செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டர்க்கும் அடியேன் |
சோழநாட்டில் செங்காட்டங்குடி என்று ஓர் ஊர் . அங்கு மாமாத்தியர் குலத்தில் பிறந்த பரஞ்சோதி என்பவர் வாழ்ந்து வந்தார் . அவர் ஆயுர்வேதம் மற்றும் வடமொழியிலும் தேர்ச்சி பெற்றவர் . இது தவிர குதிரை ஏற்றம் வாள் வித்தை போன்ற போர் கலைகளிலும் வல்லமை பெற்றிருந்தார் . எல்லாவற்றிற்கும் மேலாக அவர் சிவபெருமானிடம் அளவிலா பக்தி கொண்டவர் . சிவனடியார்களை அன்புடன் நேசிப்பவர் . இத்தனை பெருமை வாய்ந்த அவர் பல்லவ மன்னனை கவர்ந்ததில் ஆச்சர்யம் ஏதும் இல்லை .