கனமான இதயத்துடன் கலையர் அந்த பொன் மாங்கல்யத்தை எடுத்துக்கொண்டு பசியாற்ற ஏதாவது வாங்கி வர புறப்பட்டார் . ஈசன் விளையாட்டை யார் அறிவார் ? அவர் சென்ற பாதையில் எதிரே ஒருவன் வண்டியில் குங்கிலியம் வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அதை கண்டவுடன் அவர் மனம் பேதலித்தது . தான் வந்த காரியம் மறந்தது . தான் வாடிக்கையாக செய்வதே மனதில் நினைவு வந்தது . ஒன்றும் யோசியாமல் பொன்னை கொடுத்து வேண்டிய குங்கிலியம் வாங்கிக்கொண்டு மன மகிழ்ச்சியுடன் ஆலயத்தில் அதை சேர்ப்பித்து அந்த திருப்பணி நன்றாக முடிந்ததில் மெய்மறந்து கோவிலை வலம் வந்தார் . எல்லாம் முடிந்த பின்புதான் அவருக்கு வீடு நினைவு வந்தது . குழந்தைகளின் பசியால் வாடிய முகம் ஞாபகம் வந்தது . துடிதுடித்து போனார் . வீடு செல்ல மனம் வரவில்லை . துவண்டு போனார் . ஈசன் சும்மா இருப்பாரா ? பக்தனை அவ்வாறு துடிக்க செய்வாரா ? அவருடைய வீட்டில் சகல விதமான செல்வங்களும் குவிய ஆரம்பித்தன . அவர் மனைவி குழந்தைகளுக்கு சநதோஷம் தாங்கவில்லை . ஆலயத்தில் கலயன் கனவில் ஈசன் தோன்றி பசியுடன் இருப்பாய் வீடு செல் என்றார் .
No comments:
Post a Comment