Thursday, 19 October 2017

திண்ணன் ஈசன்   பசியோடு   இருப்பார்   என்கின்ற   அளவிடமுடியாத   பரபரப்பில்   செயல்பட்டு   கொண்டிருந்தது   மற்ற   இருவருக்கும்   ஆச்சர்யம்   அளித்தது . நாணன்   கூறியது   போல்   திண்ணன்   மாறித்தான்   போயிருந்தான் .  ஐயன்   இருட்டில்   தனிமையில்   வாடிக்கொண்டிருப்பார்   என்ற   நினைவே   அவனை   வெகுவாக   வாட்டியது .   வேகமாக   வேகவைத்த   பன்றி  மாமிச   துண்டுகளை   இலையில்   சுற்றி   எடுத்துக்கொண்டு   கிளம்ப   யத்தனித்தான் .  மற்ற   இருவரும்   தம்   கூட   வந்த   வேடுவர்கள்   காத்திருப்பார்கள்.  ஊர்   திரும்ப   வேண்டும்   என்று   நினைவு   படுத்தினார்கள் .  திண்ணன்   காதில்   வாங்கி   கொள்ளவே   இல்லை .  மலையை   நோக்கி   வேகமாக   ஓட   துவங்கினான் .

No comments:

Post a Comment