Tuesday 17 September 2019

பூசலார்   கும்பாபிஷேகத்திற்கு   சுபவேளை     தேர்வு   செய்து   அந்நாளை   ஆவலுடன்   எதிர்பார்த்து   காத்திருந்தார் 
    ஈசன்   திருவிளையாடல்   எப்படி   வர்ணிப்பது ?  தன்   பக்தனின்   உயர்வை   உலகறிய   செய்ய   ஈசனுக்கு   எப்போதும்   பேரார்வம் .  அன்பே   சிவம்   அல்லவா ?   இவருடைய   மனகோயில்   முடிவுறும்   அதே    நேரத்தில்           காஞ்சியில்    பல்லவ   மன்னன்   கைலாசநாதருக்கு   பெ  ரியதொரு   ஆலயம்   எழுப்ப   எண்ணி   அந்த   ஆலயமும்   பொலிவுற   எழும்பி   முடியும்   தருவாயில்   இருந்தது .   மன்னனுக்கு   மட்டற்ற   மகிழ்ச்சி .  பெரிய   ஜோதிடர்களை   கலந்தாலோசித்து   கும்பாபிஷேகத்திற்கான   சுப    முகூர்த்த   வேளை   குறித்தான் .   ஐயனின்   திருவிளையாடலை   என்ன   என்பது ?  அவர்கள்   குறித்த   வேளை      பூசலார்   குறித்த   அதே  முகூர்த்தமாக    அமைந்தது   அவன்   செயலே .

No comments:

Post a Comment