குங்கிலிய தீபம் ஈசனுக்கு இடும் பணியில் அவர் மிக்க தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருந்தார் . ஒரு நாளும் தவறாமல் செய்து வந்தார் . சிவபெருமான் அவருடைய தீவிர பக்தியை சோதிக்க எண்ணம் கொண்டார் . செல்வத்தோடு வாழ்ந்த அவர் குடும்பம் ஏழ்மை நிலையை நோக்கி செல்ல ஆரம்பித்தது . நாள் செல்ல செல்ல ஏழ்மை அதிகரித்தது . அன்றாடம் வயிற்று பிழைப்பிற்கே சங்கடம் நேரலாயிற்று . ஒரு நாள் சாப்பாட்டிற்கே ஒன்றும் இல்லாமல் குழந்தைகள் மிக துன்பம் அடையும் நிலை வந்தது . கலையரின் மனைவி குழந்தைகளின் வேதனையை காண சகிக்காமல் . தன் திருமாங்கல்ய கயிற்றில் இருந்த தங்க மாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்து பெரியவர்கள் எப்படியாவது பசியை தாங்கலாம் . குழந்தைகள் என்ன செய்யும் , இதை விற்று ஏதாவது வழி செய்யுங்கள் என்று சொல்லி அவரிடம் கொடுத்தாள் . திடுக்கிட்டு போன கல யன் என்ன காரியம் செய்துவிட்டாய் என்று பதறி போனான் . அதற்கு அவள் அவன் கட்டிய மஞ்சள் கயிறு இருப்பதே போதும் இன்று குழந்தைகள் உண்ண ஏதாவது வழி செய்தால் போதும் , என்று சமாதானம் கூறினாள் .
No comments:
Post a Comment