Tuesday, 5 December 2017

இத்தனை   நாள்   தவறாமல்   நடந்த   இந்த   திருப்பணி   இன்று   இவ்வாறாக   என்ன   தவறு   செய்து   விட்டேன் ?  நாங்கள்   பட்டினி   கிடந்தும் இப்பணி   தொடர்ந்து    செய்து   வந்தும்   இன்று   இவ்வாறு   உன்னை   பட்டினி   போடும்படி   ஆகிவிட்டதே .  இனி   நான்   வாழ்வதில்   அர்த்தமில்லை   என்று   கூறி   அரிவாளை   எடுத்து   தன்னை   மாய்த்துக்கொள்ள  கழுத்தில்   வைத்தார் .  அன்பு   கடலான   ஈசன்   சகிப்பாரா ?   நிலத்திலிருந்து   ஒரு   கை   நீண்டு  ''  வேண்டாம்   அன்பனே !''  என்று   கூறி   அவர்   கையை  பிடித்தது .  தாயனாரின்   மேனி   சிலிர்த்தது .  நீர்   கொண்டு   வந்த   அமுதினை   நாம்   ஏற்றுக்கொண்டோம் . உன்   பக்தியை   மெச்சினோம்  என்று   குரல்   கேட்டது .  ஈசன்   மாவடு   கடிக்கும்   அந்த   ஓசையும்   கேட்டது .  தரையில்   சிந்திய   அன்னம்   கீரை   எல்லாம்   மறைந்தன .  கணவன்   மனைவி   இருவரும்   அது   கண்டு   மகிழ்ந்தனர் .  இருவரும்   சிவனடி   சேர்ந்தனர் .  அரிவாளால்   தன்னை   மாய்த்துக்கொள்ள   எண்ணியதால்   அவருக்கு   அரிவாட்டாயர்   என்ற   பெயர்   வழங்கலாயிற்று .

No comments:

Post a Comment