Tuesday, 7 November 2017

குங்கிலிய   தீபம்   ஈசனுக்கு   இடும்   பணியில்   அவர்  மிக்க  தீவிரமாக   தன்னை   ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் .  ஒரு   நாளும்   தவறாமல்   செய்து   வந்தார் .  சிவபெருமான்   அவருடைய   தீவிர   பக்தியை   சோதிக்க   எண்ணம்   கொண்டார் .  செல்வத்தோடு   வாழ்ந்த   அவர்   குடும்பம்   ஏழ்மை   நிலையை   நோக்கி   செல்ல   ஆரம்பித்தது .  நாள்   செல்ல   செல்ல   ஏழ்மை   அதிகரித்தது .  அன்றாடம்   வயிற்று   பிழைப்பிற்கே   சங்கடம்   நேரலாயிற்று .  ஒரு   நாள்  சாப்பாட்டிற்கே   ஒன்றும்   இல்லாமல்   குழந்தைகள்   மிக   துன்பம்   அடையும்   நிலை   வந்தது .  கலையரின்   மனைவி   குழந்தைகளின்   வேதனையை   காண   சகிக்காமல் .  தன்   திருமாங்கல்ய   கயிற்றில்   இருந்த   தங்க   மாங்கல்யத்தை   கழற்றிக்   கொடுத்து   பெரியவர்கள்   எப்படியாவது   பசியை   தாங்கலாம் .  குழந்தைகள்   என்ன   செய்யும் ,  இதை   விற்று   ஏதாவது   வழி   செய்யுங்கள்  என்று   சொல்லி  அவரிடம்   கொடுத்தாள் .  திடுக்கிட்டு   போன   கல யன்   என்ன   காரியம்   செய்துவிட்டாய்   என்று   பதறி   போனான் .  அதற்கு   அவள்   அவன்   கட்டிய   மஞ்சள்   கயிறு   இருப்பதே   போதும்   இன்று   குழந்தைகள்   உண்ண   ஏதாவது   வழி   செய்தால்   போதும் ,  என்று   சமாதானம்   கூறினாள் .

No comments:

Post a Comment