தொண்டர் மகிழ்ச்சியுடன் அதை பெற்றுக்கொண்டு அதை வெள்ளாவியில் போட்டு பிறகு மற்ற பணிகளுக்கு சென்று விட்டார் . பிறகு மறந்து போனார் . மறுபடி நினைவு வந்தபோது மதியம் ஆகிவிட்டது . அவசரமாக அதை கசக்கி பிழிந்து உலர்த்த போனார் . அப்போது திடிரென்று கறுத்த மேகங்கள் சூழ்ந்தன . அவர் நிலைகுலைந்து போனார் . மழை வந்தால் என்ன செய்வது என்று எண்ணும்போதே மழை கொட்ட ஆரம்பித்தது . அவருக்கு தன்னையே மன்னித்து கொள்ள முடியவில்லை. புலம்பினார் தான் செய்தது பெரும் பிழை மன்னிக்க முடியாதது என்று மன உறுத்தல் தாளவில்லை . அவர் அத்தனை சொல்லியும் கேளாமல் வாங்கி வந்து இவ்வாறு நம்பிக்கை துரோகம் செய்ய நேர்ந்ததே . அவர் இருந்த ஒரு துண்டையும் கொடுத்து விட்டு இந்த மழையில் என்ன கஷ்டப்படுவார் என்ற எண்ணம் அவரை நிலைகுலைய செய்தது . தாம் பெரும் தண்டனைக்கு தகுதியானவன் என்று முடிவு செய்து துணி துவைக்கும் கல்லில் தன் தலையை மோதிக்கொள்ள ஆரம்பித்தார் . பொறுப்பாரா ஐயன் . உடனே அவர் முன் தோன்றி 'திருக்குறிப்பு தொண்டரே ! நிறுத்தும் நீங்கள் எமபக்தர்களுக்கு குறையில்லாமல் செய்யும் தொண்டில் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம் . தங்களை சோதிக்க யாமே இவ்வாறு வந்தோம் கவலை வேண்டாம் . என்று ஆறுதல் கூறி அவரை தம்முள் சேர்த்துக்கொண்டார் .
Tuesday 30 January 2018
Monday 29 January 2018
சிவனடியார் திருக்குறிப்பு தொண்டரை பார்த்து என்ன வேண்டும் என வினவினார் . தொண்டர் சுவாமி ஒரு சிவத்தொண்டர் இவ்விதம் அழுக்கு துண்டை போர்த்தி இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது . அதை சுத்தமாக துவைத்து நொடியில் தந்து விடுகிறேன் என்று பணிவோடு கேட்டான் . சிவனடியாராக வந்திருந்த ஈசன் 'அப்பனே ஒன்றும் வேண்டாம் . அழுக்கோ கந்தையோ இருப்பது இது ஒரு துண்டையும் உன்னிடம் கொடுத்து விட்டு நான் என்ன செய்வது ? மழை வரும்போலிருக்கிறது . இப்படியே இருந்து விட்டு போகட்டும் ' என்று மறுத்து விட்டார் . ஆனால் தொண்டர் மனம் கேட்கவில்லை . மன்னிக்க வேண்டும் ஸ்வாமி என்மனம் கேட்கவில்லை ஒரே நொடியில் தோய்த்து காயவைத்து கொடுக்கிறேன் ஸ்வாமி என்று கெஞ்சினான் . அவர் எத்தனை மறுத்து சொல்லியும் அவன் கேட்பதாயில்லை . சரி நான் வரும்போது துண்டு தயாராக இருக்க வேண்டும் . என்று சொல்லி அரை மனதுடன் கொடுத்தார் .
Sunday 28 January 2018
இவ்வாறு தன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் தன் அடியார்களுக்கு குறிப்பறிந்து அவர் செய்யும் சேவையால் மனம் மகிழ்ந்த ஈசன் அவர் பெருமையை உலகுக்கு எடுத்து காட்டி அவரை ஏற்றுக்கொள்ள எண்ணம் கொண்டார் . ஒரு வயோதிகராய் அழுக்கு துண்டை போர்த்திக்கு கொண்டு ஒரு மழை நாளில் அவர் முன் சென்றார் . அந்த வயோதிக சிவனடியாரை அக்குளிரில் அத்தகைய கந்தல் போர்வையுடன் பார்த்த தொண்டரின் மனம் வேதனையில் துவண்டது . அவர் முன் சென்று பணிவோடு நின்றார்
Wednesday 24 January 2018
திருக்குறிப்பு தொண்டர்தம் அடியார்க்கு அடியேன் |
தொண்டை மண்டலத்தில் உமை அன்னை ஐயனை குறித்து தவமிருந்து பிறகு ஈசனுடன் கொலுவிருக்கும் பெருமைமிக்க தலம் காஞ்சிபுரம் . அங்கு சலவை தொழில் செய்யும் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவனடியார்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர்கள் வஸ்திரங்களை வெள்ளாவியில் போட்டு நன்றாக சலவை செய்து கொடுப்பார் . அவர்கள் சொல்வதற்கு முன்பே அழுக்கான உடைகளை தானே எடுத்து சென்று சலவை செய்து கொண்டுவந்து கொடுப்பார் . தங்கள் குறிப்பறிந்து அவர் செய்யும் சேவையால் மகிழ்ந்து அவர்கள் இவருக்கு திருக்குறிப்பு தொண்டர் என்றே பெயரிட்டனர் .
தொண்டை மண்டலத்தில் உமை அன்னை ஐயனை குறித்து தவமிருந்து பிறகு ஈசனுடன் கொலுவிருக்கும் பெருமைமிக்க தலம் காஞ்சிபுரம் . அங்கு சலவை தொழில் செய்யும் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சிவனடியார்களுக்கு சேவை செய்வதை லட்சியமாக கொண்டு இருந்தார் . அவர்கள் வஸ்திரங்களை வெள்ளாவியில் போட்டு நன்றாக சலவை செய்து கொடுப்பார் . அவர்கள் சொல்வதற்கு முன்பே அழுக்கான உடைகளை தானே எடுத்து சென்று சலவை செய்து கொண்டுவந்து கொடுப்பார் . தங்கள் குறிப்பறிந்து அவர் செய்யும் சேவையால் மகிழ்ந்து அவர்கள் இவருக்கு திருக்குறிப்பு தொண்டர் என்றே பெயரிட்டனர் .
Friday 19 January 2018
நந்தனார் இரவில் கனவில் ஈசன் கட்டளை இட்டது நினைவில் வந்து மெய்சிலிர்த்து தன்னை ஆண்டவன் அழைக்கிறான் என்கிற அவர்கள் சொன்னது அவரை ஆனந்தத்தின் எல்லைக்கே கூட்டி சென்றது . ஐயன் கருணையை நினைந்து மெய் உருக த்யானம் செய்து கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார். உணர்ச்சி மேலீட்டால் தடுமாறி விழுந்து எழுந்து ஓடினார் . தென்புறத்து திருவாயிலில் யாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது . அவரை புனித படுத்த செய்த யாகதீ அல்லவா ? ஈசனை வாயார துதித்த படியே நந்தனார் யாக குழியை வலம் வந்து யாகத்தீயில் இறங்கினார் . வாத்திய கோஷங்களும் மக்களின் வாழ்த்து கோஷங்களும் விண்ணை முட்டின . நந்தனார் கூப்பிய கரங்களுடன் எதிர்புறம் வெளியேறினார் . தேவதுந்துபி முழங்கியது . விண்ணவர் மலர்மாரி பொழிந்தனர் . வெளிப்பட்ட நந்தனார் புதிய மனிதராய் தலையில் ஜடாமுடியும் , கழுத்தில் ருத்திராக்ஷ மாலையும்., நெற்றியில் திருநீறு பளிச்சிட மார்பில் பூணுலும் பூண்டவராக சிவனடியாராக வெளிவந்தார் . பக்தர்களின் சந்தோஷ ஆரவாரம் வானை எட்டியது . அந்தணர்கள் அவரை சகல மரியாதையுடன் அம்பலவாணன் சன்னதிக்கு அழைத்து சென்றனர் . நந்தனார் பக்தி பரவசத்துடன் ஐயனை துதித்தபடியே அவருள் ஐக்கியமானார் .
Thursday 18 January 2018
பொழுது புலர்ந்தது . தில்லை அந்தணர்கள் இறைவனின் கருணையை எண்ணி பேரானந்தம் அடைந்தனர் . ஈசனின் இத் தகைய பேரருளை பெற்ற அப்பெருமக னை காண பேராவல் கொண்டு ஈசனிடம் சென்று விடை பெற்று கொண்டு மேளதாளத்துடன் வேத கோஷங்களுடனும் புறப்பட்டு நந்தனார் இருக்குமிடம் விரைந்தனர் . நந்தன் தூரத்திலிருந்து அவர்களை கண்டதும் எந்நேரமும் ஈசனுக்கு தொண்டு செய்து கொண்டே இருக்கும் பெரும் பாக்கியம் பெற்ற அவர்களை அங்கிருந்தே விழுந்து வணங்கினார் . அவர்கள் எதோ காரியமாக வருவதாக எண்ணி தள்ளி நின்று அவர்களுக்கு பாதை விட்டு விலகி நின்றார் . ஆனால் அவர்கள் நேரே வந்து இவர் கால்களில் விழுந்தனர் . அவர்கள் ஈசன் தங்களை தக்க மரியாதையுடன் தன்னிடம் அழைத்துவர ஆணை இட்டுள்ளார் . தங்களை அழைத்து செல்லவே வந்திருக்கிறோம் என்றனர் .
Tuesday 16 January 2018
ஈசன் நந்தனாரின் கனவில் தோன்றி 'அன்பனே நாளை நீ நம்மிடம் வருவாயாக . இப்பிறவி நீங்க வேள்வி தீயில் மூழ்கி எழுந்து எம்மிடம் வந்து சேர் ' என்று ஆணையிட்டார் . நந்தனாருக்கு ஆனந்தம் தாங்கவில்லை . பொன்னம்பலவாணனின் அன்பை நினைந்து அவரது கண்கள் நீரை ஆறாய் பொழிந்தன . பலவாறு பாடி கொண்டாடினார் . உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார் .
காலையில் தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் இப்பெரும் கருணையை எண்ணி பெரிதும் மகிழ்ந்து கொண்டாடினர் . நந்தனை காண பெரும் ஆவல் கொண்டனர் . ஈசனின் கட்டளைப்படி பெரிய பள்ளம் தோண்டி அதில் யாக தீ மூட்டி சிறப்பாக யாகம் செய்ய ஏற்பாடு செய்தனர் .
காலையில் தில்லைவாழ் அந்தணர்கள் ஈசனின் இப்பெரும் கருணையை எண்ணி பெரிதும் மகிழ்ந்து கொண்டாடினர் . நந்தனை காண பெரும் ஆவல் கொண்டனர் . ஈசனின் கட்டளைப்படி பெரிய பள்ளம் தோண்டி அதில் யாக தீ மூட்டி சிறப்பாக யாகம் செய்ய ஏற்பாடு செய்தனர் .
Saturday 13 January 2018
ஊர் எல்லைக்கு வெளியே இருந்து உயர்ந்த கோபுரத்தை வணங்கி பேரானந்தம் அடைந்தார் . மெல்ல ஊரை நெருங்கினார் . அங்கு தில்லை அந்தணர் தெருவில் ஹோமம் நடக்கும் மண்டபங்களும் , வேத பாடசாலைகள் நடக்கும் கூடங்களையும் கண்டு திடுக்கிட்டார் . அங்கு நுழைவதற்கு அஞ்சி எல்லையை தாண்டியே ஊரை சுற்றி கோயிலை வலம் வந்து மகிழ்ந்தார் . பக்தனின் இந்த நிலையில் கண்ட ஈசன் மனம் எத்தனை நாள் பொறுக்கும் . அவரை அணைத்து ஆனந்தம் கொள்ள அவர் மனம் துடித்தது . ஐயன் தில்லை அந்தணர்களின் கனவில் தோன்றி ஊரின் எல்லையில் என் அருமை பக்தன் ஆதனுர் புலையன் நந்தன் காத்திருக்கிறான் . அவனை காண நாமும் வெகு ஆவலாக இருக்கிறோம் . வேள்வி தீ மூட்டி அவனை புனித படுத்தி எம்மிடம் அழைத்து வாருங்கள் . என்று ஆணை இட்டார் .
Friday 12 January 2018
நந்தனாரின் உள்ளம் இந்த ஏமாற்றத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை . துணிந்து ஒரு நாள் தில்லைக்கு கிளம்பி விட்டார் . உள்ளே செல்ல இயலாவிட்டாலும் தூரத்திலிருந்து கோபுரத்தை மனம் குளிர கும்பிட்டுவிட்டு ஆலயத்தை பிரதக்ஷிணம் செய்து வரலாம் என்று முடிவு செய்து தில்லைக்கு கிளம்பிவிட்டார் . எல்லையிலிருந்து தெரிந்த உயர் கோபுரத்தை கண்டதும் அவர் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை . ஆ னந்த கூத்தாடினார் .
Wednesday 10 January 2018
மனநிறைவுடன் ஊர் திரும்பிய நந்தன் அக்கம்பக்கத்திலுள்ள சிவாலயங்களில் தன்னால் முடிந்த திருப்பணிகளை செய்து வந்தார் . அங்கு மற்றவர்கள் தில்லை அம்பலவாணனை பற்றியும் அவர் திருவிளையாடல்களையும் பெருமையாக பேசுவதை கேட்க கேட்க தில்லை செல்ல வேண்டும் எனும் ஆவல் பெருகியது . தில்லை சென்று நடராஜரை தரிசிக்க முடிவு செய்து நண்பர்களிடம் எல்லாம் தில்லை போவதாக சொல்லிக்கொண்டிருந்தார் . ஆனால் தனியாக யோசித்த போதுதான் அதன் தடங்கல்கள் அவருக்கு புரிந்தது . தில்லை சென்று விடலாம் . ஆனால் அம்பலக்கூத்தனின் ஆலயம் எத்தனை பெரியது . இவனால் பிறந்த குலம் காரணமாக ஆலயத்தின் உள்ளே நுழைய முடியாது . பிறகு ஈசனை தரிசிப்பது எவ்வாறு ? இக்கேள்வி அவரை நிலைகுலைய செய்தது . என்ன செய்வது ? எல்லோரிடமும் நாளை போகிறேன் நாளை போகிறேன் . என்று தினமும் சொல்லி வந்தார் . அவருடைய சிவபக்தியும் நடராஜரை காண அவருக்குள்ள அளவு கடந்த ஆவலும் யாவரும் அறிந்ததால் அவரை எல்லோரும் திருநாளைப்போவார் என்றே அழைக்கலானார் .
Monday 8 January 2018
நந்தனார் மிக்க ஏமாற்றமடைந்தார் . கண்ணீர் மல்க ஐயனை துதித்தார் .ஈசனே உன்னை காணும் பேராவலுடன் இங்கு வந்தேனே . இவ்வாறு நந்தி மறைத்து உன்னை காணமுடியாத பாவி ஆகிவிட்டேன' என்று வெகுவாக அழுது புலம்பினார் . பொறுப்பாரா ஈசர் . உடனே நந்திக்கு பக்தன் தன்னை கான்பதற்கு சற்று விலகி இருக்கும்படி ஆணை இடுகிறார் . என்ன அதிசயம் ! நந்தி விலகி பக்தன் ஈசனை கண் குளிர காண இடமளித்தது . நந்தனார் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை . நந்தனார் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தார் . ஐயன் திருமேனியை உள்ளம் குளிர தரிசித்தார் ஆனந்த கூத்தாடினார் . பக்தியுடன் பலவாறாக துதித்தார் . தனக்கு இவ்வாறு கருணை காட்டிய ஐயனுக்கு ஏதாவது திருப்பணி செய்ய ஆவல் கொண்டார் . ஆலயத்தின் பக்கத்தில் ஒரு குழி இருப்பதை கண்டார் . அங்கு ஒரு திருக்குளம் தேவை என்று எண்ணி சில ஆட்களை வரச்செய்து உடனே வேலையை தொடங்கினார் . சில நாட்களில் வேலை முடிந்து அழகிய திருக்குளம் உருவானது .. நந்தனாருக்கு அளவிலா மகிழ்ச்சி . ஊர் திரும்பினார் .
Sunday 7 January 2018
ஊதியம் பெறாமல் இத்தனை பொருள்களை கோயில்களுக்கு சமர்ப்பிப்பதில் அவர் மனம் மட்டற்ற மகிழ்ச்சியை அடையும் . அவர் புலையர் குலத்தினராதலால் ஆலயத்திற்குள் நுழைய முடியாது வாயிலில் நின்றபடி நெஞ்சுருகி கண்ணீர் மல்க ஐயனை மனதார தொழுவார் . அவர் ஆலயத்திற்கு செய்யும் இத்தொண்டால் மகிழ்ந்த மக்கள் ஜீவனத்திற்கு கொஞ்சம் நிலங்களை மானியமாக கொடுத்தனர் .அதில் செலவு போக மிகுதியை ஆலய தொண்டிற்கே செலவு செய்வார் . நந்தனார் இவ்வாறு பக்கத்திலுள்ள கோயில்களுக்கும் இத்தொண்டுகளை செய்ய செல்லும் போது வைத்திஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்புன்கூர் ஆலயம் சென்று ஈசனை தரிசிக்க விரும்பி அங்கு சென்றார் . அங்கு பெரிய நந்தி ஈசனை மறைத்ததால் அவரால் ஈசனை காண முடியவில்லை .
Saturday 6 January 2018
செம்மையே திருநாளை போவார்க்கும் அடியேன் !
சோழ நாட்டில் கொள்ளிடை நதி கரையில் ஆதனுர் என்றொரு கிராமம் ஊருக்கு வெளியே புலையர்கள் வசிக்கும் சேரி . அவர்கள் குலத்தில் பிறந்தவர் நந்தனார் . அவருக்கு சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி . அவர் சிவன் கோயில்களுக்கு பேரிகை, நகரா முதலிய வாத்தியங்களுக்கு தோலும் யாழ் , வீணை போன்ற வாத்தியங்களுக்கு நரம்பும் ,எம்பெருமானுக்கு கோரோசனையும் கொண்டு போய் கொடுப்பார் . ஆனால் இவை எதற்கும் ஊதியமே பெறமாட்டார் .
சோழ நாட்டில் கொள்ளிடை நதி கரையில் ஆதனுர் என்றொரு கிராமம் ஊருக்கு வெளியே புலையர்கள் வசிக்கும் சேரி . அவர்கள் குலத்தில் பிறந்தவர் நந்தனார் . அவருக்கு சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி . அவர் சிவன் கோயில்களுக்கு பேரிகை, நகரா முதலிய வாத்தியங்களுக்கு தோலும் யாழ் , வீணை போன்ற வாத்தியங்களுக்கு நரம்பும் ,எம்பெருமானுக்கு கோரோசனையும் கொண்டு போய் கொடுப்பார் . ஆனால் இவை எதற்கும் ஊதியமே பெறமாட்டார் .
Thursday 4 January 2018
ருத்திராபசுபதியார் ருத்திரரை இடைவிடாது ஜெபித்தே சிவனடி சேர்ந்தார் . சோழ நாட்டில் திருத்தலையூர் எனுமிடத்தில் பசுபதி என்றொரு அந்தணர் வாழ்ந்து வந்தார் . அவருக்கு சிவபெருமானிடம் அளவு கடந்த பக்தி . ஈசனுக்கு மிக பிரிதியான ருத்திரம் தினமும் ஜபித்து வந்தார் . அதனால் அவருக்கு ருத்திர பசுபதி என்ற பெயர் வழங்கலாயிற்று . மிகவும் போற்றப்படுவதும் ஈசனுக்கு மிகவும் ப்ரியமானதுமான ருத்திரத்தை தினமும் காலை முதல் மாலைவரை குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று கொண்டு கைகளை தலை மேல் கூப்பிக்கொண்டு ஜெபிப்பார் . இச்செயலால் மிக மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் அவரை தன்னிடம் சேர்த்துக்கொண்டார் .
Wednesday 3 January 2018
அவர் ஆறு கால பூஜை செய்வார் . ஆறு கால பூஜைக்கும் ஆறு விதமாக மாலைகள் சிவபெருமானுக்கு சாற்றி அழகு பார்த்து மகிழ்வார் . இவ்வாறு அவர் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் ஞானசம்பந்த மூர்த்தி தன் பரிவாரங்களுடன் அவ்வூருக்கு விஜயம் செய்தார் . அப்போது முருகனார் அவர்களை தம் இல்லத்திற்கு வரவேற்று எல்லோருக்கும் அமுது படைத்து மகிழ்ந்தார் . இதனால் சம்பந்தரும் மிக மகிழ்ந்து அவருடன் நெருங்கி பழக்கலானார் . முருகனாரின் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் சம்பந்தரின் நட்பு கிடைத்தது . அப்போது சம்பந்தர் திருமணம் நடைபெற்றது . இவருக்கும் அழைப்பு வந்ததால் இவர் திருமணத்தில் கலந்து கொண்டு சம்பந்தரோடு சிவபெருமான் ஜோதியில் கலந்து கொள்ளும் பெரும் பேறு பெற்றார் .
Tuesday 2 January 2018
அவர் தினமும் விடிவதற்கு முன் எழுந்து திருக்குளத்தில் நீராடி திருநீறு பூசி சந்தியாவந்தனம் முதலிய கடமைகளை முடித்துவிட்டு . பூக்குடலையை மாட்டிக்கொண்டு நந்தவனம் நாடி செல்வார் . கொடியில் பூப்பவை செடியில் வருபவை , மரங்களில் பூப்பவை மற்றும் குளங்களில் வளர்பவை என்று விதவிதமான பூக்களை சேகரித்து கொண்டு சுத்தமான மண்டபத்தில் அமர்ந்து அவைகளை விதவிதமான மாலைகளாக கோர்ப்பார் . அவர் எந்த வேலை செய்தாலும் அவர் வாய் மட்டும் ஜெபிப்பதை நிறுத்துவதே இல்லை .
Monday 1 January 2018
மு ருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் |
சோழ நாட்டில் திருப்புகலூர் என்று ஒரு தலம் உண்டு. பசுமையான சோலைகள் சூழ்ந்த இடம் . அவ்வூரில் அந்தணர் குலத்தில் பிறந்த முருகனார் என்பவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிறந்த சிவபக்தர் . சதா பஞ்சாக்ஷரஜபம் செய்வார் . சதா அவர் வாய் பகவானின் நாமங்களை உச்சரித்துகொண்டே இருக்கும் . அவ்வூரில் கோயில் கொண்டிருக்கும் பெருமான் வர்த்தமானேஸ்வரர் . அப்பெருமானுக்கு ஆறு காலமும் மலர் மாலைகள் சாற்றும் தொண்டை விடாமல் செய்து வந்தார்
Subscribe to:
Posts (Atom)