எங்கு தேடியும் சந்தனம் கிடைக்காத காரணத்தால் மனமுடைந்த மூர்த்தியார் கோயிலில் அமர்ந்து புலம்பலானார் . ''இறைவா உன் அருமை அறியாத இந்த மூட அரசனிடமிருந்து நாங்கள் எப்போது விடுபடுவோம் ? தங்களுக்கு நாங்கள் தடையின்றி கைங்கர்யம் செய்ய இந்த மூட அரசனிடமிருந்து எப்போது விடுதலை பெறுவோம் ? என்று பலவாறாக'' புலம்பினார். நேரம் செல்ல செல்ல மாலை ஈசனுக்கு சந்தனகாப்பு சாற்ற சந்தனம் அரைக்கும் ஞாபகம் வந்தது . சந்தன கட்டை தானே இல்லை தன் கை இருக்கிறதே என்ற எண்ணம் வந்து சந்தனம் அரைக்கும் கல்லில் தன் முழங்கையை வைத்து தேய்க்கலானார் . சிறிது நேரம் தேய்த்ததும் முழங்கையில் ரத்தம் வர ஆரம்பித்தது . நேரம் செல்ல செல்ல குருதி பெருக்கு அதிகமாயிற்று .
No comments:
Post a Comment