குழந்தைக்கு திண்ணன் என்று பெயரை சூட்டினான் . கண்ணும் கருத்துமாக குழந்தையை வளர்த்தனர் தம்பதியர் . அவனும் வளர்ந்து ஆளானான் அவன் தந்தை அவனுக்கு முறையாக தம் குல தொழிலுக்கு தேவையான பயிற்சிகளை கொடுக்க தொடங்கினார் . அவனும் அதில் தேர்ச்சி பெற தொடங்கினான் . அவர்கள் வேட்டை ஆடுவதிலும் சில நியதிகள் கடைபிடித்தனர். கர்ப்பமுற்ற அல்லது உடல் ஊனமுற்ற மிருகங்களை தாக்க கூடாது . வயது ஆகாத மிருகங்களையும் அடிக்க மாட்டார்கள் . இவ்வாறு குல தர்மங்களையும் சேர்த்தே பயிற்சி பெற்றான் . நாகன் வயது முதிர்ந்த காரணத்தால் வேட்டைக்கு செல்ல இயலாதவனாக இருந்தான் .அப்போது ஒரு நாள் அண்டை காடுகளை சேர்ந்தவர்கள் நாகன் தொழில் செய்யாத காரணத்தால் அவர்கள் இருப்பிடத்தில் காட்டு மிருகங்களின் அட்டகாசம் அதிகரித்து விட்டதாக மிக வருத்தத்துடன் ஓலமிட்டனர்
No comments:
Post a Comment