Wednesday 25 September 2019

வரிவளையாள்   மானிக்கும்   நேசனுக்கும்   அடியேன் |

 சோழ   மன்னர்   குலம்   விளங்க   அவ்வரச   தம்பதியருக்கு   மகளாக   பிறந்தார்   மங்கையர்க்கரசியார் .  சிறு   வயது   முதலே   சிவபெருமானிடம்   அபார   பக்தி   கொண்டு   வாழ்ந்தா ர் .   சைவம்   தழைக்க   வேண்டுமென்ற   பேராவல்   கொண்டு   வாழ்ந்து   வந்தார் .  வயது  வந்ததும்   பாண்டிய   மன்னன்   நெடுமாறனை   மணந்தார் . துரதிஷ்டவசமாக     துர்சகவாசத்தால்   மன்னன்   சைவம்   துறந்து     சம ண      மதம்   சேர்ந்தான் .   அரசியார்   மிக்க   வேதனை   அடைந்தார் .  ஈசனையே   சரணமென்று   அடைந்தார் .   அவர்   வேதனை   ஈசனை    மனமிறங்க  செய்தது   அப்போது   அம்மையிடம்    ஞான   பாலுண்ட   ஞானசம்பந்தர்    சைவம்   தழைக்க   பெரும்    சேவை      செய்து   வந்ததை   அறிந்த   அரசியார்   அவரை   சரணம்   அடைந்தார் .  அவரும்    அவர்      வேண்டுகோளுக்கு    இணங்கி   பாண்டிய  நாடு   வந்து    அனல்    வாதம் ,  புனல்   வாதம்   செய்து    வென்று       சமணர்களை   நாட்டை   விட்டு   ஓட   செய்தார் .  மேலும்   மன்னவன்    கூனை   நிமிர்த்தி   நின்றசீர்  நெடுமாறன்   என்று   மாற்றினார் .  மன்னன்   சைவத்தின்   பெருமை   உணர்ந்தான் .   மங்கையர்க்கரசியார்   மன்னனோடு   சேர்ந்து  சைவ   தொண்டாற்றி   பெரும்   பேரடைத்தார் .   

No comments:

Post a Comment