Monday, 18 December 2017

எங்கு   தேடியும்   சந்தனம்   கிடைக்காத   காரணத்தால்   மனமுடைந்த   மூர்த்தியார்   கோயிலில்   அமர்ந்து   புலம்பலானார் .  ''இறைவா   உன்   அருமை   அறியாத   இந்த   மூட   அரசனிடமிருந்து   நாங்கள்   எப்போது   விடுபடுவோம் ?   தங்களுக்கு   நாங்கள்   தடையின்றி   கைங்கர்யம்   செய்ய   இந்த   மூட   அரசனிடமிருந்து   எப்போது   விடுதலை   பெறுவோம் ?   என்று   பலவாறாக''    புலம்பினார்.  நேரம்   செல்ல   செல்ல  மாலை   ஈசனுக்கு   சந்தனகாப்பு   சாற்ற   சந்தனம்   அரைக்கும்   ஞாபகம்   வந்தது .  சந்தன   கட்டை   தானே   இல்லை   தன்   கை   இருக்கிறதே   என்ற   எண்ணம்   வந்து   சந்தனம்   அரைக்கும்   கல்லில்   தன்   முழங்கையை   வைத்து   தேய்க்கலானார் .  சிறிது   நேரம்   தேய்த்ததும்   முழங்கையில்   ரத்தம்   வர   ஆரம்பித்தது .   நேரம்   செல்ல   செல்ல   குருதி   பெருக்கு   அதிகமாயிற்று .     

No comments:

Post a Comment