Saturday 21 September 2019

அரசன்   'பூசலார்   எங்கே   இருப்பர்   'என்று   வினவ   அவர்கள்   'ஏரிக்கரையில்   எங்காவது   தியானத்தில்   இருப்பார் .  ஆட்களை  அனுப்பி   அழைத்து   வர   சொல்கிறோம் '  என்றனர் .  திடுக்கிட்ட   அரசன்  'அந்த   உத்தமரை    யாமே    சென்று   காண்போம் '  என்று   பதிலுரைத்து   அங்கு   சென்று   கண்களை   மூடி   தியானத்திலிருந்த   பூசலாரை   'வணக்கம்சுவாமி  '  என்று   வணங்கினார் .  தியானத்திலிருந்து    கண்   விழித்த   பூசலார்      மன்னவரை   கண்டு   திடுக்கிட்டார் .  'அரசே   இது   என்ன   தாங்கள்   இங்கு '   என்று   ஒன்றும்   புரியாமல்   வினவினார் .    அதற்கு   மன்னவன்   தாங்கள்   அமைத்த   சிவனார்   ஆலையத்தை    காணவே   ஓடோடி   வந்தேன்  அது   எங்குள்ளது ?  என்று   வினவினார்   

No comments:

Post a Comment