tamilisai
Saturday 18 November 2023
Monday 9 March 2020
சிவ பெருமானின் பெருமையை பாடிய பன்னிரு திருமுறைகள் எளிமையான தமிழில் யாவருக்கும் படித்து அறியும் வகையில் எழுதி உள்ளேன் . ஆதரவுக்கு நன்றி . பன்னிரெண்டாம் திருமுறை எழுத மட்டும் திருவாளர் . கார்த்திகேயன் அவர்கள் எழுதிய பெரிய புராணம் படித்தது மிக்க உதவியாக இருந்தது . அன்னாருக்கு என் மனமார்ந்த நன்றி உரித்தாகும் .
லலிதா விஜயராகவன்
லலிதா விஜயராகவன்
Friday 6 March 2020
அநபாய சோழன் ' தொண்டர் சீர்பரவுவார் ' எனும் திருநாமத்தை மந்திரிக்கு சூட்டி வணங்கினார் . பதினோரு திருமுறைகளோடு இந்நூலை பனிரெண்டாம் திருமுறை என்று வகுத்து செப்பேடு செய்து சன்னிதானத்தில் ஏற்ற உத்தரவிட்டான். நடராஜர் ஆலய மணிகள் மங்கள ஓசை எழுப்பின . அநபாயன் அமைச்சர் இருவரையும் மணியோசை புளகாங்கிதம் அடைய செய்தது . சன்னதியில் மங்கள ஆர்த்தி செய்யப்பட்டது . அவர்கள் இரு கரம் கூப்பி ஐயனை தொழுதனர் . இம்மாபெரும் பணி நிறைவேறியதில் அவர்கள் மனம் நிறைந்து இருந்தது . இப்பெரும் நூல் அரங்கேறியது . ஆடலரசனின் பெரும் கருணையால் இம்மாபெரும் காரியம் அமோகமாக நிறைவு பெற்றது . மக்கள் மகிழ்ச்சி சொல்ல முடியாதது .
சுபம்
சுபம்
சுந்தரர் வரலாற்றை கூறி முடித்த உபமன்யு முனிவர் கண்கள் கலங்க ''அடியார்களிடம் இறைவன் காட்டும் அன்பு விவரிக்க ஒண்ணாதது '' என்று கூறி அதை எண்ணி மெய்மறந்து நின்றார் . கூடியிருந்த முனிவர்கள் அடியார்கள் நெஞ்சம் நெகிழ்ந்தது .
சித்திரை மாதம் திருவாதிரை நாள் எம்பெருமானுக்கு உகந்த நாள் அன்று அருண்மொழி தேவர் பாடிவந்த திருத்தொண்டர் புராணம் சரியாக ஓர் ஆண்டுக்குப்பின் நிறைவு பெற்றது .
மக்கள் பக்திப் பெருக்கோடு அமைச்சரின் இத்தொண்டை வெகுவாக போற்றி கொண்டாடினர் . அநபாய சோழன் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தான் . அமைச்சர் பாடிய இத்திருப்புராணத்திற்கு மிக்க பக்தியோடு பூஜை செய்து அதை யானை மேல் ஏற்றி அமைச்சரை அமர செய்து தானும் அமர்ந்து சாமரம் வீசியபடி தில்லை நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார்
சித்திரை மாதம் திருவாதிரை நாள் எம்பெருமானுக்கு உகந்த நாள் அன்று அருண்மொழி தேவர் பாடிவந்த திருத்தொண்டர் புராணம் சரியாக ஓர் ஆண்டுக்குப்பின் நிறைவு பெற்றது .
மக்கள் பக்திப் பெருக்கோடு அமைச்சரின் இத்தொண்டை வெகுவாக போற்றி கொண்டாடினர் . அநபாய சோழன் மிக்க மகிழ்ச்சியில் மூழ்கி இருந்தான் . அமைச்சர் பாடிய இத்திருப்புராணத்திற்கு மிக்க பக்தியோடு பூஜை செய்து அதை யானை மேல் ஏற்றி அமைச்சரை அமர செய்து தானும் அமர்ந்து சாமரம் வீசியபடி தில்லை நான்கு வீதிகளிலும் ஊர்வலமாக வந்தார்
Thursday 5 March 2020
இறைவன் மிக்க மகிழ்ச்சி அடைந்து சேராமனுக்கு அவர் எழுதிய ஞான உலாவை பாட அனுமதி அளித்தார் . தேவர்கள் ஞானியர்கள் கூடி இருந்த சபையில் இறைவன் முன் பாடினார் . இறைவன் மனம் மகிழ்ச்சி அடைந்து ''நீங்கள் இருவரும் இங்கு நம் கணங்களுக்கு தலைவர்களாய் இருந்து வாருங்கள் என்று கூறி வாழ்த்தி அனுப்பினார் .ஆனால் சுந்தரர் முன்பு செய்த அதே தொண்டுகளில் ஆழ்ந்தார் . சேரமானார் கணங்களின் தலைவரானார் .
ஆரூரிலிருந்து பறவையாரும் ஒற்றியூரிலிருந்து சங்கிலியாரும் கைலாயம் வந்து பழையபடி கமலினி , அனந்திதை யாக தேவியின் சேடிகளாக தங்கள் பணிகளை தொடர்ந்தனர் .
ஆரூரர் அருளிய ' தானெனை ' எனும் பதிகம் பக்தியுடன் அஞ்சைக்களத்தில் சேர்த்தனர் . சேரமான் பாடிய ஞான உலா திருப்பிடவூரில் உலகம் அறிய செய்யப்பட்டது .
ஆரூரிலிருந்து பறவையாரும் ஒற்றியூரிலிருந்து சங்கிலியாரும் கைலாயம் வந்து பழையபடி கமலினி , அனந்திதை யாக தேவியின் சேடிகளாக தங்கள் பணிகளை தொடர்ந்தனர் .
ஆரூரர் அருளிய ' தானெனை ' எனும் பதிகம் பக்தியுடன் அஞ்சைக்களத்தில் சேர்த்தனர் . சேரமான் பாடிய ஞான உலா திருப்பிடவூரில் உலகம் அறிய செய்யப்பட்டது .
சுந்தரர் இறைவனை மீண்டும் வணங்கி ''ஐயனே என் நண்பன் சேரமான் பெ ருமானார் வாயிலேயே நிறுத்தப்பட்டார் . தயை கூர்ந்து அவருக்கும் கிருபை செய்ய பிரார்த்திக்கிறேன் '' என்று கேட்டுக்கொண்டார் . உடனே இறைவன் தம் கணங்களுக்கு அவரையும் அழைத்து வருமாறு ஆணையிட்டார் . அவ்வாறே அவரை அழைத்து வந்தனர் . சேரமானார் வந்ததும் எம்பெருமான் காலில் விழுந்து வணங்கினார் . ஐயன் ' நாம் உன்னை அழைக்காதபோது எப்படி இங்கு வந்தாய் ' என்று வினவினார் . அதற்கு சேரமான் ''ஆரூரரை நான் வணங்கிக்கொண்டே வந்தேன் . தங்கள் அன்புமிக்க அடியார் மீது நான் கொண்ட பக்தி என்னை தங்கள் திருவடிகள் வரை கொண்டு சேர்த்ததில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது ? நான் தங்கள் மீது ஞான உலா ஒன்று பாடினேன் . அதை உங்கள் படிக்க உத்தரவு வேண்டுகிறேன் என்றார் .
Tuesday 3 March 2020
சுந்தரர் ''தானெனை முன் படைத்தான் '' எனும் திருப்பதிகம் பாடியபடி திருக்கயிலாயம் தென் வாயிலை அடைந்தார் . அங்கே சேரமான் அவருக்காக காத்திருந்தார் . இருவரும் பல வாயில்களை கடந்து பிரதான வாயிலை அடைந்தனர் . அங்கு சேரமானை அனுமதிக்க மறுத்து விட்டனர் . சுந்தரர் கைலாயநாதர் சன்னதியை அடைந்தார் . அவர் காலில் விழுந்து சேவித்தார் . அன்பு மிகுதியால் கயிலை பதி ''ஆலால சுந்தரா வந்து விட்டாயா ?'' என்று நெஞ்சார வரவேற்றார் . அவரை நோக்கி மனமுருகி '' ஐயனே பாசவினைகளில் சிக்கி உழலாமல் என்னை காத்து என் தவறுகளை மன்னித்து என்னை தடுத்து ஆட்கொண்ட அண்ணலே உமது கருணையை எவ்வாறு போற்றுவேன்'' என்று ஆனந்த கண்ணீர் உகுத்தார் சுந்தரர் . .
Subscribe to:
Posts (Atom)