Sunday, 18 June 2017

குழந்தைக்கு   திண்ணன்   என்று   பெயரை   சூட்டினான் .  கண்ணும்   கருத்துமாக   குழந்தையை   வளர்த்தனர்   தம்பதியர் .  அவனும்   வளர்ந்து   ஆளானான்  அவன்    தந்தை   அவனுக்கு   முறையாக   தம்   குல   தொழிலுக்கு  தேவையான   பயிற்சிகளை   கொடுக்க   தொடங்கினார் .  அவனும்   அதில்   தேர்ச்சி   பெற   தொடங்கினான் . அவர்கள்   வேட்டை   ஆடுவதிலும்   சில   நியதிகள்   கடைபிடித்தனர்.  கர்ப்பமுற்ற  அல்லது   உடல்   ஊனமுற்ற    மிருகங்களை   தாக்க   கூடாது .  வயது   ஆகாத   மிருகங்களையும்   அடிக்க   மாட்டார்கள் .  இவ்வாறு   குல   தர்மங்களையும்   சேர்த்தே   பயிற்சி   பெற்றான் .  நாகன்   வயது   முதிர்ந்த   காரணத்தால்   வேட்டைக்கு   செல்ல   இயலாதவனாக   இருந்தான் .அப்போது   ஒரு   நாள்   அண்டை   காடுகளை   சேர்ந்தவர்கள்   நாகன்   தொழில்   செய்யாத   காரணத்தால்   அவர்கள்   இருப்பிடத்தில்   காட்டு   மிருகங்களின்   அட்டகாசம்   அதிகரித்து   விட்டதாக   மிக   வருத்தத்துடன்   ஓலமிட்டனர் 

No comments:

Post a Comment