Thursday, 30 November 2017

தாயனாரின்   செல்வம்   குறைய   தொடங்கியது .அப்போதும்   அவர்   தன்   திருத்தொண்டை   நிறுத்தவில்லை .  ஆட்களை   வைத்து   வேலை   வாங்கி   வந்த   அவர்   செல்வம்  எல்லாம்   இழந்த   நிலையில்   ஒருவரிடம்   கூலி   வேலைசெய்து   அந்த  வருவாயிலும்   தவறாமல்   ஐயனுக்கு   தாம்   செய்து   வந்த   தொண்டினை   தொடர்ந்து   செய்து   வந்தார் .  தமக்கு   கிடைத்த   கூலியில்   செந்நெல்லை   இறைவனுக்கு   அமுது   படைக்க   எடுத்துக்கொண்டு     கார்நெல்லை   தானும்   தன்மனைவியும்   உண்ண   உபயோகித்து   கொண்டார் .  வறுமையிலும்   விடாது   தொண்டு   செய்து   வரும்   அவருடைய   அப்பெரும்  அன்பை   மேலும்   சோதிக்க   எண்ணி   அவ்வூரில்   விளையும்   எல்லா   நெல்லையும்   செந்நெல்லாக   மாறச்செய்தார் .  தன்   கொள்கையிலிருந்து   சிறிதும்   மாறாத   தாயனார்   கூலியாக   கிடைத்த   மொத்த   நெல்லையும்   ஈசனுக்கே   படைத்தார்.   அவர்   மனை வி    தோட்டத்தில்    விளையும்   கீரையை   சமைத்து  அதில்    இருவரும்   பசியாறினர் 

No comments:

Post a Comment