ஈசன் சம்பந்தரை ( பாலை) கொடுத்து ஆட்கொள்கிறார்.நாவுக்கரசரை ( சூலை) கொடுத்து ம் , சுந்தரரை (ஓலை ) கொடுத்தும் ஆட்கொள்கிறார் .நாவுக்கரசர் பல்லவ மன்னனுடன் சேர்ந்து ஈசனை மறந்து பகுத்தறிவு பாதையில் செல்கிறார் . ஈசன் அவன் சகோதரியின் வேண்டுகோளுக்கு இறங்கி நாவுக்கரசருக்கு சூலை நோயை கொடுக்கிறார் . அவரும் தவறை உணார்ந்து வீரட்டானத்துறை ஈசனை சரண் அடைந்து ' கூற்றாயினவாரு ' என்னும் பதிகம் பாடி நலம் பெருகிறார் . அதன் பிறகு அவர் ஈசர்க்கு தொண்டராக பெரும் பணி ஆற்றினார் . சுந்தரர் திருமணத்தன்று ஈசன் ஓர் ஓலையை காட்டி பல தலைமுறைகளாக சுந்தரர் குடும்பம் தன் குடும்பத்திற்கு அடிமை என்று அவரை திருவெண்ணெய் நல்லூர் அழைத்து சென்று " பித்தா " என்று அடி எடுத்து கொடுத்து பாட செய்கிறார் . இவ்வாறு இந்த தமிழ் இசைக்காக அவர் ஆற்றிய விளையாடல்கள் அநேகம்(நாளூம் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்) இவ்வாறு சுந்தரர் ஈசனை வர்ணிக்கிறார் .
Saturday 30 March 2013
Tuesday 26 March 2013
ஆதிசிவன் பெற்றெடுத்த தமிழ் . அந்த சிவன் தமிழிசையில் மயங்கியதில் வியப்பு என்ன இருக்கிறது . குழந்தை ஞானசம்பந்தர் குளக்கரையில் நின்று அழ , விடையேறும் பெருமான் உமை அன்னையுடன் காட்சி தந்து சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டினார் . 3வயது சிறுவன் தாளம் போட்டு பா டுகையில் , அவன் கை நோகுமென்று தங்கதாளம் ஈந்து உமை அ ன்னையால் அதற்கு ஓசை கொடுக்க செய்கிறார் .
Monday 25 March 2013
பக்தி பெருக்கால் இந்த மகான்கள் பாடிய தமிழிசைக்கு மயங்கிய பரம்பொருள் ஆற்றிய திருவிளையாடல்கள் அதிசயமானவை . பெரியாழ்வார் கண்ணனை மானசீகமாய் கண்டு , தாலாட்டு முதல் ஒவ்வொரு பருவ சேட்டைகளையும் மெய்யுருக வர்ணித்து பாடுகிறார் . பூமிதேவியே வளர்ப்பு மகளாக பெற்று அரங் கனையே மருமகனாக பெருகிறார் . ஆண்டாள் சிறு பிராயம் முதல் கண்ணனையே நினைந்து உருகி பாடி , பின்பு பாவை நோன்பு இருந்து அவரையே கணவனாக அடையும் பேறு பெறுகிறாள் . திர்ப்பாணாழ்வார் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர் என்பதால் அரங்கன் கோவில் அந்தணர்கள் அவரை கடுமையாக நடத்த , அரங்கன் அந்தணர்கள் கனவில் தோன்றி ஆழ்வாரை தோளில் சுமந்துகொண்டு சன்னதிக்கு அழைத்து வருமாறு கட்டளை பிறப்பிக்கிறார் . பேயாழ்வார் ,பூதத்தாழ்வார் பொய்கை ஆழ்வார் மூவரும் , ஒரு மழைநாளில் ஒரு திண்ணையில் ஒண்டி நிற்க அவர்கள் இடையில் நாரணன் புகுந்து கொண்டு பிறகு அவர்களுக்கு காட்சிதருகிறான் . இன்னும் எத்தனையோ திருவிளையாடல்கள் .இசைக்கு இத்தனை மகத்துவம் .
Tuesday 19 March 2013
இவ்வாறு இசையால் பக்தி வளர்த்த மகான்களை நோக்கினால் ஒரு பெரிய உண்மை தெரிய வரும் .இவர்களில் 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் பெரும் பெருமை பெற்றவர்கள் . பரம் பொருளை நேரில் தரிசித்து பெரும் அ ருளை பெற்றவர்கள் . பெருமாளின் அவதாரமாக கருத பெற்றார் நம்மாழ்வார் . பெருமானின் அருட்கட்டளையால் ஒரு அ ந்தணரால் கருவறைக்கு சுமந்து எடுத்து செல்லப்பட்டார் திருப்பணாழ்வார் . ஈசனுக்கு கண் ஈந்த கண்ணப்ப நாயனார் , திருனாளைபொவார் , இவருக்காக நந்தி விலகி ஈசன் காட்சி அளித்தார் . இன்னும் பல பக்தர்கள் பிராம்மண வகுப்பை சேர்ந்தவர்கள் அல்ல .எல்லா வகுப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர் .பெருமாளோ ஈசனோ இதற்கு அப்பாற்பட்டவன் .அவர்கள் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டிருக்கிறான் . எந்த வேற்றுமை யும் இல்லை . எல்லோரும் சமம் .நாம் ஏன் அவ்வாறு இருக்க தவறுகிறோம்
சில நூற்றாண்டுகளுக்கு பிறகு ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தார் . அந்த மகான் கோவில் வழிபாட்டு முறைகளை வரையறுத்து கொடுத்தார் . கோயில்களில் பிரபந்த பாக்களை அபிநயத்துடன் குறிப்பிட்ட சிலர் வைணவ ஆலயங்களில் ஆடும் மரபு ஏற்படுத்தினார் .அது அரையர் சேவை என இன்றும் ஸ்ரீரங்கம் போன்ற ஆலயங்களில் நடைமுறையில் உள்ளது .இவ்வாறு நாம் பிரபந்தம் எனும் அறிய போக்கிஷத்தை அடைந்தோம் .
Monday 18 March 2013
தேவாரம் 12 திருமுறைகளாக தொகுக்கப்பட்ட து போல 4000 பிரபந்தங்களும் பண்ணிசையோடு தொகுக்கப்பட்டன . அவை பெரியாழ்வார் திருபல்லாண்டு , பெரிய திருமொழி .
ஆண்டாள் - திருப்பாவை , நாச்சியார் திருமொழி
திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம்
தொண்டரடிபொடி ஆழ்வார் - திருமாலை , திருப்பள்ளி யெழுச்சி
திருப்பாணாழ்வார் -அமலனாதிபிரான்
மதுரகவி ஆழ்வார் -கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கை ஆழ்வார் -பெரியதிருமொழி ,குருந்தாண்டகம் ,நெடுந்தாண்டகம்
பொய்கை ஆழ்வார் - முதல்திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம்திருவந்தாதி
பேயாழ்வார் -முன்றாம் திருவந்தாதி
நம்மாழ்வார் -திருவிருத்தம் ,திருவாசிரியம் ,பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி
ஆண்டாள் - திருப்பாவை , நாச்சியார் திருமொழி
திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம்
தொண்டரடிபொடி ஆழ்வார் - திருமாலை , திருப்பள்ளி யெழுச்சி
திருப்பாணாழ்வார் -அமலனாதிபிரான்
மதுரகவி ஆழ்வார் -கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கை ஆழ்வார் -பெரியதிருமொழி ,குருந்தாண்டகம் ,நெடுந்தாண்டகம்
பொய்கை ஆழ்வார் - முதல்திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம்திருவந்தாதி
பேயாழ்வார் -முன்றாம் திருவந்தாதி
நம்மாழ்வார் -திருவிருத்தம் ,திருவாசிரியம் ,பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி
Subscribe to:
Posts (Atom)