திருமந்திரம் அறிவு சமுத்திரம் . அதில் என்னால் அள்ள முடிந்தது ஒரு கை அளவே . இத்தகைய அறிவு களஞ்சியம் நம் தமிழில் இருப்பதே நமக்கு பெருமை . இந்நூலை ஆராய்ந்து எத்தனையோ பேராசிரியர்கள் நூல்கள் கட்டுரைகள் புத்தகங்கள் எழுதியுள்ளனர் . அவர்கள் வாழ்க . ஆயினும் முழுமையாக நாம் பெற்றுவிட்டோமா என்பது கேள்வி குறியே . திருமுலரை புரிந்து கொண்டவர்கள் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்வாங்கு வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை . இது உலக பொது மறை .
Wednesday 13 April 2016
Thursday 7 April 2016
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லே நாணாமே |
இவ்வாறு மனித குலம் ஒன்று பட்டு வாழ்வதின் மேன்மையை வலியுறுத்துகிறார் .
அன்பின் வலிமையை இவர் மேன்மேலும் வலியுறுத்தி சொல்கிறார் . ஈசன் உடலை வருத்தி செய்யும் எவ்வழிபாட்டையும் விரும்புவதில்லை . அன்பே வடிவானவன் ."அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே " இது அவர் வாக்கு
அடுத்து வரும் பாடல்கள் ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியவை . எம்போல் எளிய மனிதர்கள் அறிவிற்கு அப்பாற்பட்டவை . ஞானிகளும் சித்தர்களும் அறியகூடியவை .முதலில் புராணங்களில் வரும் சம்பவங்கள் குறித்த உள் தத்துவங்களை விளக்குகிறார் . ஈசன் முப்புரம் எரித்தது , தக்ஷயாகம் , சில அசுரர்களை அழித்தது போன்றவை . அஷ்டாங்க யோகம் , ப்ராணாயாமம் , த்யானம் மேலும் மூலாதார சக்கரங்கள் .பஞ்சாக்ஷ்ர மகிமை , திருநீற்று பெருமை இவற்றை விளக்குகிறார் .சூன்ய சம்பாஷணை என்று பெரும் தத்துவங்களை பூடகமாக விளக்குகிறார் . இவைகள் ஆகமங்களை அடிப்படையாக கொண்டவை .
நன்றே நினைமின் நமனில்லே நாணாமே |
இவ்வாறு மனித குலம் ஒன்று பட்டு வாழ்வதின் மேன்மையை வலியுறுத்துகிறார் .
அன்பின் வலிமையை இவர் மேன்மேலும் வலியுறுத்தி சொல்கிறார் . ஈசன் உடலை வருத்தி செய்யும் எவ்வழிபாட்டையும் விரும்புவதில்லை . அன்பே வடிவானவன் ."அன்போடு உருகி அகம் குழைவார்கன்றி என்போல் மணியினை எய்த ஒண்ணாதே " இது அவர் வாக்கு
அடுத்து வரும் பாடல்கள் ஆழ்ந்த தத்துவங்கள் அடங்கியவை . எம்போல் எளிய மனிதர்கள் அறிவிற்கு அப்பாற்பட்டவை . ஞானிகளும் சித்தர்களும் அறியகூடியவை .முதலில் புராணங்களில் வரும் சம்பவங்கள் குறித்த உள் தத்துவங்களை விளக்குகிறார் . ஈசன் முப்புரம் எரித்தது , தக்ஷயாகம் , சில அசுரர்களை அழித்தது போன்றவை . அஷ்டாங்க யோகம் , ப்ராணாயாமம் , த்யானம் மேலும் மூலாதார சக்கரங்கள் .பஞ்சாக்ஷ்ர மகிமை , திருநீற்று பெருமை இவற்றை விளக்குகிறார் .சூன்ய சம்பாஷணை என்று பெரும் தத்துவங்களை பூடகமாக விளக்குகிறார் . இவைகள் ஆகமங்களை அடிப்படையாக கொண்டவை .
Subscribe to:
Posts (Atom)