Thursday 28 November 2013

அவர்கள்  பாடல்கள்  சில ,
ஆடும்சிதம்பரம் - பெஹாக்
அறிவுடையோர் -சக்கரவாகம்
எந்நேரமும் - தேவகாந்தாரி
சிவகாமசுந்தரி -ஜகன்மோகினி
வருகலாமோ -  மாஞ்சி
.தந்தைதாய் - ஷண்முகப்ரியா  
தமிழ்த்தாத்தா  என்று  அன்புடன்  அழைக்க  படும் உ.வே.சாமிநா தையர்  அவர்கள்  பாரதியிடம்  சிறிது  காலம்  சங்கீதம்  பயின்றார் . அவர்  சரிதத்தையும்  எழுதியுள்ளார் . கோபாலக்ருஷ்ண  பாரதி  1000 மேல்  பாக்கள்  எழுதி யுள்ளார் . இவ்வாறு  பெரு  வாழ்வு  வாழ்ந்த  அவர் 1896ல்  இறைவன்  அடி  சேர்ந்தார் . அவர்  பாடல்கள்   மங்கா  புகழோடு  இன்றும்  ஒலிக்கின்றன . இன்னும்  ஒலிக்கும்  

Tuesday 26 November 2013

இந்த  நந்தன்  சரிதம்  வெகுவாக  புகழ்  பெற்றது . அதில்  சில  பாடல்கள்  அபூர்வ  ராகங்களில்  அமைக்க  பட்டிருக்கின்றன . இந்த  பாடல்கள்  திரைப்படம்  மேடை நாடகம் ,  கச்சேரிகள்  என்று  பலவாறாக   புகழ்  பெற்றன . இன்னும்  பாடப்படுகின்றன . இவர்  பாடல்களில் ( கோபாலக்ருஷ்ண ) என்ற முத்திரை  காணாலாம் '
  ஒரு சமயம்    இவர்  த்யாகப்ர்ம்மத்தை  காண  சென்ற  போது  அங்கு  ஆபோகியில்  ஒரு  பாடல்  காதில்  விழ  அவர்  அங்கேயே  சபாபதிக்கு  என்ற  ஆபோகி  பாட்டை  பாடியதாக    கூறபடுகிறது       

g.bharathi

நந்தனார்  தாழ்ந்த  குலத்தை   சேர்ந்தவர் . அவர் சிவ  பெருமான்  மேல்  ஆழ்ந்த  பக்தி  கொண்டு  மார்கழி  திருவாதிரை  அன்று  தில்லை  சென்று  அம்பலவாணனை  தரிசிக்க  அடங்கா  ஆவல்  கொண்டார் .ஆனால்  அவ்வாசை  நிறைவேர  மேல்  ஜாதிகா ரர்களால்  பெரும்  எதிர்ப்பை  காண  வே   ண்டி இருந்தது . நந்தனார்  தில்லை  நாதனை  வேண்ட , அவர்  இவனை  கோவிலுக்கு  வரவழைத்து  தன்னுள்  சேர்த்துக்கொண்டார் . இது வே   நந்தனார்  சரிதம் .       

Saturday 23 November 2013

g.bharathi

அவர்  ஊராரால்  தள்ளி  வைக்கப்பட்டார் .வித்வான்  மீனாட்சிசுந்தரம் பிள்ளை  அவர்கள்  பாரதியை  வேதநாயகம்பிள்ளை க்கு  அறிமுகம்  செய்து  அவருடன்  தங்கவைத்தார் . அங்கே  அவர்  நந்தனார்  சரித்திரத்தை  எழுதினார் . சேக்கிழார்  பெரிய  புராணத்தை  மைய மாக  கொண்டு  அந்த  சரிதம்  அமைந்தது . இதற்க்கும்  பெரும் எதிர்ப்பு   எழுந்தது . பிறகு  பெரும்  புகழும்  தேடி  தந்தது . 

Thursday 21 November 2013

bharathi

கோபாலக்ருஷ்ண  பாரதி  ஆனந்த தாண்டவபுரத்திற்கு  குடிபெயர்ந்தார் . அங்கு  கோவிந்த யதி  என்பவரிடம்  வேதம்  பயின்றார் . அவர்  யோகம் , த்யானாம்   என்று  ஒரு  தவ  வாழ்வே  வாழ்ந்தார்.ஜாதி ,மத  இன  வேறுபாடே  அவர்  பார்க்கவில்லை . எல்லோரும்  அவருக்கு  சமம் . அவர்  திருநீலகண்டர்  வாழ்க்கையை  கதா  காலக்ஷேபமாக  இயற்றினார் . திருநீலகண்டர்  தாழ்ந்த  குலத்தவன்  என்பதால்  பெரும்  எதிர்ப்பு  எழுந்தது . 

Wednesday 20 November 2013

bharathi

கோபால  கிருஷ்ண பாரதி தஞ்சை ஜில்லா  நரிமணம்  கிராமத்தில் 1811ல்  பிறந்தார் .  அவருடைய  முன்னோர்கள்  சம்ஸ் க்ரிதம் ,சங்கீதம்  இரண்டிலும்  தேர்ச்சி  பெற்றவர்கள் .அவரும்  சிறுவயது முதலே  கர்நாடக .ஹிந்துஸ்தானி  சங்கீதங்களிலும்  மிகுந்த ஆர்வம்  கொண்டிருந்தார் .பலவாராக  கேட்டறிந்து  கற்றார்.   

Thursday 14 November 2013

tamilisai

இதுவரை நாம்  கண்ட  எல்லா  தமிழ்  பாடல்களும்  கிடைத்தற்கறி யவை  எல்லை யில்லா  பக்தியை  தன்னகத்தே  கொண்ட  பாடல்கள் . பாடும்பொழுதே  நமக்கு  கண்ணீரை வரவழைக்க  கூடியவை . பாடியவர்களும்  தான்  பாடிய  தெய்வத்துடன்  ஐக்கியமாகி  தன்னை  மறந்த  நிலையில் பாடிய  பாடல்கள் . அத்தகைய  பாடல்கள்  இனி  காண்பது  அரிது
    .சங்கீத  மும்மூர்த்திகளூக்கு  பின்  வந்த சாகித்யகர்த்தாக்கள்  பாடல்களில் பக்தி  முக்கிய  அம்சம் . ஆனால்  முன்னவர்கள்  பாக்களில்  இருந்த  ஆழ்ந்த  பகவத்  ஈடுபாடு  எதிர்பார்பதற்க்கில்லை  

Tuesday 1 October 2013

வெங்கடகவி பாடல்கள் எல்லாம் காலத்தால் அழியாதவை. அவருடைய குரு பாடல்கள். காளீங்கனர்த்தன பாடல் பிரசித்த்ம். அவருடைய

தாயே யசொதா பாடலுக்கு நடனம் ஆடாத நடனமணீகளே இருக்க முடியாது.அலை பாயுதே, குழலூதி மனமெல்லாம், ஆடாது அசங்காது

வா கண்ணா   எல்லா  பாடல் களும்  மெய் மற க்க  செய்பவை .அவருடைய 
கிருஷ்ண  கானத்தால்  தமிழ் இசை  மேலும்  பெருமை  அடை கிற து . 
 

Sunday 29 September 2013

venkatakavi

வேங்கட கவி  சம்ஸ்க்ருதம் ,தமிழ் ,மராட்டி  மூன்று  பாஷைகளிலும்  புலமை  பெ ற்று  இரு ந்தார் .அவர்  பாடல்களில் 
காவடி சிந்து ,கிருதி , தில்லானா ,அபூர்வ  தாளங்கள்  என  பல புது
அம்சங்கள்  வெளி படு கின்றன .பக்தி , எளிமை   பறை  சாற்ருகின்றன .அளவு  கடந்த  பக்தி  புலனா கிறாது.



 

Thursday 26 September 2013

venkata

வெங்கடகவீயின் பாடல்கள் 500 க்கு மேல் இப்பொழுது நமக்கு கிடைத்துள்ளன. அதற்கு நாம் வெங்கடகவீன் சகோதரருக்கும்

அவர் சந்ததியினருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

Wednesday 25 September 2013

venkadakavi

அந்த  பாடல்கள்  நம்மையும்  உருக  வைக்கும் . அவ  ருக்கு  மானிட  குருவாக  வழி  காட்டியவர்  பாஸ்கரராயர்  என ரூ  சொல்லப்படுகிறது .அபூர்வ  ராகங்கள் , அபூர்வ  எடுப்புகள் ,பாடல்  நடுவில்  மத்யம  காலத்தில்  சரணங்கள்  என  புதுமைகள்  பல  இவர்  பாடல்களில்  காணலாம்.  
வெங்கட சுப்பய்யர் காளீங்க நர்த்தன க்ருஷ்னனை மனமுருக துதித்து அவரையே குருவாக மதித்து பாட தொடங்கினார். அவர்  குரு  பெருமையை  நெகிழ்ந்து  உருகி  நிறைய பாடல்கள்  பாடிஉள்ளார .

Sunday 22 September 2013

oothukadu

ஊததுகாடு   வேங்கடகவி  என்ற  ம ஹான்  தமிழ்   நாட்டில்   ஊத்துகாடு  கிராமத்தில்  (1700-1765) ல்  வாழ்ந்தவர் . அவர்  பெற்றோருக்கு  ஐந்து  குழந்தைகளில்   மூத்த  மகனாக  பிறந்தார் .
அவர்  குடும்பம்  மன்னார்குடியை  சுற்றி  சில  கிராமங்களில்  வாழ்ந்து  பிறகு  ஊத்துகாடு  கிரா மத்த்தில் குடியேறினர் . வேங்கட கவியின்     இயற்பெயர்  வேங்கடசுப்பையர் . அவருக்கு  சிறு  வயது  முதலே  சங்கீதத்தில்  மிகுந்த  ஆர்வம் .  நல்ல  குருவை  தேடி அலைந்தார் . குரு  கிடைக்காமல்  மனம்  நொந்த  அவர்  அந்த  ஊர்  காளீங்க  நர்த்தன  கிருஷ்ணர்  கோவிலை  அடைந்தார்     

oothukau

மும்மூர்த்திகளின்  சமகாலத்தில்  வாழ்ந்த  மற்றொரு   மகா  கவி  ஊத்துகாடு  வேங்கடகவி  ஆவார் . 

Tuesday 17 September 2013

kavikunjara

கவி  குஞ்சர  பாரதி  சிவகங்கை  ஆஸ்தான  வித்வான்  ஆனார் . அவருடைய  அழகர் குறவஞ்சி  கோவில்களில்  நாடகமாக  நடிக்கப்பட்டன . இது  மக்களால்  பெரிதும்  பாராட்ட  பட்டது . ராமநாதபுரம்  மன்னனும்  இவர்  பாடல்களால்  பெரிதும்  கவரப்பட்டு , அவரை  தன்னுடைய  ஊர்  ஆஸ்தான  வித்வானாக  நியமித்தார் . குஞ்சரபாரதி  கந்தபுராண  கீர்த்தனைகள்  சுப்ரமண்ய  அவதாரம்  குறித்த  பாடல்கள்  புத்தகமாக  வெளியிட்டார் . அவர் பாடல்கள்  அதிகம்  தெரியவில்லை .' எல்லோரையும்  போலவே' சுத்ததன்யாசி  ப்ரபலமானது . அழகர்  குறவஞ்சி   மாலழகர்  மேல் மையலுற்ற  பெண்  பாடுவது  போல்  அமைக்கப்பட்டது .பாரதி 86 வயது வறை   தவ  வாழ்வு   வாழ்ந்தார் .மழை  இல்லாமல்  மக்கள்  வாடிய  போது  வெண்பா  பாடி  மழை  வரவழைத்தார்  என்று  கூறப்படுகிறது . 86ஆவது  வயதில்  அவருடைய  பக்தர்கள்  பக்தி  பாடல்கள்  பாட  அவ்வாறே  அவர் இறைவன்  அடி  சேர் ந்தார்   என்று  கூறப்படுகிறது . 

Saturday 7 September 2013

koteeswara3

கோடீஸ்வரர்   18 வயதானபோது  கடுமையாக  நோய்வாய்ப்பட்டார் . அப்போது  அவர்  கனவில்  அந்த  ஊர்  அம்மன்  தோன்றி  தன்னை  போற்றி  பாடல்  புனையும்படி  கேட்டு  கொண்டாளாம் .உடனேயே   அவர்   நலமடைந்து   பாடல்  புனைய  துவங்கி  விட்டதாக   கூறப்படுகிறது . கோவிலில்  அம்மனை  துதித்து   பாடினாராம் . இவருடைய   முக்கிய  படைப்புகள்  அழகர்  குறவஞ்சி , அழகரை  துதித்தும் ,அடைக்கலமாலை ,கயற்கண்ணி மாலை  இரண்டும்   மீனாக்ஷி  அம்மையை   துதித்தும் ,திருவேங்கடமாலை   வேங்கடவனை  போற்றியும்  பாடப்பெற்றன .சிவகங்கை ஜமீந்தார்  அவர்  பாடல்களி ல்  மயங்கி  அவருக்கு ' கவிகுஞ்சரம் '    என்று  பட்டம் வழங்கி  ஒரு  கிராமத்தையும்  பரிசளித்தாராம் .

Tuesday 3 September 2013

koteesvara

இவருடைய  தாய்தந்தையர்  முருகனை  பக்தியுடன்  பிரார்த்தித்து  அவனருளால்  பிறந்தவர்  கோடீஸ்வரன் . சிறு  வயது  முதலே  அவர்  தமிழ் , சம்ஸ்க்ருதம்  இரு   பாஷை களிலும்   தேர்ச்சி  பெற்று  விளங்கினார் .12 வய  திலேயே மதுரகவி பாரதியுடன்  மிக அறிவுபூர்ந்த  தர்க்கங்களில்  ஈடுபடுவாராம் . கவிதை , சங்கீதம்  இவைகளிலும்  தேர்ச்சி  பெற்று  விளங்கினாராம் .சிறு  வயதிலேயே   தன்  இஷ்ட  தெய்வங்களான   மீனாட்சி அம்மை , முருகன்  பேரில்  பாடல்  புனைய   தொடங்கினாராம் .  

Saturday 31 August 2013

kavikunjara

சங்கீத  மும்மூர்த்திகள் வாழ்ந்த  சம  காலத்தவர்  இரு  பெரும்
தமிழ்   கவிஞர்களை  பற்றி  இப்.போது   பார்க்கலாம் . கவி  குஞ்சர பாரதி  மற்றும்   ஊத்து காடு  வேங்கடகவி .இவர்கள்   பக்தியுடன்  படைத்த   பாடல்கள்  பக்தி ,இனிமை ,எளிமை  எல்லா சுவைகளூடனும்  கேட்பவரை  மெய்மறக்க  செய்தன . கவி குஞ்சர பாரதி  1810முதல்1896 வறை    இவ்வுலகில்  வாழ்ந்தார் . இயற்  பெயர்   கோடீஸ்வரர்  என்ற  அவருடைய  தாத்தா வின்  பெயராகும் . திருநெல்வேலி   ஜில்லாவில்  பெருங்கரை  என்ற  கிராமத்தில்  பிறந்தார் . அந்த கிராமம் ராமநாதபுரம்   மன்னர்  ரகுநாத  சேதுபதியால்  அவர்   குடும்பத்திற்கு   பரிசாக  அளிக்கப்பட்டது .  

Monday 15 July 2013

tamilisaiarunachalar

அருணாச்சல  கவியின்  படல்கள ஏன்(  பள்ளீகொண்டீர்)
  மோகனம் , யாரோ  இவர்  யாரோ  (பைரவி ) ராமனை  கண்ணார  கண்டானே ) மோகனம் . இவை சில .
  மாரிமுத்து  பிள்ளை  தில்லையில்  பிறந்து  வாழ்ந்தவர் . ஆடலரசர்  நடராஜரின்   மேல்  அளவு  கடந்த  பக்தி  கொண்டவர் .
இவரை  பற்றி  அதி கம்   தெரியவில்லை .பாடல்களும்  நிறைய  கிடைக்கவில்லை  காலை தூக்கி (யதுகுல  காம்போதி ),  எதுகித்தனை  மோடி (சுருட்டி ) எந்நேரமும் (தோடி ) இவை  சில .. 

tamilisai arunachalakavi

அருணாஆசலகவிரா யர்  தஞ்சையில்  பெரிய  இசை  குடும்பத்தில்   பிறந்தார் .  தஞ்சை  அரசனால்  கௌரவிக்க  பட்ட  குடும்பம்   ஆதலால்  இவர்   சாகித்தியங்கள்  நிறைய  பாதுகாக்க  பட்டன .இவருடைய    ராம காவியம்  தமிழில்  மிக பிரபலம் . இவர்  சாகித்தியங்களுக்கு  இவருடைய  சிஷ்யர்கள்  இசை  அமைத்ததாக   சொல்லப்படுகிறது . இவர்   பாடல்களில்  நிறைய  பழமொழிகள்  காணப்படுவதாக  சொல்லப்படுகிறது .(பழம்   நழுவி  பாலில்  விழுந்தார்போலாச்சே ) ராமனுக்கு  மன்னன் முடி  என்னும்   பதம் .ஒரு  சிறிய  உதாரணம் . இவர்  ராமநாடகம்   ஸ்ரீரங்கம்   கோயிலில்  அரங்கேறியதாக   கூறப்படுகிறது .  ராம நாடகம்  தவிர  ஹனுமான்  பிள்ளைத்தமிழ்  மற்றொரு  தொகுப்பு .

Tuesday 9 July 2013

tamilisai

இவ்வாறு முத்துதாண்டவர்  தன்  இசை  வாழ்க்கையை  தொடங்கினார் . அவர் நடராஜரிடம்  அலாதி  ஈடுபாடு  கொண்டதாக    தெரிகிற்து . ஒரு நாள்  அவர்  கோவிலுக்கு  செல்லும்போது  கொள்ளிடம்  கரைபுரண்டு   ஓட  அவர்  கரையில்
நின்று  தன்யாசியில்  (காணாமல்   வீணே  காலம் கழித்தேனே ) என்றூ  மனமுருக  பாட , த்ண்ணீர்  வழி  விட்டதாக  கூற்ப்படுகிறது . துரதிஷ்டவசமாக   இவர்  பாடல்கள்  மிக  சிலவே  கிடைக்க  பெற்றன .அருமருந்து  ஒன்று  தனி மருந்து  (மோகனம் ) பேசாதே  நெஞ்சமே (தோடி ),தெருவில்  வரானோ (கமாஸ் ) சேவிக்க  வேண்டும்  (ஆந்தோளிகா )   

tamilisai

தமிழ்  மூவரில்  மூத்தவர்  முத்து  தாண்டவர்  இவர்  சீர்காழியில்  இசைவேளாளர்  குடும்பத்தில்  பிறந்தார் . பிறந்தபோதே  கொடிய தோல்  நோயோடு  பிறந்தார் .ஆதலால்  எல்லோராலும்    உதாசீன  படுத்தப்பட்டு  தனிமையில்  வாழ்ந்தார் .சதாகாலமும் பக்கத்தில்  ஒரு அம்மையார்  பாடும்  சிவதுதி  பாடல்கள் கேட்ட வண்ணம்  காலம்  தள்ளினார் . பிறகு  தில்லை  சென்று  சிவனை  துதி  த்த  வண்ணம்  இ ருந்தார் . அங்கும்  பக்தர்கள்  பாடும்  பாடல்களை  கேட்டவண்ணம்  வாழ்ந்தார் . ஒருநாள்  இவர்  கோவில்  வாகன  அறையில்  மயங்கி  கிடக்கையில்  அர்ச்சகர்  அந்த  அறையை  பூட்டிக்  கொண்டு  போய்விட்டார் . அப்போது   அம்பாள் அர்ச்சகர்  பெண்  வடிவில்  வந்து  அவருக்கு  சாப்பாடு  ஊட்டிவிட்டு  அவரிடம்  நாளை  கோவிலுக்கு  சென்று  அங்கு  கேட்கும்  முதல்   வார்த்தையை  வைத்து  ஐயன்  மேல்   பாட்டு  பாடு  என்று  சொல்லி  ம்றைந்தாளாம் . மறுநாள்    அவர்  உடல்  நலம்  பெற்று  இருப்பதை  ஊணார்ந்தாராம் . அன்று முதல்  நடராஜரை  பாடுவதிலேயே  காலம்  கழித்தார்              

Thursday 4 July 2013

tamilisai

இறைய  கர்நாடக  இசையின்  மும்மூர்த்திகளாக  விளங்கும்  தி  யாகையர் , தீஷிதர்  மற்றும்  சாமாசாச்த்திரிகள்   இவர்களுக்கு  ஒரு சில  நுற் றாண்டு  முன்பே  வாழ்ந்தவர்கள்  இந்த  தமிழ்  மும்மூர்த் திகள்.அவர்கள்  முத்துத்தாண்டவர் , அருணாசல கவி ,மற்றும்  மாரிமுத்து பிள்ளை  ஆவர் .பாடல்களை   பல்லவி ,அனுபல்லவி  சரணம்  என்று  பாடும்  முறை  இவர்கள்  காலத்தில்  தான்  துவங்கியது . துரதிஷ்டவசமாக  இவர்கள்  பாடல்கள்  வெகு  சிலவைகளே  கிடைக்க  பெற்றன 

Tuesday 2 July 2013

tamilisai

திருமலைமாற்றூ ,
யாமா மாநி  யமாமா  யாழி காமா  காணாக
காணாகாமா  காழீயா மாமாயநி  மாமாயா
பாட்டை  இடமிருந்து  வலமும்  வலமிருந்து  இடமும்  ஒரே  சொல்கள்  இருக்கும் . இவ்வாறு  தொகுப்பில்  எல்லா  பாடல்களும்  அமைந்திருக்கும் . திருஞானசம்பந்தர்  பாடிய  பாடல் இது .நின்று  ஆற  அமர  யோசித்து  பாடிய  பாடல்கள்  அல்ல  இவை . ஈசன்  முன்  நின்று  மாத்திரத்தில்  பாடிய  பாடல்கள்  இவை .பொருள்  சுவையும்  குறையாதவை ..பிரமிக்க  வைக்கும்  படைப்புகள் .
பரம்பொருள்  பேரருளை  பெற்ற  மகான்கள்  பாடியவை .  

tamilisai

அந்தாதி ,திருமாலை மாற்று ,என்று  பாடல்  தொகுப்புகள்  உள்ளன .அந்தாதி என்றால்  தொகுப்பில் முதல்  பாட்டின்  கடைசி  வார்த்தை  தொகுப்பின்  அடுத்த  பாட்டின்  முதல்  வார்த்தையாக  இருக்கும் . எல்லா பாடல்களும்  அவ்வாறே  வரும் . இப்படி  100 பாடல்கள்  கொண்டது  நூற்றாந்தாதி . உதாரணமாக  பொ ய்கைஅழ்வார், பூதத்தாழ்வார் , பேயாழ்வார்  பாடிய  மூன்று  நூற்றாந்ததிகள்  திருமழிசைபிரான்  பாடிய  நான்முகன்  திருவந்தாதி  அபிராமிபட்டர்  பாடிய அபிராமியநதாதி  இவையாகும் ,     

tamilisai

தேவாரம் , ப்ரபந்தம்  மற்ற  அந்த  காலத்தில்  பக்தியுடன்  படைக்கப்பட்ட  பாடல்களில்  சில  விசேஷமான  பாடல்களை  பற்றீ  இங்கு  குறிப்பிட  விரும்புகிறேன் . பிறகு  இன்றைய  தமிழ்  இசை  பற்றி  மீண்டும்  பார்க்கலாம் .ஈசனால்  அருளப்பட்ட   தமிழுடன்  பக்தர்கள்  எவ்வாறு  வி ளையாடினார்கள்  என்று  பார்ப்போம் .






  

Tuesday 18 June 2013

தமிழிசை  அங்கீகாரத்திற்கு  சா ன்றாக கர்னாடக   சங்கீதத்திற்கு,   சென்னையில    ச ங்கீத  அகாடமியின்  மிக  பெரிய  விருதான  சங்கீத  கலாநிதி  விருது  சில ஆண்டுகளுக்கு  முன்  தேவார விற்பன்னர்  தருபுரம்  சுவாமிநாதன்  அவர்களுக்கு  வழங்கப்பட்டது . 

Friday 7 June 2013

இவ்வாறு  பக்திஇசை யாக  துவங்கிய  தமிழிசை  இன்று  பக்தி  பாடல்கள்  மற்றும்  மக்கள்  மனதிற்கு  இதம்  அளிக்கும்  பாடல்கள்
என  பல  பரிமாணங்களில்  வளர்ந்து   நிற்கின்.றன.தமிழில்  ராமாயண  பாடல்கள் , நந்தனார்  பாடல்கள் கிருஷ்ணகா னம் இவை  திகட்டாத  பாடல்கள் . ,,,  
தமிழ்  பாடல்கள்  பாடல்கள்  இயற்றப்பட்டாலும்  சபை கச்சேரிகளில்  அரங்கேற  முக்கிய  பங்காற்றியவர்  ராஜா  முத்தையா  செட்டியார்  ஆவார் .சிதம்பரம்  அண்ணாமலை
சர்வகலாசாலையில்  தமிழிசைக்கென  ஒரு  தனி  கல்லூரி  அமைத்தார் .பெரிய தமிழிசை  புலவர்கள்  தலைமை  தாங்கசெய்தார்  .
பண் ஆராய்ச்சி  செய்ய  வகை  செய்தார் . மேடையில்  தமிழ்  பாடல்கள்  பாடப்படுவதை  சில  வித்வான்கள்  எதிர்ப்பு  தெரிவித்தனர் . அதனால்  சென்னையில்  தமிழ் சங்கம்  துவக்கி
அஙகு  ஆராய்ச்சிக்கும் , விவாதங்களுக்கும்  இடமளித்தார் . பெரிய  அரங்கம்  அமைத்து  வருடம்  ஒருமுறை  10 நாட்கள்  தமிழிசை
 .கச்சேரிகள்  நடத்த  ஏற்பாடுகள்  செய்யப்பட்டன . இவ்வாறு  தமிழ் இசை  தொடங்கி  இப்போது  எல்லா  மேடைகளிலும்  தமிழ் பாடல்கள் முழங்குகின்றன .   

Thursday 6 June 2013

சென்ற  இரு  நூற்றாண்டுகளீல்  தமிழ் அறிஞர்களின்  பெரும்  முயற்ச்சியால்  தமிழிசை  மேலே  வர  தொடங்கியது .தமிழ்  கவிஞ்யர்கள்  தோன்றினர் . அவர்களில்  சிலர் .அருணாசல கவிராயர் , கவிகுஞ்சரபாரதி ,முத்துத்தாண்டவர் ,முத்தையா  பாகவதர் , ஊத்துக்காடு  வேங்கடசுப்பையர் , பாபநாசம்சிவன் ,கோபாலக்ருஷ்ண  பாரதியார் ,சுப்பிரமணிய பாரதி  . இவர்கள் பாடலில் பக்திரசமும் ,நாட்டியத்திற்கு  ஏற்ற
சாகித்யமும் இருந்தன .பக்தியும் ,பாமர மக்களும்  ரசிக்கும்  வண்ணமும்  இருந்தன . 
பக்தியால்  தமிழிசை  வளர்ந்த  காலத்திற்கு  சில நூற்றா ண்டுகள்
முன்பே தமிழ்  நாட்டில்  இசையும்  நாட்டிய  கலையும்  மிக  உன்னத  நிலையில் இருந்திருப்பதை  சிலப்பதிகாரம் , மணிமேகலை  போன்ற  நூல்களால்  அறியலாம் .மன்னர்கள்  பெரும்  ஆதரவு  தந்துள்ளனர்
  பக்தி யால்  இசை  வளர்ந்த  காலத்திற்கு  பிறகு சில நூற்றாண்டுகள்  முகலாயர்  ஆட்சியிலும்  பின்பு  விஜயநகர  ஆட்சி  காலத்திலும்  ஹிந்துஸ்தான்  இசையும்  தெலுங்கு  இசையும்  முதன்மை  பெற  தமிழிசை  பின்னுக்கு 
தள்ளப்பட்டது ..   

Sunday 2 June 2013


ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்  என்ற  கருத்தினைத்தான்
திருமந்திரம்  முதல்  பாட்டே  ஓதுகிறது .எல்லா  உயிர்களிலும்
நீக்கமற  நிறை ந்து இருப்பது  'சிவம் ' என்று  ஓதுகிறது . அன்பே
சிவம்  என்பது  திருமூலர்  வாக்கு .' சாத்திரம்  பல  பேசும்  சழக்க-
ர்காள்  கோத்திரமும்  குலமும்  கொண்டு  என்  செய்வீர்/?'
என்று  வினவுகிறார்  அப்பர் பெருமான் '". பாத்திரம்  சிவம்  என்று
பணிந்தால் மாத்திரைக்குள்  அருள்வார் "என்கிறார் .ஜாதி  இரண்டு
ஒழிய  வேறில்லை  என்கிறாள்  ஔவை  பிராட்டி . இவ்வாறு  சமூக  ஏற்ற  தாழ்வை  கண்டித்து  பக்தியுடன்  கலந்த  பாக்கள்
ஈசன் முன்  பாடப்பட்டு  பல  ஆயிரம்  மக்களால்  கேட்கப்பட்டன .இன்னும்  எத்தனையோ  சமூகநல  கருத்துகளும்
பக்தியுடன்  கலந்து  பாடப்பட்டன . இவ்வாறு  தமிழிசை  பல  பரிமா
ணங்களில்  திகழ்ந்து  இன்று வரை  நிலை  பெற்று  இருக்கிறது .
 .     "

Thursday 16 May 2013

ஞானசபெரும் ம்பந்தர்  சமணர்களை  வாதில்  வென்று  பாண்டி



ய  மன்னனை நோயிலிருந்து   காக்கவும் ,மதுரைக்கு  புறப்பட்  டார் .
அப்போது  கிரக  நிலை  சரியில்லை  என்று  அப்பர் பெருமான்
தடுக்க ,சம்பந்தர்  வேயுறு தோளிபங்கன்  அருள் இருக்க  நா
ளூம்
கோளும்  அடியாரை நலியா  என்று   இப்பதிகத்தை  பாடி   சென்
று
வென்றார் ,கோள்க ளினால்  வரும்  இன்னல்களை  இப்பதிகம்
நீக்கும்  என்பது  உறுதி .இன்னும்  இதைபோல்  அநேக  பரிகார
பதிகங்கள்  பெரும்  மனசா ந்தி  அளிக்கின்றன .மார்கழி  மாதம்
பூராவும் திருப்பாவை ,திருவெம்பாவை  நம்  காதுகளில்  ஒலித்து
நமக்கு புத்துணர்ச்சி  ஊட்டுவதாக  இருக்கும் .அந்த  மாதம்
காலை  பஜனை  மனதுக்கு  இனிமை .பல  நூற்றாண்டுகளுக்கு
முன்பே  தீ ர்கதரிசனத்துடன் இப்பாடல்களை   பாடிய  மகான்களை   வணங்குவோம்
   

Wednesday 15 May 2013

பல  நூற்றாண்டுகளுக்கு  முன் பாடப்பட்ட  இப்பாடல்களின்  பெருமை  அளவிடமுடியாதது . தற்கால  உலக  சுழலில் நம்மை   சுற்றி  உள்ள பல நெருக்கடிகளில்  நமக்கு  மன  ஆறுதல் தரக்கூடியது  இப்பாடல்கள் . சில ஆண்டுகளுக்கு  முன்  கிரகங்கள்    ஒரே  நேர்கோட்டில்  வரும்போது  உலகம்  பல  இன்னல்களை 
தாங்க வேண்டிய  சூழலில்  காஞ்சி  பெரியவர்  எல்லோரையும்
ஞான சம்பந்தரின்  கோளரு  படிகம்  பாட அறியுறுத்தினார் .அதை
பின்பற்றி  பலரும்  சிரமேர்கொண்டனர் ,பயன்  அடைந்தனர் .  

Sunday 21 April 2013

மாணிக்கவாசகருக்காக  ஈசன்  நரியை  பரியாக்கி , பின் பரியை  நரியாக்கி , இன்னும்  பல நாடகங்களை   ஆடி  தானே  அவருக்கு  குருவாக  இருந்து  அவரை   பாட வைக்கிறார் . அவரும்  நெஞ்சு  உருகி  பாடிய  திருவாசகம்  எவர்  உள்ளத்தையும்  கரைக்க  வல்லது . இதை  முன்பே குறிப்பிட்டுள்ளேன் . இன்றும்  பெரிய  சிவன்  கோயில்களில்  ஈசன்  தீபாராதனை  முடிந்ததும்  பஞ்ச புராணம்  பாடப்படும் . அதில்  மூவர் தேவாரம் , திருவாசகம் ,திருவிசைப்பா ,திருப்பல்லாண்டு  மற்றும்  பெரியபுராணம்  இவை  ஈசன்  மனம் குளிர  பாடப்படும் . ஆக  தமிழ் இசைக்காக   ஆடவல்லான்  ஆடிய  நாடகங்கள்  கணக்கில்  அடங்கா .
 தமிழிசை  என்றாலே  எல்லோருக்கும்  இனிப்பது  அருணகிரியாரின்  திருப்புகழ் .தமிழ்  கடவுளாம்  ஆறுமுகன்  பாட திறனற்ற  அருணகிரியாரை 'முத்தைத்தரு ' என்று  அடி  எடுத்து  கொடுத்து  பாட வைக்கிறான் . அவரும்  ஆயிரக்கணக்கில்  பாடல்  தந்து  மகிழ்கிறார் .திருப்புகழ்  கேட்க  விரும்பாத  தமிழர்களை  காண்பது  அரிது . ராமலிங்கரின்  திருஅருட்பா  மற்றும்  ஓர்  அரிய  நூல்      

Saturday 30 March 2013

(நாளூம்  இன்னிசையால்  தமிழ்  பரப்பும் ஞானசம்பந்தனுக்கு  உலகவர்முன்  தாளம்  ஈந்து  அவன் பாடலுக்கு  இரங்கும்  தன்மையாளன்)  இவ்வாறு  சுந்தரர்  ஈசனை  வர்ணிக்கிறார் .
ஈசன்  சம்பந்தரை ( பாலை)  கொடுத்து  ஆட்கொள்கிறார்.நாவுக்கரசரை ( சூலை)  கொடுத்து ம் , சுந்தரரை  (ஓலை ) கொடுத்தும்  ஆட்கொள்கிறார் .நாவுக்கரசர்  பல்லவ  மன்னனுடன்  சேர்ந்து   ஈசனை  மறந்து  பகுத்தறிவு   பாதையில்   செல்கிறார் . ஈசன்  அவன்  சகோதரியின்   வேண்டுகோளுக்கு   இறங்கி  நாவுக்கரசருக்கு   சூலை  நோயை  கொடுக்கிறார் . அவரும்   தவறை   உணார்ந்து    வீரட்டானத்துறை  ஈசனை  சரண்  அடைந்து '  கூற்றாயினவாரு ' என்னும்  பதிகம்  பாடி  நலம்  பெருகிறார் . அதன்   பிறகு  அவர் ஈசர்க்கு  தொண்டராக பெரும்   பணி  ஆற்றினார் . சுந்தரர்  திருமணத்தன்று  ஈசன்  ஓர்  ஓலையை   காட்டி  பல  தலைமுறைகளாக  சுந்தரர்  குடும்பம்  தன்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  அவரை திருவெண்ணெய்  நல்லூர்   அழைத்து  சென்று   " பித்தா "  என்று   அடி எடுத்து   கொடுத்து  பாட    செய்கிறார் . இவ்வாறு  இந்த  தமிழ்  இசைக்காக  அவர்   ஆற்றிய  விளையாடல்கள்  அநேகம்     

Tuesday 26 March 2013

ஆதிசிவன்  பெற்றெடுத்த  தமிழ் . அந்த  சிவன்  தமிழிசையில்  மயங்கியதில்  வியப்பு  என்ன  இருக்கிறது . குழந்தை ஞானசம்பந்தர்  குளக்கரையில்  நின்று  அழ , விடையேறும்  பெருமான்  உமை   அன்னையுடன்  காட்சி  தந்து  சம்பந்தருக்கு  ஞானப்பால்  ஊட்டினார் . 3வயது  சிறுவன்  தாளம்  போட்டு   பா டுகையில் , அவன்   கை  நோகுமென்று  தங்கதாளம்  ஈந்து  உமை  அ  ன்னையால்  அதற்கு  ஓசை  கொடுக்க  செய்கிறார் .  

Monday 25 March 2013

பக்தி  பெருக்கால்  இந்த  மகான்கள்  பாடிய  தமிழிசைக்கு  மயங்கிய  பரம்பொருள்  ஆற்றிய  திருவிளையாடல்கள்  அதிசயமானவை . பெரியாழ்வார்  கண்ணனை  மானசீகமாய்  கண்டு , தாலாட்டு  முதல்  ஒவ்வொரு  பருவ   சேட்டைகளையும்  மெய்யுருக வர்ணித்து   பாடுகிறார் . பூமிதேவியே  வளர்ப்பு  மகளாக  பெற்று  அரங் கனையே   மருமகனாக  பெருகிறார் . ஆண்டாள்  சிறு  பிராயம் முதல்  கண்ணனையே  நினைந்து  உருகி   பாடி ,  பின்பு  பாவை   நோன்பு  இருந்து  அவரையே  கணவனாக  அடையும்  பேறு  பெறுகிறாள் . திர்ப்பாணாழ்வார்   தாழ்ந்த  குலத்தை   சேர்ந்தவர்  என்பதால்  அரங்கன்  கோவில்   அந்தணர்கள்  அவரை  கடுமையாக  நடத்த , அரங்கன்  அந்தணர்கள்  கனவில் தோன்றி   ஆழ்வாரை   தோளில்  சுமந்துகொண்டு  சன்னதிக்கு   அழைத்து  வருமாறு  கட்டளை  பிறப்பிக்கிறார் . பேயாழ்வார் ,பூதத்தாழ்வார்  பொய்கை ஆழ்வார்  மூவரும் , ஒரு  மழைநாளில்  ஒரு  திண்ணையில்  ஒண்டி  நிற்க  அவர்கள்  இடையில்  நாரணன்  புகுந்து கொண்டு  பிறகு  அவர்களுக்கு  காட்சிதருகிறான் . இன்னும்  எத்தனையோ  திருவிளையாடல்கள் .இசைக்கு  இத்தனை  மகத்துவம் .        

Tuesday 19 March 2013

இவ்வாறு  இசையால்   பக்தி   வளர்த்த   மகான்களை   நோக்கினால்  ஒரு பெரிய  உண்மை   தெரிய வரும் .இவர்களில்   63 நாயன்மார்களும்  12  ஆழ்வார்களும்  பெரும்  பெருமை  பெற்றவர்கள் . பரம் பொருளை  நேரில்  தரிசித்து  பெரும்  அ ருளை   பெற்றவர்கள் . பெருமாளின்  அவதாரமாக  கருத  பெற்றார்  நம்மாழ்வார் . பெருமானின்  அருட்கட்டளையால்  ஒரு  அ ந்தணரால்   கருவறைக்கு   சுமந்து  எடுத்து  செல்லப்பட்டார்  திருப்பணாழ்வார் . ஈசனுக்கு   கண்  ஈந்த  கண்ணப்ப நாயனார் , திருனாளைபொவார் ,  இவருக்காக  நந்தி  விலகி  ஈசன்   காட்சி  அளித்தார் . இன்னும்  பல  பக்தர்கள்  பிராம்மண  வகுப்பை  சேர்ந்தவர்கள்  அல்ல .எல்லா  வகுப்பை  சேர்ந்தவர்களும்  உள்ளனர் .பெருமாளோ   ஈசனோ  இதற்கு  அப்பாற்பட்டவன் .அவர்கள்  உள்ளத்தில்  ஆழமாக  குடிகொண்டிருக்கிறான் . எந்த  வேற்றுமை யும்  இல்லை . எல்லோரும் சமம் .நாம்  ஏன் அவ்வாறு  இருக்க  தவறுகிறோம்  
சில  நூற்றாண்டுகளுக்கு  பிறகு  ஸ்ரீ ராமானுஜர்  அவதரித்தார் . அந்த  மகான்  கோவில்  வழிபாட்டு  முறைகளை   வரையறுத்து  கொடுத்தார் . கோயில்களில்  பிரபந்த பாக்களை  அபிநயத்துடன்  குறிப்பிட்ட  சிலர்   வைணவ  ஆலயங்களில்  ஆடும்  மரபு  ஏற்படுத்தினார் .அது  அரையர் சேவை என  இன்றும்  ஸ்ரீரங்கம்  போன்ற  ஆலயங்களில்   நடைமுறையில்   உள்ளது .இவ்வாறு  நாம்  பிரபந்தம்  எனும்  அறிய  போக்கிஷத்தை  அடைந்தோம் . 

Monday 18 March 2013

தேவாரம்  12  திருமுறைகளாக  தொகுக்கப்பட்ட து  போல 4000  பிரபந்தங்களும்  பண்ணிசையோடு   தொகுக்கப்பட்டன . அவை  பெரியாழ்வார்  திருபல்லாண்டு , பெரிய திருமொழி .
ஆண்டாள் - திருப்பாவை ,  நாச்சியார் திருமொழி
திருமழிசை ஆழ்வார் - திருச்சந்தவிருத்தம்
தொண்டரடிபொடி  ஆழ்வார் - திருமாலை , திருப்பள்ளி யெழுச்சி
திருப்பாணாழ்வார் -அமலனாதிபிரான்
மதுரகவி ஆழ்வார் -கண்ணினுள் சிறுதாம்பு
திருமங்கை ஆழ்வார் -பெரியதிருமொழி ,குருந்தாண்டகம் ,நெடுந்தாண்டகம்
பொய்கை ஆழ்வார் - முதல்திருவந்தாதி
பூதத்தாழ்வார் - இரண்டாம்திருவந்தாதி
பேயாழ்வார் -முன்றாம் திருவந்தாதி
நம்மாழ்வார் -திருவிருத்தம் ,திருவாசிரியம் ,பெரியதிருவந்தாதி , திருவாய்மொழி         

Sunday 27 January 2013

மதுரகவிஆழ்வார்   மறைந்த   சில காலம்   பிறகு   பிரபந்தங்கள்   மறைந்து   போயின .சில  நூரற் றாண்டுகள்   கடந்து  பின் நாதமுனிகள்  எனும்   பெரும்   வைணவர்  தற்செயலாக   நம்மாழ்வார்  பாடல்   ஒன்றை   கேட்க   நேர்ந்தது . பாட்டின்   முடிவில்   "இவை   மாறன்   சடகோபன்   பாடிய   ஆயிரத்தில்   ஒரு   பத்தாம் " என்று      முடிந்தது   கேட்டு   ஆச்சர்யம்   அடைந்தார் .  மற்ற    பாடல்களை   பற்றீ  யாரும்   அறியவில்லை .  நாதமுனிகள்   பலவாறு   தி ரி ந்து   மதுரகவிகள்   வாழ்ந்த   இடத்தை   அடைந்தார் .  அங்கு   மதுரகவிகள்   பாடிய   11  பாக்களை   கிடய்க்க பெற்றார் .  அவைகளை   12000  முறை   துதித்து   பாடி னார் .  அப்போது   ஓர்   அதிசயம்   நிகழ்ந்தது .  நம்மாழ்வாரே   தோன்றி   4000  பாக்களையும்   அவருக்கு   அளித்தார் .  பெருமகிழ்ச்சி   கொண்டு   அவைகளை   பெற்றுகொண்டு   நாதமுநிகளார்   தொகுத்து   நமக்கு   அளித்தார் .  

Wednesday 23 January 2013

நம்மாழ்வார்  பெருமாளின்   அவதாரமாக   கருதப்படுகிறார் . மதுரகவி ஆழ்வார்   மற்றோர்  பெரும்   ஞாநி . அவர்  உயரந்த   ஒரு   குருவை   தேடி   வடநாட்டில்   அலைந்து   கொண்டிருந்தார் . அப்போது   வானில்   ஒரு  ஒளி  தோ ன்றி யது .  அதை   பின்   தொடரந்து   வெகு வாக  அலைந்து   பின்   ஆழ்வார்திருநகர்   வந்து   அடைந்தார் .  மதுரகவிஆழ்வார்   நம்மாழ்வார்  குடியருக்கும்  மரத்தை   கண்டார் .  அவரை   பலவிதமாக  துதித்து   பாடி  அவரிடமிருந்து   எல்லா   பிரபந்த  பாக்களை   பெற்றார் . அவருடைய   ஆனந்தத்திற்கு   எல்லையே  இல்லை . அவர்   நம்மாழ்வாரை  துதித்து   '"  கண்ணிணுள்    சிறுதாம்பு "  என   தொடங்கும்   11   பாக்களை   பாடினார்