வாரிசு இல்லாமல் மன்னன் இறந்ததால் அடுத்தது பட்டத்திற்கு வருபவரை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்ற பிரச்சினை ஏற்பட்டது ... இவ்வாறு நேரும்போது பட்டத்து யானையின் துதிக்கையில் பூமாலையை கொடுத்து இறைவனை மனதார துதித்து தெருவில் அனுப்பி யானை யார் கழுத்தில் மாலை இடுகிறதோ அவரை அரசராக முடி சூடுவது மரபு. அதை பின்பற்றி பட்டத்து யானையை குளிப்பாட்டி அலங்கரித்து கோவிலை வலம் வந்து தெருவில் விட்டனர் . மூர்த்தியார் மன நிறைவோடு ஈசனை கும்பிட்டு விட்டு கோவிலுக்கு வெளியே வந்தார் . பட்டத்து யானை மாலையோடு கோவில் வாசலுக்கு வந்து வாசலில் நின்ற மூர்த்தியார் கழுத்தில் அம்மாலையை அணிவித்து விட்டு பிளிறலோடு மண்டியிட்டு தன் வணக்கத்தை தெரிவித்தது . அவரை துதிக்கையால் தூக்கி தன் முதுகில் அமைத்திக்கொண்டது .
No comments:
Post a Comment