பிறப்பு எனும் விடியலும் இறப்பு இரவும் மாறிமாறி வருவது இயற்கையின் நியதி . பிறவிப்பிணிக்கு ஒரே மருந்து பஞ்சாட்சிரமே . உடலை யும் உள்ளத்தையும் பேணி காத்து திருமூலரின் உரைப்படி நற்பண்புகளை கடைப்பிடித்து ஈசன் பாதங்களே சதமென்று நம்புவோர்க்கு இப்பிணியிலிருந்து விடுதலை நிச்சயம் . நாம் சேர்க்கும் செல்வம் நமக்கு துணை வராது நாடாளும் மன்னன் ஆனாலும் பிச்சை எடுப்பவன் ஆனாலும் ஒரே நிலை தான் .செல்வமும் அவ்வாறே
நிலையற்றது . தேனீ பூக்களை அலைந்து தேடி சேகரித்து வைக்கும் .ஆனால் அந்த தேன் கூட்டை சிதைத்து அதை உண்ணுபவர் வேறு எவரோ .நாம் இவ்வுலகை விட்டு போகும்போது நம்முடன் அச்செல்வம் வராது . நாம் கடைபிடித்த விரதங்களின் பயன் , நாம் செய்த தான தர்மங்கள் மற்ற ஜீவ ராசிகளுக்கு செய்த புண்ணிய காரியங்கள் இவையே நம்மை தொடர்ந்து வரும் . இளமையும் அவ்வாறே நிலை அற்றது . ஆதலால் இளமையும் உடலில் வலுவும் உள்ளபோதே புண்ணிய காரியங்களை செய்து நற்கதிக்கு வழி தேடுங்கள் .
நிலையற்றது . தேனீ பூக்களை அலைந்து தேடி சேகரித்து வைக்கும் .ஆனால் அந்த தேன் கூட்டை சிதைத்து அதை உண்ணுபவர் வேறு எவரோ .நாம் இவ்வுலகை விட்டு போகும்போது நம்முடன் அச்செல்வம் வராது . நாம் கடைபிடித்த விரதங்களின் பயன் , நாம் செய்த தான தர்மங்கள் மற்ற ஜீவ ராசிகளுக்கு செய்த புண்ணிய காரியங்கள் இவையே நம்மை தொடர்ந்து வரும் . இளமையும் அவ்வாறே நிலை அற்றது . ஆதலால் இளமையும் உடலில் வலுவும் உள்ளபோதே புண்ணிய காரியங்களை செய்து நற்கதிக்கு வழி தேடுங்கள் .