திண்ணன் ஈசன் பசியோடு இருப்பார் என்கின்ற அளவிடமுடியாத பரபரப்பில் செயல்பட்டு கொண்டிருந்தது மற்ற இருவருக்கும் ஆச்சர்யம் அளித்தது . நாணன் கூறியது போல் திண்ணன் மாறித்தான் போயிருந்தான் . ஐயன் இருட்டில் தனிமையில் வாடிக்கொண்டிருப்பார் என்ற நினைவே அவனை வெகுவாக வாட்டியது . வேகமாக வேகவைத்த பன்றி மாமிச துண்டுகளை இலையில் சுற்றி எடுத்துக்கொண்டு கிளம்ப யத்தனித்தான் . மற்ற இருவரும் தம் கூட வந்த வேடுவர்கள் காத்திருப்பார்கள். ஊர் திரும்ப வேண்டும் என்று நினைவு படுத்தினார்கள் . திண்ணன் காதில் வாங்கி கொள்ளவே இல்லை . மலையை நோக்கி வேகமாக ஓட துவங்கினான் .
No comments:
Post a Comment