மன்னனுக்கு ஒன்றும் புரியவில்லை . எம்பெருமானுக்கு இத்தனை நெருக்கமான அப்பெருமானை காண ஆவல் ஏற்பட்டது . எத்தனை பாக்கியவான் என்ற எண்ணம் உண்டாயிற்று . உடனே அமைச்சரை அழைத்து கும்பாபிஷேக ஏற்பாட்டை நிறுத்தி விட்டு வேறு நல்ல நாள் பார்க்க சொல்லி விட்டு முக்கியமான சிலரை கூட அழைத்து கொண்டு திருநின்றவூர் கிளம்பினார் . அங்கு சென்றதும் அங்கு உள்ளவர்களை பூசலார் கட்டிய கோயில் எங்கு என்று வினவினார் . எல்லோரும் ஆச்சர்யம் அடைந்து அவர் மிக சாதாரண அந்தணர் அவர் கோயில் ஏதும் எழுப்பவில்லை . அனால் எழுப்ப மிக்க ஆவல் கொண்டு பணம் சேர்க்க மிக பாடுபட்டார் . முடியாத காரணத்தால் மனமுடைந்து அங்கு மண்டபத்தில் தியானத்தில் அமர்ந்து விட்டார் என்று கூறினர் . அரசன் அதிர்ந்து போனார் . ஈசன் வாக்கு எவ்வாறு தவறாகும் .
No comments:
Post a Comment