இத்தனை நாள் தவறாமல் நடந்த இந்த திருப்பணி இன்று இவ்வாறாக என்ன தவறு செய்து விட்டேன் ? நாங்கள் பட்டினி கிடந்தும் இப்பணி தொடர்ந்து செய்து வந்தும் இன்று இவ்வாறு உன்னை பட்டினி போடும்படி ஆகிவிட்டதே . இனி நான் வாழ்வதில் அர்த்தமில்லை என்று கூறி அரிவாளை எடுத்து தன்னை மாய்த்துக்கொள்ள கழுத்தில் வைத்தார் . அன்பு கடலான ஈசன் சகிப்பாரா ? நிலத்திலிருந்து ஒரு கை நீண்டு '' வேண்டாம் அன்பனே !'' என்று கூறி அவர் கையை பிடித்தது . தாயனாரின் மேனி சிலிர்த்தது . நீர் கொண்டு வந்த அமுதினை நாம் ஏற்றுக்கொண்டோம் . உன் பக்தியை மெச்சினோம் என்று குரல் கேட்டது . ஈசன் மாவடு கடிக்கும் அந்த ஓசையும் கேட்டது . தரையில் சிந்திய அன்னம் கீரை எல்லாம் மறைந்தன . கணவன் மனைவி இருவரும் அது கண்டு மகிழ்ந்தனர் . இருவரும் சிவனடி சேர்ந்தனர் . அரிவாளால் தன்னை மாய்த்துக்கொள்ள எண்ணியதால் அவருக்கு அரிவாட்டாயர் என்ற பெயர் வழங்கலாயிற்று .
No comments:
Post a Comment