பொன்னடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன் |
சேருவிலி வித்துர் என்றொரு ஊர் . அங்கு சிவமறையோர் குலத்தில் பிறந்த புகழ்த்துணையார் எனும் ஒருவர் வாழ்ந்து வந்தார் . எம்பெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . அபிஷேக பிரியரான எம்பெருமானை ஆறு காலமும் அபிஷேகம் செய்வதை பேரின்பமாக கருதி செய்து வந்தார் . அவருடைய போதாத காலம் அவரை வறுமை வாட்ட தொடங்கியது . இருந்தாலும் விடாமல் தன் கடமையை செய்து வந்தார் . நாள் செல்ல செல்ல வறுமை அவருடைய உடல் நிலையை பாதித்தது . உடல் மெலிந்து சக்தி இழக்க தொடங்கினார் . ஒரு நாள் குடம் தண்ணீரை தூக்கி அபிஷேகம் செய்யும் போது கை தவறி குடம் ஐயன் மேல் விழுந்து விட்டது . அவர் பதறி ப்போய் தன் தவறை மன்னிக்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார் . கருணை கடலான ஐயன் அவர் கனவில் காட்சி தந்து '' அன்பனே வருந்தாதே . உன் வறுமை தீரும்வரை உமக்கு தினம் ஒரு பொற்காசு அளிப்போம். வருந்தாதீர் . என்று கூறி மறைந்தார் . எழுந்த அவர் ஒரு பொற்காசு இருப்பதை கண்டு மிகமகிழ்ந்தார் . சந்தோஷமாக தன் திருத்தொண்டை தொடர்ந்தார் . சிலகாலம் வாழ்ந்து ஈசனடி சேர்ந்தார் .
சேருவிலி வித்துர் என்றொரு ஊர் . அங்கு சிவமறையோர் குலத்தில் பிறந்த புகழ்த்துணையார் எனும் ஒருவர் வாழ்ந்து வந்தார் . எம்பெருமானிடம் அளவு கடந்த பக்தி கொண்டிருந்தார் . அபிஷேக பிரியரான எம்பெருமானை ஆறு காலமும் அபிஷேகம் செய்வதை பேரின்பமாக கருதி செய்து வந்தார் . அவருடைய போதாத காலம் அவரை வறுமை வாட்ட தொடங்கியது . இருந்தாலும் விடாமல் தன் கடமையை செய்து வந்தார் . நாள் செல்ல செல்ல வறுமை அவருடைய உடல் நிலையை பாதித்தது . உடல் மெலிந்து சக்தி இழக்க தொடங்கினார் . ஒரு நாள் குடம் தண்ணீரை தூக்கி அபிஷேகம் செய்யும் போது கை தவறி குடம் ஐயன் மேல் விழுந்து விட்டது . அவர் பதறி ப்போய் தன் தவறை மன்னிக்க முடியாமல் அங்கேயே மயங்கி விழுந்தார் . கருணை கடலான ஐயன் அவர் கனவில் காட்சி தந்து '' அன்பனே வருந்தாதே . உன் வறுமை தீரும்வரை உமக்கு தினம் ஒரு பொற்காசு அளிப்போம். வருந்தாதீர் . என்று கூறி மறைந்தார் . எழுந்த அவர் ஒரு பொற்காசு இருப்பதை கண்டு மிகமகிழ்ந்தார் . சந்தோஷமாக தன் திருத்தொண்டை தொடர்ந்தார் . சிலகாலம் வாழ்ந்து ஈசனடி சேர்ந்தார் .
No comments:
Post a Comment