Monday, 9 March 2020

சிவ   பெருமானின்   பெருமையை     பாடிய   பன்னிரு   திருமுறைகள்   எளிமையான   தமிழில்   யாவருக்கும்   படித்து   அறியும்   வகையில்   எழுதி   உள்ளேன் .  ஆதரவுக்கு   நன்றி .  பன்னிரெண்டாம்   திருமுறை   எழுத   மட்டும்   திருவாளர் .  கார்த்திகேயன்   அவர்கள்   எழுதிய   பெரிய   புராணம்   படித்தது   மிக்க   உதவியாக   இருந்தது .  அன்னாருக்கு   என்   மனமார்ந்த   நன்றி   உரித்தாகும் .     
                                                      லலிதா  விஜயராகவன் 

Friday, 6 March 2020

 அநபாய   சோழன்  ' தொண்டர்   சீர்பரவுவார் '  எனும்   திருநாமத்தை   மந்திரிக்கு   சூட்டி    வணங்கினார் .  பதினோரு   திருமுறைகளோடு   இந்நூலை   பனிரெண்டாம்     திருமுறை    என்று   வகுத்து   செப்பேடு   செய்து   சன்னிதானத்தில்   ஏற்ற   உத்தரவிட்டான்.   நடராஜர்   ஆலய   மணிகள்   மங்கள   ஓசை   எழுப்பின .   அநபாயன்   அமைச்சர்    இருவரையும்   மணியோசை   புளகாங்கிதம்   அடைய   செய்தது .  சன்னதியில்   மங்கள   ஆர்த்தி   செய்யப்பட்டது .  அவர்கள்   இரு   கரம்   கூப்பி   ஐயனை   தொழுதனர் .   இம்மாபெரும்   பணி   நிறைவேறியதில்   அவர்கள்   மனம்   நிறைந்து   இருந்தது .  இப்பெரும்   நூல்    அரங்கேறியது . ஆடலரசனின்   பெரும்   கருணையால்   இம்மாபெரும்   காரியம்   அமோகமாக    நிறைவு       பெற்றது .   மக்கள்    மகிழ்ச்சி   சொல்ல   முடியாதது .               



                                                            சுபம் 
சுந்தரர்   வரலாற்றை   கூறி   முடித்த   உபமன்யு    முனிவர்   கண்கள்   கலங்க   ''அடியார்களிடம்   இறைவன்    காட்டும்   அன்பு   விவரிக்க   ஒண்ணாதது ''  என்று   கூறி   அதை   எண்ணி   மெய்மறந்து   நின்றார் .  கூடியிருந்த   முனிவர்கள்   அடியார்கள்   நெஞ்சம்   நெகிழ்ந்தது . 
      சித்திரை     மாதம்   திருவாதிரை   நாள்   எம்பெருமானுக்கு    உகந்த   நாள்   அன்று   அருண்மொழி   தேவர்   பாடிவந்த   திருத்தொண்டர்   புராணம்   சரியாக   ஓர்   ஆண்டுக்குப்பின்      நிறைவு   பெற்றது .   
     மக்கள்    பக்திப்   பெருக்கோடு   அமைச்சரின்   இத்தொண்டை   வெகுவாக   போற்றி   கொண்டாடினர் .  அநபாய   சோழன்   மிக்க   மகிழ்ச்சியில்   மூழ்கி   இருந்தான் .   அமைச்சர்    பாடிய   இத்திருப்புராணத்திற்கு    மிக்க   பக்தியோடு   பூஜை    செய்து    அதை      யானை   மேல்       ஏற்றி   அமைச்சரை   அமர   செய்து   தானும்   அமர்ந்து   சாமரம்    வீசியபடி   தில்லை   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார்        

Thursday, 5 March 2020

இறைவன்   மிக்க   மகிழ்ச்சி    அடைந்து   சேராமனுக்கு   அவர்   எழுதிய   ஞான   உலாவை   பாட   அனுமதி   அளித்தார் .   தேவர்கள்   ஞானியர்கள்   கூடி   இருந்த   சபையில்    இறைவன்   முன்   பாடினார் .   இறைவன்   மனம்   மகிழ்ச்சி     அடைந்து   ''நீங்கள்   இருவரும்   இங்கு   நம்   கணங்களுக்கு   தலைவர்களாய்    இருந்து   வாருங்கள்   என்று    கூறி   வாழ்த்தி   அனுப்பினார் .ஆனால்   சுந்தரர்   முன்பு   செய்த   அதே   தொண்டுகளில்    ஆழ்ந்தார் .   சேரமானார்    கணங்களின்    தலைவரானார் . 
   ஆரூரிலிருந்து    பறவையாரும்   ஒற்றியூரிலிருந்து    சங்கிலியாரும்   கைலாயம்   வந்து    பழையபடி    கமலினி ,  அனந்திதை யாக   தேவியின்   சேடிகளாக    தங்கள்   பணிகளை   தொடர்ந்தனர் . 
    ஆரூரர்   அருளிய  ' தானெனை '   எனும்   பதிகம்   பக்தியுடன்   அஞ்சைக்களத்தில்   சேர்த்தனர் .   சேரமான்   பாடிய   ஞான உலா    திருப்பிடவூரில்    உலகம்   அறிய   செய்யப்பட்டது .   
சுந்தரர்   இறைவனை   மீண்டும்    வணங்கி   ''ஐயனே   என்   நண்பன்   சேரமான்   பெ ருமானார்   வாயிலேயே   நிறுத்தப்பட்டார் .   தயை   கூர்ந்து   அவருக்கும்    கிருபை   செய்ய   பிரார்த்திக்கிறேன் ''  என்று   கேட்டுக்கொண்டார் .  உடனே   இறைவன்   தம்   கணங்களுக்கு   அவரையும்   அழைத்து   வருமாறு    ஆணையிட்டார் .   அவ்வாறே   அவரை   அழைத்து   வந்தனர் .   சேரமானார்    வந்ததும்   எம்பெருமான்    காலில்   விழுந்து    வணங்கினார் .    ஐயன் ' நாம்   உன்னை   அழைக்காதபோது   எப்படி   இங்கு   வந்தாய் '   என்று     வினவினார் .   அதற்கு   சேரமான்   ''ஆரூரரை    நான்   வணங்கிக்கொண்டே    வந்தேன் .   தங்கள்   அன்புமிக்க   அடியார்   மீது    நான்   கொண்ட   பக்தி   என்னை   தங்கள்   திருவடிகள்   வரை   கொண்டு   சேர்த்ததில்    ஆச்சர்யம்   என்ன   இருக்கிறது ?  நான்   தங்கள்   மீது    ஞான   உலா   ஒன்று     பாடினேன் .  அதை   உங்கள்    படிக்க   உத்தரவு    வேண்டுகிறேன் என்றார் .     

Tuesday, 3 March 2020

சுந்தரர்   ''தானெனை   முன்   படைத்தான் ''  எனும்    திருப்பதிகம்   பாடியபடி   திருக்கயிலாயம்    தென்   வாயிலை   அடைந்தார் .   அங்கே    சேரமான்   அவருக்காக   காத்திருந்தார் .   இருவரும்    பல    வாயில்களை   கடந்து   பிரதான    வாயிலை    அடைந்தனர் .   அங்கு   சேரமானை    அனுமதிக்க    மறுத்து   விட்டனர் .   சுந்தரர்   கைலாயநாதர்   சன்னதியை   அடைந்தார் .  அவர்     காலில்   விழுந்து   சேவித்தார் .   அன்பு   மிகுதியால்   கயிலை   பதி   ''ஆலால   சுந்தரா    வந்து   விட்டாயா ?''   என்று    நெஞ்சார    வரவேற்றார் .   அவரை    நோக்கி   மனமுருகி   ''  ஐயனே   பாசவினைகளில்    சிக்கி    உழலாமல்    என்னை   காத்து    என்   தவறுகளை   மன்னித்து   என்னை   தடுத்து   ஆட்கொண்ட   அண்ணலே   உமது   கருணையை   எவ்வாறு   போற்றுவேன்''     என்று  ஆனந்த   கண்ணீர்      உகுத்தார்    சுந்தரர் .  .   
நீராடிக்கொண்டிருந்த   சேரமான்   இறைவன்    அருளால்   சுந்தரர்   கைலாயம்   செல்ல      போவதை    உணர்ந்தார் .   உடனே   குதிரையில்   ஏறி   அஞ்சைக்களம்   ஆலயத்தை    அடைந்தார் .  அனால்   அவர்   ஆலையத்தை   அடைவதற்கு      முன்பே    சுந்தரர்   கிளம்பி   விட்டிருந்தார் .   நிலைமை    மீறி   விட்டதை   உணர்ந்த   சேரமான்   குதிரையின்    காதில்   பஞ்சாக்ஷரம்   ஓதினார் .   குதிரை    ஆகாய   மார்க்கமாக   கிளம்பி   விரைந்து  முன்னே   செல்லும்    வெள்ளை   யானையை     நெருங்கி    சுந்தரரை   வலம்   வந்து   முன்னதாக    சென்று   கைலாயம்    அடைந்தார் .   சேரமானை   தொடர்ந்து   ஓடி   வந்த    வீரர்கள்   தங்களால்   அந்த    வேகம்   செல்ல   முடியாமல்         சோர்ந்து      போய்   தங்கள்   வாள்களால்    தங்களை   மாய்த்துக்கொண்டு   சிவபதம்   அடைந்தனர் .               

Monday, 2 March 2020

தேவர்கள்   வெள்ளை  யானையை    கோயில்   வாயிலில்   நிறுத்திவிட்டு   உள்ளே   சென்று   சுந்தரரை   வணங்கி   ''சுவாமி   தங்களை   கைலாயம்   அழைத்து    வர    எம்பெருமான்    எங்களை   அனுப்பி   வைத்தார் .''   என்று   கூறி    வாழ்த்தினர் .   அதை   கேட்ட   ஆலாலசுந்தரர்    மெய்   சிலிர்த்து   போனார் .   இறைவனை   வணங்கி   துதித்து   விட்டு   கிளம்பினார் .    வெளியே   வந்து   யானையை   வலம்   வந்து    ஏறி   அமர்ந்தார் .  தேவர்கள்   மலர் மாறி   பொழிந்தனர் .   தேவ    துந்துபி    முழங்கிற்று .   இந்த    அருமையான   நேரத்தில்   நண்பர்   சேரமான்   பெருமானார்   இல்லையே   என்று    மனம்   வருந்தினார் .   பிறகு   கைலாயம்   நோக்கிப்   புறப்பட்டார் .  அடியார்கள்   ஹர   ஹர   சிவ   சிவ   என்று    கோஷம்   எழுப்பினர் .      

Saturday, 29 February 2020

சேரநாட்டில்   சுந்தரர்   விருந்தினராக   இருந்த   போது   ஒருநாள்   திருவஞ்சைக்களம்   ஆலயம்   தொழ   சென்றார் .   அங்கு   ஐயனின்   கோலம்      கண்ட   அவருக்கு   மனம்   வாடி   போனது .   அவருக்கு    ஈசனை   பிரிந்து   வாழும்   வாழ்வு   கசந்தது .  மனம்   நொந்து   பிரார்த்தித்தார் .  ''ஐயா   இப்புவியில்   இன்னும்   எத்தனை   நாள்  வாழ   வேண்டும் ?  இந்த   சம்சார   பந்தத்திலிருந்து   என்னை   மீட்க   மாட்டியா ?  கரை   சேர்க்க   மாட்டாயா ?  என்னை   ஏற்றுக்கொள்ளுங்கள் .  என்று   மனமுருக   ''தலைக்கு   தலைமாலை   அணிந்ததென்னே ?  ''  என்று  பதிகம்   பாடி   கண்கலங்க   துதித்தார் .   உடனே   எம்பிரான்   மனமுருகி   போனார் .  ஆலால   சுந்தரர்   தன்னிடம்   வந்து   சேரும்   காலம்   நெருங்கி   விட்டதை   உணர்ந்தார் .  பிரமன்   மற்றும்    தேவர்களிடம்   ஆரூரனை   அழைத்து    வர   வெள்ளை   யானையை   அனுப்புமாறு   கேட்டுக்கொண்டார் .   ஈசன்    வேண்டுகோளை   செவிசாய்த்த    தேவர்கள்   வெள்ளை   யானையுடன்   அஞ்சைக்களம்    ஆலயத்தை   அடைந்தனர் .          

Friday, 28 February 2020

சுந்தரர்   வரும்   செய்தி   கேட்ட    சேரமான்   எல்லை   இல்லா  மகிழ்ச்சி   அடைந்தார் .   அவருக்கு   அவர்   வரும்   வரை   காத்திருக்க   பொறுமை   இல்லை .  அவரை    வரவேற்க   அவர்   பாதி   வழி   சென்று   விட்டார் .  அவரை   கண்ட   சுந்தரருக்கும்   பெரும்    சந்தோஷம்   ஏற்பட்டது .   அவருடன்   தான்   சென்று   சேவித்த   அத்தனை    சிவபெருமான்   ஆலயங்களை   பற்றியும்   பேசி   மகிழ்ந்தார் .   அந்த   மலை   நாட்டில்   ஐயன்   குடி     கொண்டிருக்கும்   அத்தனை   க்ஷேத்திரங்களையும்    தரிசனம்   செய்து   கொண்டு   திரும்பினார்கள் .   சேரமான்   அரண்மனையில்   தங்கி    அவருடைய   உபசரிப்பில்   ஆனந்தமாக   நாட்கள்   சென்றன .   நண்பர்கள்   இன்பமாக    காலம்   கழித்தனர் .        

Tuesday, 25 February 2020

மகனை   பறி   கொடுத்த   நிலையிலும்   தம்மை   வணங்க   வந்த   அவர்கள்   மீது    சுந்தரருக்கு   அளவிலா   பரிவு   ஏற்பட்டது .   அவர்களுக்கு    உதவ   எண்ணம்   கொண்டார் .   அவர்களிடம்   தங்கள்   மகனை   விழுங்கிய   முதலை    வாழும்    மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார்    அவர்கள்    ஊருக்கு   வெளியே   உள்ள    மடுவிற்கு   அவரை   அழைத்து   சென்றனர் .    சுந்தரர்   அங்கு   எம்பெருமானை    மனமுருக   அச்சிறுவனை   பிழைக்க   வைக்குமாறு   வேண்டிக்கொண்டார் .   உயிர்   நண்பன்   மனம்   உருக   பிரார்த்தனை   செய்யும்போது    ஆண்டவன்   சகித்து   கொள்வாரா?   உடனே   எம்பிரான்   யமதர்மனை   வேண்ட   காலதேவன்   அங்கு   வந்து   முதலையை   கரைக்கு   வரவழைத்து       முதலையை    அது    விழுங்கிய    அச்சிறுவனை      கரையில்    உமிழுமாறு    ஆணையிட்டான்  .   அவ்வாறே          முதலையும்       கரையில்        சிறுவனை   உமிழ்ந்து    சென்றது .  அச்சிறுவன்   கடந்த   ஒரு   ஆண்டு      வளர்ச்சியும்    பெற்றிருந்தான் .   பெற்றோர்   ஆனந்தம்   சொல்லவும்    வேண்டுமா?   ஆனந்த   வெள்ளத்தில்   அவர்கள்   சுந்தரரை   வலம்   வந்து     நமஸ்கரித்தனர் .   எல்லோரும்   ஆலயம்       சென்று   ஐயனை   நன்றி    பெருக்கோடு   வணங்கி    ஊர்   திரும்பினர் .       

Monday, 24 February 2020

சுந்தரரின்   பெருமை   உணர்ந்த   அவ்வூர்   மக்கள்   அவரை   கண்டு   ஆசி   பெற   திரண்டு   வந்தனர் .  சுந்தரர்    குழந்தை   பறி   கொடுத்த   தம்பதிகளின்   நிலையை   நினைந்து    பாகாய்   உருக    அவர்களை   காண   ஆவல்   கொண்டார் .   அந்த   தம்பதியர்   வந்து   அவரை   பணிந்து   நமஸ்கரித்தனர் .   சுந்தரர்   பரிவுடன்   அவர்களை   பிள்ளையை   பறி   கொடுத்த   தம்பதிகள்   தங்களான ?  என்று   வினவினார் .  அதற்க்கு    அவர்கள்   ''சுவாமி    அது   நடந்து   முடிந்த   விஷயம் .  இப்போது   நாங்கள்   வெகு      நாளாய்   தங்களை   தரிசிக்க   ஆவல்    கொண்டிருந்தோம் .  இப்போது   கிடைத்தது .  எங்களை   ஆசீர்வதியுங்கள்   என்றனர் .   அதற்கு   சுந்தரர்   அவர்களிடம்  அந்த   மடுவை   காண்பிக்க   முடியுமா ?  என்று   கேட்டார் .      
ஆரூர்   திரும்பிய   சில   நாட்களுக்கு   பிறகு   சுந்தரருக்கு   மறுபடியும்   நண்பர்      நினைவு   வந்து   மறுபடியும்   சேரமானை   காண   கிளம்பினார்.   போகும் வழியில்    திருப்புக்கொளியூர்   என்ற   ஊரை    அடைந்தார் .   அங்கு   அவர்   ஒரு   அதிசய   காட்சியை   கண்டார் .   அங்கு   ஒரு   வீட்டில்   மேளதாள   ஒலியுடன்   சந்தோஷ   ஆரவாரமும்   அடுத்த    ஒரு   வீட்டில்   அழுகை   குரல்களும்   கேட்ட.ன ..   அதிர்ச்சி    அடைந்த   சுந்தரர்   தம்மை   காண   வந்த   அடியார்களிடம்    இதன்   காரணம்   வினவினார் .   அதற்கு    அவர்கள்   சென்ற   வருடம்   இரு   சமவயது   சிறுவர்கள்   குளிப்பதற்கு  மடுவிற்கு    சென்றனர் .  அதில்   ஒரு    சிறுவனை   முதலை   விழுங்கி   விட்டதாகவும்   பிழைத்த   மற்ற   சிறுவனுக்கு   அன்று   உபநயனம்   நடப்பதாகவும்   அதன்   காரணமாக   அந்த   வீட்டில்    வேத   ஒலியும்   நாயன   ஒலியும்    மகிழ்ச்சியின்    ஆரவாரம்   கேட்பதாகவும்    முதலைக்கு   இரையான    சிறுவனின்   வீட்டில்   அழுகை   ஒலி   கேட்பதாகவும்    கூறினர் .   அதை      கேட்ட   சுந்தரரின்   மனம்   பாகாய்   உருகியது .   ஈசனுக்கு   மிக   அருமையான   பக்தன்  சுந்தரரின்   வருகை   கேட்ட   ஊர்   ஜனங்கள்   அவரை   காண   வந்தனர் .             

Friday, 21 February 2020

சுந்தரர்   மனம்   நொந்து   ஈசனிடம்   அவ்வாறு   வினவியதும்   கொள்ளை   அடித்த   அவ்வேடர்கள்   கொள்ளை   அடித்த    அத்தனை   பொருள்களையும்  கொண்டு  வந்து   அந்த    சன்னதியிலேயே    தம்பிரான் தோழரிடம்    ஒப்படைப்பித்தனர் .   சுந்தரரும்   அடியார்களும்    அதிசயித்து    போனார்கள் .அப்போது         ஈசன்   ''அன்பனே    எப்போதும்   என்னிடம்   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   நீ   இப்போதும்   என்கையாலேயே   அப்பொருள்களை    பெற   வேண்டுமென்ற      எண்ணத்தால்   யாமே   இவ்வாறு    செய்தோம் ''   என்று   திருவாய்   மலர்ந்து   அருளினார் .  சுந்தரர்   அதை    கேட்டு    மெய்சிலிர்த்து   போனார் .  ஐயனின்  அன்பு     அவரை   பெரும்    மகிழ்ச்சிக்கு   உள்ளாக்கியது .   அவைகளை   பெற்றுக்கொண்டு   ஆரூர்   திரும்பினார் .       

Thursday, 20 February 2020

சுந்தரர்   அடையார்களுடன்    காட்டு   வழியாக   சோழநாடு   நோக்கி   பயணப்பட்டார் .   தன்னுடன்     சேரமான்    பரிசாக   அளித்த   பெரும்   பொருளையும்    சுந்தரர்   எடுத்து   சென்றார்  .  எம்பிரானுக்கு   தன்   அருமை   தோழன்    இத்தனை   காலம்   தன்னிடமிருந்து   மட்டுமே   பொருள்   பெற்று   வந்த   காரணத்தால்   வேறு   ஒருவரிடமிருந்து  அவரும்   தன்   பிரியமான   அடியான்   ஆனாலும்    பொன்னும்   மணியும்   பெறுவது    பொறுக்கவில்லை .   உடனே   சிவகணங்களை   வேடர்   உருவில்   சென்று   அப்பொருள்களை   கவர்ந்து   வருமாறு    ஆணையிட்டார் .  அவர்களும்   அவ்வாறே   அத்தனை    விலை   மதிப்பில்லாத   பொருள்களையும்   அவர்களிடமிருந்து   பறித்து   வந்தனர் .      அடியார்கள்    மிக்க   அதிர்ச்சி    அடைந்தனர் .  சுந்தரர்   வருந்தினாலும்   ஈசன்   இச்சை   எதுவோ   அதுதான்   நடக்கும் .   வருந்தி   ப யனில்லை  என்று    சமாதானம்   கூறினார் .     எல்லோரும்   திருமுருகன்பாண்டி   ஆலயம்   வந்து   சேர்ந்தனர் ..  சுந்தரர்   பதிகம்   பாடி        ஈசனை   தொழுதார் .  '' எம்பெருமானே   வனத்தில்   பொருள்களை   வேடுவர்கள்   கொள்ளை    அடிக்க   பார்த்தும்    காக்காமல்   இருந்தது   ஏனோ ?  என்று   நெகிழ்ந்து   வினவினார் .     

Monday, 17 February 2020

சுந்தரர்   நண்பர்   உபசரிப்பில்   மெய்சிலிர்த்தார்  .  அவருடன்   சிலகாலம்   தங்கிவிட்டு   ஊர்   திரும்ப   நிச்சயம்   செய்தார் .  ஆனால்   சேரமான்   அவரை  பிரிய    மனமில்லாமல்   தானும்   உடன்   வருவதாக    கூறினார் .  ஆனால்   சம்பந்தர்   அரச   காரியங்களை   கவனிக்காமல்   அத்தனை  காலம்    இருப்பது   சரியல்ல .  அது   நாட்டுக்கும்   நன்மை   பயக்காது   என்று   அறிவுறை   கூறி   அவரை   தடுத்தார் .  சேரமான்   மனமில்லாமல்   சம்மதித்தார்   ஆனால்   ஏராளமான   பொன்னும்   மணியும்   வாரி   எடுத்து   கட்டி   யானை   மீது   ஏற்றி   இதை   மறுக்காமல்   ஏற்று   அடியார்கள்   சேவைக்கு   பயன்     படுத்த   வேண்டினார் .     சம்பந்தரும்   சம்மதித்து   பெற்று   கொண்டார். விடை   பெற்றுக்கொண்டு       சம்பந்தர்   காடு   மலைகளை   கடந்து   சோழ   நாடு          பயணப்பட்டார் .   திருமுருகன்பூண்டி   அடைய     தீர்மானித்திருந்தார் .   

Sunday, 16 February 2020

சேரமான்   நாட்டு   மக்கள்   வெகு   நாட்கள்   பின்   நாடு   திரும்பும்   மன்னன்  அவருடைய   பெருமை   மிக்க   நண்பரும்   விருந்தாளியாக   வந்திப்பதையும்   கண்டு   பெரும்   மகிழ்ச்சியுடன்   கோலாகல   வரவேற்பு    அளிக்க   தயாரானார்கள் .   வீடுகள்தோரும்    தோரணங்கள்   மங்கள   வாத்தியங்கள்   மங்கள கோஷங்கள்   எல்லோரும்   புத்தாடைகள்   அணிந்து   ஆனந்தம்   பொங்க  எதிர்கொண்டு   அழைக்க    வந்தனர் .   சுந்தரர்   திருவஞ்சைக்கள   பெருமானை   வணங்கி   அரண்மனை   வந்தார் .  சேரமான்   தமது   சிம்மாசனத்தில்   அவரை   அமர   செய்து    மனைவியர்   நீர்   வார்க்க   தம்     கைகளால்    சுந்தரர்க்கு    பாத   பூஜை   செய்து  வரவேற்றார்.         

Thursday, 13 February 2020

சுந்தரர்   சேரமானை    நோக்கி   ஆடவல்லான்   இவ்வற்புதத்தை   நிகழ்த்தியது   அவருக்காகவே   என்று     கூறி   அவரை   முன்னே   செல்லவிட்டு   தான்   பின்னே    சென்றார் .    அவர்கள்   கரையேறியதும்   வெள்ளம்   இருகரைகளையும்    தொட்டுக்கொண்டு   ஓடலாயிற்று .   இருவரும்   கொடுங்கோளூர்   நோக்கி    நடந்தனர் .   சேரமான்   நாட்டில்   மக்கள்    மகிழ்ச்சியோடு   காணப்பட்  டனர் .    

Monday, 10 February 2020

சுந்தரரும்   சேரமானாரும்   காவிரியின்   கரையை    அடைந்தனர் .  அனால்   காவிரி   வெள்ளம்   கரைபுரண்டோடிற்று .  ஓடம்   ஒன்றும்   செல்ல   முடியாமல்   கரையில்   இருந்தன .  அப்பனை   தரிசிப்பது   அசாத்தியம்   என்று     முடிவு   செய்து   சஞ்சலம்   அடைந்தனர் .  அப்போது   சுந்தரர்   ஐயனை   மனதார   வேண்டிக்கொண்டு   ''பரவும்   பரிசொன்று   அறியேன்நான் ''  என்று   மனமுருக   பதிகம்   பாடினார் .   ஐயாறப்பன்   மனம்   இரங்காமல்   இருப்பாரா ?   நதி   வெள்ளத்தில்   ஒரு   பிளவு   ஏற்பட்டது .  மேற்கேயிலிருந்து   வந்த   நதிநீர்   ஆணையிட்டது   போல   அப்படியே   நின்றது .   கிழக்கே   தண்ணீர்   வடிந்து   மணற்பாங்காக   காட்சி  அளித்தது .   சேரமான்    சொல்லொணா   ஆச்சர்யமும்    மகிழ்ச்சியும்   அடைந்தார் .    சுந்தரரை   பாராட்டினார் .  அதற்கு   சுந்தரர் ''  நண்பரே   இது  ஈசன்   உமக்கு   அளித்த   வரமல்லவா ''  என்று   பதிலுரைத்தார் .     

Wednesday, 5 February 2020

திருவாரூரில்   சுந்தரர்   சேரமானோடு   எம்பெருமானை   தினம்   சேவித்துக்கொண்டு   மகிழ்ந்து   கொண்டிருக்கும்    நாளில்   சேரமானார்   தான்   தம்   நாட்டைவிட்டு   கிளம்பி   வெகுநாட்கள்   ஆனதால்   திருப்பி   செல்ல   நினைத்தார் .  அவர்   சுந்தரரையும்   தம்முடன்   தம்   நாட்டிற்கு   தம்   விருந்தாளியாக   வரும்படி   வேண்டிக்கொண்டார் .   தம்   அரண்மனையில்   அவரை     உபசரிக்க   மிக்க   ஆவல்   தெரிவித்தார் .   சுந்தரரும்   அவர்     அன்பான   அழைப்பை   ஏற்றுக்கொண்டு   அவருடன்   கிளம்பினார் .   இருவரும்   காவிரியின்   தென்   கரையில்   கண்டியூர்   அடைந்தனர் .   அவ்வூரின்   வடகரை   திருவையாறு .   சேரமான்   ஐயாறப்பனை   தரிசிக்க   தன்   ஆவலை  தெரிவித்தார் .    சுந்தரரும்    சம்மதித்தார் .      

Thursday, 30 January 2020

சுந்தரரும்   சேரமான்    பெருமானும்   மதுரையில்   பாண்டிய   மன்னன்   விருந்தினராக   அவர்   உபசரிப்பில்   மகிழ்ந்து   இருந்தனர் .  அங்கிருந்து   கொண்டு   திருப்புவனம்  சென்று   ஐயனை   பதிகம்   பாடி   சேவித்துக்கொண்டு    திருஆப்பானுர்   திருப்பரங்குன்றம்   இன்னும்   சில   தலங்களையும்   தரிசித்தனர் .  தம்பிரான்   தோழருக்கு   தெற்கே   மேலும்   க்ஷேத்திரங்களை   சேவிக்கும்   ஆவல்   உண்டாயிற்று .   மன்னரிடம்   விடை   பெற்றுக்கொண்டு   திருக்குற்றாலம் ,  திருநெல்வேலி   சென்று   அங்கிருந்து   ராமேஸ்வரம்   சென்று   என்பெருமானை   மனம் உருக    வேண்டிக்கொண்டு   சுந்தரர்   அங்கிருந்தபடியே   மனத்தால்   இலங்கை   திருக்கேதீஸ்வரத்தில்   குடிகொண்டுள்ள   சிவபெருமானை   உள்ளம்   உருக   சேவித்துக்கொண்டார் .அங்கிருந்து   கிளம்பி   திருச்சுழியல்   எனும்   ஊரில்   மடத்தில்   இரவு   தங்கி  காலை   சோழ   நாட்டு   திருத்தலங்கள்   சேவிக்க   எண்ணி   படுத்து   தூங்கினர் .  அருகிலுள்ள   கானப்பேர்   எனும்     காளையார்கோயிலில்       குடி கொண்டிருக்கும்   பெருமானுக்கு   தம்பிரான்  தோழரின்    பாதங்கள்   தம்   திருக்கோயிலிலும்   பட   வேண்டுமென்ற   ஆவல்   உண்டானது .  அவர்   சுந்தரரின்   கனவில்   காளை   வடிவில்   தோன்றி   '' யாம்   இருப்பது   கானப்பேர் ''  என்று   கூறி   மறைந்தார் .  திடுக்கிட்டு  விழித்த   சுந்தரர்   மெய்சிலிர்த்து   ஐயனின்   திரு  உள்ளத்தை   சிலிர்ப்போடு   சேரமானிடம்   கூறி   அவ்விடம்   சென்று   ஐயனின்   புகழ்   பாடி   பயணம்  தொடர்ந்தார் .      

Friday, 24 January 2020

சுந்தரரும்   சேரமான்   பெருமானும்   மதுரையை   வந்தடைந்தனர் .  அப்போது    அங்கு   பாண்டியன்   மகளை   மணந்த   சோழ   மன்னனும்   வந்திருந்தார் .  அவர்கள்   இருவரும்   தம்பிரான்   தோழரும்   சேரமான்பெருமானும்   சேர்ந்து   மதுரை   வந்தடைந்த   செய்தியை   கேட்டு   மகிழ்ந்து   அவர்களை   எதிர்கொண்டு   அழைத்து   அவர் களுடன்   சேர்ந்து   ஆலவாய்   ஈசனை   ஒன்றாக   தரிசனம்   செய்து   மகிழ்ந்தனர் .  அவ்விருவரையும்   தம்   அரண்மனைக்கு   கோலாகலமாக   வரவேற்று   உபசரித்தனர்  .  சுந்தரரும்   சேராமானும்   பாண்டிய   அரண்மனையில்   சில    காலம்   தங்கி   மன்னரின்   உபசரிப்பை   ஏற்று   தங்கினர் .   அருகிலுள்ள   சிவாலயங்களை   தரிசித்தும்   மகிழ்ந்தனர் .           

Wednesday, 22 January 2020

இவ்வாறு   இருக்கையில்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டிருந்த  சேரமான்     பெருமான்  கொடுங்கோளுரிலிருந்து    புறப்பட்டு    சுந்தரரை   காண   ஆரூர்   வந்தார் .  சுந்தரர்   மகிழ்ந்து   அவரை   தம்   மாளிகைக்கு   மிக்க  அன்போடு    வரவேற்று    இருவரும்மிக்க   நேசத்துடன்   பழக்கலாயினர் .  அடியார்கள்   அவர்கள்    ஈருயிர்   ஓருடலாக    பழகுவதை   கண்டு   மகிழ்ந்து   தம்பிரான்   தோழராக   இருந்த   சுந்தரரை    சேரமான்தோழர்   என்று   அழைக்க   ஆரம்பித்தனர் .  இருவரும்   சேர்ந்து   பல   சிவாலயங்களை  றாக   சேவித்து   மகிழ்ந்தனர் .  இவ்வாறு    இருக்கையில்   நம்பிஆரூரருக்கு    ஆலவாய்    ஈசனை  காண   பேராவல்    ஏற்பட்டது .  சேராமானுக்கும்    அதே   பேராவல்   ஏற்பட்டது .   ஆலவாய்   அண்ணல்   தம்   கைப்பட   சேராமானுக்கு   பாணபத்தருக்கு    திரவிய   உதவி  செய்ய   எழுதிய   ஓலை   கண்டது   முதல்   அப்பேராவல்   இருந்து   வந்தது .  தன்னை   ஒரு   பொருட்டாக   மதித்து   தம்   கைப்பட   திருமுகம்   எழுதிய   அண்ணலின்   பேரன்பை   எப்படி   மறக்க   முடியும் ?  இருவரும்   பரவையிடம்   விடை   பெற்றுக்கொண்டு   நாகப்பட்டினம்   திருமறைக்காடு   மற்றும்   சில   சிவத்தலங்களை   சேவித்துக்கொண்டு   திருப்பத்தூர்   வழியாக    வந்தடைந்தனர் .        

Saturday, 18 January 2020

சுந்தரரும்   மனம்   வருந்தி   தன்னை   மாய்த்துக்கொள்ள   எத்தனித்தார்   ஐயன்   தம்   ஆருயிர்   தோழனை   அப்படி   விட்டு   விடுவாரா ?    கலிக்காமரை    பிழைப்பித்து   அவரே   சுந்தரரை   தடுத்து   தன்னை   மன்னிக்க    வேண்டுகிறார் .  எம்பிரான்   சுந்தரரிடம்    கொண்டுள்ள   அளவிலா   அன்பை   புரிந்து   கொண்டு   கலிக்காமர்   தன்   அறியாமையால்   சுந்தரரை   தவறாக   எண்ணியதை   நினைத்து   வருந்தி   அவரிடம்   மன்னிப்பு    கோரினார் .  இருவரும்    நெருங்கிய   நண்பர்களாயினர் .  அவரும்    சுந்தரருடன்   ஆரூரில்   தங்கி   அருகிலுள்ள    சிவாலயங்களை   சேவித்து   கொண்டு   சில   நாட்கள்  கழித்து   தம்   ஊர்   திரும்பினார் .       

Thursday, 16 January 2020

சுந்தரருக்கும்   பரவையா  ருக்கும்   ஏற்பட்ட    பிணக்கை   தீர்க்க   அவருடைய   வேண்டுகோளுக்கு   இணங்கி     ஆரூர்ப்பெருமான்   வீதியில்   தம்     தாமரை    பாதங்கள்   நோக   நடந்து   பரவையார்    இல்லத்திற்கு   நடந்தே    தூது   போன   அதிசய   செய்தி   நாடெங்கும்      பரவியது .  அந்த   செய்தி    திருப்பெருமங்கலத்து    பெரும்   சிவனடியார்   ஏயர்கோன்கலிக்காமன்   என்பவர்   காதில்   விழுந்த   போது   மிக்க   வேதனை   அளித்தது .   இது   ஐயனுக்கு   ஏற்பட்ட   பேரவமானமாக   அவரை  சுட்டெரித்தது .   சுந்தரரை   கொல்ல   வேண்டுமென்ற   வெறி   ஏற்பட்டது .  இதை   கேள்விப்பட்ட    சுந்தரர்   மிக்க    வருத்தம்   அடைந்தார் .   செய்வதறியாமல்     ஆ ருர்த்தியாகேசனை    சரணமென்று   அடைந்தார்.  பக்தனின்   மன    வேதனையை      பொறுக்காமல்    ஈசன்   கலிக்காமருக்கு   சூலை   நோயை   கொடுத்து    அவர்   கனவில்   தோன்றி    இந்நோயை    சுந்தரர்   ஒருவர்தான்   தீர்க்க   முடியுமென்று    தெரிவித்தார் .   ஏயர்கோன்   கலிக்காமர்      சுந்தரரால்   உயிர்         பிழைப்பதை  விட   இறப்பதே   மேல்    என்று   எண்ணி   வயிற்றை    கிழித்து  கொண்டு   உயிர்   துறந்தார் .   அப்போது    அவரை   காண   அங்கு    வந்த    சம்பந்தர்   அவர்   மாண்ட     செய்தி    கேட்டு    அவரும்   தன்னை    மாய்த்துக்கொள்ள    துணிந்தார் .      

Wednesday, 15 January 2020

இதற்குள்   பரவைக்கு   மனக்குழப்பம்   ஏற்பட்டது . அர்ச்சகராக   வந்தது   சிவபெருமான்   என்ற   ஐயம்    உண்டாயிற்று .  அவர்   சென்றதும்   அங்கு   சூழ்ந்த   தெய்விக   நறுமணம்    காதில்   ஒலித்த   வேதகோஷம்   இதெல்லாம்   அவள்   மனதில்   சந்தேகத்தை   எழுப்பியது .   அவரின்   பேரருள்   பெற்ற   சுந்தரருக்காக   எம்பிரானே   வந்திருப்பாரோ  ?  தவறு   செய்து   விட்டோமோ  என்று   அலை   பாய்ந்தது .  எதிர்த்து   பேசியது   பெரும்   தவறு   என்று   மனம்  பதறியது.     அப்போது   பரவை   என்று   ஈசன்    அழைக்கும்   குரல்    கேட்க    மனம்   புல்லரிக்க   பரவை   ஓடிவந்து   தாள்   திறந்து   அவர்   பாதங்களில்   விழுந்தாள் .   உலகமனைத்தும்    போற்றி   தொழும்   அப்பாதங்கள்    இந்த   ஆரூரனுக்காக   வீதியில்   கால்   தேய   நடந்து   வந்தார்   என்றால்   அவர்   பெருமையை   உணராமல்    உதாசீனம்        செய்தது   எத்தனை   பாபம்   என்று   உணர்ந்த   பரவை    உடனே   அவர்   பின்   சென்று    அவருடன்   இணைந்தாள் .  இருவரும்   சேர்ந்து   ஆரூரில்   சில   காலம்   மனமொத்து   வாழ்ந்தனர் .       
ஐயன்   திரும்ப   வந்தார் .  சுந்தரர்   மிக   எதிர்பார்ப்புடன்   சந்தோஷம்   பொங்க   அவரை   எதிர்கொண்டு   அழைக்க     விரைந்தார் .  ''  சுந்தரா   பரவை   என்ன   சொல்லியும்   ஏற்க   மறுத்து   விட்டாள் . '' என்றார் .   அதை   கேட்ட   சுந்தரர்   இடி   விழுந்தாற்போல்   ஆனார் .  சோர்வடைந்தார் .  உரிமை   கலந்த   கோபம்   எழுந்தது .   ''சுவாமி   உங்கள்   பேச்சை   கேட்க வில்லை   என்று   திரும்பி   விட்டீ ர்களா ?    அன்று   த்ரிபுராந்தகர்கள்   தங்கள் பேச்சை   கேட்கவில்லை   என்று   அவர்களை   விட்டு   திரும்பினீர்களா ?  மார்கண்டனை   அழிக்க   காலனை   விட்டு   திரும்பினீர்களா ?  இந்த   சுந்தரன்தானே   என்ற   அலட்சியமா ?  இதற்காகவா   என்னை   தடுத்தாட்கொண்டீர் .  இனி   எனக்கு   வாழ   விருப்பமில்லை .  ''  என்று   துக்கத்துடன்   கூறினார்   சுந்தரர் .  நகைத்தவாறு   எம்பெருமான்   வருத்தப்படாதே     சுந்தரா   நான்   முயற்சிக்கிறேன்.   என்று    கூறி   இந்த  முறை   மாறு   வேடம்   இல்லாமல்   சுய    தி.வ்ய   சுயரூபத்துடன்   புறப்பட்டார்                  

Monday, 13 January 2020

அர்ச்சகர்    வேடத்திலிருந்த   எம்பெருமான்    ''பரவை   அவன்   தவறு   செய்து   இருக்கலாம் .  இப்போது   அவரை   மன னித்து    ஏற்பது   உனக்கு   நன்மை .  அவன்   உனக்காக  மிகவும்   ஏங்குகிறான் .   உன்னை   தேடி   இத்தனை   தூரம்    வந்திருக்கிறான் .''  என்றார் .   மிக   கோபமடைந்த   பரவை   கண்டிப்புடன்   அவரை   நோக்கி   ''இதற்கு மேல்   தாங்கள்   இங்கு   நிற்பது   அழகல்ல   உங்கள்மீது    நான்   வைத்திருக்கும்   மரியாதையை   இழந்து   விடுவீர்கள் ''  என்று   கோபமாக   உரைத்தாள் .   சிரித்தவாறு   கிளம்பினார்   அம்பலவாணர் .   சுந்தரர்   ஆலயத்தில்   தவித்துக்கொண்டிருந்தார் .  பரவை   பற்றிய   கவலையை   தவிர   ஞானிகளுக்கும்    தவமுனிவர்களுக்கும்   தேடி  அடையமுடியாத   அத்திருப்பாதங்களை   கேவலம்   சேவகனைப்போல்   தெருவில்   தெருவில்   அலையவிட்ட   பெரும்   பாதகம்   செய்து      விட்டோமே   என்ற   என்ற      பெரும்   குற்ற   உணர்வு   மறுபக்கம் .

Sunday, 12 January 2020

பரவையார்   மாளிகை   அடைந்ததும்   ஐயன்   தேவர்   முனிவர்களை   மறைத்து   தான்   ஓர்   அர்ச்சகர்   உருவில்   உள்ளே   நுழைந்தார் .  பரவையார்   இந்த   வேளையில்   தன்னை   தேடி   யார்   வருகிறார்   என்று   இந்த   வேளையில்   தன்னை   தேடிவந்த   காரணத்தை   அர்ச்சகர்   உருவில்   வந்த   ஈசனை   வினவினாள் .   அவர்   நான்   சொல்வதை   மறுக்காமல்   ஏற்பதானால்   சொல்கிறேன்   என்றார் .   அவளும்   சரியென்று   பட்டால்   தயங்காமல்   ஏற்கிறேன்.  என்று   பதில்   கூறினாள் .   அவர்   சுந்தரன்   உனக்காக   துடித்து   கொண்டிருக்கிறான் .  அவன்   செய்தது   தவறுதான்   என்றாலும்   மன்னித்து   ஏற்றுக்கொள்.  அவன்   உன்   நினைவாகவே   இருக்கிறான்   என்று   கூறினார்.   அதற்கு   பரவையார்   ''என்னை   நினைத்துக்கொண்டிருந்தால்   சங்கிலியாரை   எவ்வாறு    மணந்து   கொண்டு   ஆனந்தமாக   வாழ்ந்திருப்பார் .  அதன்  பிறகு   என்னிடம்   அவர்க்கு   என்ன   உரிமை   இருக்கிறது ''  என்று   பதில்   கேள்வி   எழுப்பினார் .        

Tuesday, 7 January 2020

சுந்தரர்   சில   பெரியோர்களை   அனுப்பி   சமாதானம்   செய்ய   கூறினார் .  அனால்   பரவையார்   அவர்   செய்த   குற்றம்   மன்னிக்க   தக்கதல்ல   என்று   கூறி   இனி   யாரும்   இவ்வாறு   வரவேண்டாம்   என்று   கண்டிப்பாக   கூறி   அனுப்பினார் .   சுந்தரர்   அளவிலா   வே  தனை   அடைந்தார் .  ''ஐயனே   நீ   இதுவரை   எல்லா   துன்பங்களிலிருந்தும்   என்னை   மீட்டிருக்கிறாய் .  நான் சங்கிலியாரை   மணந்து   கொண்டதை   பரவையார்   ஏற்கவில்லை.  உன்   விருப்பப்படி   தானே   நான்   அவளை   மணந்தேன் .  எனக்கு   நீயே   கதி .  பரவையார்   முன்போல்   என்னிடம்   அன்பு   செலுத்த    வைப்பது   உன்    பொறுப்பு ''.  என்று   இறைவனிடம்   மன்றாடினார் .   அவரும்   'கவலை   படாதே .  நானே  உன்  பொருட்டு   தூது   செல்கிறேன் . என்று   சமாதானம்   கூறினார் .  மகிழ்ந்தார்   சுந்தரர் . தன்   பக்தனுக்காக   அன்பே   உருவான   எம்பிரான்   தன்   தாமரையொத்த   பொற்பாதங்கள்   நோக   தேவர்   முனிவர்கள்   புடைசூழ   ஆரூர்   வீதியில்   நடந்தார் .     
சுந்தரர்   'மீளா   அடிமை   உமக்கே '  எனும்   பதிகம்   தனக்கே   உரிய   நட்புரிமையுடன்   பாடியது    ஐயனை   உருக்கியதில்   அதிசயம்   இல்லை .   உடனே   தன்   தோழனுக்கு   இரண்டாவது   கண்ணை   வழங்கியதும்   இயல்பே .    சுந்தரரும்   நன்றி   பெருக்கோடு   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   தம்பிரானையும்   மகிழ்வித்தார் .  தேவாசிரிய   மண்டபத்தை   அடைந்தார் .  அடியார்கள்   மகிழ்ச்சியுடன்   கூடி   இருந்தனர். ஆனால்      பரவையார்    சிறிதும்   இன்பம்    அடையவில்லை .    ஒற்றியூரில்   சுந்தரர்   சங்கிலியாரை   மணந்த     செய்தி   கேட்ட   அதிர்ச்சி   அவரை   மிக   துன்பத்தில்   ஆழ்த்தியது .  அவரை   காண கூட   விரும்பவில்லை .  அவரை   தன்   மாளிகையில்   அனுமதிக்ககூட    விரும்பவில்லை .   அடியார்கள்   சுந்தரர்     வந்த   செய்தி   சொல்லி   அமுது   செய்விக்க   சொல்ல   சென்ற   போது   பரவையார்   அவரிடமிருந்து   அடியார்கள்   வந்ததை   அறிந்து   காவலர்களிடம்   அவர்களை   அனுமதிக்க   வேண்டாம்   என்று   கட்டளையிட்டார் .   அவர்கள்   இச்செய்தியை   வந்து   சுந்தரரிடம்   தெரிவித்தபோது   சுந்தரர்   பெரிதும்   துக்கத்திற்கு   ஆளானார் .         

Thursday, 2 January 2020

இடது   கண்   பெற்ற  சுந்தரர்    உள்ளம்   மகிழ்ச்சி   பொங்க   காஞ்சி   பெருமானை   ஒரு   கண்ணால்   மனம்   குளிர   'ஆலந்தானுக்குகந்த   அமுது   செய்தானை '  என்று   பதிகம் பாடி   தரிசித்தார் .   காஞ்சியை   விட்டு   புறப்பட்ட   சுந்தரர்   ஆரூரனை   காணும்   பேராவலால்   எங்கும்   அதிகம்   தங்காமல்      வழியில்   எதிர்ப்பட்ட   ஆலயங்களில்   நுழைந்து   ஐயனை   சேவித்தவாறே   எங்கும்   தாங்காமல்   தியாகேசர்   நினைவால்    உந்தப்பட்டு       விரைவாக    திரு   ஆமாத்தூர்,   திருஅரைத்துறை   பிறகு   திரு   ஆவடுதுறை    சென்று   தன்   பிணியை   நீக்குமாறு   வேண்டியவாறு   பயணித்தார் .  திருந்துருத்தியை   அடைந்தார் .  அங்கு   பெருமான்   அவருக்கு   சிறிது   கருணை   காட்டி   பக்கத்திலுள்ள   திருக்குளத்தில்   நீராட   கூறினார் .  அவரும்  அவ்வாறே   செய்ய   உடல்   களைப்பு   சோர்வு   நீங்கி    புத்துணர்ச்சி       பெற்றார் .    நன்றி   பெருக்குடன் '' மின் னுமா   மேகங்கள் ''  எனும்   பாடி   நன்றி        பெருக்குடன்   மேலும்   சில   ஆலயங்களை   தரிசித்து  கொண்டு    ஆரூர்   வந்தடைந்தார் .  அதற்குள்   அவர்   திரும்பிய   செய்தி   ஊரில்   பரவியது .  அவர்    அடியார்களுடன்   ஆலயம்   வந்தடைந்தார் .    ஐயனை   நோக்கி    உருக்கத்துடன்   ''சோதனை   போதாதா   உன்னை   மனம்   குளிர   இரு கண்ணால்   தரிசிக்க   மற்ற   கண்ணையும்   தாராயோ   என்று   மனமுருக   பாடினார் .  அன்பனின்   வேண்டுகோளை   மறுக்க   இயலாத   தியாகேசன்   மறு   கண்ணையும்   அளித்தார் .