Monday 30 December 2019

ஊன்றுகோலை   பெற்றுக்கொண்ட   சுந்தரர்   தன்   யாத்திரையை   தொடர்ந்தார் .   காஞ்சி   வந்தடைந்தார் .   அன்னையுடன்   சேர்ந்து   காட்சி   அளிக்கும்   பெருமானை   கண்டார் .   அன்னையை   கண்ட   சுந்தரருக்கு    சிறிது   நம்பிக்கை   வந்தது .   மனமுருக   வேண்டினார் .  அம்மையப்பனை   நோக்கி    ''  அம்மையப்பா   உங்களை   காணும்   ஆவலில்   அன்றோ   இப்பெரும்   பிழையை    செய்தேன் .  உங்களை   காணாமல்   உயிர்   வாழ்வது   சாத்தியமில்லை .  என்னை   பிழை   பொறுத்தருள  மாட்டாயா ?   அன்று  நல்லூரில்   நான்   பிழை   செய்ய   இருந்தபோது   என்னை   காத்து   ரக்ஷித்த   நீ   இப்போது   மன்னித்து   காக்க   மாட்டாயா?  ஏன்   இந்த   சோதனை ?''  என்று   புலம்பினார் .   அம்மை   கூட   இருப்பது   காரணமோ .  ஐயன்   மனமிரங்கி   அவருக்கு   இடது      கண்   பார்வையை   கொடுத்து   அருளினார் .   
சுந்தரர்   சொல்லொணா   வேதனையில்   ஆழ்ந்தார் .  உற்ற   நண்பராக   தம்மை   தாங்கிய   ஐயன்   இத்தனை   கடும்   தண்டனை   அளித்தது   அவரை   நிலைதடுமாற   செய்தது .  ஆனாலும்    மனம்   மாற்ற   இயலவில்லை .  ஆரூரானை   காணாமல்    இருப்பது   சாத்தியமில்லை   என்று   மனம்   தத்தளித்தது .  சமாளித்து   கொண்டு   எழுந்தார் .  '' ஐயனே   என்   கண்ணைத்தானே   எடுத்துக்கொண்டாய் ?  என்   உள்ளம்   மாறாது .  ஆரூரனை   காணாமல்   வாழ்வது   சாத்தியமில்லை ''  என்று   சொல்லிக்கொண்டே   அடியார்கள்   உதவியுடன்   எழுந்தார் .   தன்   தல   யாத்திரையை    தொடங்கினார் .  திருமுல்லைவாயில்   சென்று   பெருமானை   தரிசித்தார் ,  பிறகு   திருவேற்காடு   சென்றடைந்தார் .  அங்கு  ''பிழையுளன   பொறுத்திடுவீர் ''   என்று   மன்னிக்க  வேண்டி   பதிகம்   பாடி    மன்றாடினார் .   சிறிது   மனமிரங்கிய   பெருமான்   சிறிது   கருணை        காட்ட   விரும்பியவராய்      ஊன்றுகோல்  ஒன்றை   அளித்தார் .      

Thursday 26 December 2019

சுந்தரர்   திடுக்கிட்டு   தடுமாறி   போனார் .   மகிழ   மரத்தடியில்   ஐயன்   இருக்க   தான்   செய்து   கொடுத்த   சத்தியத்தை       மீறியதால்   வந்த   விளைவா   இது ?  சங்கிலியாரை   பிரிந்து   வந்ததால்   ஈசனின்   தண்டனையா  இது   அவர்   மனம்   தடுமாறியது .  ஒளி   இழந்த   கண்களிலிருந்து   கண்ணீர்   ஆறாய்   பெருகியது .  கோயில்   பக்கம்   திரும்பி   கரம்    கூப்பி   கண்ணீர்   மல்க   கதறினார் .   'ஐயனே   என்னை   தண்டிக்காதே .  சங்கிலியாரை   பிரிவது   என்   நோக்கமல்ல .  கொடுத்த   வாக்கை   மீறுவதும்   என்  எண்ணமில்லை .  ஆரூர்   ஈசனை   காணாமல்   என்னால்   கணமும்   இருக்க   இயலாது .  ஆரூரன்   மேலுள்ள   காதலே   என்னை   வாக்கு   மீற   செய்தது .  கண்ணை   கொடுத்து   விடு   என்று   கதறினார் .  தன்   மன   வேதனையை
பதிகங்களாக   பாடி   ஐயனுக்கு   சமர்ப்பித்தார் .   அனால்   ஐயன்   மனம்  இறங்குவதாக   இல்லை 

     .

Wednesday 25 December 2019

 சில    நாட்கள்   சுந்தரர்   சங்கிலியாருடன்   மகிழ்ச்சியாக  வாழ்ந்தார் .  இருவரும்   காலை   மாலை   இரு   வேளையும்   ஆலயம்  சென்று   ஒற்றியூர்   பெருமானை    சேவித்துக்கொண்டு   ஊர்மக்கள்    மெச்ச   வாழ்க்கை   நடத்தி   வந்தனர் .  சுந்தருக்கு   இப்புவியில்   இன்னும்   செய்ய   வேண்டிய   காரியங்கள்   உள்ளதால்   ஈசன்   அவ்விதம்    வாழ்வதை  மாற்ற  எண்ணம்   கொண்டார் .   திருவாரூரில்   வசந்த   உத்சவம்   நடக்க   வேண்டிய   சமயம்   அது .  அதை   பயன்படுத்திக்கொண்டு   சுந்தரரின்   மனதில்   அந்த   ஆவலை   தூண்டிவிட்டார் .   மனம்  நிலை  கொள்ளவில்லை      .   தியாகேசர்   அவர்   மனதில்   தோன்றி    அலைபாய   வைத்தார் .   ஆனால்   போவது   எவ்வாறு ?    அவர்   சங்கிலியாருக்கு   செய்து    கொடுத்த   சத் தியம்  ஒரு  புரம்  அழைத்து   போவது   சாத்தியமில்லை    .   பரவையார்   அனுமதிக்க   மாட்டார் . மனம்   தடுமாறியது .   இத்தனை   இக்கட்டிலும்    அவரால்   மனதை   கட்டுப்படுத்த    முடியவில்லை .      பொறுக்க   முடியாமல்   ஒரு    நாள்   ஆரூர்   கிளம்பி   விட்டார்  .  சங்கிலியாரிடம்   சொல்லாமல்   ஆரூர்  செல்ல   முற்பட்டார் .   ஒற்றியூர்   எல்லை     தாண்டியதும்   அவர்  கண்கள்   இருண்டு   த லை  சுற்றி  கீழே    விழுந்தார் .   எழுந்த     போது     அவருடைய   இரு   கண்களும்   ஒளி   இழந்து   பார்வை   அற்று   போயிருந்தார் .      

Monday 23 December 2019

சுந்தரர்   வார்த்தைகளை   கேட்ட   சங்கிலியார்     சந்தோஷத்துடன்   'சுவாமி  உங்கள்   வார்த்தையில்   நம்பிக்கை   இல்லாவிடில்   அன்றோ  ஈசன்   முன்   சத்தியம்   செய்ய   வேண்டும்    எனக்கு  உம்மிடம்    அதிக   நம்பிக்கை   இருக்கிறது .  ஆகையால்   சாதாரண   சத்தியமே   போதும் '  என்றாள் .  பின்   எங்கு   சத்தியம்   செய்து   தரவேண்டும்   என்று   திடுக்கிட்ட   சுந்தரர்   வினவினார் .   அதற்கு   அவள்   வாருங்கள்   அந்த   குளிர்ந்த   மகிழ   மரத்தடியில்  செல்வோம்.  அங்கு   என்   மனம்   குளிர   சத்தியம்   செய்து   கொடுத்தால்   போதும் '  என்று   கூறினாள் .   சுந்தரர்   திடுக்கிட்டார் .  ஐயன்  அங்கு  அல்லவா   இருக்கிறார் .  இ ப்போது   மறுத்து    சொல்வதற்கில்லை  .   தவறாக   நினைப்பாள் .   இறைவன்   முன்   அல்லவோ   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  தர்ம   சங்கடத்தில்   அல்லவோ   மாட்டிக்கொண்டார் .  சங்கிலியார்   சுந்தரரை   வணங்கி   விடை   பெற்றாள்  .  அவரும்   பெருமானை   வணங்கி   விட்டு   மடத்திற்கு  சென்றார் .   ஈசன்   அடியார்கள்   கனவில்   தோன்றி   மறுநாள்   அவர்கள்  திருமணத்தை   விமரிசையாக   நடத்துமாறு    ஆணையிட்டார் .       ஐயன்   திருவாக்குப்படி   திருமணம்   நடந்தேறியது .  மண   வாழ்க்கை    மகிழ்ச்சியாக  துவங்கியது .    
மறுநாள்   சுந்தரர்   அந்த   அடியாருடன்   ஆலயம்   சென்று   சங்கிலியாருக்காக   காத்திருந்தார் .   அப்போது   சங்கிலியார்   நீராடி   புத்தாடை   அணிந்து   ஐயனுக்கு   வாசமிக்க    மலர்மாலை   எடுத்துக்கொண்டு   ஆலயம்  நோக்கி     வந்தார் .    அவளை   கண்டதும்   மனம்   மகிழ்ந்த   சுந்தரர்   அவளிடம்   வந்து   'பெண்ணே    உன்னை   கண்டது   முதல்   என்   மனம்   என்   வசம்   இல்லை .  எம்பெருமானும்   இதற்கு   சம்மதம்   தெரிவித்து   விட்டார் .'  என்று   அவர்   சொன்னதும்   சங்கிலியார்   மனம்   புல்லரிக்க   தலை   குனிந்து   நின்றாள் .  தொடர்ந்து   சுந்தரர்   'பெண்ணே   ஏன்   மெளனம்   உனக்கும்   சம்மதமென்று   ஈசன்   தெரிவித்தார் .  என்னுடன்    எம்பிரான்   சன்னதிக்கு   வா   நீ   கேட்டபடி   அவர்   முன்    உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தருகிறேன்.'  என்று   அவளை   அழைத்தார் .      

Wednesday 18 December 2019

ஐயன்   சங்கிலியரிடமிருந்து   ஆரூரரிடம்   வந்தார் .  சுந்தரா   நீ   விரும்பியபடி   அவள்  உன்னை   மணக்க   சம்மதித்து   விட்டாள் .  ஆனால்   ஒரு   நிபந்தனை.  அதாவது   என்  முன்னால்    அவளை   பிரிய   மாட்டேன்   என்று   சத்தியம்   செய்து   தர   வேண்டும் .  என்றார்   அவள்   சம்மதித்தது   சுந்தரருக்கு   பேரானந்தம்   அளித்தது .  ஆனால்   தல   யாத்திரை   செய்து   சிவபெருமானை   சேவிக்காமல்   இருக்க   ?  அது   சாத்தியமா   கேள்வி   எழுந்தது .  தோழனல்ல வா   எதுவும்   கேட்கலாம் .  என்று   ஐயனே   நான்   சத்தியம்   செய்ய   வரும்போது   தாங்கள்   தயை   கூர்ந்து   சன்னதியிலிருந்து   விலகி   மகிழ   மரத்தில்   சிறிது   நேரம்   தங்க வேண்டும்   என்று   கேட்டுக்கொண்டார் .  அவர்   சம்மதித்தார் .  அனால்   உடனே   சங்கிலியிடம்   சென்று    பெருமான்   சிரித்துக்கொண்டே   சங்கிலி   நாளை  ஆருரனிடம்   சன்னதியில்   சத்தியம்   செய்ய   தேவையில்லை .  மகிழ   மரத்தடியில்   செய்தால்   போதும்   என்று   கூறிவிட   சொன்னார் .     
ஈசன்   அவர்களை   சேர்க்கத்தானே   சுந்தரரை   ஒற்றியூர்   வரவழைத்தார் .  அவர்   தம்   வேலையை   துவங்கினார் .  இரவு   சங்கிலியாரின்   கனவில்   தோன்றி   என்   தோழன்   நம்பி  ஆரூரன்   உன்னை   மணக்க   விரும்புகிறான் .நீங்கள்   இருவரும்   இணைவது   எனக்கும்   சம்மதமே உன்  சம்மதம்  தேவை   .  என்று   கேட்டார் .  அதற்கு   அவள்  ' ஐயனே   உமது   கட்டளையை   மீறும்   சக்தி   எனக்கு   இல்லை .  ஆனாலும்   அவர்   ஏற்கனவே   பரவையாரை   மணந்து   வாழ்ந்து   வருகிறார் .  என்று   தன்   மன   கவலையை   தெரியப்படுத்தினாள் .   அதற்கு   ஈசன்   உன்னை   பிரிவதில்லை   என்று   சத்தியம்   செய்து   தர   சொல்கிறேன்   என்று   சமாதானம்   கூறினார் .    

Monday 16 December 2019

சங்கிலி   நாச்சியாரின்  கதையை   கேட்ட   சுந்தரரின்   மனம்   அலை   பாய்ந்தது .  அவளை   அடைய   மனம்   ஆவல்    கொண்டது .  தாம்   இப்புவியில்   பிறக்க   இரண்டு   பெண்கள்   காரணம்   என்பதை   அறிந்திருந்த  சுந்தரர்   பரவையாரை   தவிர   மற்றவள்   அவளோ   என்று   அவர்   மனம்   எண்ணியது .    சங்கிலியார்   ஈசன்   அருள்   பெற்றவர்   என்று   குறிப்பிட்டது   தன்னைத்தானோ   என்று   சந்தேகம்    உண்டாயிற்று .  அதை   ஐயனை   கேட்டே   தெளிவு   படுத்திக்கொள்ள     முடிவு   செய்தார் .   ஒற்றியூர்   சிவபெருமானை   நாடி   ''என்   உள்ளத்தில்   மிகுந்த   சலனத்தை   ஏன்   ஏற்படுத்தி   விட்டாய் ?  அன்று   நடக்கவிருந்த   என்   திருமணத்தை   நிறுத்தி   என்னை   ஆட்கொண்ட   பெருந்தகை   அல்லவோ  நீ ?  இன்று   இப்பெண்ணை   கண்டு   சலனப்பட   வைத்து   விட்டாய் ?  அப்படியானால்   அவள்தான்  அந்த   இரண்டாவது   பெண்ணா ?   என க்கு  அவளை   கண்டதும்  அவளை   ஆடைய   வேண்டுமென்ற   வேட்கையை   ஏன்   ஏற்படுத்தினாய் ?  அவளை   எனக்கு   மணமுடித்து வைத்து   விடு ''  என்று    புலம்பினான் .     ஈசன்   உமது   இச்சையை   நாம்   நிறை வேற்றி    வைப்போம்     என்று   வாக்களித்தார் .

Friday 13 December 2019

தரிசனம்   முடித்து   மடத்திற்கு   வந்த   சுந்தரருக்கு   மனம்   நிலைக்கொள்ளவில்லை .   கோயிலில்   கண்ட   அப்பெண்ணின்   மலர்முகம்  அவரை   அலைக்கழித்தது .  தன்னுடன்   ஆலயத்திற்கு   வந்த   ஒருவரிடம்   அந்த   பெண்ணை   பற்றி   விசாரித்தார் .  அவர்      அவ்வூரின்   எல்லையில்   உள்ள  ஞாயிறு   எனும்   இடத்தில்      ஞாயிறுகிழார்   என்பவர்   குடும்பத்துடன்   வசிக்கிறார்   என்றும்   அவருடைய   மகள்   சங்கிலி   எனும்   பெயர்  என்றும்   அவர்   தெரிவித்தார் .  மேலும்   அவர்   அவளுடைய   பெற்றோர்கள்   அவளுடைய   திருமண  பேச்செடுத்தால்   ஈசன்   அருள்   பெற்ற   ஒருவரைத்தான்   மணமுடிப்பேன்   என்றும்   தனக்கு   ஒற்றியூர்   பெம்மானுக்கு   சேவை   செய்வது   ஒன்றே   விருப்பம்   என்று   சொல்லி   மறுத்து   வந்ததாகவும்   கூறினார் .  அவளை   மாற்ற  எடுத்த   முயற்சி   பலனளிக்கவில்லை .   ஒரு   சமயம்   அவருடைய      உறவினர்   தன்  மகனுக்கு   அவளை   மணம்   பேசவந்து   பேசி   முடித்துக்கொண்டு     ஊர்   திரும்பினர் .   அனால்  அவர்கள்   போய்   சேர்ந்த   போது  அந்த   மகன்   இறந்து   கிடந்தது   கண்டு   அதிர்ந்து  போனார்கள்  .  ஞாயிறு   கிழாரும்   பெண்ணின்   வார்த்தையில்   உள்ள   உண்மையை        உணர்ந்து   அதிர்ந்து   போனார் .   இந்த   விவரங்களை   கேட்ட   சுந்தரர்   திடுக்கிட்டார் .         

Wednesday 11 December 2019

சுந்தரர்   அப்பெரிய   தர்மசங்கடத்திலிருந்து   எம்பிரான்   பெரும்   கருணையாலும்   அவர்   தான்   கொடுத்த   வாக்கை   காப்பாற்றி இல்லாவிடில்   மூன்றாவதாக   அப்பெண்ணை   மணந்து   இப்பூலோக   வாழ்வை   நீட்டித்திருப்பார் .  ஐயன்   பேரருளை   சுந்தரர்   மறக்கமுடியுமா ? அவர்   கைலையில்   கண்ட   ஒரு   பெண்  பரவையாரை   மணந்து   திருவாரூரில்  . வாழ்ந்து   வருகிறார் .  மற்றோரு   பெண்ணை   சநதிக்க   ஒற்றியூருடைய  பெம்மான்    துணை   செய்கிறார் . 
    ஒற்றியூரில்   சுந்தரர்   ஒரு   மடத்தில்   தங்கி   எம்பெருமானை   தினம்   தரிசித்து   வருங்கால்   ஒருநாள்   கோயிலில்   அடியார்களின்   தொண்டினை   பார்த்து   மகிழ்ந்தபடி   வந்து   மலர்   மண்டபத்தை   அடைந்தார் .   அங்கு   வாசமிக்க    மலர்களை   மாலையாக    கட்டிக்கொண்டிருந்த   காட்சியை   ரசித்தபடி   சுந்தரர்   வந்து   கொண்டிருந்தார் .   அப்போது   ஒரு   அழகிய     மங்கை   மாலையை   எடுத்துக்கோண்டு   திரையை   விலக்கிக்கொண்டு   வெளியே   வந்தாள் .  சுந்தரர்      அவளை   கண்டு  ஒரு   கணம்   மலைத்தார் . அவளும்   அவரை   கண்டு    ஒரு   மலைத்து   நின்று   பிறகு   ஓடி   மறை.ந்தாள்            .         

Tuesday 10 December 2019

காஞ்சியை   அடைந்த   சுந்தரர்  ஏகாம்பிரேஸ்வரரை   வணங்கி   மகிழ்ந்து   அங்கு   சில   நாட்கள்   தங்கி   இருந்து   பிறகு , திருமேற்றளி   ஓணகாந்தன்தளி   மற்றும்   சில   தலங்களை   சேவித்து   திருக்காளத்தி   அடைந்தார் .  மலையை   வழிப்பட்டு   படியேறி   சென்று   இறைவனுக்கு   கண்   கொடுத்து   ஈசனின்   வல ப்பாகத்தில்   இடம்   பெற்ற   கண்ணப்பரை   தரிசித்து  களித்தார் .  அங்கிருந்து   மனக்கண்ணாலேயே   திருக்கேதாரம் ,   திருப்பருப்பதம்   முதலிய   இடங்களை   சேவித்துக்கொண்டார் .   காஞ்சியிலிருந்து   புறப்பட்டு   திருஒற்றியூர்   வந்து   சேர்ந்தார் .  அவருடைய    பிறப்பின்   மற்றோரு   காரணம்   நிறைவேற   ஈசன்   திட்டப்படி   அங்கு   வந்தார் .
        கைலையில்   வாழும்போது   சுந்தரர்   இரு  பெண்களை   கண்டு  மயங்கி   சில   கணங்கள்    மூவரும்   தன்நிலை    மறந்தனர் .  ஈசன்   அவர்களை   இவ்வுலகில்   பிறந்து   சுந்தரர்   அந்த   இரு  பெண்களையும்   மணந்து   சிறிது   காலம்   இல்லற   சுகம்   அனுபவிக்க   கட்டளையிட்டார் .   சுந்தரர்   இவ்வுலகில்   வாழும்போது  அவருக்கு   வழிகாட்டுவதாகவும்    வாக்களித்தார் .  அதனால்தான்   அவர்   திருமணம்   செய்துகொள்ள   முடிவு  செய்தபோது   ஐயன்   ஓலையை   காட்டி   ஆட்கொண்டார் .    

Sunday 8 December 2019

அமிர்தமாய்   ருசித்த   அவ்வுணவை   உண்ட   சுந்தரர்  கை         அ லம்பிக்கொண்டு   தம்   நன்றியை   தெரிவிக்க   திரும்பினார் .  ஆனால்   அந்த   அந்தணரையோ   அல்லது   அவர்   கொண்டு   வந்த   பாத்திரத்தையோ   காணாமல்   திகைத்து   இந்த   முறையும்   தமக்கு   தக்க   தருணத்தில்   உணவளித்து   தம்மை   காத்தது   ஐயனே   என்பதை   உணர்ந்து    நெகிழ்ந்து   போன   சுந்தரர்   அவர்   கருணையை   நினைத்து   கண்ணீர்   மல்க   பதிகம்   பாடி   தம்   நன்றியை   தெரிவித்து   கொண்டு   அன்று   அங்கு   தங்கி   மறுநாள்   காஞ்சி   நோக்கி   புறப்பட்டார் .

Friday 6 December 2019

திருக்குருகாவூர்   சென்று   சுந்தரர்   கட்டுசோறு  அளித்து   பசி   தீர்த்த   கங்காதரரை   நன்றிப்பெருக்குடன்   கண்ணீர்   மல்க   பதிகம்   பாடி   அவரை   மகிழ்வித்து   தானும்   மகிழ்ந்தார் .  பிறகு   சில   தலங்களை   சேவித்து   கொண்டு   தில்லையை   அடைந்தார் .    அங்கிருந்து   நல்லூர்   சென்றார் .  அங்கு   இவர்   வருவதை   அறிந்து   ஏராளமான   பக்தர்கள்   கூடி   அவரை   மிக்க   அன்புடன்   வரவேற்றனர் .  அந்த   வரவேற்பை   கண்டு   சுந்தரர்   நெகிழ்ந்து   போனார் .  அங்கு   சிலகாலம்   தங்கி   பிறகு   திருக்கழுக்குன்றம்   சென்று  வேதபுரீஸ்வரரை    வணங்கி   மகிழ்ந்தார் .  அங்கிருந்து   காஞ்சி  செல்ல   புறப்பட்டு  வழியில்  திருக்கச்சுர்   அடைந்தார் . வெய்யில்   தகித்தது .  பசி   தாகம்  அவர்   ஏற் பாடு   செய்திருந்தபடி   சமையல்காரர்கள்   வந்து   சேரவில்லை .   சோர்வுடன்   இருந்த   சுந்தரரின்   நிலைமையை    காண   சகியாத   ஈசன்   ஒரு   அந்தணர்   வடிவில்   வந்து   அவரிடம்   'உங்களை   பார்த்தால்   மிக   சோர்வுட ன்   காணப்படுகிறீர்கள் ' என்று   பரிவுடன்   கேட்டார் .  சுந்தரர்   நான்   ஏற்பாடு   செய்தபடி   சமையல்   செய்பவர்கள்   வந்து   சேரவில்லை   என்று   பதிலு ரைத்தார் .  ஈசன்  அதற்கு  கொஞ்சம்    பொறுங்கள்    அக்கிரகாரம்   சென்று   இரண்டு  மூன்று   வீடுகளில்   பிக்ஷை   வாங்கி   வந்து   உங்களுக்கு   உணவு   அளிக்கிறேன் .  என்று   சொல்லி   கிராமத்துள்   சென்று   உணவு   வாங்கி   வந்  அளிக்கிறார் .

Thursday 28 November 2019

சம்பந்தர்   பிறந்த   மண்ணில்   கால்   வைக்க   மனம்   ஒப்பாமல்   சுந்தரர்   சீர்காழி   நகரை   வலம்   வந்து   வணங்கிவிட்டு    திருக்கு ருகாவூர்    நோக்கி   பயணப்பட்டார் .  சுந்தரர்   மிக   களைப்புடனும்   பசியுடனும்   இருந்தார் .  தம்பிரான்   தன்   தோழர்   பசியை   காண   சகிப்பாரா?   மனம்   பொறாமல்   ஓடிவந்தார் .  பாதையில்   ஓரிடத்தில்       ஓரு    பந்தல்   அமைத்து   அதில்   கட்டு   சோறுடன்   அந்தணர்வேதத்தில்   காத்திருந்தார் .  சுந்தரர்    பாதையில்   தென்பட்ட     பந்தலை   கண்டு   மகிழ்ந்து   அடியார்களுடன்   அங்கு   தங்க   திட்டமிட்டு   அங்கு   வந்தார் .  அந்தணர்   கோலத்திலிருந்த   ஐயன்   'உங்களை   பார்த்தால்   களைத்து   போயிருப்பது   தெரிகிறது .  என்னிடம்   சிறிது   உணவு   இருக்கிறது  . அதை   உண்டு   களைப்பாருங்கள் .   என்று      சொல்லி   வைத்திருந்த   உணவை   கொடுத்தார் .  அந்த   உணவை   அடியார்களுக்கும்   கொடுத்து   தானும்   உண்டார் .  எல்லோரும்   உறங்கி   விட்டனர் .  வந்த   வேலை   முடிந்த   களி ப்பில்   ஈசன்   மறைந்தார் .  பந்தலும்   மறைந்தது .  சுள்ளென்று   வெய்யில்   அடிக்க  எல்லோரும்   கண்   விழித்தனர் .   சுந்தரர்   தம்   பசிக்கு   உணவளித்து   வெய்யிலுக்கு  பந்தலும்   அமைத்து   தம்மை   காத்தது   எம்பெருமான்   என்று   உணர்ந்து   பக்தி   பரவசத்தில்   கண்ணீர்   பெருக  ''இத்தணை   யாமாற்றை ''  என்று   பதிகம்   பாடி   மெய்சிலிர்க்க   மயங்கி   நின்றார் .   

Monday 25 November 2019

ஈசன்   சுந்தரரின்   மனதில்   மறுபடியும்   சிவாலயங்கள்   சேவிக்கும்   ஆவலை   தூண்டினார் .  பரவையாரிடம்   விடைபெற்றுக்கொண்டு   தொண்டை   நாட்டு   தலங்களை   சேவிக்க   புறப்பட்டார் .   முதலில்   திருநள்ளாறு   சென்று  ஐயனை     வணங்கி   மகிழ்ந்தார் .   திருக்கடவூர் ,  திருவெண்காடு   மற்றும்   பல   தலங்களை   தரிசித்து   கொண்டு   வழியில்   திருநீடூர்   செல்லாமல்   பயணப்பட்.டார் .   இறைவன்   அவருக்கு   அதை   உள்ளத்தில்   உணர்த்தினார் .  சுந்தரர்   தன்   பிழைக்கு   மிக்க   வருந்தி   அதை   தமக்கு   நினைவு   படுத்திய   ஐயனின்   கருணையை   நினைந்து   நினைந்து   உருகி  அப்பெருமானை   வணங்கி   பயணம்   தொடர்ந்தார் .  திருநீடூர்   வழிபட்டு   திருப்புன்கூர்   சென்றார் .  அங்கிருந்து   திருக்கோலக்கா   சென்றடைந்தார் .  அவ்வூர்   பெருமான்   சம்பந்தரின்   பிஞ்சு       கரங்கள்  தாளம்    போட்டு   நோகாமல்   இருக்க   பொற்தாள கள்   கொடுத்து  அம்மையின்   அருளால்   அவைக்கு        ஓசை   எழ   செய்த    அந்த  திருவிளையாடலை   நினைத்து   நெக்குருகி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் . 

Friday 15 November 2019

சுந்தரர்   பரவையார்   மாளிகையில்   இருந்துகொண்டு   ஆரூரரின்   அருமை   தோழன்   பக்தன்     அடியான்   எல்லாமாக   இருந்து   வழிப்பட்டு   வரும்கால்  ஐயன்   சுந்தரர்   இப்புவியில்   பிறப்பெடுத்ததன்   காரணங்களில்   ஒன்று   நிறைவேறினாலும்   மற்ற   ஒன்று   மீதம்   இருப்பதை   மனதில்   கொண்டு   அவருக்கு   மீண்டும்   சிவபெருமான்   குடிகொண்டிருக்கும்   மற்றும்   பல   ஆலயங்களை   தரிசிக்கும்   ஆவலை   தூண்டினார் .  சுந்தரரின்   பெரும்   சாதனையாக  இவ்வுலகம்   பெற்றது    ஈசன்  அடியெடுத்து    கொடுக்க   அவர்   பாடிய   திருத்தொண்டர்த்தொகையாகும் .   63  நாயன்மார்கள்   ஈசனிடம்    கொண்ட   அளவிலா   பக்தி ,  அவர்கள்   ஆற்றிய   சாதனைகள்   அவர்களுக்காக   எம்பெருமான்   ஆடிய   அற்புத   திருவிளையாடல்கள்   இவைகளை  பாமர   மக்கள்   அறிந்து   உய்வதற்கு   காரணமாயிற்று .  ' தில்லைவாழ்   அந்தணர்தம்   அடியார்க்கு   அடியேன் '  என்று   ஈசன்   அடியெடுத்து   கொடுக்க    அத்தனை   பக்தர்களையும்   கண்டறிந்து    பட்டியலிட்டு   அத்தனை   பேருக்கும்   தான்   அடியேன்  என்று   தம்மை   அறிமுகப்படுத்திக்கொண்டு   அவர்   பாடிய   அப்பதிகமே   பிற்காலத்தில்   பெரிய   புராணமாக   விஸ்வரூபம்   எடுத்து   எல்லா   சிவாலயங்களிலும்   63 நாயன்மார்களும்   மூர்த்திகளாக   கொலு   வீற்றிருக்கிறார்கள் .       

Sunday 10 November 2019

சுந்தரர்   வேதனை   அடைந்து   தியானித்தார் .  ஐயனே   உன்   சொற்படி   மணிமுத்தாறில்   இட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ள   நீதானே   ஆணையிட்டாய் .  இப்போது   கைவிட்டாயே !  என்று   கண்ணீர்   விட்டார் .  அவர்   உள்ளத்திலிருந்து   பதிகம்   பீரிட்டு வந்தது .அவர்   பாடி  முடிக்கும்  முன்பே   குளத்தின்   அடியிலிருந்து   பொற்கிழி   மேலே   வந்தது .  பரவையார்   ஒரு   காசை  எடுத்து   உரைத்தார்  .அது   மாற்று   குறைவாக   இருந்தது .  பதறி   போனார் . சுந்தரர்  மாற்று  உறைத்து   பார்த்துத்தானே  வாங்கினேன்   என்று   கலங்கி   போனார் .  பிறகு   ஐயன்   கருணையால்    மாற்று   குறையாத   பொன்னாயிற்று .  இருவரும்   ஆலயம்   சென்று   ஈசனை   வழிபட்டு   வீடு   திரும்பினர் .
சுந்தரர்   அரூரில்   வந்து   ஆரூர்   தியாகேசரை   மறுபடி   கண்ட   ஆனந்தம் . அவரை   தினம்   தொழுது   மகிழ்ந்து   வந்தார்  .  அப்போது   ஒரு   நாள்   பரவையாருக்கு   ஒரு   நாள்   பணம்   தேவைப்பட்டது .  சுந்தரரிடம்   தெரிவித்தாள் .   அதற்கு   சுந்தரர்   பழமலைநாதரிடமிருந்து   12ஆயிரம்   பொன்   பெற்று    மணிமுத்தாறில்   போட்டிருப்பதாக   கூறி   என்னுடன்   கமலாலயத்திற்கு   வந்தால்   எடுத்துக்கொள்ளலாம்   என்று   கூறினார் .  பரவையார்   அதிசயமடைந்தார் .  நம்ப   முடியவில்லை .  இருந்தும்   கிளம்பி   இருவரும்   ஆலயம் அடைந்து   வீதிவிடங்கரை   சேவித்து   கொண்டு   கமலாலயம்   வந்தடைந்தனர் .  வடகிழக்கு   கரையில்   பரவையாரை   நிறுத்தி   விட்டு   சுந்தரர்   குளத்தில்   இறங்கினார் .   பொன்னை   தேடலானார் .  தம்மை   அதட்டி   பொன்னை     பெற்ற   தம்பிரான்   தோழருடன்   ஐயன்   விளையாட   நினைத்தார் .  சுந்தரர்   குளத்தின்   தரை   எல்லாம்   தேடினார் .  சேறும்   சகதியும்   தான்   கிடைத்தது .  பொன்   கிடைக்கவில்லை .  பரவையார்   'ஆற்றில்   போட்டதை   குளத்தில்   தேடினால்   எப்படி'   என்று   பரிகாசித்தார் .   

Tuesday 5 November 2019

சுந்தரர்   கூடலை  ஆற்றுர்ஐயனை  மனமுருகி   தரிசனம்   செய்து   மகிழ்ந்து   முதுகுன்றம்   அடைந்தார் .  தம்பிரான்   தோழர்   அல்லவா?  உரிமையுடன்   அவரை    தமக்கு   பொன்   வேண்டுமென்று   கேட்டுக்கொண்டார் .   ஐயனும்   உடனே   பன்னிரெண்டாயிரம்   பொன்   கொடுத்தார் .    அதை   எவ்வாறு   ஆரூர்   எடுத்து   செல்வது   என்று   மேலும்   வினவ   அதை   மணிமுத்தாறில்    போட்டு   கமலாலயத்தில்   எடுத்துக்கொள்ளுமாறு   அருள்புரிந்தார் .   உடனே   சுந்தரரும்   அவ்வாறே   பன்னிரெண்டாயிரம்   பொன்னையும்   எம்பெருமானை   தியானித்து   மணிமுத்தாறில்    விட்டார் .   அங்கிருந்து   சுந்தரர்      தில்லை   வந்தடைந்தார் .  பேரூரில்   ஆல்டலரசனை   நடன   கோலத்தில்  கண்டு   மகிழ்ந்த   அதே   கோலத்தில்   மறுபடி   தில்லையில்   கண்டு   பேரானந்தம்   அடைந்தார் .   அவ்வூர்   வீதிகளில்   தொழுதபடி    நடந்து   அந்தணர்களையும்   தொழுது   அங்கிருந்து    கிளம்பி   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு    பல    பதிகங்கள்   பாடி   மனமகிழ்ந்து   ஐயனையும்   மனம்   குளிரச்செய்து   ஆரூர்   வந்து   சேர்ந்தார் .    

Saturday 2 November 2019

ஆற்றுர்   ஈசன்    தேனினும்   இனிதான   சுந்தரர்   பாடலை   கேட்க   ஒரு   வழி   செய்தார் .  பயணம்   தொடங்கிய   சுந்தரருக்கு   முதுகுன்றம்   செல்ல   பாதை   சரியா   என   சந்தேகம்   ஏற்பட்டது .  அதுவும்   ஆற்றுர்   ஈசனின்   விளையாடலே.  அவர்   ஒரு   கிழவன்   உரு   எடுத்துக்கொண்டு   அங்கு   சென்றார் .  சுந்தரர்   அவரை    பார்த்து   ஐயா    முதுகுன்றம்   செல்லும்   வழி   இதுதானே   என்று   வினவினார் .   முதியவர்   உருவில்   இருந்த   ஈசன்   'ஆற்றுர்   செல்ல   இதுதான்   வழி '  என்று   கூறி   சென்றார் .  சுந்தர அவருக்கு   காதில்    விழவில்லையோ   என்று   எண்ணி   திரும்பி    பார்த்தார் .  திடுக்கிட்ட   சுந்தரர்        கண்ணுக்கு   எட்டிய   வரை   அவரை   எங்கும்   காணாமல்   திகைத்தார்.   ஆற்றுர்   ஐயனே   தம்மை   தம்   கோயிலுக்கு   வழி   காட்டி    வ ர   செய்திருப்பதை   கண்டு   மெய்சிலிர்த்துப்போனார் .  அவருடைய   இச்செயலால்   பரவசமடைந்து   கூடலைஆற்றுர்     சென்று   'வடியுடை   மழுவேந்தி '   எனும்   பதிகம்   பாடி  துதித்தார் .   தன்னை   வரவழைக்க   முதியவராய்   வந்து   வழிகாட்டிய   ஐயன்   அன்பை   நினைந்து   நினைந்து   உருகினார் .   

Tuesday 29 October 2019

சுந்தரர்   பேரூரில்   ஆடலரசனின்   தெய்வ   கூத்து   தரிசனம்   செய்தபின்   சோழ   நாட்டு   திவ்ய   தேசங்களை   தரிசிக்க   யாத்திரை   புறப்பட்டார் .  தரிசித்து   கொண்டு   கூடலை ஆற்றுறை     நெருங்கினார் .   அவருடைய   இலக்கு   முதுகுன்றம்   சென்று   பழமலைநாதரை    சேவிப்பது .  ஆகையால்   அவ்வூரை   நெருங்காமல்   வேறு   பாதையில்   செல்லலானார் .  முதுகுன்றம்   செல்லும்   பாதையை   தேடி   செல்ல   முனைந்தார் .   ஆனால்    ஆற்றுர்      ஐயனுக்கு   தேன்தமிழ்   சுந்தரர்   பாடலை   கேட்க  மிக்க   ஆவல்    உண்டாயிற்று

Wednesday 23 October 2019

சுந்தரர்   மழபாடியில்   சில   நாள்   தங்கி   ஆசைதீர  அவரை   சேவித்துக்கொண்டு   திருவானைக்கா   புறப்பட்டார் .  அந்த   ஈசனை   பாராட்டி   பதிகங்கள்   பாடி   மகிழ்வித்தார் .   அங்கு   ஆற்று   வெள்ளத்தில்   விழுந்த   சோழ   மன்னனின்   முத்துமாலையை    திருமஞ்சனத்திற்கு   கொண்டு   சென்ற    குடத்தில்    வரவழைத்த   அந்த   ஈசனின்    திருவிளையாடல்    சுந்தரரை    மெய்சிலிர்க்க   வைத்தது .   அக்கருணையை   நினைந்து   நினைந்து   உருகி   போற்றினார் .    அங்கிருந்து   புறப்பட்டு   திருபாலாச்சிரமம்   சென்று   அங்கு   குடிகொண்டிருந்த   ஈசனை   பாடி   பொன்   பெற்றார் .  அங்கிருந்து   புறப்பட்டு     திருப்பைஞிலி ,   ஈங்கோய்மலை      சென்று   சேவித்துக்கொண்டு   மேலை   சிதம்பரம்   என்று  கொண்டாடப்படும்   பேரூர்   அடைந்தார் .  அங்கு    கூத்தப்பிரானின்   தாண்டவ   கோலத்தை   தரிசித்து   ஆனந்தம்   அடைந்தார் .   அங்கு   அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   தரிசனம்   செய்யவும்   ஆவல்   எழுந்தது .

Sunday 20 October 2019

சுந்தரருக்கு     மீண்டும்    ஐயன்   ஞாபகம்   மறுபடி    தல யாத்திரை   புறப்பட்டார் .  நன்னிலம்   சென்று   பரமனை   தரிசித்து     கொண்டு   திருவீழிமிழலை   ஆவடுதுறை   மற்றும்   பல   தலங்களை   தரிசித்துக்கொண்டு    திருக்குடந்தை   எம்பெருமான்   திருவடி   தொழுது   அவர்   மீது    பாடல்கள்   புனைந்து   பாடி   மகிழ்ந்து   புறப்பட்டார் .    அங்கிருந்து   திருவலஞ்சுழி    திருநல்லூர்   திருவையாறு   எல்லாம்   சென்று    திருஆலம்பொழில்     அடைந்தார் .  இரவு  நேரம்    ஆகிவிடவே   அங்கேயே   படுத்து   உறங்கி   போனார் .    பக்கத்தில்   மழபாடி   எனும் ஊர்    உளது .   அங்கு   குடிகொண்டுள்ள   ஈசனுக்கு   தம்   அருமை   பக்தன்   தன்னை   வணங்காமல்    போய்விடுவானோ   என்று    அச்சம்   எழுந்தது    போலும் .   சுந்தரர்    கனவில்   தோன்றி   ''   வன்தொண்டனே   மழபாடி    வர   மறந்தனையோ ?'' என்று      கேட்டு   மறைந்தார் .  திடுக்கிட்டு  எழுந்தா ர்  .  சந்தரர்    நேராக   திருஆனைக்கா     செல்ல தான்    எண்ணி   இருந் தார் .  தன்னை   நினைவு   படுத்தி   மழபாடிக்கு   அழைத்த   அவர்   பேரன்பை   எண்ணி   சுந்தரர்   மனம்   பாகாய்   உருகியது .   இரவில்லாம்   அதே   மகிழ்ச்சி .   ஐயன்   கருணையை   எண்ணி   சொல்லணா   இன்பம் .    விடிந்ததும்   சொல்லொணா   ஆனந்தத்துடன்   கோயில்   சென்றார்   .ஓங்கி உயர்ந்த   கோபுரம்   கண்டு   மெய்சிலிர்த்தார் .  உள்   சென்று   'பொன்னார்   மேனியனே '   என்று   பதிகம்   பாடி   தொழுது   மகிழ்ந்தார் .   

Friday 18 October 2019

ஈசன்   சுந்தரரின்   பிரார்த்தனையை   நிறைவேற்ற   முடிவு   செய்து   விட்டார பின்பு    கேட்பானேன் .  அவர்   அருளால்   சுந்தரருக்கு   தூக்கம்    வந்தது .  அங்கு   கோயில்   திருப்பணிக்காக   அடுக்கி   வைத்திருந்த   செங்கல்கள்   சிலவற்றை   எடுத்து   போட்டுக்கொண்டு   அதை   தலையணையாக்கி   ஒரு   துண்டை   விரித்து   படுத்து   உறங்கி   போனார் .  விடிந்து   எழுந்து   பார்க்கையில்   செங்கல்கள்   அனைத்தும்   தகதக   என்று   பொன்னாய்   மிளிர்வதை   கண்டார் .  அவருக்கு   இறைவன்   அருளை   நினைக்கும்போது   கண்கள்   நீரை   சொரிந்தன .  உள்ளம்   உருகி   புகலூர்   ஐயனை   அவர்   சன்னதியில்   வந்து   நின்று   மெய்யுருக    "  தம்மையே   புகழ்ந்து     இச்சை   பேசினும் "    எனும்   பதிகத்தை   பாடி   தம்   நன்றியை    தெரிவித்தார் .  வழியில்   சில   தலங்களை   சேவித்துக்கொண்டு      ஆரூர்   வந்தார் .   பரவையார்      மாளிகையில்    பங்குனி   உத்திரம்   கோலாகலமாக   கொண்டாடப்பட்டது .   அடியார்களெல்லாம்   மிக்க  மகிழ்ச்சியுடன்   கொண்டாடி    அமுது     உண்டு   களித்தனர் .      

Wednesday 16 October 2019

ஆரூரில்   சுந்தரரும்   பரவையாரும்   ஆருரனிடம்   அளவு     பக்தியுடன்  இணைந்து   வாழ்ந்து   வரும்   பொது    பங்குனி   மாதம்   நெருங்கும்போது   பறவையாருக்கு    பங்குனி   உத்திர   நன்னாளை   விமரிசையாக   கொண்டாடி   ஈசனை   மகிழ்விக்க   ஆவல்       உண்டாயிற்று .    அதை   அவர்   சுந்தரரிடம்   தெரிவித்தார் .  சுந்தரர்   மகிழ்ச்சி   தெரிவித்தார் .    ஆனால்   அவரிடம்    அதற்கு   தேவையான   பொருள்   வசதி   இருக்கவில்லை .  அடியார்களிடம்    தெரிவித்தால்   தேவைக்குமேல்   பொருள்    கிடைத்திருக்கும்.  அனால்   சுந்தரர்   அவ்வாறு   செய்ய    விரும்பவில்லை .  தம்மை   ஆட்கொண்ட    எம்பெருமானையே   கேட்டு   பெற    எண்ணம்   கொண்டார் .   பரவையாரிடம்    ஐயனை   பல   தலங்கள்   சென்று   சேவித்து   வர    விரும்புவதாக   கூறி   விடை    பெற்றுக்கொண்டு   யாத்திரை   புறப்பட்டார் .     திருப்புகலூரை    அடைந்தார்  . மகாதேவரை   உளமார   தரிசித்து   தம்   உள்ள   தாபத்தையும்   தெரிவித்து   கோயிலை      வலம்   வந்து     பிராகாரத்தில்   தங்கினார் .    அம்பலக்கூத்தன்  தன்   பக்தனின்   விண்ணப்பத்தை   பூர்த்தி   செய்ய    முடிவு     செய்தார்  .     

Monday 14 October 2019

பரவையாருடைய   இச்செயல்   எல்லோரையும்   மகிழ்வித்து   அவரை   பாராட்ட   வைத்தது .  இவ்வாறு   இருக்கையில்    ஒருநாள்   திருநாட்டியத்தான்குடி   எனும்   ஊரை   சேர்ந்த   கோட்புலியார்   எனும்   அடியார்   சுந்தரரை   தரிசிக்க    ஆரூர்   வந்து   அவரை   தம்   ஊருக்கு   எழுந்து   அருளுமாறு      வேண்டிக்கொண்டார் .   சுந்தரரும்    சம்மதித்து   அவ்வூருக்கு   சென்றார் .  கோட்புலியார்    தம்பிரான்    தோழருக்கு   மிக   சிறப்பான    வரவேற்பு   அளித்து   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  அதன்   பின்   தன்    இரு   மகள்களையும்   அவரை    வணங்க   செய்து   இருவரையும்   ஏற்றுக்கொள்ளுமாறு   வேண்  டுகோள்   விடுத்தார்  சுந்தரர்      அவர்கள்    இருவரையும்    மடியில்   அமர்த்திக்கொண்டு    உச்சி   முகர்ந்து    இவர்கள்   இருவரும்       என்   மகள்கள்   அன்றோ   என்று    கூறி   ஆலயம்   சென்று  ஈசன்     மீது   பதிகம்   பாடி   ஊர்    திரும்பினார்.     

Sunday 13 October 2019

ஈசன்   உடனே   இன்றிரவே   இந்நெல்   பூராவும்   ஆரூரில்   சேர்ப்போம்   என்று      அருளினார் .  ஐயன்   ஆணைப்படி   சிவகணங்கள்    பூரா   நெல்லையும்  ஆரூர்   கொண்டு   சேர்த்தன .  விடிந்து   ஆரூர்   வாசிகள்   தெரு   புரா      குவிக்கப்பட்டிருக்கும்   நெற்குவியலை   கண்டு   அதிசயித்தனர் .  அவை   பரவை நாச்சியாருக்கு    அனுப்பப்பட்டது   என்று   கேள்விப்பட்டு   எங்கே    சேமிப்பார்கள்   என்று   அதிசயப்பட்டனர் .  ஆனால்   பரவையார்   இத்தனை   நெல்லையும்   தாமே   எடுத்துக்கொள்ள   விரும்பாமல்   ஆருரவாசிகளை   அவரவர்   வீட்டு   வாயிலில்   உள்ள   நெல்மணிகளை   அவரவர்களே   எடுத்துக்கொள்ள   சொல்லி   பறை   சாற்றினார் .  அவருடைய   நல்ல   உள்ளத்தை   பாராட்டாதவர்   இல்லை .   

Saturday 12 October 2019

வெளியே   வந்து   பார்த்த   கிழார்   அசந்து   போனார் .  என்னே   ஐயன்   கருணை   ஆச்சர்யத்தில்  மூழ்கி    போனார் .  ஊர்   முழுவதும்     நெற்குவியல் .   இத்தனை  நெற்குவியல்களை     ஆரூர்   சேர்ப்பது   எப்படி ?   என்று   அசந்து   போனார்   கிழார் .  சுந்தரரையே  கேட்போம்   என்று   கிளம்பினார் .  ஆனால்   சுந்தரருக்கு   முன்பே   இந்த   செய்தி    தெரிவிக்கப்பட்டு   விட்டதால்   அவர்  அங்கு   வந்து  சேர்ந்தார் .  தெருவெல்லாம்  நெற்குவியல்  கண்டு  அசந்து   போன   சுந்தரர்         இது   ஐயனால்   மட்டுமே   சாத்தியம்   என்பதால்   அவரையே   கேட்போம்   என்று   சொல்லி   பக்கத்திலுள்ள   அரன்   கோயிலுக்கு   சென்று   அவரை   வணங்கி   'நீளநினைந்து   அடியேன் ''    எனும்   பதிகம்   பாடி   உன்   அருளன்றி   இத்தனை   நெல்  . குவியல்   பரவையார்   வீட்டிற்கு   செல்வது   எவ்விதம் ?  தாங்களே   வழி   செய்ய   வேண்டும்    என்று   மனமுருக     வேண்டினார்.  சுந்தரர்   கேட்டு   மறுப்பாரா   ஆரூரர் .   இன்றிரவே   சேர்ப்போம் .  என்று    அருள்    வாக்கு    கிடைத்தது .     

Friday 11 October 2019

குண்டையூர்   கிழார்   என்பவர்   குண்டையூரில்   வாழ்பவர் .  அவர்   சுந்தரரை   பற்றி   கேள்விப்பட்டு   அவரமீது   மிக்க    மதிப்பும்   மரியாதையும்   கொண்டார் .  அவர்   ஆரூர்   வந்து   அவரை   தம்பிரான்   தோழனாக   கண்டதும்    அவர்   மரியாதை   மிக   அதிகமாகி   அவருடைய   அடியாரானார் .  ஆரூர்   பெருமான்   சுந்தரர்   மீது   வைத்திருக்கும்    அன்பு   அவரை   மிக்க    வியப்பில்   ஆழ்த்தியது .  அதுமுதல்    அவரும்   மனைவியும்   அமுது   செய்ய  கிழார்    நெல்லை   தன்   களஞ்சியத்திலிருந்து    அனுப்புவதை   வாடிக்கையாக    கொண்டார் .  ஒரு   சமயம்   மழை   இல்லாமல்   வறண்டு   நெல்   விளைச்சல்   குறைந்து    சுந்தரருக்கு   அனுப்பகூட    நெல்   இல்லை .  கிழார்   மனம்   நொந்து   போனார் .  அடியார்க்கு   அனுப்ப   நெல்   இல்லாமல்   போனது   அவரை   மிக   துக்கத்தில்   ஆழ்த்தியது  .  இரவு   உணவு   உண்ணாமல்    உறங்கினார் .   பக்தனின்   துன்பத்தை     பொறுக்காத    ஐயன்   அவர்   கனவில்   தோன்றி   'அடியாற்கு   கொடுக்க   நெல்   குவித்து   விட்டதாக   கூறினார் .'

Thursday 10 October 2019

என்னவனாம்   அரனடியே   அடைந்திட்ட   சடையன்
இசைஞானி   காதலன்   திருநாவலர்கோன்
அன்னவனாம்   ஆரூரன்   அடிமை   கேட்டுவைப்பார்
ஆரூரில்   அம்மானுக்கு   அன்பராவாரே | 

சுந்தரர்   பாணர்   பெருமையை   பாடி   பிறகு   தன்னை   பெற்றவர்களான   சடையனாரையும்   இசைஞானி   அம்மையாரையும்   போற்றி   பாடி   இவர்கள்   எல்லோருக்கும்   தான்   அடியேன்   என்று   பாடி   தம்   தொண்டர்   தொகையை     நிறைவு   செய்தார் .
      தேவாசிரிய   மண்டபத்தில்   குழுமி   இருந்த   அத்தனை   அடியார்களும்   சுந்தரர்   அடியார்கள்   மீது   கொண்டிருந்த   பக்தியை   கண்டு   மெய்சிலிர்த்து   போனார்கள் .  அவர்   மீது   தவறான  அபிப்ராயம்    கொண்டமைக்கு   மிக   வருந்தி  சுந்தரர்   காலில்   விழுந்து   மன்னிப்பு   கோரினர் .    

Wednesday 9 October 2019

மனநிறைவுடன்   பாணர்   மதுரையை   விட்டு   புறப்பட்டு   பல    எம்பிரான்   க்ஷேத்திரங்களில்     தன்   யாழிசையால்   புகழ்ந்து   பாடி  மகிழ்ந்து   ஐயனையும்    மகிழ்வித்து   ஆரூரை   வந்தடைந்தார் .  அங்கு   கோபுர     வாயிலில்   நின்று   ஆரூரர்   மீது   பக்தி   இசையை   யாழில்   வாசித்து   தம்   உளமார்ந்த   பக்தியை   சமர்ப்பித்தார் .  அவர்   இசையில்   மயங்கிய   ஆரூரர்   ஆலயத்தின்   வடக்குப்புறம்   ஒரு   வாயிலை   அமைத்து   பாணரை   தன்   சன்னிதானத்தில்   வந்து   வாசிக்கும்படி   அழைத்தார் .  பாணர்  மிக்க   மகிழ்ச்சி   அடைந்து   அவர்   சன்னிதானத்தில்   மனம்   குளிர   வாசித்து   மகிழ்ந்தார் .  அப்போது   அவர்   ஆளுடைப்பிள்ளை   சம்பந்தர்   பெருமையை    கேள்விப்பட்டு   அவரிடம்    வந்தார் .  அவருடனேயே   இருந்து  அவர்   பாடல்களை   வாசிக்கும்   பெரும்      பேறு   பெற்றார் .   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவருடனேயே   தங்கும்   பாக்கியம்   பெற்றார் .  பல   திருத்தலங்களில்    அவருடனேயே   இசைத்து   சம்பந்தப்பெருமானுடைய  திருமணத்தில்   கலந்து   அவருடனேயே    ஈசனில்   ஐக்கியமானர் .   

Tuesday 8 October 2019

அன்று   இரவு   ஆலய   அன்பர்கள்   கனவில்   ஆலவாயர்   தோன்றி   பாணரை   தம்   ஆலயத்திற்கு   உள்ளே   அழைத்து   வந்து   வாசிக்க   செய்யும்படி   கட்டளை   இட்டார் .  அவ்வாறே   மறுநாள்   அவர்   வாசிக்க   கோபுர   வாயில்   வந்தபோது    கோயில்   உள்ளிருந்து   அன்பர்கள்   ஈசன்   கட்டளையை   தெரிவித்து    அவரைஏ   உள்ளே   வரும்படி   அழைத்தனர் .  பாணர்   ஈசன்   இச்செயலை   கேட்டு   நெக்குருகி    அவர்   அன்பை   எண்ணி   உள்ளம்   உருகி   போனார் .  உள்ளே   சென்றார் .  ''பாணர்   தரையில்   நின்று   வாசித்தால்    சீ தத்தால்   தந்தி      பாழாகும் .  ஆதலால்   சுந்தர பலகை   இடுங்கள்   என்று   அசரீரி   வாக்கு   எழுந்தது .  அவ்வாறே   அன்பர்கள்   தங்க   பலகை   எடுத்து   வந்தனர் .   இதை   கேட்ட   பாணர்   ஈசன்   அன்பை   நினைக்க   மலைத்து   போனார் .  உள்ளம்   சிலிர்த்தார் .   அந்த   பொற்பலகையில்   ஏறி   நின்று   மெய்மறந்து   ஐயனை  துதித்து    யாழ்   இசைத்தார் .   ஐயன்   அன்பை   எவ்வாறு   வர்ணிக்க .  
திருநீலகண்டத்து   பாணனார்க்கு    அடியேன் |

எருக்கத்தம்புலியூர்   எனும்   இடத்தில்   பாணர்   குலத்தில்   பிறந்த   நீலகண்ட   யாழ்ப்பாணர்   வசித்து   வந்தார் .  யாழ்   வாசிப்பதில்   மிக்க   தேர்ச்சி   பெற்றிருந்தார் .  அதனாலேயே   அவர்   அவ்வாறு   பெயர்   பெற்றார் .  அவர்  எம்பெருமான் மீது   அளவற்ற   பக்தி   கொண்டிருந்தார் .  சிவாலயங்களில்   கோபுர   வாசலில்   நின்றபடி   ஐயன்   மீது   பாடப்பட்ட   பாடல்களை   மனம்   உருக   வாசிப்பதை    வாடிக்கையாக   கொண்டிருந்தார் .    அன்பே   உருவான   ஈசன்   இவரை   காணாமல்   இருப்பாரா ?  ஒரு   சமயம்   பாணர்   பாண்டிய   நாடு   சென்றார் .    அங்கு   ஆலவாயர்   கோயிலுக்கு   சென்று   கோபுர     வாசலில்   ஆலவாய்   அண்ணலின்       மேல்   பாடல்களை   கேட்பவரை   உருக்கும்   வண்ணம்   யாழில்   வாசித்தார் .  அன்புக்கடலான   ஐயன்   மனம்   உருகியதில்   அதிசயம்   இல்லை .  

Wednesday 2 October 2019

செங்கணான்   சோழ   அரியணை   ஏறியதும்   அவர்    சிவபெருமான்   திருவருளால்    பூர்வஜென்ம   நினைவுகளை   பெற்றார் .  அவர்   உடனே   திருவானைக்கா   சென்று   வெண்நாவல்   மரத்தடியில்   இருந்த   சிவலிங்கத்தை   கண்டு   அதற்கு   கோயில்   அமைக்க   திட்டமிட்டான் .  முன்   ஜென்மத்தில்   யானையால்   நேர்ந்த   துன்பம்   நினைவில்   வர   யானைகள்   ஏற   முடியாவண்ணம்   மாடக்கோயில்கள்   அமைத்தார்    .   சோழ   நாட்டில்   அநேக   சிவன்கோயில்கள்   கட்டுவித்தார்  .  தந்தையை   போலவே   தில்லை   நடராஜரிடம்   அளவற்ற   பக்தி   கொண்டு   சிதம்பரம்   சென்று   அங்கு    இறைவன்   தொண்டில்    ஈடுபட்டு   பெரும்   சேவைகள்   செய்தார் .  அந்தணர்களுக்கு   மாளிகைகள்   கட்டி   வைத்தார் . இவ்வாறு    இறைவன்   சேவையில்   தன்னை   அர்ப்பணித்து    கொண்டு  பல     காலம்     வாழ்ந்து   இறைவன்   அடி   சேர்ந்தார் .  

Tuesday 1 October 2019

சோழ   நாட்டை   சுபதேவன்   எனும்   அரசன்  ஆண்டு   வந்தான்.  அவர்   மனைவி   கமலவல்லி   எனும்   மாதரசி .     அவர்கள்    குழந்தை    செல்வம்   வேண்டி   தில்லை   நடராஜ  பெருமானை   மனமுருகி   துதித்தனர் .   ஐயன்   மனமிறங்க   அரசி   கர்ப்பம்   தரித்தாள் .   பிரசவ   காலம்   நெருங்கியது.  அரண்மனை   சோதிடர்கள்   இன்னும்   ஒரு   நாழிகை   சென்று   அக்குழந்தை   பிறக்குமானால்   அக்குழந்தை   மூவுலகும்   போற்ற   தக்க   பெருமை   வாய்ந்ததாக  இருக்கும்  என்று     கூறினர் .  அதை   கேட்ட   அரசி   அந்த   நாழிகை    வரும்வரை   தன்னை   தலை   கீழாக   கட்டி     தொங்க   விடுமாறு   கேட்டுக்கொண்டாள் .   என்னே   தியாக   சிந்தனை   அம்மாதிற்கு .அந்த   நாழிகை   வந்ததும்    அவளை   இறக்கி   விட   செய்து   அழகிய   ஆண்   குழந்தையை   பெற்றாள் .   தாமதித்து  பிறந்ததால்   குழந்தையின்       கண்கள்   சிவந்து   இருந்தன .  அரசியார்   ஆசை   தீர   பார்த்து   'என் ராஜா   செங்கண்ணனோ '  என்று   கொஞ்சினாள் .   ஆனால்   துரதிஷ்டவசமாக   பிரசவ   வேதனை   காரணமாக   சீக்கிரம்   மாண்டு   போனாள்  அந்த   மாதரசி   என்னே   அவள்   தியாகம் .  மன்னன்   மிக்க   துக்கமடைந்தான் .  குழந்தைக்கு   செங்கணான்   என்றே   பெயர்   சூட்டினான் .  உரிய   பருவம்   அடைந்ததும்   அவனை   அரசனாக   முடிசூட்டி   அரசன்   தவ   வாழ்வை   ஏற்றான் .     

Monday 30 September 2019

சிலந்தியின்   தூய   பக்தி   காரணமாக   அந்த   வலை   பின்னியது   என்ற   உண்மை   அறியாத   அந்த   யானை   தான்   அபிஷேகம்   செய்து   மலர்   அர்ச்சனை   செய்த   அவ்விடத்தை   அசுத்தம்   செய்வதாக  எண்ணியது .  இவ்வாறு   தினம்நடப்பதை   கண்ட   யானை வலையை     அறுத்து   எறிய   ஆரம்பித்தது .  இவ்வாறு   சிலந்தி   வலை   பின்னுவதும்   யானை    அறுப்பதும்   தொடர்ந்தது .தன்   ஈசன்   தொண்டிற்கு   அந்த   யானை   இடர்   விளைவிப்பதாக   கருதிய   சிலந்தி   அதன்   துதிக்கையினுள்  புகுந்து   கடித்தது .    யானை   வலி   பொறுக்காமல் தன்   துதிக்கையை   தரையில்   அடித்து   கொண்டு   இறந்தது .  சிலந்தியும்    வலி   பொறுக்காமல்   இறந்தது .   பக்தியில்   முழு   ஈடுபட்டிருந்த   இரு   ஜீவன்களும்   முக்தி   அடைந்தன .  எம்பெருமானை   உள்ளன்போடு    வழிப்பட்ட   யானை   சிவலோகம்    அடைந்தது .   சிலந்தி    சோழ   ராஜ   குமாரனாக   மறு   பிறவி   எடுத்தது .   

Saturday 28 September 2019

தென்னவனாய்   உலகாண்ட   செங்கணார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சந்திர   தீர்த்தத்தின்   பக்கத்தில்   ஒரு   வனம்   இருந்தது .  அவ்வனத்தில்  ஒரு   நாவல்   மரத்தடியில்   ஒரு   சிவலிங்கம்   வெளிப்பட்டது .  அந்த   வனத்தில்   திரியும்   ஒரு   வெள்ளை   யானை   பூர்வ   ஜென்ம   விளைவோ    என்னவோ   லிங்கத்தின்   மீது   பக்தி   மேலிட்டு   பூஜை   செய்ய ஆவல்   மேலிட்டு  தன்   துதிக்கையில்   சந்திர   தீர்த்தத்திலிருந்து   ஜலம்   முகர்ந்து       சென்று   லிங்கத்திற்கு   அபிஷேகம்   செய்தது .  மலர்   கொய்து   சென்று   அர்ச்சனை   செய்தது .  இதன்   காரணமாக   இவ்விடம்    திருஆனைக்கா   என்று   அழைக்க   பட்டது .
      அந்த  மரத்தில்    வாழ்ந்த   சிலந்தி   ஒன்றும்   அவ்வாறே   பக்தி   மேலிட்டு   காய்ந்த   தழைகள்   லிங்கத்தின்   மேல்   விழுந்து   ஐயனை   அசுத்தம்   செய்வதை   சகிக்காமல்   தன்   வலையை   லிங்கத்தின்   மேல்   பின்னி   லிங்கத்தை   காத்தது .   

Friday 27 September 2019

  காம்பிலி   நகரத்தில்   சாலியர்   குலத்தில்   நேசர்   எனும்   பெயர்   கொண்ட   அன்பர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவபெருமானை   மிக்க   பக்தியுடன்   சேவிப்பவர் .  அவருடைய   அபார   சிவபக்தியும்   அவருடை   நற்குணங்களும்   அவரை   அக்குல   தலைவன்     ஆக்கியது .   மகிழ்ச்சியுடன்   அப்பொறுப்பை   ஏற்று   மக்களுக்காக   மிக   பாடுபட்டு   உழைத்தார் .     நெஞ்சத்தில்   எம்பெருமானையே   நினைத்து   கொண்டு   பஞ்சாக்ஷரத்தை    ஜபித்தபடியே   இருப்பார் .   அடியார்களுக்கு   வேண்டியதை   மனம்   குளிர   செய்து   மகிழ்வார் .   இவ்வாறே   வாழ்ந்து   இறைவன்    திரு   அருளுக்கு   பாத்திரமாகி   அவர்     திருவடியையே   அடைந்தார் .      

Wednesday 25 September 2019

வரிவளையாள்   மானிக்கும்   நேசனுக்கும்   அடியேன் |

 சோழ   மன்னர்   குலம்   விளங்க   அவ்வரச   தம்பதியருக்கு   மகளாக   பிறந்தார்   மங்கையர்க்கரசியார் .  சிறு   வயது   முதலே   சிவபெருமானிடம்   அபார   பக்தி   கொண்டு   வாழ்ந்தா ர் .   சைவம்   தழைக்க   வேண்டுமென்ற   பேராவல்   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வயது  வந்ததும்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   மணந்தார் . துரதிஷ்டவசமாக     துர்சகவாசத்தால்   மன்னன்   சைவம்   துறந்து     சம ண      மதம்   சேர்ந்தான் .   அரசியார்   மிக்க   வேதனை   அடைந்தார் .  ஈசனையே   சரணமென்று   அடைந்தார் .   அவர்   வேதனை   ஈசனை    மனமிறங்க  செய்தது   அப்போது   அம்மையிடம்    ஞான   பாலுண்ட   ஞானசம்பந்தர்    சைவம்   தழைக்க   பெரும்    சேவை      செய்து   வந்ததை   அறிந்த   அரசியார்   அவரை   சரணம்   அடைந்தார் .  அவரும்    அவர்      வேண்டுகோளுக்கு    இணங்கி   பாண்டிய  நாடு   வந்து    அனல்    வாதம் ,  புனல்   வாதம்   செய்து    வென்று       சமணர்களை   நாட்டை   விட்டு   ஓட   செய்தார் .  மேலும்   மன்னவன்    கூனை   நிமிர்த்தி   நின்றசீர்  நெடுமாறன்   என்று   மாற்றினார் .  மன்னன்   சைவத்தின்   பெருமை   உணர்ந்தான் .   மங்கையர்க்கரசியார்   மன்னனோடு   சேர்ந்து  சைவ   தொண்டாற்றி   பெரும்   பேரடைத்தார் .   

Tuesday 24 September 2019

அரசன்   அடியாரின்   ஸ்பரிசத்தால்   மெய்சிலிர்த்து   போனான் .  அவன்   கண்ட   காட்சி   அவரை   புல்லரிக்க   வைத்தது .   வானளாவிய    கோபுரம்   எங்கும்   மங்கள   ஒலி .  வேத   மந்திரங்கள்   ஓத   அர்ச்சகர்கள்   குடங்களில்   மந்திரித்த    நீரை   ஐயன்   திருமேனியில்   அபிஷேகம்   செய்யும்   அரிய   காட்சி .  அரசன்   மெய்சிலிர்த்து   போனான் .  எப்பேர்ப்பட்ட   அரிய   காட்சி .  தன்னை   மறந்தான் .   தன்நினைவு   பெற்ற   அரசன்   பூசலார்   காலடியில் விழுந்து      வணங்கினான் .  அவரிடம்   'ஸ்வாமி   தங்கள்   அருளால்   காண   கிடைக்காத    காட்சி   கண்டேன் .  தங்கள்   மனதில்   எழுந்த   இந்த   அற்புத   ஆலயத்தை   நான்   கண்டிப்பாக   நினைவாக்குவேன் .   விரைவிலேயே   ஆலய   பணிகளை   துவங்குகிறேன் .'  என்று   கூறி   ஆசிபெற்று   காஞ்சி   திரும்பினான் .   ஊர்   மக்கள்   அவருடை   பெருமையை   உணர்ந்து      கொண்டு   அவரை   வெகுவாக   கொண்டாடினர் .  அவரும்   ஈசன்    தொண்டில்   தொடர்ந்து    அர்ப்பணித்து   வாழ்ந்து   சிவமானார் .       

Sunday 22 September 2019

பூசலார்   திடுக்கிட்டார் .  தம்   மனதிற்குள்   ஆலயம்   எழுப்புவது   தன்னையன்றி    ஓர்  ஈ   எறும்பு  கூட   அறியாதே    மன்னவர்   எவ்வாறு   அறிந்தார்   என்று   அதிசயித்து    'மன்னவா   ஆலயமா ?  தடுமாறினார் .  அரசன்   இரவு   தன்   கனவில்  ஈசன்   தோன்றி   கூறியதை   பூசலாரிடம்   வியப்புடன்   தெரிவித்தார் .  கும்பாபிஷேகத்தை   காணவே   தான்   அவசரமாக   விடிகாலையிலேயே   கிளம்பி   ஆலயத்தில்   பிரவேசிக்கும்   ஐயனை   மனம்   குளிர   தரிசிக்க   வந்ததாக   அரசன்   ஆச்சர்யத்துடன்   தெரிவித்தார் .  பூசலார்   கண்கள்   கண்ணீரை   சொரிந்தது .  அவரால்   உணர்ச்சியை   கட்டுப்படுத்த   இயலவில்லை .  மன்னவா   நான்    ஆலயம்   எழுப்ப   பேராவல்   கொண்டது   உண்மை .  ஆனால்   அது   நிறைவேறாது   போனதால்   என்   மனதிலேயே   ஆலயம்    எழுப்பினேன் .  என்   ஏமாற்றம்   தணிய   அவ்வாறு   செய்து   இப்போது   கட்டி   முடிந்து   கும்பாபிஷேகம்    நடக்கும்   தருவாயில்      இருப்பதாக    கூறி  விட்டு   இதோ   தயாராக    இருக்கிறது  .  அர்ச்சகர்கள்   தயாராகி   கொண்டிருக்கிறார்கள் .   எம்பெருமான்   என்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   உன்னையும்   அனுப்பி   இருக்கிறாரே !   கண்களில்   நீர்   ததும்ப   உணர்ச்சி  வசப்பட்டு           மன்னரை   நீயும்   தரிசிக்க   வேண்டாமா ?  என்று   கூறி   அவர்   கையை   தன்   மார்பில்   வைத்து   அவரை   அணைத்து   கொண்டார் .

Saturday 21 September 2019

அரசன்   'பூசலார்   எங்கே   இருப்பர்   'என்று   வினவ   அவர்கள்   'ஏரிக்கரையில்   எங்காவது   தியானத்தில்   இருப்பார் .  ஆட்களை  அனுப்பி   அழைத்து   வர   சொல்கிறோம் '  என்றனர் .  திடுக்கிட்ட   அரசன்  'அந்த   உத்தமரை    யாமே    சென்று   காண்போம் '  என்று   பதிலுரைத்து   அங்கு   சென்று   கண்களை   மூடி   தியானத்திலிருந்த   பூசலாரை   'வணக்கம்சுவாமி  '  என்று   வணங்கினார் .  தியானத்திலிருந்து    கண்   விழித்த   பூசலார்      மன்னவரை   கண்டு   திடுக்கிட்டார் .  'அரசே   இது   என்ன   தாங்கள்   இங்கு '   என்று   ஒன்றும்   புரியாமல்   வினவினார் .    அதற்கு   மன்னவன்   தாங்கள்   அமைத்த   சிவனார்   ஆலையத்தை    காணவே   ஓடோடி   வந்தேன்  அது   எங்குள்ளது ?  என்று   வினவினார்   

Friday 20 September 2019

மன்னனுக்கு   ஒன்றும்   புரியவில்லை .  எம்பெருமானுக்கு   இத்தனை   நெருக்கமான   அப்பெருமானை  காண   ஆவல்   ஏற்பட்டது .   எத்தனை   பாக்கியவான்   என்ற   எண்ணம்   உண்டாயிற்று .  உடனே   அமைச்சரை   அழைத்து   கும்பாபிஷேக   ஏற்பாட்டை   நிறுத்தி   விட்டு   வேறு   நல்ல   நாள்   பார்க்க   சொல்லி   விட்டு   முக்கியமான   சிலரை   கூட   அழைத்து   கொண்டு   திருநின்றவூர்   கிளம்பினார் .    அங்கு   சென்றதும்   அங்கு   உள்ளவர்களை   பூசலார்    கட்டிய   கோயில்   எங்கு   என்று   வினவினார் .  எல்லோரும்      ஆச்சர்யம்   அடைந்து   அவர்   மிக  சாதாரண   அந்தணர்   அவர்   கோயில்   ஏதும்   எழுப்பவில்லை .  அனால்   எழுப்ப   மிக்க   ஆவல்   கொண்டு   பணம்   சேர்க்க   மிக   பாடுபட்டார் .   முடியாத   காரணத்தால்    மனமுடைந்து   அங்கு   மண்டபத்தில்    தியானத்தில்    அமர்ந்து   விட்டார்     என்று   கூறினர் .   அரசன்   அதிர்ந்து   போனார் .  ஈசன்   வாக்கு   எவ்வாறு   தவறாகும் .      

Thursday 19 September 2019

பூசலார்   தன்   மனத்தில்   பெருமையுடன்   அமைத்த   அக்கோயிலுக்கு   கும்பாபிஷேகத்திற்கு   அவர்   தேர்ந்தெடுத்த   முகூர்த்தம்   மன்னன்   தேர்ந்தெடுத்த   முகூர்த்தநாளும்   ஒன்றாக   இருந்தது   ஈசன்   விளையாட்டே .தன்   பக்தனின்   பெருமை   உலகறிய   வேண்டாமா ?   காஞ்சி   மாநகரம்   குமபாபிஷேகத்திற்கு   மிக   குதூகலத்துடன்   தயாராகி   கொண்டிருந்தது .  மக்கள்   மகிழ்ச்சி   ஆரவாரத்துடன்   தயார்  செய்து   கொண்டிருந்தனர் . ஈசன்   விளையாட்டை   துவங்கினார் .   இரவில்   உறங்கிக்கொண்டிருந்த   மன்னன்   கனவில்   மான்   மழுவுடன்   ஆடவல்லான்   காட்சி   தந்து   ''மன்னா  திருநின்றவூரில்  நாளை   எனது   பரம   பக்தன்   பூசலார்   அமைத்த   ஆலயத்தில்   நாம்   நுழைவதாக   முடிவு   செய்திருப்பதால்   நீ   அமைத்த   ஆலயத்தின்   கும்பாபிஷேகத்தை   ஒரு   நாள்   தள்ளி    வைத்துக்கொள் ''   என்று   ஆணை   இட்டு    மறைந்தார் .  மன்னன்   திடுக்கிட்டு   எழுந்தான் .    

Tuesday 17 September 2019

பூசலார்   கும்பாபிஷேகத்திற்கு   சுபவேளை     தேர்வு   செய்து   அந்நாளை   ஆவலுடன்   எதிர்பார்த்து   காத்திருந்தார் 
    ஈசன்   திருவிளையாடல்   எப்படி   வர்ணிப்பது ?  தன்   பக்தனின்   உயர்வை   உலகறிய   செய்ய   ஈசனுக்கு   எப்போதும்   பேரார்வம் .  அன்பே   சிவம்   அல்லவா ?   இவருடைய   மனகோயில்   முடிவுறும்   அதே    நேரத்தில்           காஞ்சியில்    பல்லவ   மன்னன்   கைலாசநாதருக்கு   பெ  ரியதொரு   ஆலயம்   எழுப்ப   எண்ணி   அந்த   ஆலயமும்   பொலிவுற   எழும்பி   முடியும்   தருவாயில்   இருந்தது .   மன்னனுக்கு   மட்டற்ற   மகிழ்ச்சி .  பெரிய   ஜோதிடர்களை   கலந்தாலோசித்து   கும்பாபிஷேகத்திற்கான   சுப    முகூர்த்த   வேளை   குறித்தான் .   ஐயனின்   திருவிளையாடலை   என்ன   என்பது ?  அவர்கள்   குறித்த   வேளை      பூசலார்   குறித்த   அதே  முகூர்த்தமாக    அமைந்தது   அவன்   செயலே .

Sunday 15 September 2019

பூசலார்   மனம்   ஆனந்தம்   அடைந்தது அவர்   நினைக்க   அமைத்த   ஆலயம்   அவர்   விரும்பிய   வண்ணம்   எழும்ப   ஆரம்பித்தது .  அவர்   பக்கத்திலேயே   இருந்து   ஒரு   சிறு    தவறும்   ஏற்படாமல்   கவனித்து   பார்த்து   பார்த்து   கட்ட   வைத்து   பெருமிதம்   அடைந்தார் .  மெல்ல   ஆலயம்   எழும்பியது .  அவர்  மனம்  விரும்பிய   விதமாக     ஆலயம்   உருவானது .   ஸ்தபதிகள்   வெகுவாக   பாடுபட்டு   எம்பெருமான்   திருமேனியையும்   அம்பாள்   திருமேனியையும்   பொலிவுற  அமைத்து    அவைகளை   பீடங்களில்   ஆகம   விதிப்படி   பிரதிஷ்டை   செய்தனர் .  இனி   சாஸ்திரப்படி   கும்பாபிஷேகம்   செய்ய   வேண்டியது   தான் .  பூசலார்   மனம்   மகிழ்ச்சி   ஒருபுறம்   கும்பாபிஷேகம்   முறைப்படி   எம்பெருமான்   மனம்   குளிர   நடக்க   வேண்டுமே   என்ற     பதட்டம்   ஒரு   புறம்   என   மனம்   அலைபாய   தூக்கமின்றி   இரவு   கழிந்தது .  

Saturday 14 September 2019

மனதில்   கோயில்   அமைக்க   முடிவு   செய்து   உடனே  பூசலார்   மன   அமைதி   பெற்று    அப்பணி     துவக்க   நல்ல   நாள்   குறித்தார் .  அந்த   நல்ல   முகூர்த்த   நாளில்   நல்ல   வேளையில்   ஏரிக்கரையில்   அமைதியான   நல்ல   இடத்தை   தேர்ந்தெடுத்தார் .   சுத்தமாக   தீர்த்தமாடி   எம்பெருமானை   மனதார  தோத்திரம்   செய்து   கண்களை   மூடிக்கொண்டு   அங்கு   அமர்ந்தார் .  அவர்   மனக்கண்முன்   கட்டுமான   பணிக்கான   கல் ,  மண் .  சுன்ணான்பு   மற்ற   சாமான்கள்  மற்றும்   வேலை   செய்ய   ஆட்கள்   எல்லாம்   தயாராக   வந்து   சேர்ந்தன .  பூமி   பூஜை   போட   பூஜை   செய்பவர்கள்   வந்து   சாஸ்திரப்படி   பூஜை   செய்து  வேலை   துவங்கி   வைக்கப்   பட்டது .   பூசலார்   மனதார   இவைகளை   கண்டு   பரவசமாகி   களிப்பில்   மூழ்கி    இருந்தார் 

Thursday 12 September 2019

பூசலார்   ஆலயம்   கட்டும்   தம்   எண்ணத்தில்   உறுதியாக   இருந்தார் .  எங்கெல்லாமோ   அலைந்து   நிதி    திரட்ட   முனைந்தார் .  ஆனால்   அவர்   முயற்சி   பயனளிப்பதாக   தோன்றவில்லை   .  நாள்   செல்ல   செல்ல   அவரை   எல்லோரும்   பைத்தியமாக   எண்ணி   ஒதுக்க   ஆரம்பித்தனர் .  வருடங்கள்   கடந்தன .  அவர்   எண்ணத்தில்   கொழுந்து   விட்டு   எறியும்   ஆவல்   தணிவதாக   இல்லை .  அவர்   கனவு   நிறைவேறுவதாக   இல்லை .  அது   சாத்தியம்   என்ற   நம்பிக்கையும்    குறைந்தது .    ஆனாலும்   அவருடைய   அந்த   கனவு   அப்படியே   நீ ரு   ஊற்றி   நெருப்பு    அணைவது   போல்   போவதை   அவர்   விரும்பவில்லை .     பொருள்   சேர்த்து   பெரும்   ஆலயம்   அமைத்து   புற    கண்ணால்   காண்பது   சாத்தியமாகாது   என்ற   எண்ணம்   மனதை   உலுக்கியது .   ஆனாலும்   அவர்   தளரவில்லை .   தன்   உள்ளத்தில்   பெரும்  ஆலயம்     அமைத்து    தம்  மனதார    ஐயனை   அக   கண்ணால்    மனம்    குளிர   சேவித்து      மகிழ   முடிவு    செய்தார் .   

Tuesday 10 September 2019

பூசலார்   ஊர்    மக்களின்   இத்துன்பத்தை   தீர்க்க   திருநின்றவூரில்   ஒரு   சிவன்  கோயில்    எழுப்ப   பேராவல்   கொண்டார் .  உடனே   அதை   நிறைவேற்ற   எண்ணம்   கொண்டு   ஊர்   ஜனங்களை    அணுகி   தன்   யோசனையை    கூறி   எல்லோரும்   உதவ   வேண்டி   கேட்டுக்கொண்டார் .     ஊர்   மக்கள்   அவர்   மீது   அவருடைய   மேலான   அறிவை   மதித்து   அவரை  மிக்க   மரியாதையுடன்    நடத்தினார்கள்   எனிலும்    கோயில்   கட்டுவது    என்பது   சாதாரண    காரியமில்லை   அதற்கு   எத்தனை   செலவு   செய்ய    வேண்டி   இருக்கும்    என்று   எண்ணி   பின்வாங்கினர் .  அது   ஆகக்கூடிய   காரியமில்லை   என்று   சொல்லி   மறுத்தனர்  .  அவரையும்   இது   சாத்தியமில்லை   என்று   எடுத்து   கூறி   அந்த   எண்ணத்தை   விட்டு   விட   அறிவுரை   கூறினர் .    ஆனால்   அவரோ   அதில்   மிக    அதிக  தீவிரமாக    இருந்தார் .      

Monday 9 September 2019

மன்னியசீர்   மறை   நாவல்   நின்றவூர்   பூசல் | 

தொண்டை   நாட்டில்   உள்ளது   திருநின்றவூர் .  அவ்வூரில்   பூசலார்   என்று   ஒரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  சிறந்த   சிவபக்தர் .  வேதசாஸ்திரங்களில்   மிக்க   தேர்ச்சி   பெற்றவர் .   அதையே   ஜீவனோபாயத்திற்கும்   செய்து   வருபவர் .  சிவனடியார்களிடம்   பேரன்பு   கொண்டவர் .  அவர்களுக்கு   தன்னால்   இயன்ற   தொண்டுகளை   செய்வதை    லட்சியமாக   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வேத   சாஸ்திரங்களை   போதித்தும்   வந்தார் .
      அந்த   ஊரில்   எம்பெருமான்   கோயில்   இல்லாததால்   பக்தர்கள்   பக்கத்து   ஊர்   சென்று   ஐயனை   சேவிக்க   வேண்டி     இருந்தது .   இது   பூசலாருக்கு    பெரும்   மன   வருத்தம்   அளித்தது .   திருநின்றவூரில்   ஒரு   கோயில்      கட்ட   வேண்டுமென்ற   பேரவா   அவர்   மனதில்  எழுந்தது .

Friday 6 September 2019

சுந்தரர்   இவ்வாறு   உரைக்கிறார் .
ஈசனை   பக்தியோடு     வணங்குபவர்களை    குலம்   கோத்திரம்   எதுவும்   பாராமல்   எல்லோரையும்   சமமாக   பாவித்து   அன்புடன்   வவேரறு   உபசரிப்பவர்களுக்கு   நான்   அடிமையாவேன் .  எம்பெருமானை   பக்தியோடு   பாடுவார்களையும்   நான்    வணங்குகிறேன் . சித்தம்   முழுவதும்    சிவபெருமானிடம்   லயிக்க   செய்தவர்கள் .  திருவாருரில்   பிறந்தவர்கள்   எல்லோரும்   முற்பிறவிகளில்   புண்ணியம்   செய்தவர்கள்   என்பதால்   அவர்களையும்    நான்   அடிபணிகிறேன் .  முக்காலமும்   பெருமான்   திருமேனியை   தீண்டும்   பாக்கியம்   பெற்றவைகளையும்   நான்   வணங்குகிறேன் .  சாஸ்திர   விதிப்படி   முழுநீறு   பூசியவர்களுக்கும்   நம்நாட்டின்   எல்லைக்கப்பால்   வாழும்   எம்பெருமான்   பக்தர்களையும்   நான்    மனதார   வணங்குகிறேன் .  இவ்வாறு   வணக்கம்  தெரிவித்தது   விட்டு   மேலும்   தொடர்கிறார்  சுந்தரர்      
சுந்தரர்   மேலும்   பாடுகிறார்,

 பத்தராய்   பணிவார்கள்   எல்லோர்க்கும்   அடியேன்
பரமனையே   பாடுவார்   அடியார்க்கும்   அடியேன்
சித்தத்தை   சிவன்சிவன்பாலே   வைத்தார்க்கும்   அடியேன்
திருவாரூர் ப்   பிறந்தார்களெல்லோருக்கும்   அடியேன்
முப்போதும்   திருமேனி   தீண்டுவார்க்கும்   அடியேன்
முழுநீறு  பூசிய   முனிவருக்கும்   அடியேன்
அப்பாலும்   அடிசார்ந்த   அடியார்க்கும்   அடியேன்
ஆரூரில்   ஆரூரன்   அம்மானுக்காளே

Thursday 5 September 2019

கோட்புலியாரை   புகழ்ந்து   பாடிய   சுந்தரர்   மேலும்   அடியார்களை   வணங்கி   துதித்து  பாடுகிறார் .   ஆரூர்   ஈசன்   கட்டளை   படி   அவர்   அடி   எடுத்து   கொடுத்த   வாக்கை   " தில்லை   வாழ்   அந்தணர்தம்   அடியார்க்கும்   அடியேன்"   என்று   தொடங்கி   ஈசன்   உள்ளம்   கவர்ந்த   அடியார்களை  பாடிக்கொண்டு   வந்தவர்      மேலும்   அடியார்களை   வணங்கி   துதிக்கிறார் .  

Wednesday 4 September 2019

அவருடைய   உறவினர்களும்   ஒப்புக்கொண்டு   பொறுப்பேற்றனர் . அனால்    விதி   விளையாடியது .   அவ்வூரில்   கடும்   பஞ்சம்   ஏற்பட்டது .  யாவரும்   உணவு   கிடைக்காமல்   அவதியுற்றனர்.  பொறுக்க   முடியாத   நிலை   அடைந்தனர் .  ஐயனுக்கான   தானியத்தை    உபயோகித்துவிட்டு    நிலைமை   சரியானதும்   திரும்ப   சேர்த்து   விடலாம்   என்று    முடிவு  செய்து   அத்தானியத்தை   உபயோகித்து   பசியாறினர் .   அனால்   துரதிஷ்டவசமாக போர்   முடிந்து   வெற்றிவாகை   சூடி   கோட்புலியார்   திரும்பினார் .   அவர்   சிவாபராதம்   நேர்ந்திருப்பதை   கண்டதும்   கோபவெறி   அவரை   நிலை   தடுமாற   செய்தது.   தம்   சேவகனை   அனுப்பி   வெற்றி   வாகை   சூடியதை   கொண்டாட    பரிசளிப்பதாக   கூறி   உறவினர்களை   வரச்செய்து   தன்   உடைவாளால்     அனைவரின்   தலைகளையும்      கொய்தான் .   சிறு     பாலகன்   அவனை   வெட்ட   துணிந்த    போது   காவலன்   தடுத்தான் .  ஆனால்   கோட்புலியார்   கேட்கவில்லை .  தவறு  செய்த   தாயிடம்   பாலுண்டவன்   என்று   கூறி       பாலகனை   கொன்றான் .    அப்போது   ஈசன் தோன்றி   அவன்   பக்தியை   மெச்சி   அவனால்   கொல்லப்பட்ட   எல்லோருக்கும்    சிவபதம்   அருளி   அவரையும்   தன்னிடம்   சேர்த்துக்கொண்டார் .     
கோட்புலியார்   மலைபோல்   தானியம்   குவித்து வைத்து   எம்பெருமானுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைத்திருப்பார் .  மற்றும்     சிவ   பெருமானுக்கு   பலவிதமாக      தொண்டு   புரிவதை   தனது     பாக்கியமாக   கருதி   செய்து   வந்தார் .    துரதிஷ்ட வசமாக   போர்   மூண்டது .  சேனை   தலைவனாக   பொறுப்புள்ள   அவர்   போருக்கு   செல்ல   நேர்ந்தது     அவர்  தன்   உறவினர்களை   அழைத்து   தான்   திரும்ப   வரும்வரை   அந்த   தானிய   கிடங்கை   காப்பாற்றும்   பொறுப்பை    ஒப்படைக்க   முடிவு   செய்தார் .     நம்பிக்கையான   ஒருவரை   காவலுக்கு   அமர்த்தி   விட்டு   தம்   உறவினர்களை   தானியங்களை   பார்த்துக்   கொள்ளும்படி   கேட்டுக்கொண்டார் .   அப்போது   அவர்   அவை   ஐயனுக்கு   திருவமுது   செய்வதற்கே   வைக்கப்பட்டது .  ஆகையால்   ஐயன்   மீது   ஆணையாக   ஒரு   பிடி  கூட   வேறு   உபயோகத்துற்கு   எடுக்க     கூடாது   என்று   ஆணை   பிறப்பித்தார் .

Tuesday 3 September 2019

அடல்   சூழ்ந்த   வேல்   நம்பி   கோட்புலிக்கும்   அடியேன் |

சோழ   நாட்டில்   நாட்டியத்தான்குடி   என்று   ஒரு   ஊர் .   அங்கு   வேளாளர்   மரபை   சேர்ந்த   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  கோட்புலியார்   என்பது   அவர்   பெயர் .  அவர்   சோழ   மன்னனின்   சேனை   அதிபதி   ஆவார் .  அவர்   எம்பெருமான்   மீது   அளவு   கடந்த   பக்தி   வைத்திருந்தார் .   சிவத்தொண்டே   அவர்   உயிர்   மூச்சு

Thursday 29 August 2019

பொன்னடிக்கே   மனம்   வைத்த   புகழ்த்துணைக்கும்   அடியேன் |

சேருவிலி வித்துர்  என்றொரு   ஊர் .  அங்கு   சிவமறையோர்   குலத்தில்   பிறந்த   புகழ்த்துணையார்   எனும்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  எம்பெருமானிடம்   அளவு   கடந்த   பக்தி   கொண்டிருந்தார் .  அபிஷேக   பிரியரான   எம்பெருமானை   ஆறு   காலமும்   அபிஷேகம்   செய்வதை   பேரின்பமாக   கருதி   செய்து   வந்தார் .  அவருடைய   போதாத   காலம்   அவரை   வறுமை   வாட்ட   தொடங்கியது .   இருந்தாலும்   விடாமல்   தன்   கடமையை   செய்து   வந்தார் .  நாள்   செல்ல   செல்ல   வறுமை   அவருடைய   உடல்   நிலையை   பாதித்தது .  உடல்   மெலிந்து   சக்தி   இழக்க   தொடங்கினார் .  ஒரு   நாள்   குடம்   தண்ணீரை   தூக்கி   அபிஷேகம் செய்யும்    போது   கை தவறி     குடம்   ஐயன்   மேல்   விழுந்து     விட்டது .  அவர்   பதறி ப்போய்   தன்   தவறை    மன்னிக்க   முடியாமல்   அங்கேயே   மயங்கி   விழுந்தார் .   கருணை   கடலான   ஐயன்   அவர்   கனவில்   காட்சி   தந்து   '' அன்பனே    வருந்தாதே .  உன்   வறுமை   தீரும்வரை   உமக்கு  தினம்   ஒரு   பொற்காசு   அளிப்போம்.  வருந்தாதீர் .  என்று   கூறி   மறைந்தார் .   எழுந்த   அவர்   ஒரு   பொற்காசு    இருப்பதை   கண்டு   மிகமகிழ்ந்தார் .  சந்தோஷமாக   தன்   திருத்தொண்டை   தொடர்ந்தார் .  சிலகாலம்   வாழ்ந்து    ஈசனடி   சேர்ந்தார் .