மாப்பிள்ளை வீட்டார் திருமணம் முடித்து செல்ல கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தனர் .
No comments:
Post a Comment