அரசன் 'பூசலார் எங்கே இருப்பர் 'என்று வினவ அவர்கள் 'ஏரிக்கரையில் எங்காவது தியானத்தில் இருப்பார் . ஆட்களை அனுப்பி அழைத்து வர சொல்கிறோம் ' என்றனர் . திடுக்கிட்ட அரசன் 'அந்த உத்தமரை யாமே சென்று காண்போம் ' என்று பதிலுரைத்து அங்கு சென்று கண்களை மூடி தியானத்திலிருந்த பூசலாரை 'வணக்கம்சுவாமி ' என்று வணங்கினார் . தியானத்திலிருந்து கண் விழித்த பூசலார் மன்னவரை கண்டு திடுக்கிட்டார் . 'அரசே இது என்ன தாங்கள் இங்கு ' என்று ஒன்றும் புரியாமல் வினவினார் . அதற்கு மன்னவன் தாங்கள் அமைத்த சிவனார் ஆலையத்தை காணவே ஓடோடி வந்தேன் அது எங்குள்ளது ? என்று வினவினார்
No comments:
Post a Comment