Monday, 11 December 2017

மேய்ந்து   கொண்டிருந்த   மாடுகள்   மேய   மறந்து   நின்றன .  கன்றுகள்   தங்கள்   ஓட்டத்தை   மறந்து   அவரை   பார்த்தன .  மரங்கள்   அசையவில்லை .  பக்கத்து   சோலையிலிருந்த   பறவை   இனங்கள்   இசையில்   மயங்கி   பறந்து   வந்தன .   புதர்களில்   மறைந்து   இருந்த   ஓநாய்கள்   மான்கள்   சிறுத்தை   போன்ற   மிருகங்கள்   எல்லாம்   இசையில்   மயங்கி   அங்கு   கூடின .   இசையில்   மயங்கிய   நாகங்கள்   புற்றிலிருந்து   வெளிவந்து   படம்   எடுத்து   ஆடின .  நேரம்   செல்ல   செல்ல   அவர்   இசை   கல்லையும்   உருக்குவதாக   இருந்தது .

No comments:

Post a Comment