Saturday 29 December 2018

காழிப்பிள்ளை   தன்   புனித   பயணத்தை   தொடர்ந்து   செங்காட்டங்குடி   வந்து   அங்கு   சிலகாலம்   தங்கி   இருந்தார் .  அங்கிருந்தபோது   அருகில்   திருமருகல்   எனும்   இடத்தில்   ஈசனை   தரிசிக்க   சென்றார் .   ஒரு   நாள்   இரவு   பக்கத்திலுள்ள   மடத்திலிருந்து   ஒரு   பெண்ணின்   பரிதாபமான   அழும்   குரல்   கேட்டு   பதறிப்போய்   சம்பந்தர்   வெளியே   வந்து    அப்பெண்ணிடம்   சென்று   பார்த்தார் .   பாம்பு   கடித்து   மாண்டு   போன   ஒரு      இளைஞன்   உடலின்   மீது   புரண்டு  கதறி   அழும்   பெண்ணை   கண்டார் .  அவர்  மனம்   பாகாய்   உருகியது .  அப்பெண்ணை   அணுகி   அவள்   கதறலுக்கு   காரணம்   கேட்டார் .   அழுதுக்கொண்டே   அப்பெண்   தன்   கதையை   கூறினாள் .

Tuesday 18 December 2018

சம்பந்தர்   பொற்கிழியுடன்   தந்தையை   சீர்காழி   அனுப்பிவிட்டு    அவர்   ஆவடுதுறையில்   சிலகாலம்   தங்கி   ஈசனை   மனதார  தொழுதார் .  பிறகு   பல   தலங்களை   சேவித்துக்கொண்டு   நீலகண்ட   யாழ்ப்பாணர்  வேண்டுகோளுக்கு       இணங்கி   அவர்  பிறந்த  ஊரான   தருமபுரம்   சென்றார் .  அங்கு   அவ  ருக்கு  பலமான   வரவேற்பு   மக்களுக்கு   சந்தோஷம்   சொல்லில்   அடங்காது .  யாழில்   பாணர்   காழிப்பிள்ளை   பதிகங்களை   கேட்டு   மெய்ம்மறந்தனர் .  பாணர்   யாழில்   அவருடன்   வாசிப்பதால்   அவர்   பாடல்கள்   மேலும்   இனிமை   பெறுவதாக    பேசிக்கொண்டனார் .  அதை   கேட்டு  பாணர்   மிக்க   அதிர்ச்சி   அடைந்தார் .  ஈசன்    பேரருளால்   அன்றோ   தனக்கு  பெரும்பேறு   கிட்டி   இருக்கிறது .  அப்படி   இருக்க   தன்   யாழால்   அவர்   பாடல்  மேன்மை   பெறுவதாக   தம்   மக்கள்      பேசுவது   அவருக்கு   பெரும்   மனவருத்தத்தை   அளித்தது .  அவர்   காழிப்பிள்ளையை   வணங்கி   தன் வருத்தத்தை   விளக்கி   தன்  யாழுக்கு   அப்பாற்பட்டதாக   ஒரு   பாடலை   பாடுமாறு   வேண்டிக்கொண்டார்.  அவரும்   அவ்வாறே  'மாதர்   மடப்பிடியும் '  எனும்   பதிகத்தை   பாடினார் .  அவர்   மேலே   மேலே   பாட   பாணரால்   ஈடு   கொடுக்க   முடியாமல்   தந்தி   அறுந்தது.  அவர்   யாழை   உடைக்க   விழைகிறார் .  சம்பந்தர்   அவரை சமாதானம்   செய்து   யாழை   அவரிடம்   கொடுத்து   அவர்   பாடிய   அப்பண்ணிற்கு   'யாழ்முரி 'என்று   பெயர்   சூட்டுகிறார் .

Sunday 16 December 2018

இவ்வாறு  தல   யாத்திரையில்   நாட்கள்   கடந்தன .  சிவபாதவிருதயர்   யாத்திரை   கிளம்புமுன்   ஒரு   யாகம்   செய்ய  எண்ணம்     கொண்டிருந்தார். .அது   இப்போது   நினைவு   வர   சம்பந்தரிடம்   அதற்கு   ஏற்பாடு   செய்ய    வேண்டும்   பணமும்   திரட்ட   வேண்டுமென   ஊர்   திரும்ப   யோசனை    கேட்டார் .  அதை     கேட்ட   பிள்ளை   திருஆவடுதுறை   ஐயனை  வேண்டி    'இடரினும்  தளரினும்'   எனும்   பதிகம்   பாடி   வேண்ட   ஒரு   சிவபூதம்   ஆயிரம்   பொற்காசுகள்   கொண்ட   பொற்கிழியை   பலிபீடத்தில்   வைத்து   விட்டு   ஈசன்   சொற்படி   ஆயிரம்   பொற்காசுகள்   கொண்ட   பொற்கிழியை    பலிபீடத்தில்   வைத்திருப்பதாக   சொல்லி   மறைந்தது .   தந்தை   நன்றி   பெருக்குடன்   அப்பணத்தை   பெற்றுக்கொண்டு   ஊர்   திரும்பினார் . 

Tuesday 11 December 2018

திருஆனைக்காவிலிருந்து   புறப்பட்டு  பல   க்ஷேத்திரங்களை   சேவித்துக்கொண்டு   சம்பந்தர்   நல்லூர்   வந்தார் .  சென்ற   இ டமெல்லாம்   சிவனடியார்கள்,   பக்தர்கள்   அவரை   வாழ்த்தி   வணங்க   அவர்   நல்லூர்   வந்து   சேர்ந்தார் .   திருவலஞ்சுழி   பழையாறு   முதலிய   தலங்களை   சேவித்து    பிறகு   பட்டிஸ்வரம்   கிளம்பினார் .  அப்போது   கோடை   காலமாதலால்   வெய்யில்   சுட்டெரித்தது .  அடியார்கள்   நடக்க   மிகுந்த   சிரமத்திற்கு   ஆளானார்கள் .  அதை   காண   சகிக்காத   ஈஸ்வரர்   சிவபூதத்தை   ஏவி   அவர்களுக்கு   நிழல்   தர   முத்து   பந்தலை   அளிக்குமாறு   கட்டளை   இட்டார் .     பூதமும்   பட்டிஸ்வரர்   கட்டளை   பேரில்   அவர்களுக்கு   வெய்யிலுக்கு   இதமாக   இப்பந்தலை   வழங்குவதாக   கூறிற்று .  சம்பந்தருக்கு   ஐயனின்   கருணை   மனநெகிழ்ச்சியையும்   ஆனந்தத்தையும்   அளித்தது .  அவர்   கருணையை   நெஞ்சார   உருகி பாடுகிறார்.  

Sunday 9 December 2018

தாயுமானவரை   கண்குளிர   சேவித்துக்கொண்டு   யானைக்கும்   சிலந்திக்கும்   முக்தி  கொடுத்து  தன்   ஒப்பில்லாத   கருணையை   காட்டி   தனக்கு   எல்லா   ஜீவன்களுமே    சமம்   என்று   உணர்த்திய   ஜம்புகேஸ்வரரை   மனம்   குளிர   பதிகம்   பாடி   வணங்கி னார் .   அவர்   சென்ற   இடங்களிலெல்லாம்    இவர்    வருகையை   கேள்விப்பட்டதுமே  ஆனந்தம்   அடைந்த   அவரை   மக்கள்   கூட்டம்   சகல   விதமான   மரியாதைகளுடன்      வரவேற்றன .   

Tuesday 4 December 2018

மன்னரிடமிருந்து   விடை   பெற்றுக்கொண்டு   சம்பந்தர்  சில   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு    செங்குன்றம்   வந்தார் .   அங்கு   அவரை   தரிசிக்க   மக்கள்   திரண்டு   வந்தனர் .  அவரை   மகிழ்ச்சி   ஆரவாரத்துடன்  வரவேற்று   உபசரித்தனர் .  அங்கு   ஈசனை   வணங்கி   பாடி   மகிழ்ந்து   அங்கிருந்து   புறப்பட்டார் .   அப்போது   பனிக்காலம்    ஆதலால்   மக்கள்   குளிர் ,  சுரம் கண்டு   அவ திப்பட்டனர் .  சம்பந்தர்   மனம்   வருந்தி   ஐயனை   துதித்து   இந்த   அவதியை   நீக்க   வேண்டி   'அவ்வினைக்கிவ்வினை '  என்ற   பதிகம்   பாடி   ஐயன்   அருளால்   யாவரும்   நலம்   பெற   செய்தார் .    அங்கிருந்து   புறப்பட்டு   காவிரியின்   தென்கரையிலுள்ள   க்ஷேத்திரங்களை   சேவித்து   கொள்ள   விரும்பினார் .  திருச்சி  சுற்றி    ஆலயங்களை   சேவித்துக்கொண்டு   நிறைமாதப்பெண்   பிரசவ   வேதனையால்   துடிக்க   காவிரி   வெள்ளம்   காரணமாக   யாரும்   துணை   வரமுடியாத   நிலையில்   தன்னை   சரணமென்று   நம்பி   கதறிய   தாயின்   குரல்   கேட்டு   தானே   மருத்துவம்   பார்த்த   கருணை   கடலான   தாயுமானவரை   மலைக்கோட்டை   ஏறி   சேவித்து   கொண்டார் .

Monday 3 December 2018

மகளை   ஐயன்   காலடியில்   கிடத்திய   மன்னன்   காழிப்பிள்ளை   அவ்வூருக்கு   விஜயம்   செய்யப்போகும்    செய்தி   அறிந்து   மகளை   ஈசன்   காலடியில்   விட்டுவிட்டு   காழிப்பிள்ளையை      வரவேற்கும்   ஏற்பாடுகளை   கவனிக்க   சென்று  விட்டார் .  பக்திசிரத்தையுடன்   அவரை   வரவேற்று   அழைத்து   சென்றார் .  ஈசன்   காலடியில்   பரிதாபமாக   கிடக்கும்  அரசகுமாரியின்    பரிதாப   நிலைக்கண்டு   திடுக்கிட்டு   மனம்   கலங்கிய   சம்பந்தர்   மன்னனை   விசாரித்தார் .  துக்கத்துடன்      தன்மகளின்   பரிதாப   நிலையை   விளக்கினார் .   ஒரு  வைத்தியத்திற்கும்    கட்டுப்ப டாத   அவளுடைய   பரிதாப   நிலையை   கேள்விப்பட்ட   பிள்ளை    ஈசனிடம்   இவ்வாறு   ஒரு   அபலைப்    பெண்ணை   சோதிப்பது   முறையா ?  என்று   உரிமையுடன்   கேட்டு   அவளுக்கு   உடனே   நோய்   தீர்த்து    நல்வாழ்வளிக்க    வேண்டி   ஈசனை   துதித்து    பாடினார் .   காழிப்பிள்ளை   சொல்லி   ஐயன்   மறுப்பாரா   உடனே   அப்பெண்   தூக்கத்திலிருந்து   எழுவது  போல்   எழுந்தாள்.  தாய்தந்தையர்       மகிழ்ச்சிக்கு   எல்லை    ஏது ?

Friday 30 November 2018

காழிப்பிள்ளை   சென்ற   இடமெல்லாம்      மக்கள்   அவரை   குதூகலத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்   வரவேற்று   பக்தியுடன்   வணங்கி   துதித்தனர் .    திருப்பாச்சிலாச்சிராமம்     வந்து   சேர்ந்தார்   சம்பந்தர்.   அவ்வூர்   அரசன்  கொல்லிமுழவன்    அவன்   அருமை   மகள்  முயலகன்   என்னும்   கொடு   நோயால்   பிடிக்கப்பட்டிருந்தாள் .  அவள்   தன்   நினைவின்றி   இழுத்துக்கொண்டு   படுத்திருந்தாள் .    பார்க்க   பரிதாபமான   நிலையில்   இருந்தாள் .   அரசன்   எத்தனையோ   வைத்தியங்கள்   பார்த்தும்   பலனில்லை .  எந்த   வைத்தியருக்கும்   எதுவும்   புலப்படவில்லை .  மன்னரும்   அவர்   மனைவியும்   மிக்க   துன்பம்   அடைந்திருந்தனர் .    மன்னர்   விரக்தி   அடைந்து   இனி   மனித   யத்தனம்   வீண்    என்று   முடிவு   செய்து   ஈசனை     சரணடைந்தார் .  பெண்ணை   சுமந்து   கொண்டு   கோயிலை   அடைந்து   ஈசன்    காலடியில்   அவளை  கிடத்தினார் .

Tuesday 27 November 2018

பிரம்மோபதேசம்   முடிந்த   பிறகு   ஆளுடைப்பிள்ளைக்கு   காவிரி   இரு   கரைகளிலும்   உள்ள   திவ்ய   க்ஷேத்திரங்களை     சேவிக்கும்   ஆவல்   எழுந்தது .  அதை   தந்தையிடம்     தெரிவித்தபோது   அவரும்   சேர்ந்து   கொண்டு   புறப்பட்டார் .  இந்திரன்   அகலிகையிடம்    தவறாக   நடந்த   காரணத்தால்   அடைந்த   சாபத்தை   நீக்கி    ஆயிரம்   கண்கள்   வழங்கிய   கண்ணாயிரேஸ்வரர்   கோவிலை   சேவித்து   கொண்டு   புள்ளிருக்குவேளூர்   திருப்புன்கூர்   மற்றும்   பல   பல   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு   பதிகங்களை   பாடிக்கொண்டும்   மனம்   மகிழ்ந்து   பயணத்தை   தொடர்ந்தனர் .   கடைசியாக   திருப்பாச்சிலாச்சிராமம்   வந்தடைந்தனர்  . 

Monday 19 November 2018

இவ்வாறு   இருக்கையில்   சிவபாதவிருதயர்க்கு   தன்   மகனுக்கு   உபநயனம்   செய்து   பார்க்க   ஆவல்   உண்டாயிற்று .   அந்தணர்களை    வரவழைத்து   சுப   முகூர்த்தம்   நிர்ணயித்தார் .   குறிப்பிட்ட     நாளில்   அந்தணர்கள்   வந்து    பிரம்மோபதேசம்   நடந்தேறியது .   தந்தைக்கு   பேரானந்த  ம் .    குழந்தைக்கு   வேதம்   முறைப்படி   உபதேசிக்க   அந்தணர்கள்   முற்பட்டபோது   ஈசனும்   அன்னையும்   சேர்ந்து   கொடுத்த     ஞானபாலுண்ட   அப்பெருமகனார்க்கு   தாங்கள்   கற்றுத்தர   ஏதுமில்லை   என்று   உணர்ந்த   அந்தணர்கள்   அவரிடம்   உபதேசம்   பெற   எண்ணினர் .  அவரும்   பஞ்சாக்ஷரத்திற்கு   மிஞ்சிய   வேறு   மந்திரமில்லை   என்று வலியுறுத்தி      சொல்லி    'துஞ்சலும்   துஞ்சல் '   எனும்   பதிகம்   பாடி   அவர்களை   மெய்மறக்க   செய்தார் .   அந்தணர்கள்   மன   மகிழ்ச்சியோடு   அவரை   தொழுது   சென்றனர் .

Saturday 17 November 2018

அங்கிருந்து   கிளம்பி   பல   தலங்களிலும்   ஐயனை  வணங்கி   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்து   திருசேய்நால்லூர்   வந்தார் .  சிவ   அபராதம்  செய்தவர்   தந்தை   என்றும்   பாராமல்   காலை  வெட்டி     மாய்த்து   தண்டித்து    அதன்   காரணமாக   ஐயன்   இவரை   மகனாக   ஏற்று  சண்டேஸ்வர   பதவி   அளித்து   தந்தைக்கும்   சிவபதம்    அளித்த   எம்பெருமானை    வணங்கி   துதித்து   சீர்காழி   வந்து   சேர்ந்தார் .   இத்தனை   பெருமை   பெற்று   திரும்பி   வந்த    ஞான   குழந்தையை   மக்கள்         எத்தனை   பெருமையுடன்   வரவேற்றிருப்பார்கள்   என்று   சொல்ல   தேவை   இல்லை .   ஊர்   எல்லையிலேயே   மக்கள்  மேளதாளத்துடனும்   பூர்ண   கும்பத்துடனும்     பெண்கள்     விளக்கு   ஆரத்தியுடனும்   அவர்   வரவை  எதிர்பார்த்து   ஆவலுடன்   காத்திருந்தனர் .   ஆளுடைப்பிள்ளை   மக்கள்   அன்பை   கண்டு   நெகிழ்ந்து    போனார் .

Thursday 15 November 2018

அரைத்துறைநாதரை   கண்குளிர   தரிசித்து  தன்னையும்   ஒரு   பொருட்டாக   மதித்து   தன்மீது   இத்துணை   கருணை   கொண்டு  சிவிகை   குடை   மற்ற   பொருள்களை   அளித்த   பெருமானை   நெஞ்சார   பாராட்டி   பதிகங்களை   பாடி   மகிழ்ந்தார்  சம்பந்தர் .    நன்றி   பெருக்கால்   அங்கு   சிலகாலம்   தங்கி   கண்குளிர  சேவித்தார் .   அவருக்கு   ஞானப்பால்   கொடுத்து   பெற்றோர்  ஸ்தானத்தில்  தான்   வணங்கும்   தோணியப்பர்   நினைவு   வாட்டியது   . அரத்துறை நாதரிடம்   விடை   பெற்று   கொண்டு   கிளம்பினார் .வழியிலுள்ள   ஊர்களில்   மக்கள்   இத்தனை   சலுகைகள்   ஈசனிடமிருந்து   பெற்ற    அந்த ஞானக்குழந்தையை   தரிசித்து   வணங்க   ஆலயங்களில்   திரண்டனர் .    சிவிகையை   வலம்வந்து   அவரை   வணங்கினர் .   அவர்கள்   அன்பில்   நெகிழ்ந்து   போனார்    சம்பந்தர் .

Saturday 10 November 2018

அரத்துறைநாதர்   இரவு   அந்தணர்கள்   கனவில்   தோன்றி   புதல்வன்   சம்பந்தன்   தன்   பிஞ்சு   கால்கள்   நோக   தன்னை  காண  நடந்து   வரப்போவதாகவும்        அவன்   பிஞ்சு   கால்கள்   நோவதை   தாம்   காண   இயலாது .  ஆகையால்   அவருக்கு   முத்து   பல்லக்கும்   குடையும்   சின்னங்களும்   அளிக்க   விரும்புவதாகவும்     அவைகளை   மாறன்பாடி   சென்று   சம்பந்தனை   அப்பல்லக்கில்   அழைத்து   வருமாறு   ஆணையிட்டு   மறைந்தார் .  விடிந்ததும்   அந்தணர்கள்   கோவிலை   அடை ந்தனர்.    கோவிலில்   முத்து   சிவிகையும்   குடையும்   மற்ற   சின்னங்களும்   அங்கு   தயாராக       இருக்க   கண்டு   ஆச்சர்யம்   அடைந்தனர் .   அவைகளை   எடுத்துக்கொண்டு    யாவரும்   மாறன்பாடி   அடைந்தனர் .   ஈசன்   கருணையை  நினைத்து   தந்தையும்   மகனும்      எண்ணி   வியந்து   மெய்சிலிர்த்தனர் .  சம்பந்தர்   பல்லக்கை   வலம்   வந்து   வணங்கி   அதில்   ஏறினார் .   அடியார்கள்   சிவிகையை   தாங்கி னர் .    ஒருவர்  குடை   பிடித்தார்    மறறொருவர்   சின்னங்களை   தாங்கி   முன்னால்   சென்றார் .  இவ்வாறு   நெல்வாயிலரத்துறையை  அடைந்தனர் .

Wednesday 7 November 2018

நீலகண்ட   யாழ்ப்பாணர்   சம்பந்தரை  தம்    ஊரான  எருக்கத்தம்புலியூர்   அழைத்து   சென்று   அவரை   அன்போடு   உபசரித்து   சுற்றியள்ள   எல்லா   திருத்தலங்களையும்   சேவிக்க   செய்தார் .   அவர்   பாடும்   பதிகங்கங்களுக்கு     கூட  யாழ்    வாசித்து   மகிழ்ந்தார் .   நெல்வாயில்   அரத்துறை   நாதரை     தரிசித்துகொள்ள   புறப்பட்டனர் .   அதுநாள்   வரை   தந்தையின்   தோளில்   சுமக்கச்செய்து   வந்து    கொண்டிருந்த    சம்பந்தர்   இனியும்   அவர்க்கு   சிரமம்  கொடுக்க     விரும்பாமல்     நடந்து   பயணம்   தொடர   விரும்பினார் .    நெல்வாயில்   அரத்துறை     செல்லும்   வழியில்   மாறன்பாடி   எனும்   இடம்   நெருங்கும்போது   சோர்ந்து   போய்     மேலும்   தொடர   முடியாமல்   அங்கு   தங்க   முடிவெடுத்தனர் .     எதிர்பாராமல்   அவ்வூர்   மக்களுக்கு   அவர்   தரிசனம்   கிடைக்க   மகிழ்ச்சி   பொங்க   அவரை   வரவேர்த்தனர் .   அரைத்துறைநாதர்   தன்   மகன்   இவ்வாறு   துன்ப   படுவதை    காண   பொறுக்காமல்   அவருக்கு   முத்து   சிவிகையும்    குடையும்   கொடுக்க   இச்சை   கொண்டார் .

Thursday 1 November 2018

சம்பந்தர்  எம்பெருமான்   ஆனந்த    நடனம்   புரியும்   தில்லையில்   தங்க   மனம்   வராமல்   திருவேட்களம்   சென்று   அங்கு   தங்கி   அங்கிருந்து   தினம்   தில்லை   வந்து   ஐயனை   சேவிக்கலானார் .    ஒருநாள்   தில்லையில்   அவர்   ஒரு   அரிய   காட்சி   கண்டா ர் .    ஒரு  கணம்   மூவாயிரவர்  சிவகணங்களாக   காட்சி   தந்து   மெயசிலிர்க்க   செய்தனர்  .   கூட  வந்த   பெரும்பாணருக்கும்    அக்காட்சியை   காட்டி   அதிசயிக்க   செய்தார் .  அவர்   அடைந்த   மகிழ்ச்சிக்கு   அளவே   இல்லை .   அன்று   அங்கு   பதிகம்   பாடும்போது   அவ்வதிசய   காட்சியையும்   பாடினார் .   ஈசனை   வணங்கி   விட்டு   செல்லும்போது    பாணர்   சம்பந்தர்   காலில்   விழுந்து  வணங்கி   அவரை   தாம்   பிறந்த   ஊரான   எருக்கத்தம்புலியூர்   மற்றும்   நிவா   நதிக்கரை   சுற்றியுள்ள   மற்ற   திருத்தலங்களை   சேவிக்க   அழைத்தார் .  சம்பந்தரும்   மகிழ்ச்சியுடன்   சம்மதித்தார் .                                                                                                                                                                                                                                

Wednesday 31 October 2018

பொற்தாளம்   பெற்ற   ஞானசம்பந்தப்பெருமான்   தாளத்துடன்   ஐயனை   பல   ஆலயங்களில்   பல   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  அவருக்கு   தில்லை   அம்பலக்கூத்தனை   காண   பேராவல்   உண்டாயிற்று .  தந்தையும்   அவராசையை   நிறைவேற்ற   தில்லைக்கு   புறப்பட்டார் .  கொள்ளிடம்   நதியை   கடந்து   தில்லையை   நெருங்கும்   போதே   அந்தண ப்பெருமக்கள்   செய்யும்   யாக   புகையும்   மந்திர   கோஷங்களும்   வானுயர   நின்ற   கோபுரங்களும்   அவரை   மெய்சிலிர்க்க   வைத்தது .  விழுந்து   வணங்கினார் .  அவர்   வரவை   எதிர்பார்த்து   தில்லை   மூவாயிரவர்   அவரை   வரவேற்க   மேளதாளத்துடனும்   வேத   கோஷங்களுடனும்   காத்திருந்தனர் .  அவரை  உள்ளே  அழைத்து       சென்றனர் .  சம்பந்தர்     பொன்னம்பல வாணனை   மனம்   குளிர   சேவித்து   பதிகங்கள்   பாடி   மகிழ்ந்தார் .  மனநிறைவோடு   வெளியே   வந்து   அவருக்கு   சேவை   செய்யும்   பேறு  பெற்ற   மூவாயிரவர்  வாழும்    வீதிகளை   வணங்கி   வலம்   வந்தார் 

Saturday 27 October 2018

ஈசனிடம்   பொ ற்த்தாளம்   பெற்று   அன்னை   அருளால்   அதில்   லய   ஓசை   வரப்பெற்றதும்   சம்பந்தரின்   பெருமையை   மேலும்   உயர்த்தியது .  அவனுடைய   தாய்வழி   பாட்டனாரின்   ஊரான   நனிப்பள்ளி   மக்கள்   அவரை   தங்கள்   ஊருக்கு   வரவழைக்க   மிக   ஆவல்   கொண்டனர் .  தந்தையும்   அவனை   அங்கு   அழைத்து   சென்றார் .  ஊர்   மக்கள்   மிக்க   மகிழ்ச்சி   அடைந்தனர் .  மேலும்   சுற்றி   உள்ள   திருத்தலங்களை   சேவித்துக்கொண்டு   ஊர்   திரும்பினர் ,  இவரை  பற்றி    கேள்விப்பட்ட     நீலகண்ட   யாழ்ப்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   அவரை   காணும்   பேராவலுடன்   தோணிபுரம்   வந்தனர் .  அவர்கள்   வருகையை   கேள்விப்பட்ட   சம்பந்தப்பெருமான்   தானே   சென்று   அவரை   வரவேற்று   அழைத்து   கொண்டுவந்து   அமுது   படைத்து   மகிழ்ந்தார் .  அவரை   யாழ்   வாசிக்க   செய்து   ஐயன்   பதிகங்களை   யாழில்   கேட்டு   பெரிதும் ரசித்தார் . விடை   பெறும்போது     நீலகண்டர்   தன்   மனதிலுள்ள   பேராவலை   தெரிவித்தார்.  ஆளுடைபிள்ளை   எம்பெருமானை   பாடும்போது   தான்   கூடவே   இருந்து   யாழ்  வாசிக்க   அனுமதிக்க   வேண்டுமென   கேட்டுக்கொண்டார்   ஞானசம்பந்தரும்   மகிழ்ச்சியுடன்  ஒப்புதல்    அளித்தார் .    

Thursday 25 October 2018

மூன்று    வயது   சின்னஞ் சிறு   பாலகன்   ஐய்யன்   மீது   பைந்தமிழில்   பதிகங்கள்   பாடும்   அதிசயம்   விரைவில்   ஊரெங்கும்   பரவியது .  அந்தணர்களும்    ஈசன்   அடியார்களும்   கூட்டம்   கூட்டமாக   வந்து   அத்திருமகன்   காலில்   விழுந்து   வணங்கினர் .  தந்தையின்   பெருமித்திற்கு   அளவே   இல்லை .  இறைவன்  கையால்    ஞான   பாலுண்டு   பேறுபெற்ற   அவன்  இறைவன்  சம்பந்தத்தால்    ஞானசம்பந்தன்   ஆனான் .  சிபாதவிருதயர்   குழந்தையை   பெருமையுடன்   தோளில்   சுமந்து   கொண்டு   நான்கு   வீதிகளிலும்   ஊர்வலமாக   வந்தார் .    மறுநாள்   பொழுது   புலர்ந்ததும்   சிறுவன்   ஈசனை   காண   ஆவல்   தெரிவிக்க   தந்தை   கோவிலுக்கு   அழைத்து   சென்றார் .   மறுநாள்   சிறுவன்   அருகே   உள்ள   கோலக்கா   சென்று   அங்கு   எம்பெருமானை   பாட   ஆவல்   தெரிவித்தான் .  தந்தை   அங்கு  தூக்கி   சென்றார் .  சம்பந்தன்   ஐயனை   துதித்து   மனமுருக   பதிகங்கள்   பாடினான் .  மனம்   குளிர்ந்த   ஈசன்   சம்பந்தனுக்கு   பொற் த்தாளம்   வழங்கினார் .       அன்னை   அதற்கு   ஓசை   கொடுத்தாள் . 

Tuesday 23 October 2018

 சின்னஞ்சிறு   பாலகன்   செந்தமிழில்   ஐயன்   மீது   பதிகம்   பாடும் அதிசயம்    கண்ட     ஓங்கிய   சிவபாதவிருதயர்   கை   அப்படியே   நின்றது .   பிரமபுரம்   ஈசனே   பால்   ஊட்டியது   என   காண்பித்து விட்டு     கோயில்   வாயிலை   சேவித்துவிட்டு   ஞானபாலுண்ட   அச்சின்னஞ்சிறிய   பாலகன்   தோணியப்பர்   சன்னதிக்கு   சென்று   வணங்கி   பாடலை   தொடர்ந்தான் .  ஆனந்தமும்   அதிசயமும்   மேலிட   தந்தையார்   மெய்சிலிர்த்து   போனார் .    அவருக்கு   அத்தெய்வ   குழந்தையால்   சைவம்      தழைக்கும்   என்ற   நம்பிக்கை   மேலோங்கியது .  மகிழ்ச்சி   தாளவில்லை .  அதற்குள்   பச்சிளம்   பாலகன்   ஈசன்  அருள்   பெற்று   செந்தமிழ்   பதிகங்கள்   ஐயன்   மீது   பாடும்   அதிசயம்   ஊரெல்லாம்   பரவி   மக்கள்   கூட்டம்   கோவிலை   நோக்கி   வர   தொடங்கியது .  

Friday 19 October 2018

 அன்னையும்   குழந்தைக்கு   ஞானப்பால்   ஊட்டி   மகிழ்கிறாள் .  குழந்தை   மகிழ்ந்து   சிரிக்கிறது .  ஈசனும்   தேவியும்   மறைக்கின்றனர் .   திருகுளத்தில்   நீராடி   வெளியேறிய   சிவபாதவிருதயர்   குளப்படியில்   குழந்தையை     காணாமல்   திடுக்கிட்டு    போனார் .  தேடி   போனவர்   பக்கத்தில்   விளையாடி  கொண்டிருக்கும்   குழந்தையை   கண்டார் .   அவன்  வாயில்   பால்   வழிவது   கண்டு   கோபம்   மேலிட   அவனை   பார்த்து   கோபத்துடன்  யார்   கொடுத்த   பாலை   உண்டாய்   என்று   கோபத்துடன்   கையை   ஓங்கினார் ,  உடனே   மூன்று  வயது   பாலகன்     கோபுரத்தை   காண்பித்து   தோடுடைய  செவியன்   விடையேறியோர்   என்று   செந்தமிழில்      பதிகம்   பாட   துவங்கினான் .

Tuesday 16 October 2018

சிவபாதவிருதயர்   குழந்தையை   தூக்கிக்கொண்டு   கோவிலுக்கு   சென்றார்   .  குளத்தில்   நீராட   எண்ணி   குழந்தையை   குளக்கரையில்   படியில்   உட்கார   வைத்துவிட்டு    அவர்   மூழ்கி   குளிக்க   எண்ணி குளத்தில்    இறங்கினார் .  குழந்தை   அவர்   குளிப்பதை   கண்டு   சிரித்து   கொண்டு   வேடிக்கை   பார்த்தது .  அவர்   தண்ணீரில்   அமிழ்ந்து   குளிக்க   எண்ணி   தண்ணீரில்   மூழ்கினார் .  குழந்தை   தந்தையை   காணாமல்   பயந்து   அழ   தொடங்கியது .    எங்கும்   தேடியும்   தந்தையை   காணாமல்   ஆலய   விமானத்தை   நோக்கி   அம்மா   அப்பா   என்று   அழ   தொடங்கினான் .   குழந்தையின்   அழுகை   தோணியப்பர்   செவிகளில்   விழுந்தது .   தன்   பேரருளால்   சிவபாதவிருதையருக்கு   கிடைத்த   பொக்கிஷம்   அல்லவா   அக்குழந்தை .  அது   அழுதால்   பொறுப்பாரா ?  உடனே   உமை   அன்னையுடன்   தோன்றி   அன்னையை     குழந்தை    ஞானமுடன்   பிறக்க   தவமிருந்த   பெற்றோர்   மனம்   குளிர   பாலுடன்   ஞானத்தையும்   கலந்து  ஊட்டி  விடும்படி    பணித்தார் .

Thursday 11 October 2018

குலம்   விளங்க   பிறந்த   அத்தெய்வீக   குழந்தை      பெற்றோரை   மகிழ்ச்சி   வெள்ளத்தில்  ஆழ்த்தியது .  சிவபாதவிருதயர்   குழந்தை   பிறந்த   இவ்வைபவத்தை   கொண்டாட   வேதியர்களை    அழைத்து   பலவிதமான   தானங்களை   செய்து   அவர்களை   மகிழ்வித்தார் .தகுந்த   நாள்   வந்ததும்   ஊர்   பெண்கள்   கூடி   குழந்தைக்கு   ஆளுடை பிள்ளை   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தனர் .  அவருக்கு  ஊரில்   நல்ல   மரியாதை   இருந்ததால்   ஊரே   ஆனந்தம்   அடைந்தது .  ஊரில்   எல்லோருமே   அக்குழந்தையை   வளர்ப்பதில்   பங்கேற்றனர் .  இவ்வாறாக   மூன்று   ஆண்டுகள்   ஓடின.   கால்   சலங்கை   ஒலிக்க    குழந்தை   ஓடும்   அழகு   யாவர்   மனதையும்   கொள்ளை   கொண்டது .  அப்போது   ஒரு   நாள்   சிவபாதவருதயர்   நீராட   திருக்குளத்திற்கு   கிளம்பினார் .  குழந்தை   தானும்  உடன்   வரவேண்டுமென்று   அடம்   பிடித்தான் .     தந்தையும்    போகட்டுமென்று   அழைத்து   செல்ல   தூக்கிக்கொண்டு   கிளம்பினார் .

Friday 5 October 2018

சிவபாதவிருதயர்   பெயருக்கு   ஏற்ற வாறு   சிவபெருமானின்   பாதத்தை   ஒரு   கணமும்   மறவாது   த்யானிப்பவர் .  அவர்   மனைவியார்    பகவதியாரும்   கணவ.னுக்கு   சிறிதும்   குறையாமல்   எம்பெருமான்   மீது   அளவற்ற   பக்தி   கொண்டவர் .  கணவனுடைய   தெய்வீக   பணிகளில்   மிக்க   ஆர்வத்துடன்   பங்கு   கொண்டு   துணை   இருந்தார் .   இவ்வாறு   மனமொத்து   வாழ்ந்த   தம்பதிகளுக்கு   குறை   இருந்தது .   அவர்களுக்கு   மழலை   செல்வம்   இல்லாதது   குறை .  அப்போது   நாட்டில்   புற   சமயங்கள்   பரவி   இருந்தது .  தம்   மக்கள்   புற   சமயங்களுக்கு   மாறுவதை   பொறுக்காமல்   தினம்   தோணியப்பர்  முன்   சரணடைந்து   தன்   குறைகளை   அவரிடம்   கண்ணீர்மல்க   முறையிட்டு   வந்தார் .  கருணை   கடலான   ஐயன்   பக்தனின்   கண்களில்   நீர்   வருவதை   பொறுப்பாரா ?   ஐயன்   கண்   திறந்தார்.  பகவதியார்   கருவுற்று   பத்து   மாதங்களில்   சுப   யோகங்கள்   நிறைந்த   திருவாதிரை   நக்ஷத்திரத்தில   ஒரு      ஆண்   மகனை   ஈன்றாள் .

Thursday 4 October 2018

வம்பறாவரிவண்டு   மணம்   நாற   மலரும்   
மதுமலர்நற்   கொன்றையான்அடியலாற்   பேணா
எம்பெருமான்   சம்பந்தன்   அடியார்க்கு   அடியேன் |

சோழ   நாட்டில்   சீர்காழி   என்றொரு   புண்ணியத்தலம் .  பிரம்மபுரம் ,  கழுமலம் ,  வேணுபுரம் ,  தோணிபுரம்   இன்னும்   பல   பெயர்கள்   இக்ஷேத்திரத்திற்கு .  பிரளய   காலத்தில்   அண்ட    சராசரங் ள் வெள்ளத்தில்   மூழ்கி   அழிந்த   போது   இத்தலம்   தோணியாக   மாறி   ப்ரளயத்திலிருந்து   மீண்டதால்   தோணிபுரம்   என்று   பெயர்   பெற்றது .   இதுவே   இந்திரன்   தாரகாசுரனுக்கு   பயந்து   ஒளிந்து   கொண்ட    இடமாகும் .   இத்தனை   பெருமை   வாய்ந்த  தலத்தில்   கவுணியர்   கோத்திரத்தில்    பிறந்த     சிவபாதவிருதயர்   என்ற   அந்தணர்   வாழ்ந்து    வந்தார் .

Sunday 30 September 2018

ஈசனின்   லீலை .  மனைவி   தண்ணீர்   எடுத்து   வருவதற்குள்   அவர்   அங்கேயே   படுத்து   உறங்கி   விட்டார் .   அவர்   கனவில்   ஐயன்   தோன்றி   'நமிநந்தி   ஆரூரில்   பிறந்த   அனைவரும்   நம்   கணங்கள்   என்பதை   எவ்வாறு   மறந்தாய் ?  நாளை        ஆரூரில்   அதை   காண்பாய் '  என்று   சொல்லி   மறைந்தார் .    தன்   தவறை   உணர்ந்த   அடிகளார்   பிராயச்சித்தத்தை   மறந்து   காலையில்        எழுந்து   ஸ்நானம்   செய்து   மனைவியுடன்   திருவாரூர்     கிளம்பி   சென்றார் .  அங்கு   நடமாடும்   அத்தனை   பேரும்   சிவஸ்வரூபமாக   காட்சி  அளித்தனர் .  ஒரு   கணம்   அக்காட்சியால்   மெயசிலிர்த்து    ஆரூர்  வீதியில்   விழுந்து   வணங்கினார் .  அவர்   எழுந்தபோது   அக்காட்சி   மறைந்து   எல்லோரும்   சாதாரண   மனிதர்களாக   மாறி   இருந்தனர் .   இறைவனின்   திருவருளை   எண்ணி   பரவசமடைந்து   தன்   அறியாமையை   குறித்து   வெட்கித்து   தன்   பிழையை   பொருத்தருளுமாறு      ஈசனை   மனமாற   பிரார்த்தித்தார் .  அதன்   பிறகு   ஆரூரையே   இருப்பிடமாக   கொண்டு   தன்   தெய்வீக   சேவையை   விடாது  நடத்தி   ஈசன்   அடி   சேர்ந்தார் .  அப்பர்   பெருமான்   இவர்   சேவையை   போற்றி   இருக்கிறார் 

Saturday 29 September 2018

இவ்வாறு   நமிநந்தி   அடிகள்   மனநிறைவோடு   சேவை   செய்து   வருகையில்   பங்குனி   உத்திரம்   மஹோத்சவ   திருநாள்   வந்தது .  வீதிவிடங்கர்   வீதி   உலா   சென்று   மக்களை   ஆனந்தமயமாக்கும்   பெரு   விழா.  அன்று   ஐயன்   ஊர்வலம்   மணலூர்   வரை   சென்று   திரும்புவார் .  அடிகளாரும்   உடன்   சென்று   திரும்பினார் .    எம்பெருமான்   கோயில்   திரும்பியதும்   நமிநந்தி   அடிகள்   வீடு   திருப்பினார் .  திரும்பியவர்   வீட்டில்   நுழையாமல்   புறக்கடை   பக்கம்   சென்று   மனைவியை   அழைத்தார் .  அவளிடம்   தான்   ஐயனுடன்   மணலூர்  வரை   சென்றதால்   வழியில்   பலர்   மீது   பட்டு   தீட்டு   ஏற்பட்டிருக்கும் .   ஆகையால்   பிராயச்சித்தம்   செய்ய   ஜலம்   கொண்டு    வரும்படி   ஆணை   இட்டார் .      சிவன டியார்களில்   பேதம்   பார்ப்பதை   விரும்பாத   ஆரூர்ப்பெருமான்   அடிகளுக்கு   அதை   உணர்த்த   விரும்பினார் 

Thursday 27 September 2018

அன்று  முதல்   நமிநந்தி   அடிகள்      தினமும்   ஆலயம்   முழுவதும்  நீரில்   விளக்கேற்றி   மகிழ்ந்தார் .  அவர்   பெருமையை   மக்கள்   வெகுவாக   புகழ்ந்து    அவரை   வணங்கினர்  இவ்வாறு    இருக்கையில்     தண்டியடிகள்    என்பவரின்   பெரும்   முயற்சியால்   ஆரூரிலிருந்து   சமணர்கள்   விரட்டப்பட்டனர் .  சைவர்கள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   ஆரூர்   ஈசனை   வழிப்பட்டனர் .    அடிகளும்   தம்   தெய்வத்தொண்டுகளை   குறைவின்றி   செய்து   வந்தார் .  இவரை  பற்றி   கேள்விப்பட்ட    சோழ  மன்னனும்   அடிகளை   தியாகராஜர்   திருக்கோயில்   திருப்பணிகள்   எல்லாம்   செய்ய   தலைமை   தாங்கி   நடத்தும்   பொறுப்பை   ஏற்க்க   செய்தார்     .  அவரும்   அப்பொறுப்புகளை   பக்தியுடன்   ஏற்று   குறைவின்றி   நடத்தி   வந்தார் .

Tuesday 25 September 2018

ஒரு   நாள்   திருவாரூரில்   மாலை   வீதிவிடங்கர்   ஆலயத்தை   சுற்றி   வரும்போது   சில   சந்நிதிகளில்   விளக்கு   எரியாமல்   இருந்தது.  அது   கண்ட   நமிநந்தி   அடிகள்   விளக்கேற்ற   நினைத்தார் .  எண்ணெய்   தேடி   பக்கத்திலுள்ள   வீட்டிற்கு   சென்று   விளக்கேற்ற   எண்ணெய்   கேட்டார் .  அது   சமணர்     வாழும்   வீடு .  சிவபெருமான்   ஆலயத்திற்கு   தீபமேற்ற   எண்ணெய்   கேட்டது   மிக   கோபத்தை   உண்டாக்கியது .   ஏளனமாக   கையில்   அனலேந்தும்   ஈசன் அவர்   ஆலயத்திற்கு   தீபம்   ஏற்ற   நீர்   போதுமே   என்று  பரிகாசமாக    வினவினர்.  மிக்க   வேதனையும்   அவமானமும்   அடைந்து   ஆலயம்   திரும்பி  மன   உளைச்சலுடன்   இருந்தார் நமிநந்தியடிகள்  .  பக்தனின்   மன வருத்தம்    கண்டு   பொறுக்காத   ஈசன்   அவருக்கு   குளத்து   நீரை   ஊற்றி   விளக்கேற்றுமாறு   அசரீரியாக   அறிவுறுத்தினார் .  மகிழ்ச்சி   அடைந்த   நம்நந்திகள்   ஒரு   செம்பில்   நீர்   எடுத்து   வந்து   விளக்கேற்ற   விளக்கு   பிரகாசமாக   எரிவது   கண்டு   மட்டற்ற   மகிழ்ச்சி   அடைந்து   கோயில்   முழுவதும்   தண்ணீர்   விளக்கேற்றி   பெரும்   ஆனந்தம்   அடைந்தார் .

Friday 21 September 2018

அருநம்பி   நமிநந்தி   அடியார்க்கும்   அடியேன் |

சோழ  நாட்டில்     திருவாரூருக்கு   அருகே ஏமப்பேறு   என்றொரு   தலம்.  அங்கு   நமிநந்தி   அடிகள்   என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   அவ்வூரில்   குடிகொண்டிருக்கும்   புற்றிடம்   கொண்ட   பெருமானிடம்   மிக்க   பக்தி   கொண்டவர் .  சிறந்த   சிவபக்தர் .   தினமும்  விடியற்காலை    எழுந்து   நீராடி   பூஜை   முடிந்ததும்   திருவாரூருக்கு   சென்று    ஆலயத்தில்   காலை   முதல்  மாலைவரை  இருந்து   எம்பெருமானை   வணங்கிவிட்டு   திருத்தொண்டுகள்   புரிவார்.  மாலை   அபிஷேகம்   முடிந்ததும்தான்   வீடு   திரும்புவார் .  இவ்வாறு    நாள்தோறும்   தொண்டு   செய்து   வந்தார் .

Wednesday 12 September 2018

  சம்பந்தப்பெருமான்   சாத்தமங்கையை   விட்டு   செல்லுகையில்   நீ லநக்கருக்கு   அங்கு   இருந்து   கொண்டு   இனிதாக   இல்லறம்    நடத்திக்கொண்டு   சிவபெருமானுக்கும்   சிவத்தொண்டர்களுக்கும்   இனிய   சேவைகளை   செய்துகொண்டு   வாழும்படி   ஆணை   இட்டு   சென்றார் .  அவரும்   அவ்வாறே   நடந்து   தம்பதிகள்   தங்கள்   கடமைகளை   தொடர்ந்து   செய்து   கொண்டு   இனிதே  வாழ்ந்து   வந்தனர்   இப்படி   இருக்கையில்  ஒருநாள்   சம்பந்தப்பெருமானுக்கு   திருமணம்   என்று   அழைப்பு   வர   தம்பதிகள்   அத்திருமணத்தில்   கலந்து   கொண்டு   சம்பந்தருடன்   ஜோதியில்   கலந்து   கொண்டு   சிவத்தில்   ஐக்கியமானார்கள்      

Monday 10 September 2018

தம்பதிகள்   தொடர்ந்து   தங்கள்   தெய்வீக   பணிகளை   செய்து   கொண்டு   மகிழ்ச்சியாக    இல்ல.றம்   நடத்தி     கொண்டிருந்தனர் .  அப்போது   ஞானசம்பந்தர்     தொண்டர்களுடன்   அங்கு   எழுந்தருளினார் .   தம்பதிகள்   மிக்க   மகிழ்ச்சியுடன்   அவர்களை         உபசரித்து   அமுது   செய்வித்து   மகிழ்ந்தனர் .   நீலநக்கர்   அவர்களை   இரவு   தங்கிவிட்டு   மறுநாள்   செல்லும்படி   கேட்டுக்கொண்டார் .  சம்பந்தபெருமான்    நிலநக்கர்   பெருமையை   நிறைய   கேள்விப்பட்டிருந்தார் .   ஆதலால்   அவர்   பெருமையை   மேலும்   எடுத்துக்காட்ட   எண்ணம்   கொண்டார் .  ஆகையால்   அவர்   என்னைப்பற்றி  கவலை   வேண்டாம் .  என்னுடன்   அடியார்   ஒருவர்   வந்துள்ளார்.  நீலகண்ட   பெரும்பாணரும்   அவர்   மனைவி   விறலியாரும்   என்னுடன்   வந்துள்ளனர் .  அவர்களுக்கு   இரவு   தங்க   இடம்   கொடுங்கள்   என்று   கேட்டுக்கொண்டார் .    நீலநக்கர்   மகிழ்ச்சியோடு   அவ்விருவரையும்   சுடர்விட்டெரியும்   குண்டத்து   அருகிலேயே     அவர்கள்   படுக்க   இடமளித்தார்     கு  ண்டத்தில்   எரிந்த   தீ   அவர்கள்   நெருங்கியதும்   ஒதுங்கி   வலம்வந்து   எரிந்தது .    கூடி   எல்லோரும்   நீலகண்டர்     தாழ்ந்த  வகுப்பில்    பிறந்தவரானாலும்   தான்   வணங்கும்   இறைவனுக்கு    சமமாக   பாவித்த   நிலநக்கரை   வெகுவாக   கொண்டாடினார்கள் .

Friday 7 September 2018

ஈசன்   நீலநக்கர்   கனவில்   இவ்வாறு   இவர்   மனைவி   பெருமையை   எடுத்து   கூறி   மறைந்தார் .   திடுக்கிட்டு   எழுந்த   நீலநக்கர்   தம்  மனைவி   பெருமையை   உணர்ந்தார் .  ஆறு  காலமும்   விடாமல்   தாம்   செய்யும்   பூஜையைவிட    தாய் பாசத்தோடு   தம்   மனைவி   செய்த   அச்சேவை   உயர்வாக  மதித்த   ஈசனின்   அன்பு   உள்ளத்தை   கண்டு   நெகிழ்ந்து   போனார் .  உடனே   மனைவியை   காண   துடித்தார் .  பொழுது   விடிந்ததும்   மனைவியை   காண   கோவிலுக்கு    சென்று   கனவில்   ஐயன்   தோன்றி   கூறியதை   மனைவியிடம்   சொல்லி   மகிழ்ந்து   அவளை    வீட்டிற்கு   மகிழ்ச்சியுடன்   அழைத்து   சென்றார் .

Thursday 6 September 2018

கணவனின்   கோபத்தை   கண்டு   மிரண்டு   அம்மையார்   வீடு   செல்லவில்லை .  அவர்   சொல்லை   மீறி   வீடு   செல்ல   அந்த   கற்புக்கரசியின்   மனம்   இடம்   தரவில்லை .  இறைவனிடம்   முறை   இடுவது   தவிர   வேறு   வழி   தெரியவில்லை .  "இறைவா   இது   என்ன   சோதனை?  நான்   ஒரு   தவறும்   செய்யவில்லையே .    என்   குழந்தையாக   பாவிக்கும்   உன்   மீது   அந்த   சிலந்தி   விழுந்ததை   என்னால்   தாங்க   முடியாமல்   அன்றோ   அவ்வாறு   செய்தேன்.  எனக்கு   ஏன்   இப்பெரும்   தண்ட  னை ?"  என்று   புலம்பி   கொண்டு   ஆலயத்திலேயே   தங்கிவிட்டாள் .   வீடு   சென்ற   நிலநக்கருக்கு   மனம்   அலை   பாய்ந்தது .  ஊண்   உறக்கமின்றி   தவித்தார் .  தன்   மனைவி   இவ்வாறு   ஐயனை   எச்சிலால்   அசுத்தம்   செய்து   விட்டாளே   என்ற   எண்ணம்   அவரை   அலைக்கழித்தது .  பட்டினி   கிடந்தார் .   அவர்   தூக்கத்தில்   அய்யாவந்திநாதர்   அப்பனே   என்று   கூப்பிட்டார் .  மானும்   மழுவும்    தாங்கி   நின்ற   ஐயனை   கண்ட   நீலநக்கர்   திடுக்கிட்டார் .  அவர்   உடலெங்கும்   கொப்புளங்கள் .   ஈசன்   அப்பனே   பார் .  உடலெங்கும்   கொப்புளங்கள் .   உன்   மனைவி  அன்பு  மிகுதியால்   ஊதி   சிலந்தியை   விரட்டியதால்  என்   நெற்றி   மட்டும்   சிலந்திக்கு   தப்பியது  என்றார் .

Wednesday 5 September 2018

இவ்வாறு   அன்னியோன்னியமாக   தம்பதிகள்   வாழ்ந்து   வந்தனர் .  ஒரு  நாள்   மாலை   இருவரும்   அய்யவந்திநாதரை   சேவிக்க   ஆலயம்   சென்றனர் .  நிலநக்கர்   எம்பெருமானை   மலர்களால்   அர்ச்சித்து   பிறகு   எதிரில்   அமர்ந்து   பஞ்சாக்ஷரம்   ஜபிக்கலானார் .  மனைவி   பக்கத்தில்   நின்று   கொண்டு   எம்பெருமானை   சேவிக்கலானார் .  அப்போது  கர்பகிருகத்தின்   மேல்   சுவரிலிருந்து   சிலந்தி   ஒன்று   லிங்கத்திருமேனி   மீது   விழுந்து   அங்கும்   இங்கும்   ஓடலாயிற்று .  அதை   கவனித்த   அம்மையார்   ஒரு   தாய்க்கு   உரிய   கவலையுடன்   பக்கத்தில்   சென்று   வாயால்   ஊதி   சிலந்தியை   விரட்டினார் .  அதை   கவனித்த   நிலநக்கர்   மிக்க   கோபம்   கொண்டவராய்   ஐயன்   மேனியில்   எச்சில்   படும்படியாக   ஊதியதை    சகிக்கமாட்டாமல்   என்ன   காரியம்   செய்தாய்   இவ்வாறு   ஐயன்   திருமேனியை   அசுத்தம்   செய்ததை   பொறுக்க   முடியாது .  இனி   என்   முன்  நிற்காதே   போய்விடு.  இனி   உனக்கு   என்  வீட்டில்   இடமில்லை . என்று   கோபத்துடன்   கூறிவிட்டு   அவர்  வீட்டிற்கு   சென்று   விட்டார் .

Monday 3 September 2018

ஒலிபுனல்சூழ்   சாத்தமங்கை   நிலநக்கர்க்கு   அடியேன் |

சோழ   நாட்டிலே  சாத்தமங்கை   என்றொரு   தலம்   அங்கு   கோயில்   கொண்டிருக்கும்   ஐயன்   அய்யவந்திநாதர் .  அவ்வூரிலே    நீலநக்கர்     என்றொரு   அந்தணர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   அக்கினிஹோத்திரம்   செய்ய     தவறாதவர் . அவர்   வீட்டில்   எப்பொழுதும்   அக்நி   சுடர்   பிரகாசித்து   கொண்டே   இருக்கும் .  அவருக்கு   சிவன்   மீதுள்ள   பக்தி   போல்   சிவனடியார்கள்   மீதும்   மிகுந்த   பக்தி .  அடியார்களுக்கு   அமுது   படைப்பதில்   எல்லையில்லா   ஆனந்தம்   அடைவார் .  அவர்   மனைவியும்   அவருக்கு   உறுதுணையாக   இருந்தார் 

Thursday 30 August 2018

அத்தனை   மன   வேதனையிலும்   அத்தம்பதியர்க்கு   நாவுக்கரசருக்கு   அமுது   படைப்பது   நிறுத்துவது   மனம்   ஒப்பவில்லை .   அவர்கள்   பெருத்த   மன   வேதனையுடன்   அருமை   மகனின்   உடலை   ஒரு   அறையில்   படுக்கவைத்து   அறையை   மூடிவிட்டு   நாவுக்கரசரை   ஆலயத்திலிருந்து   அமுது   படைக்க   அழைத்து   வந்தார் .  நாவுக்கரசர்   வாசலில்   வந்ததும்   அங்கு  எதோ   அசம்பாவிதம்   நேர்ந்திருப்பதை   உள்ளம்   உணர்த்தியது .  அவர்   திருநீறு   எடுத்து   எல்லோருக்கும்   கொடுக்க   முதலில்   நாவுக்கரசனை   அழைத்தார் .  அப்பூதியடிகள்   துக்கத்த்தை   மறைத்து   கொண்டு   அவன்   இப்போது   எதற்கும்   உதவ   மாட்டான் .  என்று   பூடகமாக   உணர்த்தினார் .  அப்பரடிகள்   வற்புறுத்தி   கேட்டதும்   நடந்த   உண்மையை   கூறினார் .   அதிர்ந்த   அப்பரடிகள்    உடனே   நாவுக்கரசனை   தூக்கிக்கொண்டு   ஆலயத்தில்   கிடத்த  செய்தார்.   திங்களூர்   ஈசனை   மனமுருக   பதிகங்களால்  தொழுது   மகனை   உயிர்ப்பிக்க   வேண்டினார் . அப்பரடிகள்   வேண்டி   கேட்டுக்கொண்டால்   ஐயன்   மறுப்பாரா ?  மறுகணமே   நாவுக்கரசன்   துக்கத்திலிருந்து   விழித்தார்  போல்     எழுந்து   அம்மா   என்று  ஓடிவந்தான் .  பெற்றோர்களின்   ஆனந்தத்திற்கு  அளவேது .

Wednesday 29 August 2018

அளவிட   முடியாத   ஆனந்தம்   அடைந்த   அப்பூதி  அடிகளும்    அவர்   மனைவியும்   நாவுக்கரசரை   இருந்து   உணவு   அருந்திவிட்டு   செல்லவேண்டுமென்று   வருந்தி   கேட்டுக்கொண்டனர் .  அவரும்   கோயிலுக்கு   சென்று   இறைவனை   சேவித்துவிட்டு   வந்து   உணவு   அருந்துவதாக   கூறிவிட்டு   சென்றார் .   தம்பதியரும்   மிக்க   மகிழ்ச்சியுடன்   உணவு   தயாரிக்க   முனைந்தனர் .  அப்போது   விதி   விளையாடியது .  அன்னை   மகன்   நாவுக்கரசனை   தோட்டத்திலிருந்து   வாழை   இலை   வெட்டி   எடுத்துவர   கத்தியுடன்   அனுப்பினாள் .  பையனும்   தோட்டத்தில்   வாழை   இலை   வெட்ட  சென்றான் .  மரத்தில்   பதுங்கி  இருந்த   பாம்பு   ஒன்று   கத்திவழியாக   இறங்கி   பையனின்  கையில்   கொத்திவிட்டு   மறைந்தது .  நாவுக்கரசனும  கத்திக்கொண்டு   கீழே   விழுந்து   மாண்டு   போனான் .  இதை  கண்ட   அடிகளும்   அவர்   மனைவியும்  மிக்க   வேதனையும்   அதிர்ச்சியும்   தாளாமல்  மலைத்து   நின்றனர்.

Thursday 23 August 2018

அப்பூதி   அடிகள்   நாவுக்கரசரை   இவ்வாறெல்லாம்   புகழ்ந்து   பேசிவிட்டு   அவர்   செய்யும்   அறத்தொண்டுகளுக்கு   முன்பு   நாமெல்லாம்   எம்மாத்திரம் ?  என்று   கேள்வி   எழுப்பிவிட்டு   அது   போகட்டும்   தாங்கள்   யார்   என்று   சொல்லவில்லையே   என்று   வினவினார்   அப்போது   அப்பரடிகள்   சைவம்   துறந்து   சமணத்தில்   சேர்ந்து   எம்பெருமானை   பல   விதமாக   இழிவாக   பேசி   ஐயனால்   சூலை   நோய்   தந்து   ஆட்கொள்ளப்பட்ட   அந்த   நாவுக்கரசர்   அடி.யேனே   என்று   உரைத்தார் . அதை   கேட்ட   அப்பூதி   அடிகள்   தாம்   இத்தனை   நாட்களாக   இதயத்தில்   வைத்து   பூ சித்து   வரும்   நாவுக்கரசர்   தம்   எதிரே   நிற்பது   என்பதை   அறிந்ததும்   எல்லை   இல்லா   மகிழ்ச்சியுடன்   அவர்   காலில்   விழுந்து   கண்ணீரால்   அவர்   பாதங்களை   கழுவினார் .  தாங்கள்   யார்   என்பதை   அறியாமல்   பேசியதற்கு   மன்னிப்பு   கோரினார் . அதற்கு   அப்பர்   வருந்த   வேண்டாம்   அடிகளாரே   எனமிது   இத்தனை  அன்பு  செலுத்தும்    தங்களை  காணும்     ஆவலில் தான்  இங்கு   வந்தேன்  என்று  பதிலுரைத்தார்.  அப்பூதி   அடிகள்   மனைவி   குழந்தைகளை   அழைத்து  அப்பரை   வணங்க   செய்து   அவருக்கு   பாதபூசை  செய்து  ஆசி   பெற்றார் 

Monday 20 August 2018

அப்பூதியடிகள்   மேலும்   கூறினார் ,  எம்பெருமானுக்கு   சேவை   செய்வதில்   அவருக்கு   இணை   யார்   உளர் ?  எம்பெருமான்   அவர்   மீது   காட்டிய   அன்புக்கு   நிகர்   ஏது ?  நீற்றறையிலிருந்து   ஈசன் அவரை   மீட்டார் . கல்   தூணை   பூட்டி   கடலில்   வீசப்பட்டவர்   நமசிவாய   நாமத்தால்   மீண்டார் .  விஷம்   அவரை   ஏதும்   செய்யவில்லை .  ஈசனுக்கு  அவர்   மீது   எத்துணை   அன்பிருந்தால்   இவ்வாறெல்லாம்   காத்தருள்வார் .  அவரை   போய்   யாரோ   ஒருவர்   என்று   கூறி   விட்டிர் .

Wednesday 15 August 2018

நாவுக்கரசர்   அப்பூதியடிகளை   தேடிக்கொண்டு   அக்கிரகாரம்   வந்து   அவர்   வீடு   நாடி   வந்தார் .  அப்பூதியடிகள்   அவரை   அன்புடன்   வரவேற்று   அவர்   வந்த   காரணத்தை   வினவினார் ,  அப்பர்  அப்பூதியடிகளை   தேடி   வந்ததாகவும்   தனக்கு   ஒரு   சந்தேகம்   என்றும்   கூறினார் .  அதற்கு   அவர்   தான்தான்   அப்பூதியடிகள்   என்றும்   அவருடைய   சந்தேகம்   யாது ?  என்றும்   வினவினார்.  அதற்கு    அப்பர்பெருமான்   இத்தனை   தர்ம   காரியங்களை   செய்தவர்   அவைகளுக்கு   தன்னுடைய   பெயரை   வைத்து   கொள்ளாமல்   யாரோ   ஒருவருடைய      பெயரை   வைக்க   காரணம்   என்ன  என்று   வினவினார் .  அதற்கு   அடிகள்   உணர்ச்சியுடன்   யாரையோ   என்று    என்று   அப்பர்பெருமானையா    குறிப்பிடுகிறீர்கள் ?   அவரைவிட   வேறு   தகுதியான  பெரியவர்   வேறு   யார்   உளர் ?  எத்தனை   மாபெரும்    சோதனைகளிலிருந்து   சிவபெருமான்  அவரை   காத்து   அருளினார் .

Monday 13 August 2018

நாவுக்கரசர்   நல்லூரிலிருந்து   புறப்பட்டு   திருப்பழனம்   செல்ல      வழியில்   திங்களூரை   அடைந் தார் .   அப்போது   அவர்   களைப்படைந்து   இரு ந்தார் .  அங்கு   இருந்த  தண்ணீர்   பந்தலை   கண்டதும்   அங்கு   சென்று   தாக சாந்தி   செய்து கொண்டு   புறப்பட்டார் .  வெளியே   வந்ததும்   முகப்பில்   நாவுக்கரசர்   தண்ணீர்பந்தல்   என்ற   பலகையை   க  ண்டதும்   பக்கத்தில்   இருப்பவர்களை   இந்த   பந்தலை   அமைத்தவர்   யார்   என   வினவினார் .  அவர்கள்   இதை   அமைத்தவர்   அப்பூதியடிகள்   என்றும்   அவர்   அன்னதான  சத்திரங்கள்   போன்ற    தர்ம   காரியங்கள்   பல  செய்து   இருப்பதாகவும்    எல்லாவற்றிற்கும்   அவர்   நாவுக்கரசர்   பெயரையே   சூட்டி   இருப்பதாகவும்  கூறினர் .  அப்பருக்கு   ஆச்சர்யம்   தாங்கவில்லை .  அவரை   காணவேண்டும்   என்ற  ஆவல்  எழ   அவர்     எங்கு  இருக்கிறார்   என   விசாரித்தார் .  அவர்கள்   அவர்   அக்கிரஹாரத்தில்   வசிப்பதாக   கூறினர் 

Friday 10 August 2018

ஒருநம்பி   அப்பூதி  அடியார்க்கு   அடியேன்  |
  திங்களூர்   எனுமிடத்தில்   அப்பூதி   அடிகள்  என்னும்   அந்தணர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர் .  சிவனடியார்களை   மிகவும்   போற்றி   வந்தார் .  அதிலும்   சமணர்களின்   போதனையால்  அறிவிழந்து   மன்னன்   திருநாவுக்கரசருக்கு   இழைத்த   அளவிலா   கொடுமைகளையும்   அவற்றிலிருந்து   கருணைக்கடலான   சிவபெருமானால்   காக்க   பட்ட   சம்பவங்களை   கேட்டறிந்தது   முதல்  அவர் மீது   அளவிலா   பக்தி   உண்டாயிற்று .   அவர்    சொல்லே   இவர்க்கு   வேதம் .  அவருடைய   சேவைகளும்   அடியார்களுக்கு  தொண்டு   செய்வதன்   மூலம்    சிவபெருமானை    பெரிதும்   மகிழ்விக்கலாம்   எனும்    அவரது   கூற்றை தெய்வ   வாக்காக   மதித்தார் .  ஆகையால்   இவரும்   இறைவனுடைய    அடியார்களுக்கு   சேவை   செய்வதையே   லட்சியமாக     கொண்டார் .  பல   தண்ணீர்   பந்தல்கள்   அன்ன   சத்திரங்கள் ,  அமைப்பதையே   தன் முதற் பணியாக   கொண்டு   அதற்கே     தன்   செல்வத்தை  செலவழித்து   வந்தார் .  அவை   யாவற்றிற்கும்   திருநாவுக்கரசர்   பெயரையே   வைத்தார் .

Tuesday 7 August 2018

தலையாலேயே   கைலை  மலை   ஏறிவரும்   அம்மையை   கண்டு   வியப்படைந்த   உமை   அன்னை   ஈசனை   நோக்கி   இவ்வாறு   விகார   ரூபத்துடன்   தன்னை   இவ்வளவு   வருத்திக்கொண்டு   இங்கு   நம்மை   நோக்கி   வரும்   இந்த   அம்மை   யார் ?  என்று   வினவ   ஐயன்   இந்த   அம்மையார்   நாம்   இருக்குமிடம்   புனிதமென்று   கால்   படாதவாறே   வருகிறார் .  இவள்   கணவன்   இவளை   தெய்வமாக   மதித்த   காரணத்தால்   அவரை   பிரிய   நேர்ந்த   இவர்   அவருக்கே   உரிமையான   தன்   அழகிய  ரூபத்தை   தியாகம்   செய்து   இந்த   விகார   ரூபத்தை   வேண்டி   பெற்ற   பதிவிரதா   சிரோன்மணி   என்று   அவளை   வருணித்த   இறைவன்   'அம்மையே '   என்று  மிக   அன்புடன்   அவளை   வரவேற்றார் .   அவளும்   அப்பா   என்று   மனம்   குழைய   அவர்   காலில்   விழுந்தாள் .' உமக்கு   வேண்டியது   என்ன '  என்று   ஐயன்   வினவ ,  அவள்   '  பிறவாமை   வேண்டும் .  அப்படி   பிறப்புண்டேல்      உன்னை  என்றும்   மறவாமை   வே ண்டும் .  இன்னும்   வேண்டும் .  நான்  பாட   நீ   ஆடும்போது   உன்    அடியின்   கீழ்   நிற்க  வேண்டுமென   வரத்தையும்    கேட்டாள் .  அம்பலவாணன்   ஆலங்காட்டில்  அவ்வாறே    காண்பாய்   என்று   வரமளிக்கிறார் .  புனிதவதி   அம்மையாரும்   அவ்வாறே   அவருடைய   ஊர்த்துவ   தாண்டவத்தை   கண்டு   பேரானந்தம்   அடைகிறார் .  பிறகு   அவர்   மீது  பதிகங்கள்   பல   பாடி   பிறகு   சிவனடி   சேர்கிறார் .

Monday 6 August 2018

பரமதத்தனின்   அவ்வார்த்தைகள்   எல்லோரையும்   அதிர்ச்சி  அடைய   செய்தது .   பரமதத்தன்   புனிதவதியின்   தெய்வாம்சத்தை   நேரில்   கண்ட   பிறகு   அவளை   வணங்கி   துதிக்க    தோன்றுமே   அன்றி   மனைவியாக   பார்ப்பது   எவ்வாறு   சாத்தியம் ?  என்று   தான்   அவள்  மீது    வைத்துள்ள   அளவிலா   பக்தியை  வெளிப்படுத்தினான் .  புனிதவதிக்கும்   பேரதிர்ச்சி .   அவள்   நடந்ததை    விவரித் தாள் .   தன்   கணவனுக்கே   சொந்தமான   தன்   பேரழகை   இனியும்   ஏற்க   விரும்பாமல்   அவள்  கண்ணீர்   மல்க   இறைவனை   துதித்து   பரமதத்தனுக்கே   உரியதான   இவ்வழகை   எடுத்துக்கொண்டு   யாவரும்   கண்டு   நெருங்க   அஞ்சும்   பேய்   உருவம்   அளிக்குமாறு    மனமுருக   வேண்டினாள்.  ஈசனும்   அவ்வாறே   வழங்க   அவள்   அவ்வுருவத்துடன்   சிவனை   துதித்து   அற்புத   திருவந்தாதி   இரட்டை   மணிமாலை   போன்ற   பதிகங்களை   .    பாடி    மகிழ்ந்தார் அவருக்கு   .கைலாயம்   சென்று   பரமனை  சேவிக்கும்   பெரும்    ஆவல்   ஏற்பட்டது .  பரம்பொருள்   அன்னையுடன்   வசிக்கும்   தலத்திற்கு   காலால்   நடந்து   செல்வது   தகாது   என்று   தலையாலேயே   நடந்து   மலை   ஏறினார் .

Friday 3 August 2018

 பாண்டிய  நாட்டில்   பரமதத்தனின்   வியாபாரம்   செழித்து   ஓங்கியது .    பெரும்   செல்வந்தனானான் .  அங்கு   ஒரு   பெண்ணை   மணந்து   கொண்டு   ஒரு   பெண்  குழந்தைக்கு   தந்தையானான் .  அப்பெண்ணிற்கு   தான்   தெய்வமாக   மதித்த   தன்   முதல்   மனைவி   புனிதவதியின்   பெயரையே   சூட்டினான் .   வருடங்க  ள்   ஓடின .  காரைக்காலில்   புனிதவதி   கணவன்   வருவான்   என்ற   நம்ப க்கையோடு   காத்திருந்தாள்   வருடங்கள்   ஓட   அவள்   நம்பிக்கை   குறைந்தது .  அப்போது   பாண்டிய   நாட்டில்   அவனை   சந்தித்த   சிலர்  மூலம்    அவன்   பாண்டிய   நாட்டில்   இருப்பது   புனிதாவின்   குடும்பத்திற்கு   தெரியவந்தது .  உடனே   புனிதவதியின்   பெற்றோர்   மிகுந்த   சீர்வரிசைகளுடன்   புனிதவதியை   பல்லக்கில்   ஏற்றிக்கொண்டு   அவனிருக்குமிடம்   புறப்பட்டனர் .  தெய்வத்துக்கு   சமமான   அவள்   தன்னை   தேடி   வருவது   தகாது   என்று   பரமதத்தன்   தன்   மனைவி   குழந்தையுடன்   அவள்  இருக்குமிடம்      வந்து   மனைவி   குழந்தையுடன்   அவள் காலில்   விழுந்து   நமஸ்கரித்தா ன்  .  புனிதவதியும்    மற்றவர்களும்   அதிர்ச்சி   அடைந்தார்கள் .  பரமதத்தன்   அவள்  வணங்க   தக்கவள்   என்பதை   உணர்த்தி   தன்   பெண்ணுக்கு   அவள்   திருநாமத்தையே   சூடி   இருப்பதையும்   விளக்கினான் .

Thursday 2 August 2018

புனிதவதி   அவன்   உண்ட   மாங்கனியை   சிவபெருமான்   அருளால்   பெற்றாள்   என்பதை   பரமதத்தனால்   நம்ப   முடியவில்லை .  அவளை   நம்ப   முடியாமல்   மறுபடி   வரவழைக்க   முடியுமா   என்று   கேட்கிறான் .  அவளும்   வேறு   வழியின்றி   ஈசனிடம்   மன்றாடுகிறாள் .   ஈசன்   கருணை   கடலன்றோ .  மறுபடியும்   ஒரு   கனியை   வழங்குகிறார் .  ஆனால்   பரமதத்தன்    அதை   பெறமுடியாமல்   அது   மறைந்து  விடுகிறது .  அதை   கண்ட   அவன்   அதிசயமும்   ஆச்சர்யமும்   அடைந்து   தன்   மனைவியை   சாதாரண   பெண்ணாக   காண   முடியாமல்   அவளுடைய   தெய்விக   சக்தியை   உணர்ந்த   அவன்   உள்ளத்தில்   அவள்   உயர்ந்து   நின்றாள் .  அவளை   மனைவியாக   சராசரி   பெண்ணாக   ஏற்க   அவன்   மனம்   இணங்கவில்லை .  அவளை   தெய்வத்திற்கு   சமமாக   மதித்தான் .  அதனால்   அவளை   மனைவியாக   நடத்த   மனம்   இடம்   கொடாததால்   அவன்   செய்வதறியாமல்  திணறினான்   அவளுடைய   மனதை   புண்படுத்தவும்   விரும்பவில்லை .  செய்வதறியாமல்  அவன்   வியாபாரம்   செய்ய   கடல்   கடந்து   போவதாக   சொல்லி   கப்பலில்   சரக்கை   ஏற்றிக்கொண்டு   பாண்டிய   நாடு  சென்று   ஒரு  துறைமுகத்தில்   இறங்கினான் .   அங்கு  வியாபாரம்   தொடங்கினான் .

Wednesday 1 August 2018

திரும்பி   வீடு   வந்த   பரமதத்தன்   மனைவியை   தான்   கொடுத்து   சென்ற   மாங்கனியை   கொண்டுவரும்படி   கூறினான் .  புனிதவதியும்   அவ்வாறே   இருந்த   ஒரு   மாங்கனியை   கொண்டுவந்து   கொடுத்தாள் .  அதை    உண்ட   அவன்    அதன்   ருசியில்   மயங்கி   தான்   கொடுத்த   மறறொரு   கனியையும்   கேட்டான் .  திடுக்கிட்ட   புனிதா   என்ன   சொல்வது   என்று   அறியாமல்   சிவபெருமானிடம்   சரணடைந்தாள் .  பழத்தை   பிக்ஷையாக   கொடுத்ததை   எப்படி   சொல்வது   என்று   தயங்கி   ஐயனிடம்   முறையிட்டாள் .  உடனே   அவள்   கையில்   ஒரு   பழம்   இருந்ததை   கண்டு   ஈசனின்   கருணையை   கண்டு   மனமுருகி   அதை   கொண்டுபோய்   கணவனிடம்   கொடுத்தாள் .   அதை    உண்ட   அவன்     பேராச்சர்யம்   அடைந்தான்     அதன்   சுவை   முன்னதைவிட   மிக   உயர்ந்ததாக   இருக்க   அதன்   காரணத்தை   வினவினான்   அவளும்  வேறு   வழியின்றி   நடந்ததை   கூறினாள் .  அவனால்   அதை   நம்ப   முடியவில்லை .

Tuesday 31 July 2018

புனிதவதியும்   பரமதத்தனும்   மனமொத்த   தம்பதிகளாய்   சநதோஷமாக   இல்லற   வாழ்க்கையை   நடத்தலானார்கள் .  பரமதத்தனும்   அவள்   மனம்படி   பல   தரும   காரியங்கள்   செய்துவந்தான் .  சிவனடியார்களுக்கு   அமுது   செய்வித்து   மகிழ்ந்தான் .  இவ்வாறு   மகிழ்ச்சியுடன்   இருந்த   காலத்தில்   ஒருநாள்   அவனுடைய   நண்பர்கள்   அவனை   காண   வந்தனர் .  அவர்கள்   இரண்டு   மாங்கனிகளை   அவனிடம்   கொடுத்தனர் .  அவைகளை   புனிதவாதியிடம்   கொடுத்து   தான்   திரும்பி   வந்து   உண்பதாக   கூறினான் .   அவன்   சென்றதும்   ஒரு   சிவனடியார்   பிக்ஷைக்கு   வந்தார் .  அமுது   படைக்க   உணவு   தயாராகவில்லை   என்பதால்   புனிதவதி   பரமதத்தன்   கொடுத்த  கனிகளில்    ஒன்றை   அந்த   சிவனடியார்க்கு   கொடுத்தாள் .  அவர்   மகிழ்ச்சியுடன்   அதை   உண்டார் .

Monday 30 July 2018

புனிதவதி   வளர்ந்து   யுவதி     ஆனாள் .  அழகு   சிறந்த   குணம்,  நல்ல அறிவு   செல்வம்   எல்லாம்   ஒருங்கே   அமைந்த   அவளுக்கு   நல்ல   வரன்   அமைய   வேண்டுமென்ற   கவலை   பெற்றோர்களுக்கு.  அப்போது   நாகப்பட்டினத்தில்   நிதிபதி   என்றொரு   பெரும்   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .     அவருக்கு   பரமதத்தன்   என்றொரு   பிள்ளை   இருந்தார் .  புனிதவாதியை   பற்றி   கேள்விப்பட்ட   அவர்   பிள்ளைக்கு   அவளை   மணமுடிக்க   ஆவல்கொண்டு   தனதத்தனை   பெண்   கேட்டு   வந்தார்.  இருவருக்கும்   சம்மதம்   இருந்ததால்   திருமணம்   நிச்சயிக்கப்பட்டு    வெகு   விமரிசையாக   திருமணம்   நடந்தது .  பெண்ணை   பிரிந்திருக்க   மனமில்லாமல்     தனதத்தன்   காரைக்காலிலேயே   தனியாக   ஒரு   மாளிகையில்    அவர்களை   குடியமர்த்தினான் .

Saturday 28 July 2018

காரைக்கால்   நகரில்   தனதத்தன்  என்று   ஒரு   வணிகர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்   சிறந்த   சிவபக்தர்   நேர்மை   தவறாத   வணிகர் .  தருமநெறி   தவறாமல்   வாணிபம்   செய்து   பெரும்   பொருள்   ஈட்டி   இருந்தார் .  அவர்   வணிக   குலத்திற்கு   தலைவனாக   இருந்தார் .  அவருக்கு   அழகான   பெண்    ஒன்று   பிறந்தது .  அவளை   பார்த்த   எல்லோரும்   அவள்   பிற்காலத்தில்   எல்லோராலும்   கொண்டாடப்படுவாள்   என்று   கொண்டாடினர் .  சர்வ   லக்ஷணங்கள்   பொருந்திய   அவளுக்கு   தனதத்தன்   புனிதவதி   என்று   பெயர்   சூட்டி   மகிழ்ந்தா.ன்    

Tuesday 24 July 2018

(பெருமிழலை குறும்பர்க்கும்   பேயார்க்கும்   அடியேன் )
  மிழலை   நாட்டிலே   பெருமிழலை   என்றொரு   ஊர் .  அங்கு   குறும்பர்   எனும்   பெரும்   சிவபக்தர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவனடியார்களிடம்   மிகுந்த   அன்பு   கொண்டிருந்தார் .  அவர்களுக்கு   எவ்வித   சேவைகளையும்   தயங்காது   செய்து   வந்தார் .   அவருக்கு   சுந்தரர்   மீது   அளவு   கடந்த   பக்தி .  அவரை   போற்றி   புகழ்வதில்   பேரானந்தம்   அடைந்தார் .  அவருக்கு   அட்டமா  சித்திகளும்   சித்தியாயின .   இவ்வாறு   இருக்கையில்   திருவஞ்சைக்களத்தில்   சுந்தரர்   மறுநாள்   கைலாசம்   செல்ல   இருப்பதை   தன்   ஞான   திருஷ்டியால்   உணர்ந்தார் .  சுந்தரர்   இல்லாத   இவ்வுலகில்   வாழ்வதை   அவர்   விரும்பவில்லை .  கண்   இழந்தவன்   போல்   வாழும்   வாழ்வை   விரும்பாமல்   அவருக்குமுன்   தான்   கைலாயம்   சென்று   விட   எண்ணினார் .    தன்   அபாரமான   யோக   சக்தியால்    தன்   உடல்கூட்டை   விட்டு   ஆன்மாவை   கைலாய   நாத.னின்   காலடியில்   சமர்ப்பித்தார்.அவரோடு  ஐக்கிய மானார் .

Friday 20 July 2018

மஹாராணியாரும்   அரசனின்   இந்த   போக்கால்   மனமுடைந்து   போயிருந்தார் .  அந்த   சமயத்தில்   சம்பந்த   பெருமான்   சோழ   நாட்டு   திருப்பதிகள்   தோறும்   சென்று   சிவபெருமான்   மீது   பதிகங்கள்   பாடி   நாடு   தோறும்   சைவம்   தழைத்தோங்க   பெரும் பாடு   பட்டுக்கொண்டிருந்த   செய்தி   ராணியாரை   எட்டியது .  உடனே   அவர்   குலச்சிறையாரை   அனுப்பி   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   வரவழைத்து   எவ்வாராவது   சமணர்களை   வாதில்   வென்று   சைவத்தை   பாண்டிய   நாட்டில்   மறுபடி   ஸ்தாபிக்க   செய்ய   எண்ணி   அவரிடம்  அனுப்ப   எண்ணம்   கொண்டார் .  அவ்வாறே    குலச்சிறையாரும்    சம்பந்தரை   பணிந்து   அவரை   பாண்டிய   நாட்டிற்கு   அழைத்து   வந்து  சமண  குருமார்களை   எல்லா   வாதங்களிலும்   வென்று  மறுபடியும்  சைவம்  தழைக்க    செய்தார் .  சமணர்களை   கடுமையாக   தண்டிக்க  செய்து   நாட்டை   விட்டு   விரட்ட செய்தார் . மன்னனும்   தன்   தவறை   உணர்ந்து   பிராயச்சித்தமாக   பல   சிவாலயங்களை   கட்டினான்   குலச்சிறையார்   தொடர்ந்து   சைவத்திற்கு   பல   தொண்டுகள்  செய்து  கொண்டு   சில   காலம்   வாழ்ந்து   பிறகு   சிவனடி   சேர்ந்தார் .

Thursday 19 July 2018

[பெருநம்பி   குலச்சிறைதன்   அடியார்க்கு   அடியேன் ]

பாண்டிய   நாட்டிலே   மணமேல்குடி   என்றொரு   ஊர்.  அவ்வூரில்   பிறந்தவர்   குலச்சிறையார் .    அவர்   சிவபெருமான்   மீது   மிகுந்த   பக்தி   கொண்டவர் .  திருநீறு ,  ருத்திராக்ஷம்   அணிந்த   யாரை   கண்டாலும்   சிவனடியாராக   நினைத்து   உபசரித்து   திருவமுது   செய்வித்து   மகிழ்வார் .  இப்பெரும்   குணம்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   கவர்ந்தது .  மன்னன்   அவரை    அமைச்சராக   நியமித்து   கொண்டார் .   பாண்டிய   பட்டமகிஷி   மங்கையர்க்கரசியார்      சிவபக்தி   மிகுந்தவர் .  ஆதலால்   அவர்க்கு   குலச்சிறையார்   மீது   மிகுந்த   மரியாதை   உண்டாயிற்று .   சமணர்கள்   போதனையால்   மனம்  மாறிய   மன்னன்   நெடுமாறன்    சிவனை  மறந்து     சமண   மதத்தை   தழுவலானான் .  அதனால்   மனமுடைந்த    மந்திரியார்   அரசனை   அணுக   தைரியமில்லாமல்   மஹாராணியிடம்    தன்   ஆதங்கத்தை   தெரிவித்தார் .   

Saturday 14 July 2018

உலக   பற்றையெல்லாம்   அடியோடு   துறந்த   அவர்க்கு  இந்த   பொன்னும்   மணியும்   எவ்வித   சலனத்தையும்    உண்டாக்க   முடியவில்லை .  விட்டாரா   ஈசன்   அவர்   மனத்தூய்மையை   சோதிக்க   தேவலோக   பெண்களை   வர   செய்து   அவர்முன்   கவர்ச்சியான   உடைகளுடன்   நடனமாட   செய்தார் .   அவர்   பெண்களை   ஏறெடுத்தும்   பார்க்கவில்லை .   அவர்கள்   அவரை   நெருங்கி   தொட   முயன்றபோது   அவர்   கோபத்தோடு   ஆரூர்   ஈசன்   குடிகொண்டிருக்கும்   என்   இதயத்தை   உங்கள்   அலங்கோலத்தால்   அசைக்க   முடியாது   என்று   கூறி   'பொய்  மாயப்   பெருங்கடலுள் '   எனும்   பதிகம்   பாடினார் .  அம்மாதர்கள்   வெட்கி   தலை   குனிந்து   அவரை   பணிந்து   திரும்ப   சென்றனர்.  நாவுக்கரசரின்   இப்பூலோக   வாழ்வு   முடியும்   காலம்   நெருஙகியது.அவர்  தி  னமும்  மனம்   கசிந்து  உருகி    தன்னை  ஏற்று   கொள்ளும்படி   வேண்டலானார் .  ஐயனும்   மனம்   இரங்கினார் .சித்திரை  மாதம்   சதய   நக்ஷத்திரம்   அன்று '  'உன்னடிக்கே  வருகிறேன் '  எனும்    பதிகம்   பாடினார்   .  ஆடவல்லானும்  மனமிரங்கி   அவரை   ஏற்றுக்கொண்டார் .  அடிகளும்   சிவத்தில்   கலந்து ஐக்கியமானார் .  நமசிவாய !

Friday 13 July 2018

அப்பர்பெருமான்   பாண்டிய   நாட்டு   தலங்களை   சேவித்து   பதிகங்கள் ,  தாண்டகங்கள்   பாடிக்கொண்டும்   உழவார   பணிகளை   செய்து கொண்டும்   சோழநாட்டு   தலங்களையும்   சேவித்து   மனமகிழ்ந்தார் .  திருப்புகலூர்   வந்தடைந்தார் . அங்கு   ஐயனை   மனதார   தொழுது   கொண்டும்  பதிகங்கள்  பாடிக்கொண்டும்   தன்   உழவார   பணியையும்   விடாமல்   செய்து   கொண்டும்   காலம்   கடத்திக்கொண்டு   இருந்தார் .  ஈசனுக்கு   அப்போது   அவருடைய   உள்ளத்தை   சோதிக்க   எண்ணம்   எழுந்தது .  அவர்   பணி   செய்யும்   இடங்களில்   எல்லாம்   முத்துக்கள் ,  மணிகள் ,  வைரம்   விலை   உயர்ந்த   பொருள்கள்   தோன்ற   செய்தார் .  பணியில்   ஈடுபட்டிருந்த   நாவுக்கரசர்     இவை   எதையும்   கவனித்ததாக   தெரியவில்லை.  எல்லாவற்றையும்   சுத்தம்  செய்து   குளத்தில்   எறிந்தார் .

Tuesday 10 July 2018

திருப்பூந்துருத்தியில்   அப்பரும்   சம்பந்தரும்   சேர்ந்து   இறைவனை   தொழுது    மகிழ்ந்தனர் . பிறகு   அப்பர்  சம்பந்தரிடம்  அவருடைய   பாண்டியநாட்டு     பயணத்தை   குறித்து   அறிந்து   கொள்ள   ஆவலை   தெரிவித்தார் .  சம்பந்தரும்   பாண்டிய   பட்டத்தரசி   மங்கையர்க்கரசி   அமைச்சர்   குலச்சிறையார்   அவர்களின்   வேண்டுகோளுக்கு   இணங்கி   மதுரை   சென்றதையும்   அங்கு அனல்   வாதம்   புனல்   வாதம்   என்று   எல்லா   வாதங்களிலும்  சமணர்களை   வென்றது ,  கூன்பாண்டியனின்   நோயை   குணமாக்கி   அவருடைய  கூனை   நிமிர்த்தி   அவரை  'நின்றசீர்நெடுமாறன் '  ஆக   மாற்றியதை   விரிவாக  கூற  .  அப்பர்  புளகாங்கிதம்   அடைந்தார் .  அரசன்   மனம்   மாறி   சமணர்களை   கடுமையாக    தண்டித்ததையும்  தானும்   முழுமையாக   சைவத்திற்கு   மாறி   எம்பிரானுக்கு   பல   ஆலயங்கள்   எழுப்ப   பேராவல்   கொண்டது  பற்றியும்   தெரிவித்தார் .  அப்பர்   இச்செய்திகளை   கேட்டு   பேரானந்தம்   அடைந்தார் .  சம்பந்தர்   அங்கிருந்து   சென்றதும்   அப்பரும்   சில   நாட்கள்   அங்கு   தங்கி   உழவார   பணி   செய்துவிட்டு   தன்  பயணத்தை   தொடர்ந்தார் .  திருநெல்வேலி ,  திருப்புகலூர்  போன்ற   இடங்களுக்கு   சென்றார் .

Friday 6 July 2018

திருவையாறில்   நாவுக்கரசர்   சில   நாட்கள்   தங்கி   உழவார   பணி   செய்தார் . பிறகு  சில   தலங்களை   தரிசித்தபின்   திருப்பூந்துருத்தி   வந்து   சேர்ந்தார் .  அப்போது   ஞானசம்பந்தர்   பாண்டிய   நாட்டில்   சமணர்களை  எல்லா  வாதிலும்   வென்று   அங்கு   சைவத்தை   நிலைநாட்டி   பாண்டியனின்   நோய்   தீர்த்து   அவர்   கூனையும்   நிமிர்த்தி   மனநிறைவோடு   வரும்   செய்தி   கேட்ட   அப்பர் பெருமான்   இறைவனின்   திருவருளை   பூர்ணமாக   பெற்ற   அத்திருமகனை   தோளில்   சுமக்க   பேராவல்  கொண்டார் .  அடியார்   கூட்டம்   பின்தொடர   பல்லக்கில்   அவரை   கண்டதும்   தனியாக   அந்த   கூட்டத்தில்   மறைந்து   சென்று   சிவிகையை   நெருங்கி   தாமும்   அச்சிவிகையை   தாங்கி   தொடர்ந்தார் .  திருப்பூந்துருத்தி   அடைந்ததும்   நாவுக்கரசரும்   அங்கிருப்பதை   கேள்விப்பட்டு   பெரும்   மகிழ்ச்சி   அடைந்த   சம்பந்தர்   அப்பர்பெருமான்   எங்கே  என்று   ஆவலுடன்   வினவ   அப்பர்  '  இதோ   தங்கள்   சிவிகையை   தாங்கும்   பாக்கியம்   பெற்று   இங்கே   இருக்கிறேன் '  என்று   பதில்   உரைத்தார் .   சம்பந்தர்   பதைபதைத்து   ஐயா   தாங்கள்   என்னை   சுமைப்பதா ?  என்னை   இப்பாபத்திற்கு   ஆளாக்கி   விட்டிர்களே '  என்று   சொல்லி   சிவிகையிலிருந்து   குதித்தார் .  அவரை   அப்பர்   வணங்க   சம்பந்தர்   அப்பரை   வணங்க   அடியார்கள்   மகிழ்ச்சி   ஆரவாரம்   செய்தனர் .   

Sunday 1 July 2018

ஈசன்   அப்பரின்   உறுதியை   கண்டு   மகிழ்ந்து     அவருக்கு   தோற்றமளித்து   'அன்பரே   பக்கத்திலுள்ள   குளத்தில்   மூழ்கி   திருவையாற்றில்   குளத்தில்   எழுந்திருங்கள் .  அங்கு   கைலை   காட்சியை   காண்பீ ர்கள்.'  என்று   கூறி   மறைந்தார் .  மெய்சிர்த்து   அப்பர்பெருமான்   அக்குளத்தில்   மூழ்கி   எழும் போது காவிரி   கரையில்   திருவையாற்றில்      ஐயாறப்பன்   கோயில்   குளத்தில்   எழுவதை   கண்டு   உள்ளம்   சிலிர்த்து    போனார் .  அதைவிட   அவர்  உடலில்   ஒருவித   காயமும்   இன்றி   தேய்ந்த   உறுப்புகளெல்லாம்   வளர்ந்து   பழைய   நிலையை   அடைந்த்திருப்பது   கண்டு   ஐயன்  கருணையை   நினைந்து   நெக்குருகி   போனார் .   'யாதும்   சுவடு   படாமல்    ஐயாறடைகின்ற   போது '' .  ஆலயத்தை   அடைந்து   ஐயனை  சேவிக்கும்போது   அவர்   கண்ட   காட்சி   அவரை   மெயசிலிர்க்க   வைத்தது .  பனி  மூடிய   கைலாய   சிகரம்   உச்சியில்   ஒரு  மணிமண்டபம் .  அதில்   உயர்ந்த   ஆசனத்தில்   ஈசன்   உமை   அன்னையுடன்   வீற்றிருக்கிறார்.  தேவர்கள்   சித்தர்கள்   கின்னரர்கள்   எல்லோரும்   வந்து    பணிந்து   போற்றுகிறார்கள் .  யோகிகள்  முனிவர்கள்  வந்து   போகிறார்கள் .  ஒரு   கணம்   இவ்வறிய   கைலாய   காட்சியை   கண்டு   மிக்க   ஆனந்தம்   எய்தி  '' மாதர்   பிறை   கண்ணியானை ''  என்ற   பதிகம்   பாடுகிறார் .

Saturday 30 June 2018

அப்பருடைய   இந்த   கோலத்தை   கண்டு   மனம்   பொறாமல்   ஈசன்   ஒரு   முனிவர்   வடிவில்   அங்கு   தோன்றினார் .  அங்கு   ஒரு  குளத்தையும்   உண்டாக்கினார் .  அவர்   அப்பர்   இருக்குமிடம்   சென்று   அவரை   நோக்கி '    ' எங்கே   இத்தனை   கடுமையான   பாதையில்  இந்த   பரிதாபமான    கோலத்தில்   செல்கிறீர்கள் ?'  என்று   வினவினார் .  எம்பிரான்   உமை   அன்னையுடன்   அருட்காட்சி   அருளும்   கைலாயத்தை   நோக்கி   செல்கிறேன்   என்று   அப்பர்   பெருமையுடன்   பதிலுரைத்தார் .  முனிவர்   கலகல   என்று   நகைத்து   '  உம்மை   காண   பரிதாபமாக   இருக்கிறது .  கைலாயம்   செல்வது   சாதாரண   காரியமா ?  விண்ணவர்களுக்கும்   மிக  அரிதான   கைலாயத்தை   மானிடராக   காண   நினைப்பது   பேதைமை .  திரும்பி   சென்று   விடுங்கள் .  அதுதான்   உமக்கு  நல்லது   என்று   உரைத்தார் .   அப்பர்   முகம்   வாடியவராய்   இத்தனை  சிரமப்பட்டு   இத்தனை   தூரம்   வந்து  விட்டேன்.  அக்காட்சியை   காணாமல்   போவதாக   உத்தேசம்   இல்லை .  என்று   பிடிவாதமாக   உரைத்தார் .   அவர்   உறுதியை   கண்டு   ஈசன்   மகிழ்ந்து   மறைந்து   போனார் .