Friday, 8 December 2017

அலைமலிந்த   புனல்  மங்கை   ஆனாயருக்கு   அடியேன் | 

மழ   நாட்டில்   திருமங்கலம்   எனும்  ஊரில்  ஆயர்   குலத்தில்   பிறந்தவர்   ஆனாயர்   என்பவர்.  அவர்   ஆயர்குலத்தின்   தலைவர் .  சிறந்த   சிவபக்தர் .    பஞ்சாக்ஷ்ரத்தை   சதா   உச்சரிப்பவர் .  தினந்தோறும்   மாடுகளையும்   கன்றுகளையும்   மேய்வதற்கு   ஒட்டி   சென்று  வருவார் .அவர்   இசையிலும்   தேர்ந்தவர் .  புல்லாங்குழலில்   பஞ்சாக்ஷரத்தை   தன்னை   மறந்து   வாசித்து   கொண்டே   இருப்பார் .  அவர்   இசையில்   மயங்காதவர்   கிடையாது .  வழக்கம்   போல்   ஒரு   நாள்   அவர்   ஆவினங்களை   மேய்த்து   கொண்டு   வனம்   சென்றார் .  அங்கு   பூத்து   குலுங்கும்   ஒரு   புன்னை   மரத்தை   கண்டார் .  அவருக்கு   உடனே    சடையுடைய   சிவபெருமான்   நினைவே   எழுந்தது .  உடனே   குழலை   எடுத்து   பஞ்சாக்ஷரத்தை   பண்ணோடு   இசைக்க   தொடங்கினார் .
  

No comments:

Post a Comment