Friday 20 September 2019

மன்னனுக்கு   ஒன்றும்   புரியவில்லை .  எம்பெருமானுக்கு   இத்தனை   நெருக்கமான   அப்பெருமானை  காண   ஆவல்   ஏற்பட்டது .   எத்தனை   பாக்கியவான்   என்ற   எண்ணம்   உண்டாயிற்று .  உடனே   அமைச்சரை   அழைத்து   கும்பாபிஷேக   ஏற்பாட்டை   நிறுத்தி   விட்டு   வேறு   நல்ல   நாள்   பார்க்க   சொல்லி   விட்டு   முக்கியமான   சிலரை   கூட   அழைத்து   கொண்டு   திருநின்றவூர்   கிளம்பினார் .    அங்கு   சென்றதும்   அங்கு   உள்ளவர்களை   பூசலார்    கட்டிய   கோயில்   எங்கு   என்று   வினவினார் .  எல்லோரும்      ஆச்சர்யம்   அடைந்து   அவர்   மிக  சாதாரண   அந்தணர்   அவர்   கோயில்   ஏதும்   எழுப்பவில்லை .  அனால்   எழுப்ப   மிக்க   ஆவல்   கொண்டு   பணம்   சேர்க்க   மிக   பாடுபட்டார் .   முடியாத   காரணத்தால்    மனமுடைந்து   அங்கு   மண்டபத்தில்    தியானத்தில்    அமர்ந்து   விட்டார்     என்று   கூறினர் .   அரசன்   அதிர்ந்து   போனார் .  ஈசன்   வாக்கு   எவ்வாறு   தவறாகும் .      

No comments:

Post a Comment