Saturday 31 August 2013

kavikunjara

சங்கீத  மும்மூர்த்திகள் வாழ்ந்த  சம  காலத்தவர்  இரு  பெரும்
தமிழ்   கவிஞர்களை  பற்றி  இப்.போது   பார்க்கலாம் . கவி  குஞ்சர பாரதி  மற்றும்   ஊத்து காடு  வேங்கடகவி .இவர்கள்   பக்தியுடன்  படைத்த   பாடல்கள்  பக்தி ,இனிமை ,எளிமை  எல்லா சுவைகளூடனும்  கேட்பவரை  மெய்மறக்க  செய்தன . கவி குஞ்சர பாரதி  1810முதல்1896 வறை    இவ்வுலகில்  வாழ்ந்தார் . இயற்  பெயர்   கோடீஸ்வரர்  என்ற  அவருடைய  தாத்தா வின்  பெயராகும் . திருநெல்வேலி   ஜில்லாவில்  பெருங்கரை  என்ற  கிராமத்தில்  பிறந்தார் . அந்த கிராமம் ராமநாதபுரம்   மன்னர்  ரகுநாத  சேதுபதியால்  அவர்   குடும்பத்திற்கு   பரிசாக  அளிக்கப்பட்டது .