பூசலார் ஊர் மக்களின் இத்துன்பத்தை தீர்க்க திருநின்றவூரில் ஒரு சிவன் கோயில் எழுப்ப பேராவல் கொண்டார் . உடனே அதை நிறைவேற்ற எண்ணம் கொண்டு ஊர் ஜனங்களை அணுகி தன் யோசனையை கூறி எல்லோரும் உதவ வேண்டி கேட்டுக்கொண்டார் . ஊர் மக்கள் அவர் மீது அவருடைய மேலான அறிவை மதித்து அவரை மிக்க மரியாதையுடன் நடத்தினார்கள் எனிலும் கோயில் கட்டுவது என்பது சாதாரண காரியமில்லை அதற்கு எத்தனை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்று எண்ணி பின்வாங்கினர் . அது ஆகக்கூடிய காரியமில்லை என்று சொல்லி மறுத்தனர் . அவரையும் இது சாத்தியமில்லை என்று எடுத்து கூறி அந்த எண்ணத்தை விட்டு விட அறிவுரை கூறினர் . ஆனால் அவரோ அதில் மிக அதிக தீவிரமாக இருந்தார் .
No comments:
Post a Comment