Thursday, 23 March 2017

அல்லி   மென்   முல்லையந்தார்  அமர் நீதிக்கு   அடியேன் !
காவேரி   தீரத்தில் குடந்தைக்கு   அருகே    பழையாறை   என்னும்   ஊரில்   பெரும்   சிவபக்தர்களான   வணிக   குளத்தில்   பிறந்தவர்   அமர் நீதியார்.  சிவபெருமானிடத்தில்   அளவற்ற   பக்தி   கொண்ட   இவர்   தரும   நெறி   தவறாமல்   வாழ்ந்து   வந்தார் .  மக்களுக்கு   தேவையான   பொருள்களை   மொத்தமாக   வாங்கிவந்து     அவைகளை   மிகுந்த   குறைந்த   லாபத்திற்கு   விற்று   வந்தார் .  அதனால்   அவர்   பெருமை   அக்கம் பக்கத்து   ஊர்களிலும்   பரவி   அவர் வியாபாரம்   வெகுவாக   பரவியது .  அமர் நீதியாருக்கு     சிவனடியார்கள் பால்   மிகுந்த   பக்தி .  அவர்களுக்கு   அமுதளிப்பதை   பெரும்   பாக்கியமாக   கருதினார் .

No comments:

Post a Comment