Wednesday, 8 November 2017

கனமான   இதயத்துடன்   கலையர்  அந்த   பொன்   மாங்கல்யத்தை   எடுத்துக்கொண்டு   பசியாற்ற  ஏதாவது   வாங்கி   வர   புறப்பட்டார் .  ஈசன்   விளையாட்டை   யார்   அறிவார் ?  அவர்   சென்ற   பாதையில்  எதிரே   ஒருவன்  வண்டியில்   குங்கிலியம்   வியாபாரம்   செய்து   கொண்டிருந்தான். அதை   கண்டவுடன்   அவர்   மனம்   பேதலித்தது .  தான்   வந்த   காரியம்   மறந்தது .  தான்   வாடிக்கையாக   செய்வதே  மனதில்  நினைவு    வந்தது .  ஒன்றும்   யோசியாமல்   பொன்னை   கொடுத்து   வேண்டிய   குங்கிலியம்  வாங்கிக்கொண்டு  மன   மகிழ்ச்சியுடன்   ஆலயத்தில்   அதை   சேர்ப்பித்து    அந்த   திருப்பணி   நன்றாக   முடிந்ததில்   மெய்மறந்து   கோவிலை   வலம்   வந்தார் .  எல்லாம்   முடிந்த   பின்புதான்   அவருக்கு   வீடு   நினைவு   வந்தது .  குழந்தைகளின்   பசியால்   வாடிய   முகம்   ஞாபகம்   வந்தது .  துடிதுடித்து   போனார் .  வீடு   செல்ல   மனம்   வரவில்லை .  துவண்டு   போனார் .  ஈசன்   சும்மா   இருப்பாரா ?  பக்தனை   அவ்வாறு   துடிக்க   செய்வாரா ?  அவருடைய   வீட்டில்   சகல   விதமான   செல்வங்களும்   குவிய   ஆரம்பித்தன .  அவர்   மனைவி   குழந்தைகளுக்கு   சநதோஷம்   தாங்கவில்லை .  ஆலயத்தில்   கலயன்   கனவில்   ஈசன்   தோன்றி   பசியுடன்   இருப்பாய்   வீடு  செல்   என்றார் .

No comments:

Post a Comment