திருமூ லராக திருமந்திரம் எனும் அறிய பொக்கிஷத்தை உலகுக்கு அளித்த சுந்தரன் அகத்தியரின் மாணவர் . அகத்தியர் அவரை மேற்கொண்டு கல்வி பயில கைலையில் நந்திதேவரிடம் அனுப்பி வைக்கிறார் . அவரும் நந்திதேவரிடம் பயின்று தேர்ச்சி பெறுகிறார் . அவர் பாடலிலிருந்து அவர் சனகாதி முனிவர்கள் , பதஞ்சலி ,வ்யாக்ரர் போன்ற மகா யொகிகளுடன் பயின்றதாக தெரிகிறது . சிவனாரிடமிருந்து பார்வதிதேவியுடன் நந்திதேவரும் உபதேசம் பெற்ற அவ்வறி ய வேத பாடங்களை நந்திதேவர் இவர்களுக்கு உபதேசிக்கிறார் .
Monday 30 November 2015
Tuesday 24 November 2015
thirumular
10ஆம் திருமுறை திருமூலர் எழுதிய திருமந்திரம் ஆகும் . மிக பழைமை வாய்ந்தது . 3000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்டது .வேதத்திற்கு ஒப்பானது . இதில் வேத ஆகமங்கள் ,தர்மம் , கர்மம் , யோகம் ,உடற்கூரு சாஸ்திரம் ,மனோதத்துவம் மற்றும் சூரிய சந்திர மண்டலங்கள் எல்லா துறைகளையும் ஆராய்ந்து எழுதப்பட்ட ஒப்பற்ற பாடல்களாகும் . இதை இயற்றிய திருமூலரும் அகத்தியர் பதஞ்சலி போன்றோருக்கு ஒப்பான மஹா சித்தர் ஆவார் . அவர் அட்டமா சித்திகளில் தேர்ச்சி பெற்றவர் . சுந்தரநாதனான அவர் பரகாய பிரவேசம் செய்து உயிரற்ற மூலன் உடலில் தன் ஜீவனை பிரவேசிக்க செய்து திருமூலராகிறார்
Friday 20 November 2015
Thursday 19 November 2015
sethirayar
அடுத்த பத்து பாக்களை பாடியவர் சேதிராயர் ஆவர் . அவர் மன்னர் பரம்பரையை சேர்ந்தவர் . அவர் நமக்கு முன்பே நமக்கு அறிமுகமான நரசிங்க முனையரையர் வம்சாவளியாவார் . நரசிங்க முனையரையர் சுந்தரரின் வளர்ப்பு தந்தை ஆவர் சேதிராயர் சேதி நாட் டின் கிளீயூரை தலைநகராக கொண்ட பிரதேசத்தை ஆண்டு வந்தார் . அவரும் தன் முன்னோர்களை போன்றே சிறந்த சிவ பக்தராய் விளங்கினார் . அவர் கூத்தனை பாடிய 10 பாடல்கள் திருவிசைப்பாவில் இடம் பெறுகிறது .
Tuesday 17 November 2015
purushoththama
257 முதல் 278 பாட்டுகளை பாடியவர் புஷோத்தம நம்பி ஆவர் . அவரை பற்றியும் அதிகமாக ஒன்றும் தெரியவில்லை .விஷ்ணுவின் நாமங்களில் ஒன்றான புருஷோத்தமன் என்கிற நாமம் கொண்டதால் அவரு ம் வைணவர் என்று தெரிகிறது . வேத விற்பன்னர் குடும்பத்தை சேர்ந்தவர் என்று தெரிகிறது . அவரே தன்னை பற்றி மாசிலா மறைபால ஒதுனவன் என்று கூறிக்கொள்வதால் அவரும் வேதவிற்பன்னர் என்று தெரிகிறது . அவரும் மிக்க படித்தவர் . நிறைய பாடல்கள் புனைந்துள்ளார் . அவர் 11 நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது . அவர் வைஷ்ணவர் ஆயினும் அவர் மனம் தில்லை கூத்தனை நாடியே சென்றது . அவர் தில்லையே இருப்பிடமாக கொண்டு ஆடலரசனை பாடியே வாழ்ந்தார் . அவர் பாடிய கடைசி திருவிசைப்பா ,
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்றாடி பாடினார்
எண்ணுதலை பட்டாங்கு இனிதா இருப்பாரே |
ஒண்ணுதலி காரணமா உம்பர் தொழுதேத்தும்
கண்ணுதலான் தன்னை புருடோத்தமன் சொன்ன
பண்ணுதலை பத்தும் பயின்றாடி பாடினார்
எண்ணுதலை பட்டாங்கு இனிதா இருப்பாரே |
Wednesday 11 November 2015
pattu
அவர் பாடிய முதல் பாட்டு ;
மையல் மாதொரு கூறன் மால் விடையேறி மான்மறியேந்திய தடம்
கையன் கார்புரையும் கறை கண்டன் கனல் மழுவான்
ஐய ம் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே |
மையல் மாதொரு கூறன் மால் விடையேறி மான்மறியேந்திய தடம்
கையன் கார்புரையும் கறை கண்டன் கனல் மழுவான்
ஐய ம் ஆரழல் ஆடுவான் அணி நீர்வயல் தில்லை அம்பலத்தான்
செய்ய பாதம் வந்தென் சிந்தை உள்ளிடம் கொண்டனவே |
Tuesday 10 November 2015
valiyamuthanar
அடுத்து 256 வரை உள்ள பாடல்களை பாடியவர் திருவாலியமுதனார் . அவரை பற்றியும் அதிக தகவல்கள் கிடைக்கவில்லை . அவர் வேதம் ஓதுகிற வைஷ்ணவ குடும்பத்தை சேர்ந்தவர் . ஆயினும் அவர் அம்பலகூத்தனின் மேல் அதிகமான பக்தி உடையவராக இருந்தார் . அவருடைய முன்னோர்கள் சீர்காழி அருகில் உள்ள திருவாலி எனும் க்ஷேத்திரத்தில் எழுந்தருளி இருக்கும் பெருமாள் அமுதனாரிடம் மிகுந்த பக்தி உடையவர்கள் . ஆதலால் இவருக்கு வாலியமுதனார் என்று பெயரிட்டனர் . அவர் தன்னை மயிலையார் மன்னவன் என்று குறிப்பிட்டிருக்கிறார் . ஆதலால் அவர் மயிலையை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது . சிலர் மயிலாடுதுறை என்றும் சொல்வர் . அவர் மனம் விஷ்ணுவை நாடாமல் தில்லை கூத்தனை நாடியது . அம்பலவாணனிடம் மிகுந்த பக்தி கொண்டு அவர்மேல் பாடல்கள் பாடினார் . அவை திருவிசைபாவில் இடம் பெருகின்றன .
Thursday 5 November 2015
pattu
அடிகளின் திருவிசைப்பாவில் முதல் பாட்டு ,
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறு கதலி இ : வேம்பும் கறி கொள் வார்
எச்சாவும் இல்லாமை நீயறிந்தும் எனது பணி
நச்சாய் காண் ; திரு தில்லை நடம் பயிலும் நம்பானே |
துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறு கதலி இ : வேம்பும் கறி கொள் வார்
எச்சாவும் இல்லாமை நீயறிந்தும் எனது பணி
நச்சாய் காண் ; திரு தில்லை நடம் பயிலும் நம்பானே |
Tuesday 3 November 2015
venattadikal. the
அடுத்து திருவிசைப்பா 205-214 இயற்றியவர் வேணாட்டடிகள் ஆவார் . அவர் கேரளத்தை சேர்ந்த வேனா ட்டில் வாழ்ந்த சிறந்த சிவ பக்தர் . அவர் ராஜபரம்பரையை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறாது.அவர் சிவயோகி . தென்னாட்டில் சிவதலம்களை எல்லாம் தரிசித்து நிறைய பாடல்கள் பாடியுள்ளதாக தெரிகிறது . ஆனால் நமக்கு கிடைத்தவை 10 பாடல்களே . தில்லை ஆண்டவனை பாடியவை
Subscribe to:
Posts (Atom)