Monday, 8 December 2014

sathuram

அப்பரும் ,சம்பந்தரும்  பெரும்  ஆனந்தம்  அடைந்து  ஈசனை  பலவாறு  துதித்தனர் . பிறகு  அப்பர்  மக்கள்  தடையின்றி  ஆலயம்  வந்து  போக  ஆலைய  கதவு  மூடுவதற்கும்  வழி  செய்தல்  அவசியம்  என்று  அதற்கு  பாடுமாறு  சம்பந்தரை  வேண்ட  அவரும் ''சதுரம்மறை '' எனும்  பதிகம்  பாடி  கதவம்  தாளிட  செய்கிறார் .  

Thursday, 4 December 2014

maraikadu

வருத்த மடை ந்த  சம்பந்தர்  அப்பரை  வணங்கி  இவ்வூர்  பக்தர்கள்  தடையின்றி   கோபுர  வாயில்  வழி  வந்து  ஐயனை   தரிசிக்க  தாங்கள்  தான்  ஈசனை  துதித்து  பாடி  இக்கதவை  திறக்க செய்ய  வேண்டும்  என்று  விண்ணப்பிக்கிறார் . அப்பரும்  தங்கள்  சித்தம்  என்று  கூறி  இப்பதிகத்தை   பாடுகிறார் .
பண்ணின்  நேர்  மொழியாள்  உமை  பங்கரோ
மண்ணினார்  வலம்  செய்  மறை காடரோ
கண்ணினால்  உமை  காண  கதவினை
திண்ணமாக  திறந்தருள்  செய்மினே .
ஈசன்  அவர்  கானத்தில்  மயங்கி  இருந்ததால்  ஒன்பது  பதிகம்  பாடியபின்னும்   திறக்க   படாமை யால்  மனம்  நொந்த  அப்பர்  பாடுகிறார் .
அரக்கனை  விரலால்  அடர்த்திட்ட  நீர்
இரக்கம்  ஒன்றிலீர்  எம்பெருமானிரே
சுரக்கும்  புன்னைகள்  சூழ்  மறைக்காடரோ
சரக்க  இக்கதவம்  திறப்பின்மினே /
இப்பாடல்  முடிந்ததும்  கதவுகள்  திறந்து  மகிழ்ச்சி  வெள்ளம்  பொங்கியது . அப்பரும்  கண்ணீர்  மல்க  ஐயனை  வணங்கினர் .  

Tuesday, 2 December 2014

pannin

அப்பரடிகள்  தன்  பக்தி  பயணத்தை  தொடர்கிறார் . அவர்  ஞானசம்பந்தரை  சந்திக்க  பேராவல்  கொண்டு  அவரை  சந்தித்து  இருவரும்  சேர்ந்து  தங்கள்  பக்தி  யாத்திரையை  தொடர்கின்றனர் . அவர்கள்  இப்போது  வேதாரண்யம்  என்று  அழைக்கப்படும்  திருமறைக்காடை  வந்தடைகின்றனர் . கோவிலை  அடைந்து  உள்ளே  சென்ற  அவர்கள்  சன்னதிக்கு  நுழை  வாயிற்  கதவு  பூட்டப்பெற்றிருப்பதை  கண்டு  அதிர்ச்சி  அடைந்தனர் . மக்களை  வினவினார்கள் . வேதங்கள்  சிவபிரானை  வழிப்பட்டபின்  பூட்டிய  கதவு  திறக்க  வேதம்  ஓதும்  அந்தணர்கள்  முயன்றும்  முடியவில்லை  என்று  கூறினர் .''அருமறைகள்  திருகாப்பு  செய்து  வைத்த  அக்கதவம்  திறந்திட "  கூடவில்லை என்று  சேக்கிழார்  பெரிய  புராணத்தில்  கூறுகிறார் .

Tuesday, 25 November 2014

navukarasar

நாவுக்கரசர்   தன்  அந்த பாவ  உடலுடன்  ஈசனை  நெருங்கவே  கூசினார் . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  ஈசனின்  மூவிலை  சூலத்தை  தன்  உடலில்  பொறித்துக்கொள்ள  விரும்பினார் . அவர்   திருதூங்கானை மாடம்  எனும்  திருத்தலத்தை  அடைந்து  இப்பதிகம்  பாடுகிறார் .
 பொன்னார்  திருவடிக்கு  ஒன்றுண்டு  விண்ணப்பம்  போற்றி  செய்யும்
என்னாவி காப்பதற்கு  இச்சை யுண்டேல்  இருங்கூற்றகல
மின்னாரும்மூவிலை  சூலமென் மேற்பொறி ,மேவு கொண்டல்
துன்னார்  கடந்தையுள்  தூங்கானை மாட  சுடர் கொழுந்தே .
இப்பதிகம்  பாடியவுடன்    ஐயனின்    சன்னதியிலிருந்து  கிளம்பி  வந்து  நாவுக்கரசரின்  கையில்  மூவிலை  சூலம்  தன்  உருவை  பதித்து  சென்றது . திருநாவுக்கரசர்  பெரிதும்  மன  அமைதி  அடைந்தார் .

Monday, 24 November 2014

thoonganaimadam

நாவுக்கரசர்  இவ்வாறு  சிவத்தில்  மூழ்கி  இருந்தாலும்  அவர்  மனத்தில்  ஒரு  நெருடல்  இருந்துகொண்டே  இருந்தது . 'வேதவேள்வியை  நிந்தனை ' செய்தும்  சிவநிந்தனை  செய்தும்  வாழ்ந்த  சமணர்களுடன்  தான்  அத்தனை   காலம்  துணையாக  இருந்ததை  நினைத்து  அவர்  உடலும்  உள்ளமும்  பெரும்  வேதனை  கொண்டது  . தன்னை  தூய்மை  படுத்திக்கொள்ள  துடித்தார் . 

Wednesday, 19 November 2014

angamalai

நாவுக்கரசர்  தன்  பக்தி  பயணத்தை  தொடர்கிறார் . அவர்  பாடிய அங்கமாலை  மனித பிறவி  எடுத்ததன்  பயனை  விளக்குகிறது . நமது  ஒவ்வொரு  அங்கமும்  படைக்கப்பட்ட  பயனை  கூறுகிறார் . தலையே  நீ  வணங்காய்  என்று  தொடங்கி , கடல் நஞ்சுண்ட  கண்டனை  காண    கண்கள் , எரிபோல்  மேனி  பிரான்  திறன்  கேட்க  செவிகள்  இவ்வாறே  கைகாள்  கூப்பி தொழீர் , அரன்  கோயில்  வலம்வர  கால்கள்  இவ்வாறே  சொல்லி ,உற்றார்  யார்  உளர்  உயிர்  கொண்டு  போகும்போது குற்றா லதுறை  கூத்தனல்லால்  என்று  வினவுகிறார் ,கடைசியாக  அவர் பாடுகிறார்
தேடி  கண்டுகொண்டேன்  திருமாலொடு  நான்முகனும்
தேடி  தேடொணா  தேவனை  என்னுள்ளே ///
பெரும் வேத தத்துவத்தை  அவர்  ஒரே  வரியில்  விவரித்து  விடுகிறார் . தன ஆன்மா  வேறல்ல  சிவம்  வேறல்ல  என்னும்  பெரும்  தத்துவத்தை  அதில்  அடக்கிவிட்டார் .    

angamalai

இத்தனை  சோதனைகளையும்  வெற்றிகரமாக  சந்தித்து  பின்  சமணர்களையும்  வாதில் வென்று  மன்னரின்  மனதில்  பெரும்  மாற்றத்தை  உண்டாக்குகிறார் . பல்லவ மன்னன்  மிக  வருந்தி  நாவுக்கரசரை  குருவாக  ஏற்று கொள்கிறார் . தன்  பாவத்திற்கு  பிராயச்சித்தமாக  தொண்டை  மண்டலத்தில்  நிறைய  சிவ  விஷ்ணு  ஆலயங்களை  எழுப்புகிறார் . நாவுக்கரசரை  ஈசனுக்கு  சமமாகவே   மதிக்கிறார் .   

Monday, 17 November 2014

masil

பட்டத்து  யானையை  விட்டு  அவரை மிதிக்க  ஏவுகிறான் . அவர்
சுண்ண  வெண்ணீர்  அணி  சாந்தும்  சுடர்  திங்கள்  சூளாமணீயும்
என்னும்  பாடலால்  ஐயனை  வருணித்து  இத்தனை யும் 'யுடையார்  தமர்  நாம் '
அஞ்சுவது  யாதொன்றும்  இல்லை  அஞ்ச  வருவதும்  இல்லை '
என்று  பாட  பட்டத்து  யானை  அவரை  வல ம் வந்து  வணங்கி  செல்கிறது .
மன்னன்  அவரை  சுண்ணாம் பு  காளவாயில்  இட   ஆணை  இ டுகிறான்
 மாசில்  வீணையும்  மாலை  மதியமும்
வீசு  தென்றலும்  வீங்கிளவேனிலும்
போன்ற  ஈசன்  இணையடி  நிழல்   கண்ட  அனுபவத்தை  பாடுகிறார் . அவரில்  எவ்வித  துன்ப  சாயலே  காணப்பட வில்லை . 

appar

நாவுக்கரசரை  கொல்வதற் கு மன்னனால் பல  முயற்சிகள்   செய்யப்படுகிறது .  

Sunday, 16 November 2014

namasivaya

நாவுக்கரசர்  சைவத்திற்கு  மாறியதை  அறிந்த  மகேந்திர  பல்லவனும்   சமணர்களும்  பெரும் ஆத்திரமடைந்தனர் . சமணர்கள் நாவுக்கரசரை  கொல் வதற் கு மன்னருடன்  பல  வகைகளில்  முயற்சி   செய்தனர் .  நாவுக்கரசரால்  இடைவிடாமல்  நம்பிக்கையுடன்  ஓதப்பட்ட  நமசிவாய  மந்திரம் அவரை தொடர்ந்து  காத்தது . அவரை  பெரும் பாறையில்  கட்டி  கடலில்  வீசுகின்றனர்   அந்த பாறையே  தோணி  போலாகி  அவரை  கரை  சேர்க்கிறது .
  சொற்றுணை  வேதியன்  சோதி  வானவன்
 பொற்றுணை  திருந்தடி  பொருந்தக் கைதொழா
கற்றுணை  பூட்டியொர்  கடலில்  பாய்ச்சினும்
 நற்துணை  ஆவது  நமசிவாயவே .



          

Monday, 10 November 2014

kuutraayina

சமண  தலைவனாக  மாறியிருந்த  மருள்நீக்கியார்  தன்  தமக்கையின்  காலடியில்  சரண்  அடைகிறார் . திலகவதியார்  தம்பியின்  நிலை  கண்டு  மிக வருந்தி  அவருக்கு  திருநீரை  பூசி  திருவீரட்டான  ஈசனை  சரண்  அடைய   செய்கிறார் . ஈசனும்  மனமிரங்கி  வாகீசா  என்று   அவரை  தன்  மீது  பாடுமாறு   அழைக்கிறார் . அது வரை  பாடி  அறியாத  வாகீசர்  பக்தி  பெருக்கெடுத்து  பாட  தொடங்குகிறார் . தன்  தமக்கையாரை  பின்பற்றி  உழவாரப்பணி  தொடங்குகிறார் . கண்
ணப்ப  நாயனாரைபோல்  இவரும்  ஈசனால்  பெயரிடப்படும்  பேறு  பெறுகிறார் . இவர்  பாடிய  எண்ணிறந்த  பாடல்களில்  நாம்  சில  பாடல்களே  கிடைக்கப்பெற்றோம் . இவருடைய  முதல்  பாடல்  இவரது  பிணி  நீக்கிய  பாடல் .
கூற்றாயினவாறு  விலக்ககிலீர்
   கொடுமை  பலசெய்தன  நானறியேன்
ஏற்றாயடிக்கே  இரவும்  பகலும்
    பிரியாது  வணங்குவன் எப் பொழுதும் 

Thursday, 6 November 2014

appar

திலகவதியார்  தன்  தம்பி  சமண  சமயத்தில்  சேர்ந்ததை  அறிந்து  மிக்க  வேதனை  உற்றார் . திருவதிகை  வீரட்டான  ஈசனை  துதித்து  மிக  வருந்தினார் . அவள்  வருத்தப்படுவதை  காண  சகியாத  ஈசன்  மருள்நீக்கியாருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்தார் . நோயின்  கொடுமை  தாங்கமாட்டாமல்  மருள்நீக்கியார்  மிக  அவதிக்குள்ளானார் . சமணர்களால்  அவரை  குணப்படு த்த  இயலவில்லை .அப்போதுதான்  மருள்நீக்கியாருக்கு  தன அக்காவுக்கு  தான்  செய்த  கொடுமை  புரிந்து  மிக  வருந்துகிறார் . சமணர்களுக்கு  தெரியாமல்  திருவதிகை  வீரட்டானம்   தன அக்காவை  தேடி  வருகிறார் 

Monday, 3 November 2014

appar

திலகவதியார்  திருமணம்  ஆகவில்லை  என்றாலும்  அவரை  கணவராக  வரிதுவிட்டதால்  அவர் மறைவுக்குப்பின்  வாழ  விரும்பாமல்  தீக்குளிக்க  எண்ணினார் . சிறுவன்  மருள்நீக்கியான்  திலகவதியார்   உயிர்  நீத்தால்  தான்  அநாதை  ஆகிவிடுவேன்   என்று  கதற  மனமிரங்கி  துறவு  வாழ்க்கை ஏற்று  வாழ  தொடங்கினார் . இச்சம்பவத்தால்  மிக  பாதிப்படைந்த  சிறுவன்  சிவ பெருமானை  வெறுக்க  தொடங்கினான் .திலகவதியாரோ  சிவத்தொண்டே இலட்சியமாக  கொண்டவர் . அவருடன்  வாழ  சிறுவனால்  முடியாததால்  அவன் வீட்டை  விட்டு  ஓடி  விடுகறான் . வளர்ந்து அவன்  சமண  மதத்தை  ஏற்று  பல்லவ  மன்னன்  மகேந்த்ரனிடம்   சேர்ந்து  விடுகிறான் .        

Wednesday, 29 October 2014

appar

அடுத்த  3 திருமுறைகள்  சம்பந்தரால்  அப்பர்  என்று  பணியன்புடன்  அழைக்கப்பட்டவரும்  வீரட்டானத்துறை  ஈசனால்  நாவுக்கரசர்  என்று  பெயர்  சுட்டப்பட்டவருமான   அப்பர்  பெருமானால்  பாடப்பட்டவை . அவருடைய  இயற்பெயர்  மருண்னீக்கியர் . அவர்  சிறந்த  சிவ பக்தர்கள்
குடும்பத்தில்  பிறந்தவர் . அவருடைய  தமக்கையார்  திலகவதி  அம்மையார்  சிறந்த  சிவத்தொ ண்டர் . மருள்நீக்கியார்   சிறுவனாக  இருக்கும் போது திலகவதிக்கு  அவ்வூர்  சேனை  தலைவருடன்  திருமணம்   நிச்சயமானது . ஆனால்  துரதிஷ்டவசமாக  அவர்  திருமணத்திற்கு  முன்பே  போரில்  உயிர்துறந்தார் .

Saturday, 18 October 2014

kadalaagi

சம்பந்தர்   16 வயதை  அடைந்த  போது  அவருடைய  பெற்றோர்  அவருக்கு  திருமணம்  செய்ய  விரும்பினர் . பெற்றோர்  இச்சையை  பூர்த்தி  செய்ய  சம்மதிக்கிறார் .பூஉலகில்  தன்  கடமை  முடிந்தது  தெரிந்தும்  சம்மதம்  தெரிவிக்கிறார் .திரு நல்லூர் பெருமணம்  என்னும்  இடத்தில்  திருமணம்  நடக்கிறது .திருமண  சடங்கு  முடியும்  தருவாயில்  அங்கு  பெரும் ஜோதி  தோன்றுகிறது . அந்த ஜோதியில்  திருமண த்தில்  கலந்து  கொண்ட  அனைவரும்  கலந்து  சிவபதம்  அடைகின்றனர் .சம்பந்தரும்  தன்  மனைவி  கை பற்றிக்கொண்டு  அந்த  ஜோதியை  வலம்வந்து  ஜோதியில்  கலக்கிறார் . அத்தருணத்தில்  அவர்  கடைசியாக  பாடிய  பதிகம் ,
காதலாகி  கசிந்து கண்ணீ ர்  மல்கி
ஓதுவார்  தமை  நன்னெறிக்  குய்ப்பது
வேத  நான்கினும்  மெய்ப்பொருளாவது
நாதன்  நாமம்  நமச்சிவாயவே  


சிந்தை யால்  மகிழ்ந் தேத்த வல்லாரெல்லாம்
பந்தபாசம்  அறுக்க  வல்லார்களே ..

Monday, 13 October 2014

kolarupathigam

சம்பந்தர்  பாண்டியனின்  நோயை  குணப்படுத்தவும்  சமணர்களை  வாதில்  வெல்லவும்  மதுரை  புறப்பட்ட  போது  நேரம்  சரியில்லை  என   அப்பர் அடிகள்  தயக்கம்  தெரிவித்தபோது  சம்பந்தர்   வேயுறு தோளிபங்கன்  துணை  இருக்கும்போது  நாளும்  கோளும்  என் செய்யும்  என  வினவுகிறார் .இந்த  பாட்டையும்  வரலாறையும்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறேன் . இந்த பாடல்  பெரிதும்  பாடப்படுகிறது . சில  வருடங்களுக்கு  முன்  8 கிரகங்களும்  ஒரே  நேர்  கோட்டில்  வரும்போது  மகாபெரியவர்  இந்த  பதிகத்தை  எல்லோரும்  பாராயணம்  பண்ணுமாறு  கேட்டுக்கொண்டார்  என்பது  குறிப்பிட  தக்கது .நவக்ரக  ப்ரீதிக்கு  உகந்தது .

Saturday, 4 October 2014

poompavai (cont)

பூம்பாவை  விதி  வசத்தால்  நாகம் தீண்டி    இறந்தாள் . அவளை  பிறிய  மனமின்றி  சிவநேசர்  அவளது  எலும்பை யும் , சாம்பலையும்  ஒருகுடத்திலிட்டு  வைத்திருந்தார் . சில  காலத்திற்கு  பின் .சம்பந்தர்  திருமயிலை  கபாலீச்வரரை  வழிபட  மயிலை  வந்தார் . சிவநேசர்  மிக  துயரத்துடன்  தன்  மகளின்  சோக  கதையை  சம்பந்தரிடம்  தெரிவித்தார் . மனம்  நெகிழ்ந்த  சம்பந்தர்  கபாலீஸ்வரரை  நெஞ்சுருக  த்யானித்து  "மட்டிட்ட  புன்னை  யன் " என்னும்  பதிகத்தை  பாடி , அங்கு  ஈஸ்வரனுக்கு  நடக்கும்  ஒவ்வொரு  உத்சவத்தையும்  சொல்லி , இவை  அனைத்தயும்  காணாமல் " போதியோ"  பூம்பாவாய் என    பாடுகிறார் . ஈசன்  அருளால்  குடத்திலிருந்து  பூம்பாவை  உயிர்ப்பெற்று  வருகிறாள் . அளவிலா  ஆனந்தம்  கொண்ட  சிவநேசர்  தன்  மகளை  மணக்கும்படி  வேண்டுகிறார் .ஆனால்  தன்னால்  உயிர்ப்பிக்கப்பட்ட  பூம்பாவை  தனக்கு  மகளாவாள்  என்று  மறுத்து  சொல்லி  தன பயணத்தை  தொடர்கிறார்  சம்பந்தர் . இப்போதும்  மயிலை  கபாலீஸ்வரர்  உத்சவத்தில்  அறுபத்துமூவர்   அன்று  அங்கம்  பூம்பாவை  ஆக்கி  அருளல்  என்று  ஒரு நிகழ்ச்சி  நடைபெறுகிறது . அதில்  சம்பந்தர்  நிகழ்த்திய  இந்த  அற்புதம்  நினைவு   கூறப்படுகிறாது .

Thursday, 2 October 2014

poompavai

திரு மயிலையில்  சிவநேசர்  என்று ஓர்   வணிகர்  வாழ்ந்து  வந்தார் .செல்வந்தரான  அவரது  ஒரே  மகள்  பூம்பாவை  அழகும்  சிவபக்தியும்  மிகுந்தவள் . தந்தை  அவள்மீது  மிகுந்த  பாசம்  வைத்திருந்தார் . சம்பம்தரின்  பெருமை  உணர்ந்த  அவர்  சிறுமி  பூம்பாவையை  அவருக்கே  மணமுடிக்க  ஆவல்  கொண்டிருந்தார் .

Monday, 29 September 2014

marugal

சம்பந்தர்  யாத்திரியை  தொடர்ந்து  திருமருகல்  வந்து  சேர்ந்தார் . கோவிலில்  ஒரு  பெண்ணின்  தீனமான  அழுகுரல்  கேட்டு  மிகவும்  மனம்  வருந்தி  அதன்  காரணத்தை  வினவினார் . அந்த  பெண்  தன்  காதலனுடன்  திருமணம்  புரிந்துகொள்ள   கோவிலுக்கு  வந்ததாகவும்  வழியில்  காதலனை  பாம்பு  தீண்டி  அவன் இறந்ததாக  கேள்வியுற்று  சம்பந்தர்  மிகவும்  வருந்தினார் . அந்த  தலத்து  ஈசனை  வேண்டி  இத்தகைய  கொடுமை  உமக்கு  அழகா  என  வினவி  காதலனை  உயிர்ப்பிக்குமாறூ  வேண்டுகிறார் . ஈசனும்  மனமிரங்கி  விஷத்தை  நீக்கி  உயிர்ப்பிக்கிறார் . அந்த பதிகம்  வருமாறு ,
  சடையா  எனும்  மால்  சரணீயெனு   மால்
விடையா  எனும்  மால்  வெரு வாய்  விடும் மால் .

Friday, 26 September 2014

vasitheerave

சம்பந்தர்  அப்பருடன்  பல  ஆலயங்களை  சேவித்துக்கொண்டு  திருவீழிமிழலை யை  அடைந்தனர் . அப்போது  அந்த  ஊரில்  கடும்  பஞ்சத்தால்  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளானார்கள் . இவர்கள்  படும் வேதனை  கண்ட  இருவரும்  வீழிநாதர்   குடி இருக்கும்  இத்தலத்தில்  மக்கள்  இப்படி  அவதி  படுவது  நீதியோ  ஐயனை  துதித்து நெகிழ்ந்து  உருகி  வேண்ட  அவர்கள்  கனவில்  ஈசன்  தோன்றி  அவர்கள்  இருவருக்கும்  பஞ்சம்  தீரும்  வரை  இரு  கோபுர  வாயில்களிலும்  இரு  படிகாசுகள்  வைப்பதாகவும்  அதைக்கொண்டு  பண்டம்  வாங்கி  அன்னமிட்டு  மக்கள்  பசி  ஆற்றுமாறு  கட்டளை  இட்டார் . ஆனால்  சம்பந்தர்  பங்கு  காசு  கறையுள்ள  காசாக  இருந்ததால்   அவர்  தன கடமை  ஆற்ற  காலதாமதமாயிற்று . உடனே  சம்பந்தர்  ஈசனை  துதித்து  பாடி  கறை கொள்  காசினை  முறைமை  ஆக்க  வேண்டினார் . ஈசனும்  அவ்வாறே   செய்தார் . அப்பதிகம்
  வாசி  தீரவே  காசு  நல்குவீர்  மாசின் மிழலையீர் , ஏசலிஇல்லையே
 இறைவறாயினீர் .மறைகொள்  மிழலையீர்
 கறைகொள்  காசினை  முறைமையாக்குமே 

Monday, 22 September 2014

avvinai

அவ்வினைக்கிவ்வினை  யாமென்று  சொல்லும்  அக்தறி வீர்
உய்வினை  நாடாதிறுப்பது  முந்தமக்  கூனமன்றே
சம்பந்தர் கொடிமாடச்சென்குன்றூர்  சென்றபோது  அங்கு  அனைவரும்  குளிர் காய்ச்சலில்  அவதி  படுவதைக்  கண்டு   இப்பதிகத்தால்  ஐயனை  துதித்து  பாடி அருளினார் .

Friday, 19 September 2014

thiruneeru

பானடியனின்  துயரை  காண  சகியாத  மங்கரற்கரசியார்  ஞானசம்பந்தரை   வேண்டினாள் . சம்பந்தரும்   ஈசனின்  சம்மதம்  பெற்று  பாண்டியனை  குணப்படுத்த  விரைந்தார் .திருநீற்று  பதிகத்தை  பாடி  திருனீஎற்றை  அவர் மீது  பூசி  அவரை  குணப்படுத்தினார் . பாண்டியனும்  தன்  தவறை  உணர்ந்து  சிவ   பக்தனானான் . அப்பதிகம்
  மந்திர  மாவது  நீறு ;வானவர்  மேலது  நீறு
   சுந்தரமாவது  நீறு ; துதிக்க  படுவது  நீறு



.தேற்றி  தென்னனுடலுற்ற  தீப்பிணி  யாயின  தீரச்
சாற்றிய  பாடல்கள்  பத்தும்  வல்லவர்  நல்லவர்  தாமே  

Thursday, 18 September 2014

thiruneeru

பாண்டிய  மன்னன்  சமணர்கள்  வாதத்தில்  மயங்கி  சைவர்களை  து ன்புருத்தலானான் . அவனுடைய  பட்டமகிஷி  மங்கையர்க்கரசி  பெரும்  சிவபக்தை .மந்திரி  குலச்சிறையாரும்  சிவபக்தர் .. அவர்கள்   வேண்டுகோளுக்கு  இறங்கி  ஞானசம்பந்தர்  மதுரை  எழுந்தருளுகிறார் . இதை   மன்னன் அறிந்து  சமணர்களின்  தூண்டுதலால்  அவர்  தங்கியிருந்த  மடத்தை   எரிக்க  ஆணை  இடுகிறார் . இதை  அறிந்த  சம்பந்தர்  அத்தீயை  பாண்டிய  மன்னன்    மீது  ஏவுகிறார் . அது  வெப்பு  நோயாக  மன்னனை    தாக்கியது .    

Wednesday, 17 September 2014

idarinum

இடரினும்  தளாரினுமென துறு  நோய் 
தொடரினுமுன  கழல்  தொழுதெழுவேன்
கடல்தநிலமுதொடு  கலந்த  நஞ்சை
மிடற்றினில்  அடக்கிய  வேதியனே .
இவ்வாறு  அலைபுனல்  ஆவடுதுறை  அமர்ந்த  ஈசனை  பாடி   துதிக்க    சிவகண  தலைவன்  அங்கு  பலி  பீடத்தில்  உலவாக்கிழி  ஒன்றை  வைத்து  மறைகிறான் . உலவாக்கிழி  என்பது  சிவனார்  அருளிய  பணம் . எடுக்க  எடுக்க  குறையாதது .  

gnanasambandar

சம்பந்தரின்  பக்தி  இசைக்கு  நெகிழ்ந்து  உருகிய  ஈசன்  ஆடிய திருவிளையாடல்கள்  ஆச்சர்யமானவை .அதில்  மறைந்த  இருவரை  உயிர்ப்பித்ததும்  அடங்கும் . சம்பந்தர்  ஈசனை  துதி பாடி  அடியார்களுடன்  சிவாலையங்களை  தொழுதபடி  திருவாவடுதுறை  வந்தார் . அங்கு  அவர்  வந்தபோது  அவருடைய  தந்தையார்  யாகம்  செய்ய  பொருள்  வேண்டி  சம்பதபெருமானை  நாட  அவரும்  மாசிலாம்ணீஈச்வரரை துதித்து  பாடுகிறார்.
     
 

Monday, 1 September 2014

sambandar

கோவிலில்  3 வயது  சம்பந்தரை  குளக்கரையில்  விட்டுவிட்டு  தந்தை  குளிக்க  செல்கிறார் .குழந்தை  பசி  தாளாமல்  அழ  உமையன்னை  குழந்தைக்கு  பால்  ஊட்டுகிறாள் . அந்த  கணமே  குழந்தை  பாட  தொடங்குகிறது .
  தோடுடைய  செவியன்  விடையேறியோ ர்தூ வெண்மதி  சூடி
 காடுடைய  சுடலைப்பொடி  பூசியென்  உள்ளம்  கவர்  கள்வன்
என்று  தொடங்கி  பாடுகிறார் . எல்லோரையும்  ஆச்சர்ய  கடலில்  ஆழ்த்துகிறார் . தந்தையின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .பக்தி  ரசம்  பொங்கிய  இவர்  பாடல் களில்  மயங்கிய  ஈசன்  பிஞ்சு  கரங்கள்  நொககூடாதென்று  பொற்தாளம்  கொடுத்து  மகிழ்கிறார் . உமையன்னை  தாளத்திற்கு  ஓசை  கொடுத்து  குழந்தை  தாளம்  போட்டு  பாடுவதை  ரசிக்கிறாள் .   

Thursday, 21 August 2014

sambandar

முதல் 3 திருமுறைகள்  திருஞானசம்பந்தர்  அருளியவை . அவர்  16 வயது  வரை  வாழ்ந்தார்  என்றாலும்   10000 பதிகங்கள்  பாடியதாக  சொல்லப்படுகிறது . அனால்  துரதிஷ்டவசமாக   நமக்கு  கிடைத்தவை  மிக  மிக  சொற்பமே .
 சம்பந்தர்   சீர்காழியில்  சிவபாத ஹ்ருதையர்  எனும்  அந்தணருக்கும்  பகவதி  அம்மையாருக்கும்  மகனாக  பிறந்தார் .  3வயது  பாலகனாக  சம்பந்தர்  தந்தையுடன்  கோவிலுக்கு  சென்றார் .

Saturday, 16 August 2014

vedam

 திருமுறைகள் , நாலாயிர  திவ்யப்ரபந்தம்  இரண்டுமே  வேதத்தை  அடிப்படையாக  கொண்டவை . சிவபெருமானை  வேதநாயகன்  என்று  கொண்டாடுகின்றனர் .  நிறைய   பதிகங்களில்  வேதம்  குறிப்பிட  படுகின்றன ,தக்ஷிணா மூர்த்தியாக  சிவன் சனகாதி  முனி வர்களுக்கு  வேத   வேதாந்தங்களை  போதிக்கிறார் . அதேபோல்  வேதம்  தமிழ்  செய்த  மாறன்  சடகோபன்  வண்குருகூர்  என்று  நம்மாழ்வாரை  போற்றுகின்றனர் . ஆக  சிவன்,விஷ்ணு  இருவருக்கும்  பொதுவானது  வேதம் . சைவம் ,வைஷ்ணவம்  இன்னும்  பல கிளைகள்  இருந்தாலும் , அவையாவும்  இந்து சனாதன  மதத்தின் கிளைகளே.வேதம்  எல்லோருக்கும்  பொது . 

panniru thirumurai

இப்போ து  பன்னிரு திருமுறைகளை  காண்போம் .
முதல்  மூன்று  திருமுறைகள்   திருஞானசம்பந்தரால்  பாடப்பெற்றன .
4,5,6. திருமுறைகள்   திருநாவுக்கரசரால்  பாடப்பெற்றன .
7ஆம்  திருமுறை  சுந்தரரால்  பாடப்பெற்றது, .
8ஆம்  திருமுறை  மாணிக்கவாசகரின்   திருக்கோவையார் ,திருவாசகம் , திருப்பள்ளியெழுச்சி
9ஆம் திருமுறை  திருமாளிகைதேவரின்  திருவிசைப்பா , சேந்தனாரின்  திருப்பல்லாண்டு , மேலும் சில  அடியார்கள்  பாடியவை .
10 திருமூலரின்  திருமந்திரம்
11 திருமுறை  காரைக்கால்   அம்மையார்  சேரமான்  .  பெருமானார்  ,நக்கீரர் ,நம்பியாண்டார்நம்பி  இன்னும்  சிலர் .
12 திருமுறை  சேக்கிழாரின்  பெரியபுராணம் 

Friday, 1 August 2014

இத்தகைய  ஈசனின்  திருவிளையாடல்கள்  பல  நிகழ்ந்த  பக்தி  அலையின்  பொற்காலம்  இது.
9ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  சுந்தரர்  தம் திருத்தொண்டர்  தொகை  பதிகத்தில் '' தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் . திருநீலகண்டத்து  குயவனாற்கும்  அடியேன் '' என்று  வரிசையாக  எல்லா  நாயன்மார்களையும்  .எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் . ஆகையால்  நாயன்மார்கள்  வரிசையில்   இவரே  கடைசி யாக  இருக்கவெண்டும்  என்றும்  குறிப்பிட்டுள்ளார்  ஐய்யங்கார் . ஆதலால்  இந்த காலம்  9 நூற்றாண்டு  வரை  இருந்திருக்க  வே ண்டும்.. இவர்கள்  எல்லோராலும்  பாடப்பெற்று  பல  அற்புதங்களை  நிகழ்த்திய  இப்பதிகங்கள்  நான்  முன்பே  கூறியபடி  12 திருமுறை களாக  தொகுக்கப்பட்டு  இன்று  வரை  எல்லா  சிவாலை யங்களிலும்  பக்தியுடன்  பாடப்படுகின்றன . சேக்கிழார்  பெருமான்  63 நாயன்மார்கள்  சரிதமும்   பாடலாக  புனைந்து .பெரிய புராணம்  இயற்றி  அதை 12வது  திருமுரையாக்கி  பெரும்  பேறு  பெற்றார் .  

Thursday, 31 July 2014

padhigam

பதிகம்
சிலந்தியும்  ஆனைக்காவில்  திரு  நிழல்  பந்தல்  செய்து
உலந்தவண்  இறந்தபோதே  கோ ச்செங்கனானுமாக
கலந்த  நீர்  காவிரி  சூழ்  சோணாட்டு  சோழர்  தங்கள்
குலந்தனில்  பிறப்பித்திட்டார்  குறுக்கை  வீரட்டனாரே .
ஆதலால்  இந்த  சம்பவம்  உண்மை  என்றே  கொள்ள  வேண்டும் .

bhakthi era

சோழ  கோ செங்கணான்  வாழ்ந்த  காலத்திலேயே  பக்தி  அலை  தொடங்கி  இருக்க  வெண்டும் . இது  3 அல்லது  4 நூற்றாண்டாக  இருக்கலாம் . அந்த  காலகட்டத்தில்  சிலந்தி  மன்னரானது  எல்லோராலும்  நம்பப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட  ஒரு  உண்மை . இதை  யாரும்  சந்தேகிக்க வில்லை .சில  நூற்றாண்டு  பின்   தோன்றிய  அப்பர் , சம்பந்தர்  இவர்களின்  பாசுரங்களில்   எதிரொலிக்கின்றன . அப்பர்  திரு  குறுக்கை வீரட்டானம்  என்னும்  தலத்தில்  பாடிய  பாசுரம் ,
 

Friday, 25 July 2014

sivam

சிலந்தி  ஒன்று   அந்த  லிங்கத்தின்  மேல்  காய்ந்த  இலை  தழைகள் விழுவதை   காண  சகியாமல் , தன வலையால்  ஒரு பந்தல்  அமைத்து  பாதுகாக்க  முற்பட்டது . ஓர் யானை  லிங்கத்தை  பூஜை  செய்ய  வந்து  அந்த  பந்தலை தகர்த்து  தண்ணீர்  ஊற்றி  அபிஷேகம்  செய்தது . இவ்வாறே  தொடர்ந்தது .  கோபம்  கொண்ட  சிலந்தி  யானையின்  துதிக்கையில்  புகுந்து  பெரும் அவஸ்த்தை  உண்டாக்கியது  வேதனை  தாளாத  யானை  துதிக்கையை  தரையில்  அடித்தது .அதில்  யானை, சிலந்தி  இரண்டுமே  மாண்டன .  அந்த  சிலந்தியின்  பக்தியை  மெச்சிய  சிவபெருமான்  சோழ  அரச  தம்பதியினருக்கு  மகனாக  பிறக்க  செய்தார் . பிற்காலத்தில்  அவர் பக்திமானாக  விளங்கி  நிறைய  சிவாலயங்களை  எழுப்பினார்   இவரைத்தான்  திருமங்கை  ஆழ்வார்   தன்  பாசுரத்தில்  குறிப்பிட்டுருக்க  வெண்டும்  என்பது  ஐயங்காரின்  அனுமானம் .  அனால்  அவர் வாழ்ந்த  காலத்தை  சரியாக  கணிக்க  இயலவில்லை அவரே  கோ  செங்கணான்  என்னும்  மன்னராவார் ..

Wednesday, 23 July 2014

sivam

இந்த  பக்தி  அலை . ஈசனின்  திருவிளையாடல்கள்  இவை  அரங்கேறிய  காலம்  பற்றி  சிந்திப்போம் . நாயன்மார்கள்  பக்தி  பரவசத்தில்  ஈசனுக்கு  சூடிய  பாமாலை .  மற்றும்  அவர்கள்  ஆற்றிய  பல  தொண்டுகள்  இவை 3 அல்லது  4 நுற்றாண்டு  துவங்கி  9 நுற்றாண்டு  வரை,  சுந்தரர்  வாழ்ந்த  காலம்  வரை  இருந்த்திருக்க  வேண்டும்  எனறு  சரித்திர  பேரறி ஞர்   சக்கோட்டை  கிருஷ்ணசாமி  ஐய்யங்கார்  அவர்கள்  தம்  ஒரு  கட்டுரையில்  குறிப்பிட்டுள்ளார் .இதற்குமுன் நான்   எழுதி  இருந்த  பகுதிகளிலும்  அவர்  புதினங்களில்  இருந்து  எடுத்த  குறிப்புகள்  இடம்  பெற்றுள்ளன  என்பதை  இங்கு  குறிப்பிட  விரும்புகறேன் .
  திருவானைக்காவல்  என்ற  ஊர்  எல்லோரும்   கேள்விப்பட்டிருக்கிறோம் .ஜம்புகேஸ்வரர்  அந்த  கோவிலின்  மூல மூர்த்தி .அந்த  கோவில்  எழும்பும்  முன்பு  அவர்  லிங்க  வடிவில்  ஒரு  மரத்தடியில்  எழுந்தருளி  இருந்தார் .    

Saturday, 19 July 2014

kannappa

ஒருநாள்  அவன்  பூஜை  செய்ய  வரும்போது லிங்கத்தின்  கண்ணில்  ரத்தம்  வழிவதை  காண்கிறான். அதை  காண  சகியாத  அவன்  தன  ஒரு  கண்ணை  பிடுங்கி  எடுத்து  கண்  தானம்  செய்கிறான் .  அந்த  கண் பொருந்தி  குருதி  நின்றதும்  பேரானந்தம்  கொள்கிறான் . ஆனால்  அந்தோ , அவரது  மறு கண்ணில்ருந்து  ரத்தம்  கொட்ட  தன்  கால் கட்டை  விரலை  அந்த  இடத்திற்கு  அடையாளமாக  வைத்துகொண்டு  தன மறு  கண்ணையும்  பிடுங்க  யத்தனிக்கிறான் . அப்போது அன்பே  உருவான ஈசன்  எதிரில்  தோன்றி  'கண்ணப்பா ' என்று  அழைத்து  ஆர  தழுவிக்கொள்கிறார் .  இவர்கள்  சிவபதம்  அடைந்ததில்  வியப்பென்ன ? ஈசனிடத்தில்  திண்ணன்  காட்டிய  கலப்படமில்லாத  பேரன்பு  எல்லாவித  ஆசார  அனுஷ்டானங்களையும்  கடந்து  அவன்  நெஞ்சில்  அமர்கிறது . திண்ணன்  உயர்ந்து  கண்ணப்ப  நாயனாரகிறான் .என்னே  ஈசனின்  அன்பு .
சண் டிகேஸ்வரர்  தான்  பூஜித்த  சிவலிங்கத்தை உதைத்த  தந்தையை  காலை  வெட்டி  கொன்றார் . கண்ணப்ப  நாயனார்   கதை  அறியாதவர்  யாரும்  இருக்கமாட்டார்கள் . திண்ணன்  எனும் வேடுவ  குலத்தை  சேர்ந்த    ஒன்றும்  அறியாத  வேடுவன்  கண்ணப்பன் ஆனது  எவ்வாறு ?காலஹஸ்தி  காட்டில்  வாழ்ந்து  வந்த  அவன்  அங்கு  கண்ட  ஒரு  சிவலிங்கத்தை  கண்டு   அதனால்  பெரிதும்  ஈர்க்கப்பட்டு  லிங்கத்தை காணாமல்  ஒரு  நாள்  கூட  இருக்க முடியாத  நிலை  அடைகிறான் . ஒரு  சிவாசாரியார்  பூஜை  செய்வதை  கண்டு  தானும் செய்ய  நினைத்து வாயில்  நீரை   எடுத்து கொண்டு  கையில்  காட்டு  பூக்களையும்  சமைத்த  பன்றி  மாமிசத்தையும்  கொண்டு  வந்து  வாயிலுள்ள  நீரால்  அபிஷேகம்  செய்து  பூக்களை  போட்டு அர்ச்சித்து  மாமிசத்தை  படைக்கிறான் .

Friday, 18 July 2014

சைவ  சித்தாந்தம்  இதற்கு  வழி  காட்டுகிறது .  அத்தகைய  பக்தர்கள்  மனம்  முழுவதுமாக  சிவனுக்கே  அர்பண மாக இருக்கிறது . அவருக்காக  எத்தகைய  த்யாகமும்  அவர்களுக்கு  ஆனந்தம் . பிள்ளை கறி  சமைத்தார்  சிறுத்தொண்டர்  என்கிறது   பெரிய புராணம் . ஈசன் காளபைர வர்  உருவில்  வந்து  பசிக்கு  உணவளிக்க  வேண்ட  சிறுத்தொண்டர்  மிக்க  ம கிழ்ந்து  அவரை  உபசரித்தார் . ஈசன்  சிறுத்தொண்டரின்  பிள்ளை கறி தான்  தமக்கு  உகந்த உணவு , தர இயலுமா  என்று  வினவ  சிறுத்தொண்டர் , அவர்  மனைவி  மகன்  மூவரும்  சிறிதும்  சலனமின்றி  அதை  நிறைவேற்ற ,சிவபெருமான்  மகிழ்ந்து  தன்னுடன்  சேர்ந்து  உணவருந்த  மகனை யும்  அழைக்க  சொல்கிறார் .தொண்டரும்  சீராளா  என்று  தன்  மகனை  கூப்பிட  மகன்  ஓடி  வருகிறான்  ஈசன்  அருளால் . சிறுத்தொண்டரின்  பெருமையை  உலகறிய  செய்ய  ஈசன் ஆடிய  திரு  விளையாடல் .அன்பே  உருவான  சிவன்  இத்தகைய  கொடூரமான  கோரிக்கை  வைத்ததும்  அதன் காரணமே ,

Saturday, 12 July 2014

ஆன்மா  அழிவில்லாதது .சிருஷ்டி  ஆண்டவன்  தொழிலானாலும்  அவரவர்  பிறப்பு  ஆன்மாவையே   பொறுத்து  உண்டாகிறது .முன்  பிறவியின்  அவரவர்  செய்த  கர்ம  வினையின்  விளைவாகவே  நிகழ்கிறது . வேத ம்  காட்டிய  வழி  நடந்தவன்  உயர்  பிறவியும் , தவறான  வாழ்க்கை  வாழ்ந்தவன்  தாழ்ந்த  பிறவி எய்து  அல்லலுறுகிறான் . இது  இயற்கையின்  நியதி .  ஆனால்  அன்பே  வடிவான   ஈசன்  பிறப்பெய்திய   அத்தனை  ஜீவன்களும்   பிறவாநிலையான  சிவபதம்  அடைவதையே  விரும்புகிறான்.  ஈசன்  தன்  பக்தர்களை  அந்நிலைக்கு  அழைத்து  வர  எத்தனை  திருவிளையாடல்கள்   புரிகிறான் .

Monday, 30 June 2014

sivam

படைக்கப்பட்ட  ஆன்மாக்கள் ஒவ்வொரு  நிலையாக  தத்தம்  கடமைகளை செய்து உயர  சிவபெருமான்  வழி  நடத்துகிறார் . ஆன்மாக்கள்   அவர்  அருளால்  உயர் வடைந்து  மானிட  பிறப்பை  எய்துகன்றன . மானிடர்கள்  அவரவர்  பாப  புண்ணீ யத் திர்கேற்ப  பிறப்பை  எய்துகின்றனர். வேதம்  வாழும்  மார்கத்தை  காட்டுகிறது .

Monday, 23 June 2014

sivam

'அன்பே  சிவம் '  இது  திருமூலர்  வாக்கு .சைவர்கள்  சிவனையே   முழு   முதற்  கடவுளாக ஏற்றவர்கள் .அவர் எங்கும்  நீக்கமற  நிறைந்தவர் .வேண்டுதல்  வே ண்டாமை இலாதவர் .நமது கற்பனைக்கு  எட்டாத  பெரும் ஆற்ற ல்   படைத்தவர் ,'' ஆக்கி  அழித்து  உலகை  நீக்கி  மறைத்தருளி , ஐந்தொழில்  புரிந்திடும்  அம்பலவானரே '' என்று  ஒரு  கவி  பாடியுள்ளார் .தன்  ஆற்றலால்  எல்லா  ஜீவராசிகளையும்  படைத்து  காத்து  ரட்சித்து .பிரளய காலத்தில்  அழித்தும்  வாழும்  காலத்தில் அவைகளை  காக்க  பல  திருவிளையாடல்களும்  புரிந்தும்  அருளுகிறார் .

Friday, 20 June 2014

saivam

எல்லா மன்னர்களும்  சிவ  மற்றும்  விஷ்ணு  ஆலயங்கள்  வேற்றுமை  இல்லாமல்  நிறைய  நிர்மாணித்தார்கள் . பல  தேவார  பாடலகளில்  விஷ்ணு வை  உயர்த்தி  பாடி உள்ளார்கள் . ஆழ்வார்களும்  சிவனை  உயர்த்தி  பாடிய   பாசுரங்கள்  உள்ளன . திருமங்கை  ஆழ்வார்  திருனாரையூர்  பாசுரத்தில்  சிவனை  பாடியுள்ளார் . மேலும் அவர்  70  சிவாலையம்  கட்டிய  சோழ  மன்னனையும்   பாடியுள்ளார் . மேலும்  சங்கரன்கோயில் , சுசீந்திரம்  மேலும்  சிதமபரம்  ஆகிய  கோயில்களில்  சிவன் , விஷ்ணு  இருவரும்  கோயில்  கொண்டிருப்பதை  காணலாம் . 

Thursday, 19 June 2014

பத்து , பதினைந்து  நூற்றாண்டுகளூக்கு  முன்பு  சோழ , பல்லவ  மன்னர்கள்  காலத்தில்  பிரதானமாக  இரு  சமயங்கள்  காணப்பட்டன . அவை  சைவம்  மற்றும்  வைணவம் .இசை மார்கமாக  பக்தியும்  பரப்ப  பட்டது  சிவனை  பிரதான  தெய்வமாக  துதித்தவர்கள்  சைவர்கள் . விஷ்ணுவை   பிரதான  தெய்வமாக  துதிப்பவர்கள்  வைணவர்கள் . இதற்கு  சான்றா க   தமிழகத்தில்  இன்றும்  ஆயிரகணக்கான  சிவா, விஷ்ணு  ஆலயங்களை   காண முடிகிறது . இரு  பிரிவினரும்  அவரவர்கள்  மார்கத்தை  கடைப்பிடித்து  ஒற்றுமையாக  வாழ்ந்ததாக  அறிகிறோம் . 

Wednesday, 18 June 2014

பன்னிரு  திருமுறை , நாலாயிர  திவ்யபிரபந்தம் ,மேலும்  சில  தமிழிசையில்  தலையாயதும்  மிகவும்  போற்ற படுவதுமான  பாடல்களை  பற்றி  காண்போம் . 

Monday, 12 May 2014

ser

இன்னும்  சமீப  காலத்தில்  தமிழ் இசை  வளர்த்த  சிலர் .
பெரியசாமி தூரன் . தண்டபாணி  தேசிகர் .ஜி.என் .பாலசுப்ரமணியன் .லால்குடி  ஜெயராமன் .அம்புஜம் கிருஷ்ணா  இன்னும்  பலர் . மேலும்  திரை  உலகில்  மிக  அருமையான  கருத்து  செறிந்த  பல பாடல்களை  தமிழுக்கு  ஈந்த  கலைக்ன்யர்  பலர் . கண்ணதாசன் . பாரதிதாசன் . உடுமலை நாராயண  கவி  இன்னும் பலர் .  தமிழிசை  இவ்வாறு  உயர்வை  அடைந்துள்ளது  .இனி  திருமுறைகள்  ப்ரபந்தம்  இவைகளை  விரிவாக  நோக்கலாம் 

Thursday, 8 May 2014

sivan

பக்தி  ரசம்  பொருந்தியும்  நல்ல இசையுடன்  அமைந்தும்  உள்ள   இவரது  பாடல்கள்  எல்லோர்  மனதையும்  கவரகூடியது ராமதாசன்  என்பது  இவரது  பாடல்களில்  காணப்படும்  முத்திரை . மார்கழி  மாதம்  விடியற்காலை  மயிலை  மாடவீதி யில்  இவரது  பஜனை  பிரசித்தமானது .மயிலை  கபாலி யின்  அதிகாரநந்தி  சேவை  கண்ட  மாத்திரத்திலேயே  அவர்  பாடிய  காண  கண்கோடி  என்ற  காம்போதி  ராகத்தில்  அமைந்த    பாடல்  மிக  பிரசித்தமானது . மனம்  நெகிழ்ந்து  அவர் .
ஸ்ரீனிவாசர் ,சிவபெருமான் ,முருகன் ,விநாயகர்  மற்ற  கடவுள்  மேல்   பாடிய   அத்தனை  பாடல்களும்  மனதை  தொடுபவை . இன்றும்  சங்கீத, நடன  மேடைகளில்  அவருடைய  பாடல்கள்  நிறைய  ஒலிக்க  கேட்கலாம் .  

Tuesday, 6 May 2014

பாபநாசம்  சிவன்  அவர்கள்  நீலகண்ட  சிவன்  அவர்களின்  சிஷ்யர்  ஆவர் . ராமைய்யா  எனும்  இயற்  பெயர்  கொண்ட  கொண்ட  இவர்  குருவை  பின்பற்றி  தன்  பெயரை  பாபநாசம்  சிவன் என்று  மாற்றி  கொண்டார் . இவரும்  2000 க்கு  மேல்  பாடல்கள்  பாடியுள்ளார் .இவர்  பாடல்களை  அனுபவிக்காத  இசை ரசிகர்களே   இருக்கமுடியாது  பழைய  திரை  படங்களிலும்  இவரது  பாடல்கள்  நிறைய   இடம்  பெற்றிருக்கும் 

Saturday, 15 March 2014

சிவபக்தி  மிகுந் த  அவர்  தன்னை  நீலகண்டதா சன்  என்று   அறிமுகம்  செய்து  கொண்டார் . சிவனை  துதித்து  2000 பாடல்கள்  புனைந்துள்ளார் . மக்கள்  அவருடைய  சிவ  பக்தியை  வியந்து  அவரை  நீலகண்ட சிவன்  என்று குறிப்பிடலானார்கள் .அவர் தென்னிந்தியாவின்  எல்லா  சிவாலயங்களையும்  தொழுது  அந்த  இறைவன்  மேல்  பாடலானார் .  அவரை  மக்கள்  64வது  நாயன்மாராக  கருதலானார் . 1900 ஆண்டு  திவனந்தபுரத்தில்  காலமானார் . அவருடைய  சிஷ்யரான  பாபநாசம் சிவன்  அவர்  பாடல்களை  பிரபலமாக்கினார் '
ஆனந்த  நடனமாடினார்  பூர்விகல்யாணி ,சம்பூமஹாதேவா  பௌளி  இவை   சில  பிரபலமான  பாடல்கள் .     

Thursday, 13 March 2014

அடுத்து  நாம்  காணப்போகும்   கவி  நீலகண்ட சிவன்  ஆவார் . அவர்  வாழ்ந்த  காலம்  1839 முதல்  1900 வரை  ஆகும் . இவர்  கன்யாகுமரி யில்  பத்மநாபபுரத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  பாடல்  புனையும்  ஆர்வமும்  ஆற்றலும்  பெற்றிருந்தார் .இவருக்கு  சங்கீத  சிக்ஷை  கிடையாது . கொடக  நல்லூர்  சுந்தர  ஸ்வாமிகள்  என்பவரை   சந்தித்த பின்  சங்கீதத்தில்  ஆர்வம்  ஏற்ப்பட்டது . பாட்டு  திறமையும்  வெளிப்பட்டது . கிராம நீதி  துறையில்  15 ஆண்டுகள்  வேலை  பார்த்த பின்  வேலையை  துறந்து  விட்டு .பாட்டு பஜனை யில்   முழுவதுமாக  ஈடுபட்டார் .    

Thursday, 20 February 2014

koteesvara

கோட்டீஸ்வர   ஐய்யர்  பூச்சி  ஸ்ரீனிவாச ஐயங்கார்  அவர்களிடமும்  பட்டணம்  சுப்ரமணிய  ஐய்யர்  அவர்களிடமும்  சங்கீதம்  பயின்றார் . அவர்  200 பாடல்களுக்கு  மேல்  இயற்றியுள்ளார் . 72 மேளகர்த்தா  ராகங்களிலும்  பாட்டு  அமைத்து  தனி  சாதனை  படைத்துள்ளார் . அவர் பாட்டனார்  மீதுள்ள  பெரும்  மரியாதை  காரணமாக  ''கவிகுஞ்சர தாசன் ''  எனும்  முத்திரை யை  தன்  பாடல்களில்  கையாண்டார் . தோடி  ராகத்தில்  தனி  திறமை  வெளி  படுத்தி  தோடி கோட்டி'''  என்று  புகழ் பெற்றார்  . இவர்  த்யாகராஜர்  மீது  பாடல்  இயற்றி  உள்ளார் .      

Wednesday, 19 February 2014

koteesvara iyer

அடுத்து  நாம்  காண  போவது  பிரபல  தமிழிசை  கவிஞர்  கோடீஸ்வர  அய்யர் . இவர்  இந்த  தொடரில்  முன்பே  அறிமுகமான  கவிகுஞ்சர  பாரதியின்  பேரனாவார் . பரம்பரை  சங்கீத  குடும்பமாகும் .இவர்  1870ல்  பிறந்தார் . மானாமதுரை , திருச்சி , சென்னை  முதலிய  இடங்களில்  கல்வி   பயின்றார் . பிறகு  சென்னை  உயர்  நீதி மன்றத்தில்  வேலை  பார்த்தார் . வயிற்று  பாட்டிற்கு   வேலை  செய்தாலும்  ஆத்மா தாகம்  பாட்டிற்கு  முன்னுரிமை  தந்தது .

Tuesday, 11 February 2014

ஆனால்   பாரதி  கண்ட  பாரதம்  நாம்  காண  பல  யுகங்கள்  பின்னோக்கி  சென்று  ராம  ராஜ்யத்தில்  தான்  கற்பனையில்   காணலாம் . ஆனாலும்  அவருடைய  பாடல்கள்  நாடகம் , திரைப்படம் , சங்கீத மேடைகள்  மூலம்  வருகால  சந்ததியினருக்கு  காதில்  ஒலித்துகொண்டே  இருக்கும்  
''பாஞ்சாலி   சபதம் '' பெண்மைக்கு  இழைக\ப்பட்ட  அநீதியை  சாடி  பாடுகிறார் .பராசக்தியை   பல  ரூபங்களில்  வணங்குகிறார் .கண்ணனை   கண்ணம்மா வாக   பெண்ணுருவம்  கொடுத்து  காதல்  உருக  பாடுகிறார் .''தீர்த்த  கரையினிலே , காக்கை  சிறகினிலே , கண்ணன்  மனநிலை '' என   அநேக  பாடல்கள் . தீக்குள்  விரலை  வைத்தால்  உன்னை  தீண்டும்  இன்பம்  தோன்றுது  என்கிறார் . இவரின்   எந்த  ஒரு பாடலிலும்    தீவிர  துடிப்பும்  எதையும்  உடனே   சாதிக்க  வேண்டும்  என்கிற  உத்வேகமும்  தெரியும் . 
 பலபாஷைகளில்  தேர்ந்தவர்   ஆயினும்  தமிழ்  அவர்  மூச்சு .''யாமறிந்த   மொழிகளிலே  தமிழ்   மொழி  போல்  இனிதாவதெங்கும்   காணோம் .  என்கிறார் ''   ''க்ஷேமமுற   வேண்டுமெனில்   தெருவெல்லாம்  தமிழ்  முழக்கம்   செழிக்கசெய்வீர் '' என்று  முழங்குகிறார் .        

Friday, 7 February 2014

சுதந்திரம்  கிடைத்து  விட்டதாக  கற்பனை  செய்து  அதில் மகிழ்ந்து  ''ஆடுவோமே  பள்ளு  பாடுவோமே , ஆனந்த  சுதந்திரம்  அடைந்து  விட்டோம்  என்று ''  என ஆனந்த ப்பட்டு  கொள்கிறார் .''விடுதலை , வி டுத  லை  , பறையருக்கும்  இங்கு  தீய  புலையருக்கும்  விடுதலை '' என்று  கஊத்தாடுகிறார் . 

Thursday, 6 February 2014

agam

சுதந்திர  போராட்டத்தில்  அவர்  பங்கு  குறிப்பிட தக்கது .அவர் தேசிய   பாடல்கள்  பெரும்  எழச்சியை  உண்டாக்கி  ஆங்கிலேயரை  கலங்க அடித்தது .''என்று    தணியும்  இந்த  சுதந்திர  தாகம்  என்று  மடியும்  எங்கள்  அடிமையின்  மோகம் . என்றெமதன்னை  கை  விலங்குகள்  போகும் , என்றெமதின்னல்கள்  தீர்ந்து  பொய்யாகும் '' என்று  நெஞ்சுருக  பாடுகிறார் . கேட்போர்  கண்கள்  குளமாகும்  

Wednesday, 5 February 2014

''நெஞ்சு  பொறுக்குதில்லையே  இந்த  நிலைக்கெட்ட  மனிதரை  நினைத்துவிட்டால் ''  என்று  மக்களின்  மூட  நம்பிக்கையையும்  அறியாமையையும்  எண்ணி   மனம்  நொந்து  கொள்கிறார் .'இவர்      துயர்களை   தீர்க்க  ஓர்  வழியுமில்லை  அந்தோ '' என  வருந்து கிறார் .
  பெண்  விடுதலை அவரது  மூச்சு .''ஏட்டையும்  பெண்கள்  தொடுவது
தீமை  என்று  எண்ணி  மிகுந்தவர்   மாய்ந்து   விட்டார் . வீட்டுக்குள்ளே
பெண்ணை   பூட்டி  வைக்கும்  விந்தை   மனிதர்  தலை  கவிழ்ந்தார்.''
என்று  கொக்கரிக்கிறார் .  

Tuesday, 4 February 2014

தேசீய  ஒருமை பாட்டிற்கு  அவரைப்போல்  குரல்  கொடுத்தவர்  யார்  உளர் ?
''ஜாதிகள்  இல்லையடி  பாப்பா , குல  தாழ்த்தி  உயர்த்தி  சொல்லல்  பாவம் ''
என்று  குழந்தைகளுக்கு  அறிவுறித்தி   பிஞ்சு  மனதில்  பதிய  வைக்கி.
றார்.  பாரத  அன்னையை  ''முப்பது  கோடி  முகமுடையாள்  எனில்  மெய்ப்புறம்  ஒன்றுடையாள் . அவள்  செப்பு மொழி  பதினெட்டுடையாள்
எனில்  சிந்தனை  ஒன்றுடையாள் . எங்கள்  தாய் '' என்று  மார்  தட்டி கொள்கிறார் . 

Monday, 3 February 2014

'காக்கை  குருவி  எங்கள்  ஜாதி . நீள்கடலும் ,மலையும்  எங்கள்  கூட்டம் .நோக்கும்  திசையெல்லாம்  நாம் '   இதில்  சேதன   அசேதன   படைக்கப்பட்ட  அனைத்தையும்  நேசிக்கும்  அவர்  மன  பாங்கை  காண  முடிகிறது . 'தனி  ஒருவனுக்கு  உணவில்லை  எனில்  ஜகத்தினை அழித்திடுவோம் .' என்று   குரல்  கொடுக்கும்  போது   அவருடைய  மனித  நேயம்   காண்கிறோம் .  

தமிழ்  வாசகர்களுக்கு  பாரதியின்  அறிமுகம்  தேவையில்லை .திரைப்படம் ,நாடகம் ,பாடப்புத்தகம்  மற்றும்  பல சாதனங்கள்  மூலம்  நன்கு  அறிமுகம்  ஆனவர் . ஆகையால்  அவர் பாடல்கள் 
வாயிலாக   அவரை  அறிய  முயர்ச்சி  செய்வோம் .  

Sunday, 2 February 2014

அடுத்து  நாம்  காணப்போகும்   தமிழ்  மகாகவி  திரு . சுப்பிரமணிய பாரதி .அவர்  எட்டயாபுரத்தில்  டிசம்பர்  11 1882ல்  பிறந்தார்  எட்டயாபுரத்திலும்  பின்பு  காசியிலும்  கல்வி  பயின்றார் ..