Thursday 29 December 2016

இவ்வாறு  பெருமை  வாய்ந்த  தமிழ்  நாட்டில்  திருமுனைப்பாடி  எனும்  நாட்டில்  திருநாவலூர்  எனும்  ஊரில்  சடையனார் என்று  ஒரு  அந்தணர் தம்  மனைவி  இசைஞானியாருடன்  இல்லற  நெறி  தவறாத   நல்ல  தம்பதியினராக  வாழ்ந்து  வந்தனர் .அவர்கள்  தவ  புதல்வனாக  சுந்தரர்  பிறந்தார் . இவையெல்லாம்  சுந்தரர்  வரலாற்றில்  விரிவாக  சொல்லி  இருக்கிறோம் . சுந்தரர்  நம்பியாரூரன்  எனும்  பெயருடன்  அங்கு  வாழ்ந்தான் மூன்று  வயது  ஆனபோதே  அவன்  அழகிலும்  அறிவிலும்  மயங்கிய  அரசன்  நரசிங்க  முனையார்  அவனை  வளர்க்க  பிரியப்பட்டு  அக்குழந்தையை  அழைத்து  சென்றார் .  அவ்விவரங்கள்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறோம் . சுந்தரர்  வளர்ந்து  அவருக்கு  திருமணம்  நிச்சயிக்க  பட்டபோது  ஈசன்  சுந்தரருக்கு   வாக்களித்தபடி  அவரை  தடுத்தாட்கொள்ள  முதியவராக  வந்து  ஓலையை  காட்டி  அவரை  தன்  அடிமை  என்று  வாதாடி  திருவெண்ணைநல்லூர்  அழைத்து  சென்று  அவரை  தன் மனம்  கவர்ந்த  தம்பிரான்  தோழனாக  மாற்றியதையும்  கண்டோம் .

Thursday 22 December 2016

மனுநீதி  சோழன்  கதை யாவரும்   அறிந்ததே . தன்  மகன்  வீதி  விடங்கன்  தேரில்   சென்ற  போது    இளம் கன்று  ஒன்று  வேகமாக  ஓடிவந்து  தேரின்  சக்கரத்தில்  அடிபட்டு  மாண்டு  போனது .விதிவிடங்கன்  அதிர்ந்து  போய்  பெரும்  வேதனைக்க்கு  உள்ளானான் . தாய்  பசு  கண்ணீர்  மல்க  மன்னன்  அரண்மனை  முன்னே  உள்ள  ஆராய்ச்சி மணியை  அடித்தது . மன்னனும்  மனம்   கலங்கி  பசுவுக்கு   தக்க  நீதி  வழங்க  தன்  மகனை  வீதியில்  படுக்கவைத்து  அவன்  மீது  தேரை  ஓட்டி  கொல்லுமாறு  ஆணை  இடுகிறான் . அப்போது  அந்த  அதிசயம்  நிகழ்கிறது . தர்மதேவதையே  அக்கன்றாக  வந்து  அரசனின்  பெருமையை  உலகம் உணர இந்நாடகம்  நடத்தியதாக  அசரீரி வாக்கால்  அறிந்து  யாவரும்  பெரும்  மகிழ்ச்சி  அடைந்தனர் . இவ்வாறு  பெருமை  மிக்க  வரலாறு  படைத்தது  திருவாரூர்  என்று    உபமன்யு  கூறுகிறார் . சுந்தரர்  ஆரூர்  ஈசனிடம்  அளவு  கடந்த  பிரேமை  கொண்டிருந்தார் . கைலாய  பெண்ணான  கமலினியும்  அங்கே  பறவை  நாச்சியாராக  பிறக்கிறார் 

Monday 19 December 2016

மேலும்  முனிவர்  கூறுகிறார் , சிவபார்வதி  திருமணத்தின்  போது  இமயத்தில்  எல்லோரும்  கூடிவிட  வடபாகம்  தாழ்ந்து தென்பாகம்  உயர, உலகம்  சமநிலை  பெற  ஈசன்  அகத்திய  முனிவரை  தென்  பக்கத்திற்கு  அனுப்பி  அங்கேயே  அவருக்கு  தன்  திருமண  கோலத்தை  காண்பிப்பதாக  வாக்களிக்கிறார் . கங்கை  நீரை  கமண்டலத்தில்  ஏந்திக்கொண்டு  தென்  திசையில்  பொதிகை  மலையில்  அகத்தியர்  தவமிருக்கிறார் .தென்பகுதி  தாரகாசுரன்  அட்டூழியத்தால்  வளமிழந்து  இருந்தது . விநாயக  பெருமா  கமண்டலத்தில்  இருந்த  கங்கை  நீரை கவிழ்த்து காவிரியாக  ஓடவைத்து  செழுமையான  பகுதியாக  மாற்றுகிறார் . காவிரி  பல  கிளைகளாக  பிரிந்து  தென்  பகுதி  முழுமையும்  செழிப்பாக்குகிறது . பல  புண்ணிய  க்ஷேத்திரங்கள்  உண்டாயின . அதில்  திருவாரூர்  முக்கியமானதலம் .அங்கு  அரசாண்ட  மனுநீதி  சோழன்  நீதிக்கு  ஒரு  எடுத்துக்காட்டாக  வாழ்ந்தவன் .

Friday 16 December 2016

உபமன்யு  முனிவரை  மற்ற  ரிஷிகள்  தென் பகுதி   எவ்வாறு  உயர்ந்தது  என்பதை  விளக்குமாறு  வினவினர் . உபமன்யு  முனிவர்  பதில்  உரைக்கையில்  தென் பாகம்  சிறந்த   பெரும் கோயில்களை   தன்னகத்தே  கொண்ட  இடம்.  அது .புலியின்  பாதங்களை  கொண்ட  பெரும்  முனிவர்  வாழ்ந்த  பெரும்  பற்ற  புலியூர் , அன்னை  காமாட்சியாக  தவம்  செய்த  காஞ்சி .திருவை ய்யாறு  பிரளய  காலத்தில்  தோணியாக  மிதந்த  திருத்தோணிபுரம்  எனும்  சீர்காழி  மேலும்  திருவாரூர் . இவ்வாறு  உயர்ந்த  தலங்களை  குறிப்பிட்டார் .

Thursday 15 December 2016

நந்தவனத்தில்  கமலினி , அனந்திகை  எனும்  இரு  பெண்களின்  அழகில்  ஒரு  கணம்  மயங்கி  விட்ட  சுந்தரரை  ஈசன்  புவியின்  தென்  பகுதியில்  பிறந்து  அப்பெண்களுடன்  சிலகாலங்கள்  வாழ்ந்து  இன்பம்  அனுபவித்து  விட்டு  மறுபடி  கைலாயம்  திரும்புமாறு  கட்டளை இட்டார் . அதிர்ந்து  போன  சுந்தரர்  ஈசன்  இச்சை  அதுவானால்  அப்படியே  நடக்கட்டும்  என  மனம்  சமாதானம்  அடைந்து தன்னை  புவியிலும்  காத்து  ரக்ஷிக்க   வேண்டும்  என்றும்  தான்  மறுபடி  இத்தகைய  சிக்கல்கள்  வரும்போது  தன்னை  புவியிலும்  காத்து  அருள  வேண்டும்  என்று ஈசனை  வேண்டினார் . ஈசனும்  அவ்வாறே  வாக்களித்தார் . இவ்வாறு  அம்மூவரும்  தென் பகுதியில்  வந்து  பிறந்தனர்   

Sunday 11 December 2016

ஒருநாள்  சிவபெருமான்  தேவர்களின்  இச்சைப்படி  தன்னை  நன்றாக  அலங்கரித்துக்கொண்டார் . தேவர்கள்  அவ்வழகை  கண்டு  அதிசயித்து  பரவசமடைந்தனர் .ஈசன்  மகிழ்ந்து  கண்ணாடி முன்  நின்று  அதில்  தெரியும்  தம் பிரதி  பிம்பத்தை சுந்தரா   வா   என்றழைத்தார் .  அவரும்  வந்ததும்   அவரை தேவர்கள்  வாழ்த்தி  வணங்கினர் .சுந்தரரும்  ஈசனின்   திருநீறு  பாத்திரம்  ஏந்தி  அவருடன்  இணை பிரியாது  இருந்து  வந்தார் .  ஈசன்  கட்டளைக்கு  இணங்கி  ஆலகால  விஷத்தை  ஏந்தி  வந்து  ஆலால  சுந்தரர்  என்று  அழைக்கப்பட்டார் . இதை  சுந்தரர்  வரலாற்றில்  முன்பே  குறிப்பிட்டிருக்கிறோம் . இவர்  ஒரு  நாள்  ஈசனுக்கு  மலர்  கொய்ய  செல்லும்போது  அன்னையின்  தோழியர்  இருவரை  கண்டு  ஒரு  கணம்  மனம்  பேதலித்து  அதன்  காரணமாக  அம்மூவரும்  இப்புவியில்  பிறந்து  சில  காலம்  கழிக்க  நேரிட்டதையும்  அவ்வரலாற்றிலேயே  கண்டோம் .

Thursday 8 December 2016

உபமன்யு  அவ்வொளியை  கண்டு  மெய் சிலிர்த்து  கைகூப்பி  வணங்கினார் .மற்ற  ரிஷிகள்  ஆச்சர்யத்துடன்  அதை  கவனித்து  அதன்  காரணத்தை  வினவினர் . உபமன்யு  முனிவர்  அவர்களை  நோக்கி  " நம்பி  ஆரூரர்  எனும்  பெரும்  சிவத்தொண்டர்  பூஉலகில்  தன்  பணிகளை  முடித்துக்கொண்டு  கைலை  திரும்புகிறார் ." என  பதிலுரைத்தார் . ஆர்வத்துடன்  அம்முனிவர்கள்  அத்தொண்டரை  பற்றி  கூறுமாறு வேண்டினர் . 

Wednesday 7 December 2016

அய்யன்  உமை  அன்னையுடன்  வாசம்  செய்யும்  கைலையின்  பெருமை  சொல்வதற்கு  அரியது .தேவர்கள்  பூதகணங்கள்  கீதம்  இசைக்க  மஹாவிஷ்ணு . ப்ரம்மா  மற்ற  தேவாதி தேவர்கள்  வேதங்களால்  தோத்திரம்  செய்ய ஈசன் இடப்பாகத்தில்  அன்னையுடன்  வீற்றிருக்கும்  காட்சி  விவரிக்க  ஒண்ணாதது . கைலை  மலையின்  அடிவாரத்தில்  பல  முனிவர்கள்  தவம்  செய்கின்றனர் . அவர்களில்  உபமன்யு  முனிவர்  மிக  பெருமை  வாய்ந்தவர்  சிறந்த  சிவ பக்தர் .கிருஷ்ண  பரமாத்மாவே  அவரிடம்  தீக்ஷை  பெற்றார்  என்றால்  அவர்  பெருமைக்கு  நிகர்  ஏது ?
     அவர்கள் ஒரு  நாள்  பூஜை  முடிந்து  உபமன்யு  முனிவரிடம்   அறிவுரை  கேட்டுக்கொண்டு  இருந்த  பொழுது  ஒரு  பேரொளி  ஆகாயத்தில்   தோன்றி  கைலை  நோக்கி  சென்று  மறைந்தது .

Friday 2 December 2016

தொண்டர்  பெருமை  விளக்க  இப்பாடலை  காண்போம் . முருக  பெருமான்  அவ்வை  பிராட்டியிடம்  சில  வினாக்களை  தொடுக்கிறார் . பதிலை  அளிக்கும்  பிராட்டி  பெரியது எது   எனும்  வினாவிற்கு  தரும்  பதிலே  இப்பாடல் .

பெரிது  பெரிது  புவனம்  பெரிது ,  புவனமோ   நான்முகன்  படைப்பு
நான்முகனோ  திருமால்  உந்தியில்  வந்தோன், திருமாலோ  பாற்கடல்  துயின்றோன் ,
பாற்கடலோ  குறுமுனி  கைஅடக்கம் , குறுமுனியோ  கலசத்தில்  பிறந்தோன்
கலசமோ  புவியில்  சிறுமண்  காணும் , புவியோ  அரவினுக்கு  ஒருதலை  பாரம்
அரவோ  உமையவள்  சிறுவிரல்  மோதிரம் , உமையவாளோ  இறைவர்தம்  பாகத்து  ஒடுக்கம்
இறைவரோ  தொண்டர்தம்  உள்ளத்து  ஒடுக்கம்
தொண்டர்தம்  பெருமை  சொல்லவும்  பெரிதே

இப்பாடலில்  தொண்டர்  பெருமையை  அவ்வையார்  அழகாக  தெளிவாக  விளக்குகிறார் . ஈசன்  சுந்தரரை  இப்புவியில்  பிறக்க  வைத்து  அவரையும்  ஒரு  அல்லலில்  விழவைத்து  தானே  சுந்தரருக்கு  "அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  திருத்தொண்டர்  தொகை  எனும்  அடியார்களின்  பெருமையை  உலகுக்கு  எடுத்து  உரைக்கும்  பாடலை  பாடவைக்கிறார் . ஆக ஐயனே  தான்  தம்  அடியார்களின்  உள்ளத்தில்  வாழ்வதாக  உணர்த்துகிறார் . அத்தகைய  அடியார்களின்  பெருமையை  மிகுந்த  தாழ்மையுடனும்  அளவிலா  பக்தியுடனும்  சேக்கிழார்  பாடும்  இந்நூலை  'பெரிய  புராணம் ' என்று  போற்றுவது  பொருத்தமே . 

Tuesday 22 November 2016

வேடுவ  குலத்தில்  பிறந்த  கண்ணப்பன்  முதல்  முதல்  ஒரு சீவலிங்கத்தை  கண்டு  அவ்வடிவில்  ஈர்க்கப்பட்டு  பக்தி  பெருக்கெடுத்து  தன்  கண்களையே அவருக்கு  கொடுத்து  அவரை  குணமாக்க  முற்படும்  அளவிற்கு  கொண்டு  சென்றிருக்கின்றத.ஈசனும்  அவனிடத்து   பாசம்  பெருக்கெடுக்க கண்ணப்பா  என்று  அழைக்கிறார் . நந்தன்  தாழ்ந்த  குலத்தில்  பிறந்த  காரணத்தால்  கோயில்   வாசல்   கூட  மிதிக்க  முடியாமல்  தவிக்கிறான் . பக்தி  பெருக்கில்  அவரை  காண முடியாத  சோகம்  அவனை  வாட்டுகிறது. ஈசன்  அவனை  மனம்  குளிர  தில்லையில்  வரவழைத்து  ஏற்றுக்கொள்கிறார். இவர்களை  போல்  பலர்  பக்தி  பெருக்கால்  சிவபதம்  அடைந்தனர் .பலர்  சிவன்  அடியார்களை  பெரும்  மதித்து  அவர்கள்  சேவைக்காக  எல்லை  இல்லா  துன்பங்களை  அனுபவித்தனர் . சிவனடியார்  சேவைக்காக  ஒரு  கொள்கை  வகுத்துக்கொண்டு  அதற்காக   தன்  உயிரையும்  தர  சித்தமாக  இருந்த  பக்தர்களும்  உண்டு .  இவர்களும்  சிவபதம்  அடைந்து  நாயன்மார்களாக  கொலு  வீற்றிருக்கிறார்கள் . இவர்கள்  கதைகளை  பெரிய  புராணத்தில்  காணலாம் .''முழுநீறு  பூசிய  முனிவோர்க்கும்  அடியேன் '' இது சுந்தரர்  தன்  திருத்தொண்டர்  தொகையில்  பாடிய து .இவர்கள்  ஈசனை  சதா   துதித்தார்களோ   இல்லையோ , ஈசன்  இவர்களை  மிக  விரும்பி  தன்னுடன்  சேர்த்துக்கொண்டான்  

Monday 21 November 2016

அப்பர் ,சம்பந்தர்  சுந்தரர்  போன்ற  சிலர்  ஈசனை  பலக்ஷேத்திரங்களில்  சென்று இவரை  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் .அப்பூதி  அடிகள்  அப்பரையே  தெய்வமாக  துதித்து  வணங்கினர் . கண்ணப்பன்  ஒரு சிறிய காலகட்டத்துக்குள்  சிவலிங்கத்தை  கண்டு  அதன்மேல்  அளவிலா  அன்பும்  பக்தியும்   கொண்டு  லிங்கத்தின்  கண்களிலிருந்து  குருதி  வழிவதை  காண  சகியாமல்  தன்  கண்களை   பிடுங்கி  எடுத்து  அதை  பொருத்த  முற்படுகிறான் .




Thursday 17 November 2016

63  நாயன்மார்  வரலாறு  காணும்போது  ஈசனின்  அளவிலா  அன்பு  நம்மை  வியக்க  வைக்க  வைக்கிறது . அறுபத்து மூவரின்  வரலாறு  காணும்பொது  ஒரு பெரிய  உண்மை  அதிசயிக்க  வைக்கிறது . எத்தனை  வேறுபாடுகள்  காணப்படுகின்றன . ஏழை , பணக்காரன் , அரசன் ,ஆண்டி , படித்தவன்  படிக்காதவன்  எல்லோரும்  வேறுபாடின்றி   சிவ  பெருமானின்  திருவடிகளை  சேர்ந்தவர்கள் . அவனுடைய  கருணைதான்  என்னே ! சிலர்  அவனை  உளமாற  துதித்து  பாடி  மகிழ்ந்தனர் . அவனையன்றி  வேறு  எண்ணமே  இல்லாமல்   வாழ்ந்தனர் .  சிலர்  உழவார  பணி  செய்து  மகிழ்ந்தனர் . ஆலயங்கள்  எழுப்பியவர்களும்  உண்டு .சிலர்   ஒரு கொள்கைக்காக  எத்தனை   பெரிய  தியாகத்தையும்  செய்ய  துணிந்தனர் . ஈசன்  எல்லோரையும்  ஒரே  கண்ணோத்துடன்   அருளி   ஏற்றுக்கொண்டான் 

Monday 14 November 2016

  உலகெலாம்  உணர்ந்தோதற்கு  அரியவன் 
 நிலவுலாவிய  நீர்மலி  வேணியன் 
 அலகில் சோதியன்  அம்பலத்தாடுவான் 
 மலர்  சிலம்படி  வாழ்த்தி  வணங்குவாம் |

இதுவே  அண்ணல்  அடியெடுத்து  கொடுக்க  சேக்கிழார  பாடிய  பாடல் , தொடர்ந்து  ஈசனை துதித்து  அவர்  எல்லையிலா  பெருமைகளை  பாடுகிறார் . 4286 பாடல்களை  கொண்ட  பெரியபுராணத்தை  இவ்வாறு  தொடங்குகிறார் .  பெருமைமிக்க  63  நாயன்மார்களின்  வாழ்க்கையை   மிகுந்த  பக்தி  சிரத்தையுடன்  எழுத  தொடங்குகிறார் . சுந்தரரால்  மிகுந்த  பக்தியுடன்  ''அடியார்க்கு  அடியேன் '' என்று  தன்னை  தாழ்மையுடன்  உணர்த்திக்கொண்டு  ஒவ்வொரு  வரியில்  அறிமுக   படுத்தப்பட்டு  பின்பு  நம்பியாண்டார்  நம்பியால்  அவர்கள்  பெருமை  ஒவ்வொரு  பாடலால்  பெருமை  படுத்தப்பட்ட  நாயன்மார்களின்  வரலாறை  விரிவாக  பாடி  அவர்கள்  பெருமையை  உலகுக்கு  உணர்த்துகிறார்  சேக்கிழார்.

Monday 7 November 2016

  சேக்கிழார்  இவ்வரிய  நூலை  எழுதவும்  அரங்கேற்றவும்  தில்லையே  சிறந்த  இடமாக  தேர்ந்தெடுக்கிறார் . அரசனும்  சம்மதம்  அளிக்கிறார் . எழுதும்  முன்  எல்லா  நாயன்மார்களையும்  பற்றி  அறிந்து  கொள்ள  அவர்கள்  எல்லோரும்  வாழ்ந்த   இடங்களுக்கு  சென்று  கிடைத்த  தகவல்களை  தெரிந்து  கொண்டார் . அதன்  பிறகு  அவர்  தில்லையை  அடைந்து  நடராஜப்பெருமானை  மனமுருக  தியானித்து  கொண்டார் .அவர்  எவ்வாறு  தொடங்கலாம்  என  ஆழ்ந்து  சிந்திக்க  தொடங்கினார் . அன்பே  உருவான  ஈசன்  அவருக்கு ''உலகெலாம்  உணர்ந்து '' என்று  அடியெடுத்து  கொடுக்கிறார் . மெய்சிலிர்த்த  சேக்கிழார்  ஈசனின்  கருணையை  வியந்து  இந்நூலை  எழுத  தொடங்குகிறார் .

Saturday 5 November 2016

அருண்மொழியின்  தேர்ந்த அறிவில்  மயங்கிய  மன்னன்  உடனே  அருண்மொழியை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொண்டான் . உத்தம சோழ  பல்லவன்  என்கிற  பட்ட  பெயரையும்  சூட்டினான் . முதல் மந்திரி  சேக்கிழார்  ஆனார் .  நல்ல  முறையாக  ஆட்சி  நடந்தது  . ஆனால் துரதிஷ்ட வசமாக  மன்னன்  சீவகசிந்தாமணி  போன்ற  சமண  நூல்களில்  மயங்கி  சமணர்கள்  பக்கம்  சாய  தொடங்கினார் . அரசவை  பெரியோர்கள்  பெரிதும்  மனம்  வருந்தி சேக்கிழாரிடம்  முறையிட்டனர் . இதனை  கேட்ட  சேக்கிழார்  மிக  வருந்தி  அவரை  சிவபெருமான்  பெருமையை   உணர  வைக்க  அவருக்கு  கண்ணப்ப, நந்தனார்  போன்ற  சிறந்த  சிவபக்தர்கள்  வரலாறை  எடுத்து  சொல்லி  சிவபெருமான்  அவர்களை  ஆட்கொண்ட  பெருமையையும்  எடுத்து  கூறி  மன்னன்   மனத்தை  மாற்றுகிறார் . அப்பக்தர்கள்  வரலாறை  கேட்ட   மன்னன்  அதில்  பெரிதும்   ஈடுபாடு  ஏற்ப்பட்டவராய்  63 நாயன்மார்கள் வரலாற்றையும்  காவியமாக  எழுதுமாறு  சேக்கிழாரை  மனமுருகி   வேண்டுகிறார் . முதலில்  தயங்கிய  சேக்கிழார்   ஈசன்   ஆணையாக  அதை  ஏற்று  அதை  உருவாக்க   அவகாசம்  தேவை   என்பதையும்   விண்ணப்பிக்கிறார் . அரசனும்  சம்மதிக்கிறான் . இவ்வாறு  பெரிய  புராணம்  நமக்கு  கிடைக்கப்பெற்றது .

Friday 4 November 2016

இவ்வாறு  அருள்மொழி  அறிவில்  எல்லோரும்  அதிசயிக்கும்  விதம்  மிக சிறந்து  விளங்கினான் .அப்போது  சோழ  நாட்டின்  அரசனாக  ஆட்சி  செய்தவர்  இரண்டாம்  குலோத்துங்கன்  எனும்  அநபாய சோழன் . அவன்  மூன்று  கேள்விகளை  கேட்டு  பதில்  வேண்டி தெரிந்தவர்கள்  அவைக்கு  வந்து  கூறுமாறு  அறிவித்தான் . அருண்மொழியின்  தந்தை  தன்  மகன்  விடை  கூறுவான்  என்று  அவனை  அரச அவைக்கு  அழைத்து  சென்றார் . அங்கு  அவையோர்  வியக்கும்  வகையில்  திருக்குறளை  மையமாக  வைத்தே  எல்லா  வினாக்களுக்கும்  தெளிவாக  பதில்  அளித்து  அவையோரை  அசர  வைத்தான் . அரசன்  அவன்  அறிவை  கண்டு  மெய் சிலிர்த்தான் .

Thursday 3 November 2016

12 திருமுறை  இப்போது  காணலாம் . சேக்கிழார்  பெருமானால்  பாடப்பட்ட  பெருமை  மிக்க  பெரிய  புராணம் . அவருடைய  இயற்பெயர்  அருண்மொழி . சோழ  பேரரசின்  மீது  அவர்களின்  பக்தியை  காண்பிக்கும்  வகையில்  ராஜராஜ  சோழனின்  இயற்பெயரான  அருண்மொழி  வர்மன்  எனும்  பெயரை  தாங்குகிறான் .சென்னை  அருகிலுள்ள  குன்றத்தூரில்  சைவ  வேளாளர்  குடும்பத்தில்  பிறந்தார் .  சேக்கிழார்  என்பது  அவரது  குடும்ப  பெயர். அருண்மொழி  சிறு  வயது  முதலே  சிறந்த  அறிவோடு  விளங்கினான் .சைவ  சித்தாந்தத்திலும்  மற்ற  சைவ நூல்களிலும்  மிகுந்த  ஆர்வமுள்ளவனாய்   திகழ்ந்தான் .

Monday 24 October 2016

பதினோராம்  திருமுறை  நம்பிகள் பாடல்களுடன்  முடிவடைகிறது .ஈசனின்  கைப்பட  எழுதப்பட்ட  ஒலையுடன்  துவங்குகிறது . பெருமைக்குரிய  நம்பிகள்   பாடல்களுடன்  நிறைவடைகிறது . அவருடைய  பாடல்கள்  தனி  முக்கியத்துவம்  உடையது . 63 நாயன்மார்கள்  பெருமையை  உணர்த்தி  அவர்களுடைய  புராணங்களை  உலகறிய  வைத்து  சிவாலயங்களிலும்  அவர்களின்  உருவ  சிலைகள்  கொலுவிருக்க  வகை  செய்தது . பெரிய  புராணம்  எழுதப்படவும்  காரணமாயிற்று . சுந்தரர்  இவ்வறிய  சிவத்தொண்டர்களை  ஒவ்வொரு  வரியில்  அறிமுகம்  செய்தார் . நம்பிகள்   ஒவ்வொருவர்    வரலாறையும்  சுருக்கமாக  தம்  திருத்தொண்டர்  திருவந்தாதியில்  ஒவ்வொரு  பாட்டாக  எழுதி  வைத்தார் . அதுவே  பிற்காலத்தில்   சேக்கிழாரால்  பெரிய  புராணமாக  விரிவாக  அத்தனை  நாயன்மார்களின்  வரலாறும்  நமக்கு  அளிக்கப்பட்டது . இவ்வகையில்  இத்திருமுறை  முக்கியத்துவம்  பெறுகிறது 

Wednesday 19 October 2016

நம்பியாண்டார்  நம்பி அருளிச்செய்த  பாக்களை  காண்போம் .
திரு  நாரையூர்  இரட்டை  மணிமாலை ,  கோயில்  திருப்பண்ணயர்  விருத்தம்  திருத்தொண்டர்  திருவந்தாதி ,  ஆளுடைப்பிள்ளையார்  திருவந்தாதி , ஆளுடைப்பிள்ளையார்  திருச்சண்பை  விருத்தம் , ஆவுடைப்பிள்ளையார்  மும்மணி   கோவை , ஆவுடை பிள்ளையார்   திரு உலாமாலை ,  திருக்கலம்பகம் ,  திருத்தொகை ,  திரு  நாவுக்கரசு  தேவர்  திரு  ஏகாதச  மாலை . இவையாகும் . 11 திருமுறை  இத்துடன்  முடிவு  பெறுகிறது . 

Friday 14 October 2016

ராஜராஜ சோழன்  அத்தி றவுகோலை  மீட்டு  நம்பியிடம்  ஒப்படைத்து  தெய்வ  பாடல்களை  மீட்க வேண்டுகிறார் . நம்பிகள்  கதவை  திறந்து  பார்த்து  திகைக்கிறார் . கரையான்களால்  சேதமடைந்திருப்பத்தினை  கண்டு  திகைக்கிறார் . உலகுக்கு  தேவையானவை  அதில் இருப்பதாக  தெய்வீக  சக்தியால்  அறிந்து  இருப்பவைகளை  அரும்பாடுபட்டு  சேகரித்து  தொகுக்க  முனைகிறார் . நாம்  இன்று  காணும்  பன்னிரு  திருமுறைகள்  அவரால்  நமக்கு  கிடைத்த  பொக்கிஷமாகும் . வேதவியாசரால்   வேதங்கள்  தொகுக்கப்பட்டு  உலகுக்கு  கிடைத்ததைப்போல்  தேவார  பாடல்களும்  நம்பிகளால்  12 திருமுறைகளாக்க  தொகுக்கப்பட்டு  நமக்கு தமிழ்  மறையாக  அளிக்கப்பட   சொத்தாகும் .  முறையே  ஞானசம்பந்தர் , அப்பர் , சுந்தரர்  தேவாரங்களும்  மாணிக்கவாசகரின்  திருவாசகமும் . திருவிசைப்பாவும் , திருமூலரின்  திருமந்திரமும் .பல  நாயன்மார்களால்  அருளப்பெற்ற  பாடல்களும்  தொகுக்கப்பட்டன . நம்பியாண்டார்  நம்பி  சுந்தரரின்  ' தில்லை  வாழ்  அந்தணர்தம் ' எனும்  பாடலை  ஆதாரமாக  கொண்டு  63 நாயன்மார்களை   அறிமுகப்படுத்தி  திருத்தொண்டர்  திருவந்தாதி  பாடினார் . அப்பாடலும்  மேலும்  பல  பக்தர்கள்  பாடிய  பாடல்கள்  11ஆம்  திருமுறை  ஆகிறது . பிற்காலத்தில்  நம்பியின்  பாடல்களை  ஆதாரமாக  கொண்டு சேக்கிழார்  பெருமான்  பெரும்  ஆராய்ச்சி  செய்து  63 நாயன்மார்களின்  வரலாறை  புராணமாக  பாடுகிறார் . அதுவே  பெரிய  புராணம்  என்று  பெருமையுடன்  12வது      திருமுறையாக  தொகுக்கப்பட்டது .

Thursday 13 October 2016

ஆனந்தம்  அடைந்த  நம்பி  காலி  தட்டுகளுடன்  வீடு  திரும்புகிறான்  பலகாரங்களை பிள்ளையார்  உண்டதாக  கூறுகிறான்  .ஆனால்  யாரும்  நம்ப  தயாராக  இல்லை .தந்தையும்  அவனை  நம்பாமல்  தண்டிக்கிறார் . ஆனால்  அவன்  திரும்ப  திரும்ப  அதையே  வலியுறுத்துவதை  கண்டு  மறுநாள்  அவனை  பூஜை  செய்ய  அனுப்பிய  தந்தை  தானும்  பின்  தொடர்கிறார் . அவன்  கதவை  தாளிட்டு  கொண்டதும்  சாவி  துவாரம்  வழியாக  அவர் பார்க்கிறார் . அங்கு  நடந்தததை  கண்ட  அவர்  மெயசிலிர்த்து  போகிறார் .வெளியே வந்த  நம்பியை  ஆரத்தழுவி  கண்ணீர்  சொரிகிறார் .நம்பியின்  வாயிலிருந்து  மடை  திறந்தாற்போல்  வரும்  தமிழ்  பாக்களை  கேட்டு  ஆனந்தம்  மேலிட  மகனை  ஆர  தழுவுகிறார் . ஆவலுடன்  நம்பி   ஊட்டிய   உணவை  உண்ட  ஈசன்  அவனுக்கு  ஊட்டிய  அறிவு  ஊற்று  அது . பெற்றோரின்  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை .  இவ்வாறு விநாயகரின்  பேரருளால்  பெற்ற  அறிவால்  அவர் நமக்கு  அளித்த  கொடையே  63 நாயன்மார்களின்  வரலாறு . நம்பி  பிற்காலத்தில்  விநாயகரின்  பேரருளால்  நாயன்மார்கள்  அருளி  செய்த  தேவார  பாடல்கள்  தில்லையில்  ஓர்  அறையில்  கிடப்பதாகவும்  திறவுகோல்  தீட்சிதர்கள்  வசம்  இருப்பதாகவும்  உணர்ந்து   மன்னன்  ராஜராஜசோழன்  உதவியால்  அவற்றை  கண்டெடுக்கிறான் .  

Wednesday 12 October 2016

கதவை  தாளிட்ட  நம்பி    கள்ளமற்ற  உள்ளத்துடன்  பிள்ளையாரை பிரசாதத்தை  உண்ண  அழைக்கிறான் . அவர்  மௌனமாய்  இருப்பதை  கண்டு  திகைக்கிறான் . அவனுடைய குழந்தையுள்ளம்  பிள்ளையார்  நேரில்   வந்து  உண்ணுவார்  என்று எண்ணுகிறது . சிறிது  நேரம்  சென்றது  அவர்  வராததை  கண்டு மனம்   வருத்தமடைகிறது . மீண்டும்   மீண்டும்  கெஞ்சி  பார்க்கிறான் . அவர் வராதது  கண்டு  துக்கம்  மேலிட  அழுகிறான் . பொறுக்க  முடியாமல்  பிள்ளையார்  வந்து  சாப்பிடாவிட்டால்  கல்லில்  தன்  தலையை  மோதிக்கொண்டு  உயிரை  விடுவதாக  கூறி  தலையை  கல்லில்  மோதுகிறான் . அவன்  வைராக்கியத்தை  கண்டு  மனமிரங்கிய  ஐயன் அவன்  முன்  தோன்றி  அவன்  கொண்டுவந்த  ப்ரசாதங்களை  உண்ணுகிறார் . அனந்த  பரவசத்துடன்  நம்பி  அதை  ரசிக்கிறான் .

Tuesday 11 October 2016

மறுநாள்  காலை  நம்பி  உத்ஸாகத்துடன்  பூஜை  சாமான்களையும்  நைவேத்யத்துக்கான  பலகாரங்களையும்  எடுத்துக்கொண்டு  கோவிலுக்கு  புறப்பட்டான் . பூஜையை  முறைப்படி  செய்துவிட்டு  நைவேத்தியத்திற்காக  கதவை  சாத்துகிறான் .

Friday 7 October 2016

நம்பி  தன்  தந்தையுடன்  தினமும்  கோவிலுக்கு  சென்று  அவர்  பூஜை  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் . அவர் கதவை  தாளிட்டு  கொண்டு  பிள்ளையாருக்கு  பலகாரங்களை  நைவேத்யம்  செய்வதையும்  கூர்ந்து  கவனிப்பார் . ஒருநாள்  நம்பியின்  தந்தைக்கு  அவசரமாக  வெளியூர்  செல்ல  நேர்கிறது. நம்பியின்  தாயார்  கோயிலில்  பூஜை  செய்யும்  பொறுப்பை  நம்பியிடம்  ஒப்படைத்துவிட்டு  செல்லுமாறு  கூறுகிறாள் . அவன்  சிறு  பிள்ளை  அவனுக்கு  செய்ய  தெரியாதோ  என்று  ஐயப்படுகிறார் . பிறகு  வேறு  வழியின்றி  அவனிடம்  ஒப்படைத்து  விட்டு  வெளியூர்  செல்கிறார் .இந்த  சம்பவத்தால்  தான்  நம்பியின்  வாழ்க்கையில்  பெரும்  மாற்றம்  ஏற்படுகிறது . அவனது  மாசற்ற  பக்தி  வெளியில்  தெரிகிறது . .

Wednesday 5 October 2016

11 திருமுறையின்  கடைசி  தொகுப்பை  வழங்கியவர்  திரு நம்பியாண்டார்  நம்பி  ஆவார் . அவர்  ஆதி  சைவர்  குலத்தை  சேர்ந்தவர் . திருநாரையூரில்  கோயிலில்  அர்ச்சகராக  பணிபுரியும்  குடும்பத்தை  சேர்ந்தவர் .சிறு  வயது  முதலே  அங்குள்ள  பிள்ளையாரிடம்  மிகுந்த  பக்தி  கொண்டவராக  இருந்தார் . அவர்  தந்தை  கோவிலில்  பணி  புரியும்  போது  கூடவே  செல்வார் . அவர்  செய்வதை  கூர்ந்து  கவனிப்பார் .

Monday 26 September 2016

இவ்வாறு  பெரும்  சித்தராக  வாழ்ந்து  மறைந்த  பட்டினத்தார்  நமக்கு  அருளிய  பாடல்  தொகுப்புகள்  இவையாகும்

கோயில்  நான்மணிமாலை , கழுமல  மும்மணி  கோவை ,  திருவிடைமருதூர்  மும்மணிக்கோவை ,  திருஏகம்பமுடையார்  திருவந்தாதி ,  திருவொற்றியூர்  தொகை , .திருப்பாடற்றிரட்டு . இவையாகும் ..
அடுத்து  நம்பியாண்டர்  நம்பி யை  பற்றி  காண்போம் . இவர்  சுந்தரரை  பின்பற்றி  நாயன்மார்கள்  வரலாற்றை  எழுதி  பெருமை  பெற்றவர் .

Thursday 22 September 2016

இவ்வாறு  எல்லாவற்றையும்  துறந்த  பட்டினத்தார்  சிவ தலங்களையெல்லாம்  சேவிக்க  புறப்பட்டு  விட்டார் .ஈசன்  மீது  நிறைய  பாடல்கள் பாடினார்   ..சிவ  பெருமானை  தரிசித்து  ஆனந்தம்  அடைந்தார் . அவர்  பாடல்கள்  எளிய  தமிழிலும்  உருக்கமான  பொருள்  கொண்டதாகவும்  இருந்தது . வாழ்வின்  நிலையாமை.யை  எளிமையாகவும் பொருள்செறிந்ததாகவும்     சித்தரிக்கிறார் . பெரும்  சித்தராக  திகழ்ந்தார் . இவ்வாறு  திரிந்து  கொண்டிருக்கையில்  அவர்  தாயின்  அந்திம  காலம்  நெருங்குவதை   உணர்கிறார் . அவர்  தாய்க்கு  அவள்  ஈமச்சடங்குகளை  செய்வதாக  வாக்களித்திருந்த்தால்  அங்கு  விரைகிறார் . விறகுகளை  நிக்கி விட்டு  வாழை  மரத்தையும்  இலைகளையும்  வைத்து  எரியூட்டுகிறார் . அப்போது  அவர் பாடிய  ' ஐயிரண்டு  திங்களாய்  அங்கமெலாம்  நொந்து '  எனும்  பாட்டு  உருக்கமானது  .  அதன்  பின்  அவர்  சீர்காழி , சிதம்பரம்  போன்ற  தலங்களை  தரிசித்து  கொண்டு  திருவொற்றியூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  ஒரு  நாள்  சிறுவர்களுடன்  ஆடி  தன்னை  மணலால் மூட  செய்கிறார் . அங்கு  அதிசயம்  நிகழ்ந்தது . அவர்  இருந்த  இடத்தில்  அவரில்லை  ஆனால்  ஒரு   சிவலிங்கம்  இருந்ததாக  கூறப்படுகிறது ..

Tuesday 20 September 2016

ஓலையில்  கண்ட  அந்த  ஒரு  வாக்கியம்  அவரை  உ லுக்கி  நிலை  குலைய  வைத்தது . அந்த  கணமே  அவர்  மனம்  சகல  ஆசைகளையும்  துறந்தது . வெறும்  கோவணத்துடன்  ஆண்டி  கோலத்தை  ஏற்றார் . தன்  செல்வம்  அனைத்தையும்   தன்  நண்பரான  சேந்தனார்  எனும்  சிவத்தொண்டரிடம்  எல்லா  செல்வத்தையும்  வறியவர்களுக்கு  தானமாக  வழங்கிட  பணித்தார் . சேந்தனாரை  சொல்லுகையில்  இதை  குறிப்பிட்டிருக்கிறேன் . அவரும்  அவ்வாறே  செய்தார் .திருவெண்காடர்  பட்டினத்து  அடிகள்  ஆகிறார் , அவருடைய  தமக்கை  இவ்வாறு  செல்வம்  பறிபோவதை  காண  பொறாமல்  அப்பத்தில்  விஷம் வைத்து  அதை  அடிகளாருக்கு  கொடுக்கிறாள் . அதை  அவர்  தமக்கையின்  வீட்டு  கூரையில்  எறிகிறார் . அவள்  வீடு  பற்றி  எரிகிறது ." தன்  வினை  தன்னை  சுடும் , ஓட்டப்பம்  வீட்டை  சுடும் " இது  அவரது  வாக்கியம் .

Saturday 17 September 2016

திருவெண்காடர்  தம்பதியினர்  திருவிடைமருதூர்  ஆண்டவன்  அருளால்  கிடைத்த  அக்குழந்தைக்கு  மருதபிரான்  என்று  பெயரிட்டு  அருமையுடன்  வளர்க்கின்றனர் . அவன் வளர்ந்து   தக்க  வயது  வந்ததும்  அவனையும்  வணிகத்தில்  ஈடுபடுத்த  எண்ணுகிறார் . வெளிநாடுகளுடன்  வாணிபம்  செய்ய  கப்பலில்  சரக்கை  ஏற்றி  அவனை  அனுப்புகிறார் . மகன்  கப்பலுடன்  திரும்புகிறான் . ஆனால்     தந்தைக்கு  மிக்க  ஏமாற்றம்  அளிக்கும்     வகையில் கப்பலில்  விரட்டியும்  வைக்கோலும்  இருப்பதைக்  கண்டு  அதிர்ச்சி  அடைந்த  திருவெண்காடர்  மகனை  அடித்து  அறையில்  வைத்து  புட்டுகிறார் . ஆனால்  மகன்  தாயிடம்  ஒரு  பெட்டியை  கொடுத்துவிட்டு  மறைந்து   விடுகிறான் . பூட்டி  இருந்த  அறையில்  இருந்து  மகன்  காணாமல்  போனது  கண்டு  திடுக்கிடுகிறார் .  மனைவியிடம்  அவன்  கொடுத்த  பெட்டியை  திறந்து  பார்க்கிறார் . அதில்  ஒரு காதற்ற  ஊசியும்  ஒரு ஓலையும்  இருக்க கண்டார் . அந்த  ஓலையில்  'காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே ' என்று  எழுத  பட்டிருந்தது . மேலும்  அவன்  கொண்டுவந்த  விரட்டி  களுக்குள்  வைரமும்  விலை  உயர்ந்த  ரத்தினங்களும்  இருக்கக்  கண்டார் . மகனாக  வந்தது  ஈசனே  என்பதை  அறிந்து  கொண்டார் 

Wednesday 14 September 2016

திருவெண்காடர்  16 வயதில்  சிவகலை  என்னும்  பெண்மணியை  மணம்  செய்து  கொண்டார் . வாணிபத்தில்  சிறந்த  முறையில்  செயலாற்றி  பெரும்  செல்வந்தனானார் . ஆனால்  மணமாகி  15 வருடங்கள்  கடந்தும்  பிள்ளை  பேறு  அடையவில்லை . சிவபெருமான்  தன்  விளையாட்டை  தொடங்குகிறார் . அதே  பகுதியில்  சிவனடியார்களுக்கு அன்னமிட்டே     மிக  வறிய  நிலை  அடைந்து  விட்ட  ஒரு  தம்பதியினருக்கு  உதவ  எண்ணம்  கொண்டார் . அவர்கள்  கனவில்  தோன்றி  அருகில்  ஓர் இடத்தில்  ஒரு  மரத்தை  குறிப்பிட்டு  அதனடியில்  ஒரு  ஆண்  குழந்தை  இருக்கும்  என்றும்  அக்குழந்தையை  திருவெண்காடரிடம்  சேர்ப்பித்து  அதன்  எடை  பொன்  பெறுமாறு  அறிவுறுத்துகிறார் . திருவெண்காடர்  கனவில்  தோன்றி  ஏழை தம்பதிகள்  ஒரு  குழந்தையை  கொடுப்பார்கள்  என்றும்  அவர்களுக்கு  அந்த  குழந்தை  எடை  பொன்  கொடுக்குமாறும்  அறிவுறுத்துகிறார் . அவர்  ஆணையிட்டது  போலவே  குழந்தையை  பெற்றுக்கொண்டு  பொன்  கொடுத்து  அனுப்புகிறார்  திருவெண்காடர் .

Sunday 11 September 2016

அடுத்து  826 முதல்  1035 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  பட்டினத்தார்  என்று  அழைக்கப்பட்ட  திருவெண்காடர் . பட்டினத்தார்  என்று  சொன்னாலே  நமக்கு '' காதற்ற  ஊசியும்  வாராது  காண்  கடை  வழிக்கே " என்ற  வாக்கியம்  நம் மனதில்  தோன்றும் . அந்த  ஒரு வாக்கியத்தால்  மனம்  மாறி   பெரும்  சித்தரான  மகான்  இவர் . பொருள்களின்  நிலையாமை யை  ஒரே  வரியில்  உணர்த்தும்  இந்த  வாக்கியத்தினால்  மனம்  மாறியவர்  .     காவிரி  பூம்பட்டினத்தில்  பெரும்  வணிகரான  சிவநேசன்  என்பவருக்கும் அவர்  மனைவி  ஞானக்கலை  என்பவருக்கும் திருவெண்காட்டு  ஈசன்  அருளால்  பிறந்தவர்  திருவெண்காடர் . அக்குடும்பமே  சிவத்தொண்டர்களை  பணிந்து  அவர்களுக்கு  அன்னமிட்டு  அதில் மகிழ்ந்து  வாழ்ந்தனர் . திருவெண்காடர்  5 வயதாக  இருந்தபோதே  துரதிஷ்டவசமாக  தந்தையை  இழந்தனர் .

Monday 5 September 2016

11திருமுறையில்  அடுத்த      515  முதல் 671  வரை  பாடல்களை  பாடியவர்  கபிலதேவர் . அவை மூத்த  நாயனார்  திரு  இரட்டை மணி  மாலை ,சிவபெருமான் இரட்டை  மணிமாலை  மேலும்  சிவ பெருமான்  திருவந்தாதி   ஆகும் .
 அடுத்து  672-772  பாடல்களை  பாடியவர்  பரணதேவ  நாயனார்  ஆவார் . அவை  சிவபெருமான்  திருவந்தாதி
அடுத்து  773- 802  பாடல்களை  பாடியவர் இளம்பெருமான்  நாயனார் . அவை  சிவபெருமான்  திருமும்மணிக்கோவை
அடுத்து  803-825  பாக்களை  பாடியவர்  அதிரா அடிகள் . அவை
மூத்த  பிள்ளையார்  திரு  மும்மணிக்கோவை .
 இவர்களை  பற்றி  அதிகம்  தெரியவில்லை . இதே  பெயர்  கொண்ட  புலவர்கள்  சங்க  காலத்திலும்  இருந்ததாக  தெரிகிறது . 11   திருமுறையில்  உள்ள  பாடல்  தொகுப்புகள்  இவை .


Saturday 3 September 2016

நக்கீரதேவ நாயனார்    11திருமுறையில்  302 முதல்  513 வரை  உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் . அவை :
கைலை  பாதி  காளத்தி  பாதி  அந்தாதி ,திரு  ஈங்கோய்மலை  எழுபது ,திருவலஞ்சுழி  மும்மணிக்கோவை ,திருஎழு  கூற்றிருக்கை , பெருந்தேவபாணி ,கோபப்பிரசாதம் , கார் எட்டு ,போற்றித்திரு கலி  வெண்பா , இவையோடு  திரு  முருகாற்றுப்படை  ஆகும் .

இத்திருமுறையில்  அடுத்து  ஒரு  514 தொகுப்பை  பாடியவர்  கல்லாட தேவர் .திரு  கண்ணப்ப தேவர்  திரு  மறம் என்ப  தாகும்  . இவரை  பற்றி  சிறந்த  சிவ பக்தர்  என்பதை  தவிர  வேறு  விவரம்  ஏதும்  தெரியவில்லை .

Sunday 28 August 2016

ஈசன்  நெற்றிக்கண்  திறக்க அந்த  வெப்பத்தால்  பாதிப்படைந்த  நக்கீரர்  ஈசனிடம்   மன்னிப்பு  வேண்டுகிறார் . அன்பே  உருவான  ஈசன் அவரை  மன்னித்து  வாழ்த்துகிறார்  அவர்  அகத்தியரிட ம்  செல்கிறார்  ஈசனை  துதித்து  நிறைய  பாடுகிறார் . ஈசன்  மைந்தன்  முருகனை  துதித்து  திருமுருகாற்றுப்படை  எ ன்னும்  அறிய  பாக்களையும்  பாடுகிறார் .  அவர்  முருகன்  குடியிருக்கும்  அநேக  தலங்களையும்  பாடுகிறார் . 

Thursday 25 August 2016

தருமி  அவ்வோலையை  ஆவலுடன்  அரச  சபைக்கு  எடுத்து  வந்து  அரசனிடம்  சமர்ப்பிக்கிறான் . அரசன்  மகிழ்ச்சி  அடைகின்றான் . ஆனால்  நக்கீரர்  தடுத்து  அதில்  பொருள்  குற்றம்  இருப்பதாக  கூறி  பரிசு  பெறுவதை  தடுக்கிறார்  ஈசனே  வந்து  வாதிட்ட  போதிலும்  அன்னையின்  கூந்தலுக்கு  இயற்கை  மணம்  கிடையாதென்று  வாதிக்கிறார் . கோபமடைந்த  ஐயன்  நெற்றிக்கண்ணை  திறக்க ,நெற்றிக்கண்ணை  திறந்தாலும்  குற்றம்  குற்றமே  என்று  உரைக்கிறார் . 

Monday 15 August 2016

அடுத்தது  302 முதல் 513 வரை  பாடியவர்  நக்கீரதேவ  நாயனார் .அவர்  மதுரை  நகரை  சேர்ந்தவர் . பாண்டிய  மன்னனின்  அவை  புலவராவார் . ஆவர்  திரு  முருகாற்றுப்படை  அவர்  பாக்களில்  பிரசித்தி  பெற்றது . இவரை  பற்றிய  ஒரு  சம்பவம்  மிக  பிரசித்தி  பெற்றது .மன்னனுக்கு  ஒரு சந்தேகம்  ஏற்பட்டது . அதாவது  பெண்கள்  கூந்தலுக்கு  இயற்கையாக  மணம்  உண்டா  என்பதே . இதற்கு  சரியான  விடை  அளிப்பவருக்கு  1000 பொற்காசுகள்  பரிசு  அளிப்பதாக  மன்னர்  கூறுகிறார் . ஏழை  புலவன்  தருமி  ஈசனிடம்  மன்றாடுகிறான் . தன்  வறுமை  நீங்க  வழி  காட்டுமாறு  வேண்டுகிறான் . ஈசனும்  அவனுக்கு  இரங்கி  ஓலையில்  இதன்  பதிலை  எழுதி  மன்னனிடம்  காட்டி  பரிசு  பெருமாறு  கூருகிறார் .

Sunday 31 July 2016

சேரமானார்  11 திருமுறையில்  169 முதல்  301 வரை உள்ள  பாடல்களை  பாடியுள்ளார் .  பொன்வண்ணத்தந்தாதி , திருவாரூர்  மும்மணிக்கோவை  மேலும்  கைலாய ஞான  உலா  ஆகும்.  சுந்தரரை  காண  திருவாருவர்  சென்ற  போது  ஈசன்  சன்னதியில்  பாடியது  மும்மணிக்கோவை . சுந்தரர்  ஐராவதம்  யானையில்  கைலை  செல்கையில்  அவரை  தொடர்ந்து  தன்  குதிரையின்  காதில்  பஞ்சாட்சரம்  ஓதி  தொடர்ந்து  கைலாயம்  சென்றது  அறிவோம்  . அப்போது  நொடியில்  கைலைநாதரை  துதித்து  அவர்  இயற்றி  பாடியது  கைலாய  ஞான  உலா . இவ்வாறு  நொடியில்  பாடல்  இயற்றி  பாடுபவரை  ஆசு  கவி  என்பர் . இவ்வாறு  பெருமைகள்  பெற்ற  இவரை  எவ்வாறு  போற்றுவது ? வார்த்தைகளே  இல்லை அவரது  குரு  பூஜை  ஆடி  மாதத்து  ஸ்வாதி  நக்ஷத்திரமாகும் .

Tuesday 26 July 2016

இந்த  திருமுறையின்  முதல்  பாடல்  ஈசனால் எழுதப்பட்ட  கடிதம்  என்றும்  அது  ஆலவாய்  ஈசன் சேரமான்  பெருமானுக்கு  எழுதியது  என்பதையும்  முன்பே  குறிப்பிட்டிருந்தோம் . அக்கடிதத்தை  கண்ட  சேரமான்  எத்தனை  இன்ப  அதிர்ச்சிக்கு  ஆளாயிருப்பார்   என்று  சொல்லத்தேவை  இல்லை . அவர்  இன்பத்தின்  எல்லைக்கே  சென்றுவிட்டார் . தனக்கு  சொந்தம்  என்று   உள்ள  அத்தனை  வஸ்த்துக்களையும்  மிக்க  மகிழ்ச்சியோடு  கொண்டு  நிரப்பி  விட்டார் . ஏழை  பரம  சிவ  பக்தனான  பாண பத்தர்  வாயடைத்து  நின்று  விட்டார் . அவர்  தனக்கு  தேவையான  ஒருசில  பொருட்களை  எடுத்துக்கொண்டு  நன்றி  சொல்லி  புறப்பட்டார் . ஆனால் சேரமான்  அவரை  தம் யானையில்.  ஏற்றி  வழி  அனுப்பி  வைத்தார்   

Sunday 24 July 2016

சேரமான்  பெருமானார்  சுந்தரரை  காண  பெரும் ஆவல் கொண்டவராய்   திருவாரூர்  சென்று  அவருடன்  நெருங்கி  பழகி  தம்பிரான்  தோழனான  அவர்  சேராமந்தோழன்  என  அழைக்கப்படும்  அளவுக்கு  அவருடன்  நெருக்கமானார் . அவருடனேயே  கைலாயமும்  சென்றார்  என்று  சுந்தரர்  வரலாறு  காணும்போது  அறிந்தோம் .

Saturday 23 July 2016

சிறந்த  ஆடலரசன்  பக்தரான சேரமானுக்கு   பூஜை  முடித்ததும்  அவரின்  சலங்கை  ஒலி  கேட்கும் . அவர்  பரவசமடைவார் . ஒரு  நாள்  அதை  கேட்காததால்  அவர்  மிகுந்த  அதிர்ச்சி  அடைந்து  தன்னை  தானே  மாய்த்துக்கொள்ள  முனைந்தார் . கருணைக்கடலான  ஈசன்  அவரை  தடுத்து  தான்  சுந்தரருடைய  பாடல் கேட்டதால்  அதில்  மயங்கி  காலதாமதம்  செய்துவிட்டதாக  கூறுகிறார் . ஈசன்  உள்ளத்தில்  அவர்கள்  இருவரையும்  சந்திக்க  வைக்கும்  ஆவல் உண்டாயிற்று .

Tuesday 19 July 2016

ஒருநாள்  சேரமான்  பட்டத்து  யானை  மேல்  சென்று  கொண்டிருந்த  போது  ஒரு சலவை  தொழிலாளி  வந்து  கொண்டிருந்தான் . அவன்  உடலெல்லாம்  சுண்ணாம்பு  நீரால்  வெளுத்து  காணப்பட்டது . சேரமான்  அதை  திருநீறு  என்று  எண்ணிக்கொண்டு  யானையை  விட்டு  இறங்கி  அவன்  காலடியில்  விழுந்தான் . திகைப்படைந்த  தொழிலாளி  தான்  சாதாரண  சலவை  தொழிலாளி  என்று  வற்புறுத்தியும்  அரசன்  காதில்  அது  விழவே  இல்லை .அவனுடைய  பக்தியின்  ஆழம்  வியக்கத்தக்கது .

Monday 11 July 2016

நாம்  முன்பே  சுந்தரர்  வாழ்க்கை  வாழலாற்றில்  இவரை  சந்தித்திருக்கிறோம் . இவருடைய  பெருமையும்  அறிந்திருக்கிறோம் .சுந்தரர் 'சேரமான் தோழன் '  என  அழைக்கப்பெற்றிருப்பதை  கண்டோம் . இவருக்கு  பூஜை  முடித்ததும்  ஈசனின்  நடனத்தின்  சிலம்பொலி  தினமும்  இவர்  காதில்  கேட்க்கும்  என்றும்  அறிவோம் . எல்லாவற்றிர்க்கும்  மேலாக  இந்த  திருமுறையின்  முதல்  பதிகத்தில்  ஈசனே  தன்  கைப்பட  இவர்க்கு  ஓலை    எழுதி  இருப்பதையும்  கண்டோம் .  இவர்  சுந்தரருடன்  சேர்ந்து  கைலாயம்  சென்றதையும்  கண்டோம் . இத்தகைய  பெருமை  வாய்ந்த  இவரை  பற்றி  அறிந்து  கொள்வது  நமக்கு  பெரும்  பாக்கியமே .

Saturday 9 July 2016

அடுத்து  169 முதல்  301  உள்ள  பாடல்களை  பாடியவர்  சேரமான்  பெருமானார்  ஆவர் . சேரநாட்டில்  திருவஞ்சைக்களம்  என்னும்  ஊரை  தலைநகராக  கொண்ட  ராஜ்ஜியத்தை  ஆண்டவர் .அவர்  தந்தையும்  சிறந்த  சிவபக்தர் . சிவத்தொண்டு  செய்ய  விரும்பிய  அவர்  ராஜ்ஜிய  பொறுப்பை  மகனிடம்  ஒப்படைத்து விட்டு  யாத்திரை  செல்ல  விரும்பினார் . ஆனால்  சேரமான்  பெருமானார் அதை  தன்  சிவ  தொண்டிற்கு  இடையூறாக  கருதினார் .  ஈசனை  துதித்து  தன்  மன  கவலையை  கூறினார் . ஈசன்  அவருக்கு  ஆசி  கூறி  அவருக்கு  எல்லோருடைய  மனதையும்  அறியும்  ஆற்றலையும்  வழங்கினார் , செவ்வனே  ஆட்சி  புரிய  ஆசி  கூறினார் . இதன்  காரணமாக  இவர்க்கு  கழற்றறிவார்  எனும்  பெயரும்  உண்டாயிற்று . அவர்  அரச  பொறுப்பையும்  ஏற்றார் . 

Wednesday 6 July 2016

11 திருமுறையின்  அடுத்த  24 வெண்பாக்களை  பாடியவர்  ஐயடிகள்  காடவர்கோன்  நாயனார் ஆவார் . அவர்  பல்லவ  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர்  காஞ்சியை  தலைநகராக  கொண்டு  ஆட்சி  செய்தவர் . சிறந்த  சிவபக்தர் . வேத  சாஸ்த்திரங்களை  நன்கு  கற்றுணர்ந் தவர் . பல்லவ  சாம்ராஜ்யத்தை  பெருக்கி  சிறந்த  முறையில்  ஆட்சி  செய்து  வந்தவர் .அவர்  ஆட்சியில்  மக்கள்  மட்டுமின்றி  எல்லா  ஜீவன்களும்  மிக  ஆனந்தமாக  வாழ்ந்தனர் . ஆனால்  அவர்  மனம்  மட்டும்  எப்போதும்  அந்த  அம்பல   கூத்தனை  நாடியவாறே  இருந்தது . ஆவலை  அடக்க  முடியாதவராய்  ராஜ்ஜிய  பாரத்தை  தன்  மகனிடம்  ஒப்படைத்து  விட்டு  சிவாலயங்களை  தரிசிக்க  பயணமானார் . தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்தவராய்  அவர்  மீது  பாடல்கள்  புனைந்தார் . மேலும்  பல  ஆலயங்களில்  ஐயனை  தரிசித்து  பாடல்கள்  பாடி  மனம்  மகிழ்ந்தார் . இவ்வாறு  சிவாலயங்களை  தரிசித்து  ஒரு  ஐப்பசி  மூலம்  நாளில்  இறைவன்  அடி  சேர்ந்தார் . 63 நாயன்மார்களில்  இவரும்  ஒருவர்  ஆவார் .

Friday 17 June 2016

அம்மையே  என  ஈசனால்  அழைக்கப்பட  மெய்சிலிர்த்து  காரைக்கால்  அம்மையார்  அப்பா! என்று  அவர்  காலடியில்  வீழ்ந்தாள் . மகிழ்ந்த  ஈசன்  வேண்டிய  வரத்தை  கேட்க  பணிக்கிறார். அம்மையார்  பிறவாமை  வேண்டுகிறார் , அப்படி  பிறந்து  விட்டால்  உன்னை  என்றும்  மறவாமை  வேண்டும் .இன்னும்  வேண்டும்  அரவா!  நான்  பாடி  நீ  ஆடும்போது  உன்  அடியின்  கீழ்  இருக்க '  என வேண்டுகிறாள் . மனமுவந்த  ஈசன்  அவரை   ஆலன்காட்டிற்கு  செல்லுமாறு  அங்கு  தம்  ஆனந்த  நடனத்தை  காணலாம்  என்று  உரைக்கிறார் . மனமகிழ்ந்த  அம்மையார்  தலையாலேயே  நடந்து  ஆலங்காட்டை  அடைகிறார் .அங்கு  ஈசன்  அவளுக்கு  காட்சி  அளிக்கிறார் 'கொங்கை  திரங்கி  நரம்பெழுந்து '  எனும்  மூத்த  திருபதிகம்  பாட  ஐயன்  நடனமாடுகிறார் . அம்மை  ஆனந்தத்திற்கு  எல்லை  ஏது ? அம்மையார்  திருஞான சம்பந்தருக்கு  முன்பு  இருந்தவர் . அவரே  முதலில்  பதிகம்  பாடியவர் . ஆதலால்  இது  மூத்த  பதிகம்  ஆகிறது .அவர்  பாடிய  மற்றவை  "அற்புத  திருவந்தாதி , திரு  இரட்டை மணிமாலை   ஆகும் . 

Tuesday 14 June 2016


கணவன்  வார்த்தைகளை  கேட்டு  அதிர்ச்சி  அடைந்த  புனிதவதி  கணவனுக்கு  மகிழ்ச்சி  அளிக்காத  தன்  அழகை  அவள்  வெறுத்தாள் . ஈசனை  துதித்து  தன்  அழகை  அழித்து  தன்னை  எலும்பு  கூடாக  மாற்ற  வேண்டுகிறாள் . ஈசனும்  அவ்வாறே  அவளை  மாற்றுகிறார் . எல்லோரும்  அதிர்ச்சியும்  வேதனையும்  அடைகின்றனர் . புனிதவதி  அவர்களை  தேற்றிவிட்டு  அந்த  ஆடவல்லான்  கோயில்களை  தரிசித்து  அவன்  புகழை  பாட  விழைகிறாள் . பல  இடங்களுக்கு  சென்று  தரிசித்த  பின்  அவள்  கைலாயம்  செல்ல  ஆவல்  கொண்டு  ஐயன்  வாழும்  இடத்தை  காலால்  மிதிக்க  மனம்  ஒப்பாமல்  தலையாலேயே  நடந்து  செல்கிறாள் . இத்தகைய  பக்தியும்  மன  உறுதியும்  ஈசனையும்  தேவியையும்  அதிசயிக்க  வைக்கிறது .அம்மையே ! என்று   வரவேற்கிறார்கள் . இந்த  பாக்கியம்  யாருக்கு  கிடைக்கும் .

Saturday 11 June 2016

ஆனந்தம்  அடைந்த  புனிதவதியின்  பெற்றோர்   அவளை  அலங்கரித்து  பல்லக்கில்  உட்கார  வைத்து  சீர்வரிசைகளுடன்  பரமதத்தன்  வாழும்  இடத்திற்கு  அழைத்து  செல்ல  முற்பட்டனர் . விஷயம்  அறிந்த  பரமதத்தன்  தெய்வத்திற்கு  இணையாக  தான்  கருதும்  புனுதவதி தன்னை  தேடி  வருதல்  பாவமாக  கருதி  தன்  மனைவியையும்  குழந்தையையும்  கூட்டி  சென்று  மூவரும்  அவள்  காலடியில்  வீழ்ந்தனர் . எல்லோரும்  திகைத்து  மனைவிவை  வணங்குவதன்  காரணம்  கேட்டனர் . பரமதத்தன்  அவள்  சாதாரண  பெண்ணல்ல  தெய்வத்திற்கு  சமமானவள்  எல்லோரும்  வணங்க  வேண்டியவள்  என்று  கூறுகிறான் . தன்  பெண்ணிற்கு  அவள்  பெயர்  சூடி   இருப்பதையும்  கூறுகிறான் .எல்லோரும்  அதிர்ச்சி  அடைகின்றனர் .

Wednesday 8 June 2016

இவ்வாறு  புனிதவதியும்  அவள்  குடும்பத்தினரும்  மன  வேதனையுடன்  வாழ்ந்து வந்து  கொண்டிருந்தனர் . ஒருநாள்  அவர்களூடைய  உறவினர்  ஒருவர்  பரமதத்தனை  காண  நேரிடுகிறது .அவர் உடனே  அவன்  இருப்பிடத்தை  புனிதவதியின்  பெற்றோரிடம்  கூறுகிறார் , அவர்கள்  அடைந்த  ஆனந்தத்திற்கு  அளவே  இல்லை . 

Thursday 2 June 2016

paramathaththan

பரமதத்தன்  இத்தகைய  மனநிலையுடன்  வாழ  முடியாமல்  வீட்டைவிட்டு  வெளியேறுகிறான் . யோசித்து  பிறகு  நாட்டைவிட்டெ  வெளியேறி  வியாபாரம்  தொடங்க  முற்பட்டான் . அதில் அமோக வெற்றி  அடைந்து  தனவந்தன்  ஆனான் . பிறகு  பிறந்த  நாட்டை  காண  ஆவல்  கொண்டான்  ஆனால்  காரைக்கால்  செல்ல  மனமில்லாமல்  பாண்டிய  நாட்டில்  ஒரு  துறைமுகத்தில்  குடியேறினான் . அங்கு  வேறொரு  பெண்ணை  மணந்து  கொண்டான் . அவர்களுக்கு  பிறந்த  பெண்  குழந்தைக்கு  புனிதவதி  என்று  பெயர்  சூட்டினான் . காரைக்காலில்  புனிதவதி  கணவனை  காணாமல்  மிக  வேதனை  கொணடவளாக  ஈசனே  கதி  என்று  வாழ்ந்து  வந்தாள் .

Thursday 26 May 2016

இரண்டாவது  கனியை  உண்ட பரமதத்தன்  மிக  அதிசயமடைந்தான் . அந்த  கனி  அவன்  இதுவரை  உண்டிராத  அலாதி  சுவையுடன்  இருக்க  கண்டான் . அதிசயித்து  புனிதவதியிடம்   காரணம்   வினவினான் . அவளும்  மிகுந்த  தயக்கத்துடன்  நடந்ததை  கூரினாள் .  நடந்ததை  கேட்டு   அதிசயித்து  அவளை  கண்டான் . அவளை  மறுபடி  வரவழைக்க கூறுகிறான்  அவளால்  எடுக்கமுடிந்த  அக்கனி  அவனால்  தொடக்கூட  முடியவில்லை . அதிர்ச்சி  அடைந்த  அவனுக்கு  புனிதா  சதாரண  மானிட  பெண்ணாக  காண  முடி யவில்லை , அவள்  அன்னையாக  தோன்றினாள் . மனைவியாக  அவளை  நினைக்கவே  கூசினான் . அவளை  அன்னையாக  வணங்க  முற்பட்டான் .    

Wednesday 18 May 2016

punitha

புனிதவதியும்  பரமதத்தனும்  மகிழ்ச்சியாக  வாழ்ந்து  கொண்டிருந்தனர் . ஒரு நாள்  பரம தத்தன்   இரு  மாங்கனிகளை  புனிதவதியிடம்  கொடுத்து  தான்  வந்து  உண்பதாக  சொல்லி  சென்றான் . அவளும்  அவைகளை பெற்றுக்கொண்டு  உள்ளே  வைத்தாள் . அப்போது  ஒரு  சிவனடியார்  வந்து  வாசலில்  நின்று  பசிக்கு  உணவளிக்க  கூறினார் . புனிதவதி  தன்  கணவர்  கொடுத்தா  கனிகளில்  ஒன்றை  சிவனடியார்க்கு  மிக்க  மகிழ்க்ச்சியுடன்  ஈந்தாள் . சிறிது  நேரத்தில்  அவள்  கணவன்  வந்து  அக்கனியை  கொண்டு  வருமாறு  கூறினான் . அவளும்  இருந்த  ஒரு  கனியை  கொண்டவந்து  கொடுத்தாள் . அதை  உண்ட  கணவன்  அதன்  ருசியில்  மயங்கி மற்ற  ஒன்றையும்  கொண்டு  வருமாறு  கூறுகிறான் . திடுக்கிட்ட  புனிதவதி  ஈசனிடம்  மன்றாடுகிறாள் . ஈசன்  மற்றொரு  கனி தந்து  மறைகிறார் . மகிழ்ச்சியுடன்  அதை  கணவனுக்கு  தருகிறாள் . 

Thursday 12 May 2016

11 திருமுறையில்  அடுத்த  பாடல்களை  பாடியவர்   காரைக்கால்  அம்மையார் . காரைக்கால்  கிழக்கு  தமிழகத்தில்  கடற்கரையில்  உள்ள  வாணிப  துறைமுகம் .அத்துறைமுகம்   வெளிநாடுகளுடனும்  வியாபாரம்  நடைபெற்று  வந்த வளம்  மிகுந்த  இடம் . அங்கு தனதத்தர்  என்பவர்  மிக  செல்வாக்கு  உடைய  வணிகர்  அவர்  தவம்  இருந்து  பெற்ற  ஒரே  மகள்  புனிதவதி . அக்குழந்தை  சிறு  வயது  முதல்  அந்த  ஆடவல்லான்  இடத்தில்  மிக  பக்தி  கொண்டவளாக  இருந்தாள் .அவர்  ஆடலில்  மிககவரப்பட்டவளாக  இருந்தாள் . அவரை  பற்றி  பேசுவதே  அவளுக்கு  மிக  ஆனந்தம்  அளித்தது
. அவளும்  வளர்ந்து  அழகு  பண்பு , பக்தி  எதிலும்  சிறந்து  திகழ்ந்தாள் . அவள்  பெற்றோர்  அவளை  நாகபட்டினத்தை  சேர்ந்த  பரமதத்தன்  என்னும்  வணிக  வாலிபனுக்கு  மணமுடித்து  வைத்தனர் .

Saturday 7 May 2016

திருஆலவாய் அடிகள்  என்கிற  சிவபெருமான்   எழுதிய  ஓலையுடன்  துவங்கும்  இத்திருமுறை  இன்னும் பதினொன்று  ஆசிரியர்களை  கொண்டது . அவர்கள்  ஈசனால்  அம்மையே  என்று  அழைக்கப்பட்ட  காரைக்கால்  அம்மையார் , ஐயடிகள்  காடவர்கோன் , சேரமான்  பெருமானார் ,நக்கீரர் ,கல்லாடர் , கபிலர் , பரணர் , இளம்பெருகான்  அடிகள் , அதிராவடிகள் , பட்டினத்தடிகள்  மற்றும்  நம்பியாண்டார்  நம்பி  ஆவர் .

Wednesday 4 May 2016

இப்போது  நாம்  பதினோராம்  திருமுறையை  காண்போம் .இதில்  ஒரு  அற்புதம்  என்ன  என்றால்   இதன்  முதல்  முதல்  பாடல்  ஈசனே  எழுதியது . அது  ஒரு  கடித  வடிவில்  உள்ளது . அன்பே வடிவான  ஈசன்  திரு  ஆலவாய்  உடையார்  என்ற  நாமத்துடன்  தன்  பக்தன்  அரசன்  சேரமான்  பெருமானார்க்கு  எழுதிய  ஓலை .  கடிதம்  எழுதும்  பாங்கோடு  அவர்  எழுதும்  தம்மை  முதலில்  அறிமுகம்  செய்து  கொண்டு   பின்பு  யாருக்கு  அனுப்பப்படுகிறதோ  அவரை  அறிமுகம்  செய்துவி ட்டு  பின்பு  விஷயத்தை  தெரிவிக்கிறார் . அதாவது  அவருடைய  பரம  பக்தனான  பாணபத்தருக்கு  பொருள்  உதவி செய்ய  அரசன்  சேரமானை  வேண்டுகிறார் . அதுவே  கடிதத்தின்  சாரம் .+

Wednesday 13 April 2016

திருமந்திரம்  அறிவு  சமுத்திரம் . அதில்  என்னால்  அள்ள  முடிந்தது  ஒரு கை  அளவே . இத்தகைய  அறிவு  களஞ்சியம் நம்  தமிழில்  இருப்பதே  நமக்கு  பெருமை . இந்நூலை  ஆராய்ந்து  எத்தனையோ  பேராசிரியர்கள்   நூல்கள்  கட்டுரைகள்  புத்தகங்கள்  எழுதியுள்ளனர் . அவர்கள்  வாழ்க . ஆயினும்  முழுமையாக   நாம்  பெற்றுவிட்டோமா  என்பது  கேள்வி  குறியே . திருமுலரை  புரிந்து  கொண்டவர்கள்   நோய்  நொடியின்றி  நீண்ட  காலம்  வாழ்வாங்கு  வாழ்வார்கள்  என்பதில்  ஐயமில்லை . இது  உலக  பொது  மறை .

Thursday 7 April 2016

ஒன்றே  குலமும்  ஒருவனே  தேவனும்
நன்றே  நினைமின்  நமனில்லே  நாணாமே |
  இவ்வாறு  மனித  குலம்  ஒன்று  பட்டு  வாழ்வதின்  மேன்மையை  வலியுறுத்துகிறார் .
அன்பின்  வலிமையை  இவர்  மேன்மேலும்  வலியுறுத்தி  சொல்கிறார் . ஈசன்  உடலை  வருத்தி  செய்யும்  எவ்வழிபாட்டையும்   விரும்புவதில்லை . அன்பே  வடிவானவன் ."அன்போடு  உருகி  அகம்   குழைவார்கன்றி  என்போல்  மணியினை  எய்த  ஒண்ணாதே " இது  அவர்  வாக்கு
 அடுத்து  வரும்  பாடல்கள்  ஆழ்ந்த  தத்துவங்கள்  அடங்கியவை . எம்போல்  எளிய  மனிதர்கள்  அறிவிற்கு  அப்பாற்பட்டவை . ஞானிகளும்  சித்தர்களும்   அறியகூடியவை .முதலில்  புராணங்களில்  வரும்  சம்பவங்கள்  குறித்த  உள்  தத்துவங்களை  விளக்குகிறார் . ஈசன் முப்புரம்  எரித்தது , தக்ஷயாகம் , சில  அசுரர்களை  அழித்தது  போன்றவை . அஷ்டாங்க  யோகம் , ப்ராணாயாமம் , த்யானம்  மேலும்  மூலாதார  சக்கரங்கள் .பஞ்சாக்ஷ்ர  மகிமை , திருநீற்று  பெருமை  இவற்றை  விளக்குகிறார் .சூன்ய  சம்பாஷணை   என்று  பெரும்  தத்துவங்களை  பூடகமாக  விளக்குகிறார் . இவைகள்  ஆகமங்களை  அடிப்படையாக  கொண்டவை .

Thursday 31 March 2016

யார்க்கும்  இடுமின்   அவர்  இவர்  என்னமின் ?) என  வினவுகிறார்  திருமூலர் . பசி என்று  வருபவன்  யாராயினும்  இல்லை  எனாது  அன்னமிடல்  அவசியம் .எவ்வித  பேதமும்  பார்த்தல்  கூடாது . நாம்  செய்யும்  தானமே  நம்மை  தொடர்ந்து  வரும் . செல்வம்  இருந்தும்  எவ்வித  தானமும்  செய்யாதவன்  வாழ்ந்தும்  வாழாதவன் . அவன் எட்டி காய்   பழுத்தும்  யார்க்கும்  உதவாமல்  இருப்பது  போல்  அவனும்  இருப்பதும்  இல்லாததும்  ஒன்றே . அவனை  ஒறுத்தல்  நன்று  என்று  கூறுகிறார் .

Wednesday 30 March 2016

தானத்தில்  சிறந்தது  அன்னதானம் .மனிதன்  அல்லும்  பகலும்  உழைப்பது  ஒரு  சாண்  வயிற்றை  நிரப்பவே . நாம்  என்ன  தானம்  செய்தாலும்  பெறுபவர்க்கு   முழுமையாக திருப்தி அடையாமல்  இன்னும்  கொஞ்சம்  கிடைத்தால்  நலமாக  இருக்கும்  என்றே  தோன்றும் . ஆனால்  அன்னதானம்  செய்யும்  போது  வயிறு  நிறைந்த  எந்த  மனிதனும்  மனம்  திருப்தி  அடைந்து   அன்னமிட்டவரை  வாயார  வாழ்த்துவான் .பசியை  போக்குவது  நம்மால்  செய்யக்கூடிய  மிக  சிறந்த  தர்மம் . காக்கைகளை  பாருங்கள் . ஒரு  காக்கை  உணவைக்கண்டால்  தான்  மட்டும்  உண்ணாது  மற்ற  காக்கைகளை  அழைத்து  எல்லாம்  சேர்ந்தே  உண்ணும் . ஐந்தறிவு  படைத்த  அவையே     இத்தகைய  பண்பை  கடைபிடிக்கும்போது  ஆறறிவு  படைத்த   மனிதன்  கடைபிடிக்காமல் இருப்பது  வெட்கம் .

daanam

திருமூலரின்  அறியுரை  ஆறறிவு  படைத்த  மனிதன்  உயர்வடைய  பெரும்  சாதனமாகும் . அவர்  முதலில்  குறிப்பிடுவது  தானமாகும் .  மனிதன்  தன்னால்  இயன்ற  அளவு இல்லாதவர்க்கு  அளிப்பது  பெரும்  சிறப்பு . அவர்  பெரிய  அளவு  தானம்  செய்ய  இல்லாதவரை  வற்புறுத்தவில்லை  அவர்  சொல்கிறார் :
யாவர்க்குமாம்  இறைவர்க்கு  ஒரு  பச்சிலை , யாவர்க்குமாம்  பசுவுக்கொரு  வாயுறை

யாவர்க்குமாம்  உண்ணும்போது  ஒரு  கைப்பிடி , யாவர்க்குமாம்  பிறர்க்கு  இன்னுரைதானே ||
எத்தனை  எளிமையான  அறியுரை .

Tuesday 29 March 2016

அரசனுடைய  பெரும்  கடமைகளை  உணர்த்திய  திருமூலர்  அரசன்  நேர்மை  தவறுவதால்  உண்டாகும்  பெரும்  அவலங்களையும்  உணர்த்துகிறார் . அரசன்  கடமை  தவறுவதால்  நாட்டின்  வளமை  குறைகிறது  மக்கள்  துன்பப்பட  வேண்டி  இருக்கிறது . அரசனின்  தவறால்  வானம்  பொய்த்து வறுமை  ஓங்குகிறது . அடுத்து  வானத்து  சிறப்பையும்  கூறுகிறார் .ஈசனின்  கொடையாக  நமக்கு  கிடைக்கும்  மழை . நம் வாழ்வின் ஜீவநாடி .

Thursday 24 March 2016

அந்தணரின்  கடமையை  வலியுறுத்திய  திருமூலர்  அரசனின்  கடமைகளையும்  கூறுகிறார் .மதிகுறைவான  அரசனால்  சரியான  நீதி  நிலைநாட்ட  முடியாது . அறநெறி  மிக்க  மதியூக  மந்திரி யை  பெற்று  அவர்  சொல்  தட்டாமல்  ஆட்சி  நடத்துவது  அவர்  கடமை . அரசன்  நீதிமானாக  இருந்தால்தான்  மக்கள்  நல்லபடி  வாழ  முடியும் . மாதம்  மும்மாறி  பொழிந்து  வளம்  செழிக்கும் .
அடுத்து  தானத்தின்  சிறப்பை  உணர்த்துகிறார் .

Wednesday 9 March 2016

வேதத்தில்  குறிப்பிட்டிருப்பது  போல்  யாகங்கள்  செய்வதின்  அவசியத்தை  வலியுறுத்துகிறார் . அந்தணர்களின்  கடமையை  அடுத்து  வலியுறுத்துகிறார் . வேதம்  ஓதுவதையும்  மாணவர்களுக்கு   வேத  பாடசாலை  நடத்துவதுமே  அவர்களுக்கு  முக்கிய  கடமையாகும் .தக்ஷிணையும்  கிடைத்ததை  பெற்றுக்கொண்டு  அதிலும்  இயன்ற அளவு  தானம்  செய்வது  அவசியம் . யாகங்களை  ஒரு  சிறு  தவறில்லாமல்  நடத்தி  வைத்து  நாட்டின்  சுபிக்ஷத்தை  காப்பது  அவர்கள்  கடமையே . இவ்வாறு  நாட்டின்  வளத்திற்கு  அந்தணர்களின்  பங்கு  பெரியது . 

Sunday 6 March 2016

பஞ்சமா  பாதகங்கள்  அறவே  ஒழிக்கப்பட  வேண்டியவை  என்று  எச்சரித்த  திருமூலர்  கொல்லாமை , பிறன்  மனைவி  நாடாமை ,பொய் பேசாமை , கள்ளுண்ணாமை , எல்லா  ஜீவன்களிடத்தும்  அன்பு  செலுத்துவது   போன்ற  நற்பண்புகளை  சிறந்த  அறமாக  கைபற்றும்படி  போதிக்கிறார் . யாகத்தின்  சிறப்பை  கூறுகிறார் . யாகம்  பொது  நலனுக்காக  செய்யப்படுகிறது . நாட்டில்  மும்மாரி   பொழிந்து   பயிர்கள்  செழிப்புறவும் , இயற்கை உத்பாதங்கள்  எதுவும்  நேராமலும்  மக்கள்  செழுமையுடன்  குறையின்றி  வாழ  பஞ்ச  பூ தங்களின் அதிதே வதைகளையும்   மற்ற  தேவர்களையும்  நன்றியுடன்  போற்றும்  பொருட்டு  செய்யப்படுகிறது .   

Wednesday 2 March 2016

வாழ்வின்  நிலையாமை  செல்வம்  நிலையாமை  இவற்றை   சொல்வதால்  இம்மானிட  பிறப்பை  குறையாக  மதிப்பிட   தேவை  இல்லை . கிடைப்பதற்கு  அரியது  மானிட  பிறவி .  விஷ்ணு வே   இப்புவியில்  ராமராகவும்  கிருஷ்ணராகவும்  அவதரித்துள்ளார் . சிவபெருமானும்  தன்  அடியார்களை  ரட்சிக்க  இப்புவியில்  பல  வேடங்களில்  தோன்றி  பல  பல  விளையாடல்கள்  புரிந்துள்ளார் . அநேக   சித்தர்கள்  பல  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்து  பல  சாதனைகள்  புரிந்துள்ளனர் . ஹனுமான்  இங்குதான்  ராமர்  இருப்பதால்  இவ்வுலகை  விட்டு  நீங்க  விரும்பாமல்  இவ்வுலகிலேயே  வாழ்ந்து  கொண்டிருப்பதாக  நம்பப்படுகிறது . இவ்வாறு  பெருமை  பெற்றது  இவ்வுலகம் .திருமூலர்  காட்டிய  நன்னெறிகளை  கடைப்பிடித்து  வாழ்ந்தால்  வாழ்க்கை  இன்பமே . 

Friday 26 February 2016

ariurai

பிறப்பு  எனும்  விடியலும்  இறப்பு  இரவும்  மாறிமாறி  வருவது  இயற்கையின்  நியதி . பிறவிப்பிணிக்கு  ஒரே  மருந்து  பஞ்சாட்சிரமே . உடலை யும்  உள்ளத்தையும் பேணி  காத்து திருமூலரின்  உரைப்படி  நற்பண்புகளை  கடைப்பிடித்து  ஈசன்  பாதங்களே  சதமென்று   நம்புவோர்க்கு  இப்பிணியிலிருந்து  விடுதலை  நிச்சயம் . நாம்  சேர்க்கும்  செல்வம்  நமக்கு  துணை  வராது  நாடாளும்  மன்னன்  ஆனாலும்  பிச்சை  எடுப்பவன்  ஆனாலும்  ஒரே  நிலை தான் .செல்வமும்  அவ்வாறே  
நிலையற்றது . தேனீ  பூக்களை   அலைந்து  தேடி  சேகரித்து  வைக்கும் .ஆனால்  அந்த  தேன்  கூட்டை  சிதைத்து  அதை  உண்ணுபவர்  வேறு  எவரோ .நாம்  இவ்வுலகை  விட்டு  போகும்போது  நம்முடன்  அச்செல்வம்  வராது . நாம்  கடைபிடித்த  விரதங்களின்  பயன் , நாம்  செய்த  தான  தர்மங்கள்  மற்ற  ஜீவ  ராசிகளுக்கு  செய்த  புண்ணிய  காரியங்கள்  இவையே  நம்மை  தொடர்ந்து  வரும் . இளமையும்  அவ்வாறே  நிலை  அற்றது . ஆதலால்  இளமையும்  உடலில்  வலுவும்  உள்ளபோதே  புண்ணிய  காரியங்களை  செய்து  நற்கதிக்கு  வழி  தேடுங்கள் .

Saturday 20 February 2016

கொலை , களவுகள் ,காமம் ,பொய்கூறல்   மலையான  பாதகமாம்  அவை  நீக்கி  சிவனடி  சேருங்கள் ' என்று  அறிவுரை  கூறுகிறார் .புலால்  மது  இவை  உண்ணுதலை  வன்மையாக  கண்டிக்கிறார் . ஜீவ  ஹிந்சையே  கூடாது  என்கிறார் . பிறன் மனைவி  நாடாமை , ஏழ்மையை  எதிர்க்கும்  திறம்  இவையையும்  வலியுறுத்துகிறார்
ஆக்கை  நிலையாமையை  குறிப்பிடும்போது  உடல்  சாஸ்வதம்  என்று  எண்ணி  செயல் படும்   மாந்தர்களை அதன்    விளைவான  நரக  வேதனைகளை கூறுகிறார் .மீண்டும்  மீண்டும்  பிறப்பெடுக்க  வேண்டியதை  அறிவுறுத்துகிறார் . ஐம்புலன்களும்  நம்மை  ஆட்டுவிக்கும் . அண்டத்திலும்  அணுவிலும்  நிறைந்த  அப்பெருமானை  மன ஒருமைப்பாட்டுடன்  சதா நினைத்தல்  வேண்டும் .ஐம்புலன்களையும்  ஆமை  போல்  உளுக்குள்  இழுத்துக்கொண்டு  செயல்படல் , பெருமை  சிறுமை  ஒரே  போல்  ஏற்பது  இவைகளை  பழக்கத்திற்கு  கொண்டுவர  முயற்சித்தல்  அவசியம்  

Thursday 18 February 2016

உள்ளம்  பெரும்  கோயில்  ஊனுடம்பாலயம் ,வள்ளல்  பிரானார்க்கு  வாய்  கோபுர  வாசல் ,
தெள்ள  தெளிந்தார்க்கு  சீவன்  சிவலிங்கம் , கள்ள  புலனைந்தும்  காண  மணிவிளக்கே |

 உடல்  நிலையாமையை  குறிப்பிட்ட  திருமூலர்  உடலை  இழிவாக  குறிப்பிடவில்லை . அதை  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . ஈசனின்  கொடையாக  கிடைத்த  இவ்வுடல்  போற்றுதலுக்கு  உரியது . இது  அவர்  கருத்து .ஒவ்வொரு  ஆன்மாவிலும்  ஈசன்  உறைந்திருக்கிறான்  என்பதை  உணர்ந்தால்
இம்மானிட  பிறப்பின்  மேன்மையை  அறிய  முடியும் .  திருமூலர்  காட்டிய  வழியில்  நடந்து  ஈசனில்  தம்மை  அர்ப்பணித்து  வாழ்பவர்களுக்கு  இவ்வுலகு  ஆனந்தமயம் . பக்தி  என்ற  நிலை  ஆனந்தம்  என்று  ஒரு கவிஞர்  குறிப்பிடுகிறார் . திருமுலர்  இவ்வுடலை  பேணி  காக்க  நிறைய  அறிவுரைகள்  வழங்கு கின்றார் . அன்பு ,ஈதல் , இன்சொல்  பக்தி  இவைகளால்  மனதை  அமைதியாக  வைத்துக்கொள்ளல்  அவசியம் . உடலுக்காக  யோகம் ,ஆசனம் ,பிராணாயாமம்  போன்ற  அநேக  பயிற்சிகளையும்  அவர்  எடுத்து  உரைக்கிறார் .

Wednesday 17 February 2016

ஐந்து  பூதங்களால்  ஆன  இச்சரீரம்  ஒரு நாள்  மண்ணோடு   சேருவது  இயற்கையின்  நியதி . பெறற்கரிய  மானிட  பிறப்பை  எய்தி  இருப்பதே  புண்ணியம் . ஆனால்   வாழும்  வகை  அறிந்து  வாழ்ந்து  மீண்டும்  பிறவாத  தன்மை  எய்த  பாடுபடுவதே  நாம்  பிறவி  எடுத்ததின்  பயன் . இவ்வுடல் ,இளமை ,அழகு  எதுவுமே  சாஸ்வதம்  இல்லை . நம்மை  படைத்த ஈசன்  பாதமே  நிலையான  இன்பம் . இதை  மனதில்  கொண்டே  நாம்  எடுத்து  வைக்கும்  ஒவ்வொரு  அடியும்  இருத்தல்  அவசியம்  என்பதை  ஆழமாக   அறிவுறுத்துகிறார் . இதற்கான  நற்பண்புகளை  இளமையில்   இருந்தே  வளர்த்துக்கொள்ளல்  அவசியம் 

Monday 15 February 2016

நந்தி  அருளாலே  மூலனை  நாடிப்பின்  நந்தி  அருளாலே  சதாசிவனாயினேன்
நந்தி  அருளாலே  மெய்   ஞானத்துள்  நண்ணினேன்  நந்தி  அருளாலே  நானிருந்தேனே |

மூலன்  உரை செய்த  மூவாயிரம்  தமிழ்  ஞாலம்  அறியவே  நந்தி   அருளது ,
காலை  எழுந்து  கருத்தறிந்து  ஓதிடின்  ஞா லத்தலைவனை  நண்ணுவரன்றே |

இது திருமூலர்  வாக்கு . அவருடைய  முதல்  அறிவுரை  ஜீவஹிம்சை  கூடாது  என்பதே . புலால்  உண்பதையும்  அவர்  வன்மையாக  கண்டிக்கிறார் . எல்லா  உயிர்களிலும்  ஈசன்  குடியிருக்கிறார்   என்பது  அவர் கருத்து .   

Thursday 11 February 2016

aram

திருமுலர்  வேத  நெறிப்படி  வாழும்  வழியை  அறிவுறுத்துகிறார் . முதலில்  நாம்  அறிந்து  கொள்ள  வேண்டியது  ஆக்கையின்  நிலையாமை , இளமை . பொருள்  அழகு  எல்லாமே  நிலை  அற்றவை .ஒவ்வொருவரும்  பிறக்கும்போதே  நாம்  ஒரு  நாள்  இவ்வுலகை  து றந்து   மரணம்  எய்துவதும்  உறுதி .ஆகையால்  வாழும்போது  நாம்  கடைப்பிடிக்க  வேண்டிய  அறங்களை  அவர்  தெளிவுறுத்துகிறார் .நமக்கென்று  சில   அறநெறிகள்  நாம்  கடைப்பிடிக்க    .வேண்டியது  அவசியம் .அதுவே  திருமூலரின்  உபதேசமாகும் .

Monday 8 February 2016

purushaartham

அறம் ,பொருள்  இன்பம் , வீடு  எனும்  நான்கு  புருஷார்த்தங்களை  கண்டோம் . வேத  ஆகமங்கள்  கூறும்  இக்கருத்தினை  திருமூலர்  வலியுறுத்துகிறார் . அறமே  முதல்  இடம்  பெறுகிறது .நம்  ஒவ்வொரு  செயலும்  ஒவ்வொரு  பருவத்திலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பின்  வரும்  பாடல்களில்  அறங்களை  திருமூலர்  விரிவாக  கூறுகிறார் . பொருள்  நமக்கு  அத்தியாவசியம் .நேர்மையான  பாதையில்  நமக்கு தேவையான  அளவு  பொருள்  ஈட்டுவது  தர்மம்  ஆகும் . இன்பமும்  அவ்வாறே  தர்மத்திற்கு  உட்பட்டும்  அதீதமான  ஈடுபாடு  வைக்காமலும்  அனுபவிப்பது  நன்று . வயது  ஆக ஆக  இந்த  சிற்றின்பகளை   அகற்றி  வீடு  அதாவது  இறைவன்  தாள்  அடைவதையே  முக்கிய  கருத்தாக  கொண்டு  மனதை  அவ்வழியில்  செலுத்த  வேண்டும் . அதை  ஔவையார்  இப்பாட்டில்  விளக்குகிறார் .
ஈதல்  அறம்  தீவினை  விட்டு ஈட்டல்  பொருள்  எஞ்ஞான்றும்
காதல்  இருவர்  கருத்து  ஒருமித்து ஆதரவு
பட்டதே  இன்பம் ,பரனை  நினைந்து
இம்மூன்றும்  விட்டதே  பேரின்ப  வீடு
     

Friday 5 February 2016

upadesam

திருமுலர்  முதலில்  வேதத்தின்  சிறப்பினை  உணர்த்துகிறார் .
வேதத்தை  விட்ட அறமில்லை   வேதத்தின்  ஓதத்தகும்  அறம்   எல்லாம்  உளதர்க்க
வாதத்தை  விட்டு  மதிஞனர்  வளமுற்ற  வேதத்தை  ஓதியே  வீடு  பெற்றார்களே |
இது  திருமுலர் வாக்கு .வேதத்தை  ஒட்டியே  இவரது  உபதேசங்கள்  உள்ளன . ஆன்மா  உலகில்  பிறப்பெடுத்ததும் நமக்கென்று  சில  நெறிமுறைகளை   வேத ஆகமங்கள்  வலியுறுத்துகின்றன . அவை அறம் , பொருள் .இன்பம் ,வீடு . ஆகும் .இதை  திருவள்ள வரும்  நிறைய  குறிப்பிட்டிருக்கிறார் . ஆனால்  எல்லா  நிலைகளிலும்  நம்  ஒவ்வொரு  செயலும்  அறம்  சார்ந்ததாக  இருப்பது  அவசியம் . பொருள்  இவ்வுலகில்  வாழ  அவசியம் . ''பொருள்  இல்லார்க்கு  இவ்வுலகில்லை . அருள்  இல்லார்க்கு  அவ்வுலகில்லை '' இது  வள்ளுலர்  வாக்கு . 

Wednesday 3 February 2016

திருமூலர்  ஆக்கையை  குறிப்பிடும்போது  அதன்  நிலையாமையையும்  குறிப்பிடுகிறார் . நம் உடல் , இளமை  அழகு , உடல் பலம் ,ஆரோக்கியம்  இவை  யாவுமே  நிலையானது  அல்ல  என்பதை  குறிப்பிடுகிறார் .  இது  நம்மை  அச்சப்படுத்துவதற்கு  அல்ல . நாம்  நற் பே றடைய  இந்த  உண்மையை  மனதிற்கொண்டு  செயல்பட  வேண்டிய  அவசியத்தை  தெளிவு  படுத்துகிறார் . மாயை  நிறைந்த  இவ்வுலகில்  நல்லவைகளை  தேர்ந்து  எடுத்து  அந்த  மார்கத்தில்  நாம்  செல்ல  நம்மை  அவர்  வழி  நடத்துகிறார் . வேத  ஆகமங்கள்  கூறுவதையே  இவர்  நமக்கு  எடுத்து  கூறுகிறார் .

Monday 1 February 2016

upadesam

பொதுவாக  எல்லா  துறவிகளும்  உடலை  தாழ்வாகவே  பேசுவார்கள் . மாணிக்கவாசகர்  கூட  உடலை  அவ்வாறே  குறிப்பிடுகிறார் .  ஆனால்  திருமுலரோ " ஊனுடம்பு  ஆலயம்"  என்கிறார் . உடலை  ஈசன்  குடியிருக்கும்  ஆலயமாக  குறிப்பிடுகிறார் . முதலில்  அவர்  தரும்  அறி வுரை   உடலை பேணுவதற்கு  மார்க்கமே   

Friday 29 January 2016

cont.

தட்சிணா மூர்த்தியின்  சின்முத்திரை  அதையே  விளக்குகிறது . அவர் சொல்லாமல்  சொல்லும்  விளக்கம்  இது . பசு பதியுடன்  இணைந்து  அவருள்  ஐக்கியமாவது . அந்நிலை  அடைய  திருமுலர்  நமக்கு  அளிக்கும்  உபதேசம்   திருமந்திரமாகும் .

Wednesday 27 January 2016

pasupathi

திருமூலரின்  உபதேசம்  நாம்  உய்வதற்கு  பெரும்  வழிகாட்டி . பசு , பதி .பாசம்  இவை பற்றி  விளக்குகிறார் . பதி  சிவம் . பசு  ஆன்மாக்கள் . பாசம்  மாயை . இம்மூன்றுமே  அநாதியானது . அழிவில்லாதது . அந்த ஈசன்  அருளால்  ஆன்மாக்கள்  அவரவர்  பாவபுண்ணியங்களை  பொறுத்து  இம்மண்ணில்  பிறவி  எடுக்கின்றன . இவ்வுலகில்  மாயையில்  சிக்குண்டு  பல  வகை  பாவ புண்ணியங்களுக்கு  ஆளாகின்றன .  ஈசனால்  உண்டாக்கப்பட்ட  வேத  ஆகமங்கள்  நமக்கு  வழி  காட்டுகின்றன . அதையே  அடிப்படையாக  கொண்டு  திருமுலர்  நமக்கு  இவ்வுபதேசத்தை  வழங்குகின்றார் . இதை  பின்பற்றி  வாழ்பவர்கள்  பிறவா  நிலை  எய்துகின்றனர் .

Friday 22 January 2016

திருமந்திரம்  என்கிற  நூலை  நமக்கு  அளித்த  பெருமானார்  'தான்  பெற்ற  இன்பம்   பெருக  இவ்வயகம் ' என்ற  தம்  கூற்றுக்கு  ஒப்ப   தாம்  நந்தி  தேவரிடம்  கற்ற  அனைத்தையும்  இவ்வுலகம்  உய்வதற்கு  நமக்கு  கொடையாய்  அளித்துள்ளார் . எவ்வாறு  பெரும்  யோகிகள்  பல்லாண்டு  எவ்வித  பிணியும்  இல்லாமல்  நீண்ட  ஆயுளுடன்  நலமாக  பலவிதமான  யோக  சித்திகளுடன்  வாழ்கிறார்கள்  என்பதை  விளக்குவதே   இவ்வரிய  நூல் . நிறைய  அரிய  பயிற்ச்சிகள்  தேவை படுவதை    விளக்குகிறார் .

Friday 15 January 2016

திருமூலர்  திருமந்திரத்தை  தை  மாதம்  முதல்  நாள்  எழுத  தொடங்கியதாக  கூறப்படுகிறது .  தன்னுடைய  இப்பெரும்   படைப்பை  சிவபிரானின்   பெருமையை  சொல்லி  தொடங்குகிறார் . நந்தி  தேவரை   ஈசனுக்கு  ஒப்பானவராகவே  குறிப்பிடுகிறார் . நந்தி  தேவரிடம்  கல்வி  பெற்றதை  விளக்குகிறார் .
நந்தி  அருள்  பெற்ற  நாதரை  நாடிடின்  நந்திகள்  நால்வர்  சிவயோக  மாமுனி
மன்று  தொழுத  பதஞ்சலி  வியாக்ரமர்  என்றிவர்  என்னோடெண் மரு மாமே |

சனகாதி  முனிவர்கள்  நால்வர் , சிவயோக  மாமுனி , பதஞ்சலி  மற்றும்  வியாக்கிரபாதர்  போன்றோருடன்  எண்மர்  நந்தி  தேவரிடம்  ஆகமங்கள்  பயின்றதாக  குறிப்பிடுகிறார் .



 

Sunday 10 January 2016

அன்பும்  சிவமும்  இரண்டென்பர்  அறிவிலார்
அன்பே  சிவமாவது  யாரும் அறிகிலார்
 ஈசனை  அடைய  ஒரே  மார்க்கம்  அன்பு,  அனபு  ஒன்றே . அது   அன்றி  வேறில்லை  .
''அன்போடு  உருகி  அகம்  குழைவார்கன்றி '' வேறு  யார்க்கும்  எய்த  ஒண்ணாதே . என்று  அழுத்தமாக  கூறுகிறார் . உடலை  வருத்தி  செய்யும்  எவ்விதமான  பிரார்த்தனைகளோ , சடங்குகளோ  ஈசனை  குளிர  வைக்காது , அன்பே  அவரை  மகிழ்விக்கும் .அன்புக்கு  கட்டுப்படும்  அவர்  தம்  அடியோர்களுக்காக  எத்தனை  இறங்கி  வருகிறார்  என்பதை  நாயன்மார்கள்  கதைகளில்  நாம்  கண்டோம் . கூலி  ஆளாக  வந்து  பிரம்படி  படுகிறார் . பொதி  சோறு  சுமக்கிறார் . வீதியில்  நடந்து  தூது  போகிறார் .அன்புக்கு  அடிபணிந்து  எதையும்  செய்ய  தயங்காதவர் . திருமூலர்  இதையே  அழுத்தமாக  கூறுகிறார் . 

Tuesday 5 January 2016

thirumandiram

திருமுலர்  தன்  திருமந்திரத்தை  சிவபெருமானின்  பெருமைகளை   சில  பாடல்களின்  மூலம்  உரைக்கிறார் .
சிவனோடு  ஒக்கும்  தெய்வம்  தேடினும்  இல்லை
அவனோடு  ஒப்பார்  இங்கு  யாவரும்  இல்லை ,
புவனம்  கடந்தன்று  பொன்னொளி  மின்னும்
தவள  சடைமுடி  தாமரையானே | (பாடல் 5)

அவனை  ஒழிய  அமரரும்  இல்லை
அவன ன்றி   செய்யும்  அருந்தவம்  இல்லை
அவனன்றி  மூவரால்  ஆவதொன்றில்லை
அவனன்றி  ஊர்  புகுமாறு  அறியேனே |(6)
அன்பே  சிவம்  என்று  வலியுறுத்தி  சொல்கிறார் . ஈசனை  அடைய  அன்பே  சிறந்த  மார்க்கமாக  திட்டமாக  உரைக்கிறார் . உடலை  வருத்தி  செய் யும். தவம்  தேவையில்லை . மனமுருக  பக்தியுடன்  போற்றுதலே  ஈசனை  குளிர்விக்கும்  என்பதை  அழுத்தமாக  பல  பாடல்களில்  கூறுகிறார் .