Monday 30 November 2015

sundaranar

திருமூ லராக  திருமந்திரம் எனும்  அறிய  பொக்கிஷத்தை  உலகுக்கு  அளித்த  சுந்தரன்  அகத்தியரின்  மாணவர் . அகத்தியர்  அவரை  மேற்கொண்டு   கல்வி  பயில  கைலையில்  நந்திதேவரிடம்  அனுப்பி  வைக்கிறார் . அவரும்  நந்திதேவரிடம்  பயின்று  தேர்ச்சி  பெறுகிறார் . அவர்  பாடலிலிருந்து  அவர்  சனகாதி  முனிவர்கள் , பதஞ்சலி ,வ்யாக்ரர்  போன்ற  மகா  யொகிகளுடன்  பயின்றதாக  தெரிகிறது .  சிவனாரிடமிருந்து  பார்வதிதேவியுடன்  நந்திதேவரும்  உபதேசம்  பெற்ற  அவ்வறி ய  வேத  பாடங்களை  நந்திதேவர்  இவர்களுக்கு  உபதேசிக்கிறார் .

Tuesday 24 November 2015

thirumular

10ஆம்  திருமுறை  திருமூலர்  எழுதிய  திருமந்திரம்  ஆகும் . மிக  பழைமை  வாய்ந்தது . 3000  ஆண்டுகளுக்கு  முன்பே  எழுதப்பட்டது .வேதத்திற்கு  ஒப்பானது . இதில்  வேத  ஆகமங்கள் ,தர்மம் , கர்மம் , யோகம் ,உடற்கூரு  சாஸ்திரம் ,மனோதத்துவம்  மற்றும்  சூரிய  சந்திர  மண்டலங்கள்  எல்லா  துறைகளையும்  ஆராய்ந்து  எழுதப்பட்ட  ஒப்பற்ற  பாடல்களாகும் . இதை இயற்றிய  திருமூலரும்  அகத்தியர்  பதஞ்சலி  போன்றோருக்கு  ஒப்பான  மஹா  சித்தர்  ஆவார் . அவர்  அட்டமா  சித்திகளில்  தேர்ச்சி  பெற்றவர் . சுந்தரநாதனான  அவர்  பரகாய  பிரவேசம்  செய்து உயிரற்ற   மூலன்  உடலில்  தன்  ஜீவனை   பிரவேசிக்க  செய்து  திருமூலராகிறார் 

Friday 20 November 2015

9 ஆம்  திருமுறை  திருப்பல்லாண்டும்  சேர்ந்ததே . சேந்தனார்  அருளிய  திருப்பல்லாண்டு  முன்பே  பார்க்கப்பட்டது .13 பாக்களே  கொண்ட  பல்லாண்டு  மிக  பெருமை  வாய்ந்தது . தினமும்  எல்லா  சிவாலயங்களிலும்  தீபாராதனையுடன்  பாடப்படும்  பெருமை  பெற்றது . 

Thursday 19 November 2015

sethirayar

அடுத்த  பத்து  பாக்களை  பாடியவர்  சேதிராயர்  ஆவர் . அவர்  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர் . அவர்  நமக்கு  முன்பே  நமக்கு  அறிமுகமான  நரசிங்க  முனையரையர்  வம்சாவளியாவார் .  நரசிங்க  முனையரையர்  சுந்தரரின்  வளர்ப்பு  தந்தை  ஆவர் சேதிராயர்  சேதி  நாட் டின்  கிளீயூரை  தலைநகராக  கொண்ட  பிரதேசத்தை  ஆண்டு வந்தார் . அவரும்  தன்  முன்னோர்களை  போன்றே  சிறந்த  சிவ  பக்தராய்  விளங்கினார் .   அவர்   கூத்தனை  பாடிய  10 பாடல்கள்  திருவிசைப்பாவில்  இடம்  பெறுகிறது . 

Tuesday 17 November 2015

purushoththama

257 முதல்  278 பாட்டுகளை  பாடியவர்  புஷோத்தம நம்பி  ஆவர் .  அவரை  பற்றியும்  அதிகமாக  ஒன்றும்  தெரியவில்லை .விஷ்ணுவின்  நாமங்களில்  ஒன்றான  புருஷோத்தமன்  என்கிற  நாமம்  கொண்டதால்  அவரு ம்  வைணவர்  என்று  தெரிகிறது . வேத  விற்பன்னர்  குடும்பத்தை  சேர்ந்தவர்  என்று  தெரிகிறது . அவரே  தன்னை  பற்றி  மாசிலா  மறைபால  ஒதுனவன்  என்று  கூறிக்கொள்வதால்  அவரும்  வேதவிற்பன்னர்  என்று  தெரிகிறது . அவரும்  மிக்க  படித்தவர் . நிறைய  பாடல்கள்  புனைந்துள்ளார் . அவர்  11 நூற்றாண்டில்  வாழ்ந்தவர்  என்று கூறப்படுகிறது . அவர் வைஷ்ணவர்  ஆயினும்  அவர்  மனம்  தில்லை  கூத்தனை  நாடியே  சென்றது . அவர்  தில்லையே  இருப்பிடமாக  கொண்டு  ஆடலரசனை  பாடியே  வாழ்ந்தார் . அவர் பாடிய கடைசி  திருவிசைப்பா ,
ஒண்ணுதலி  காரணமா  உம்பர்  தொழுதேத்தும்
கண்ணுதலான்  தன்னை  புருடோத்தமன்  சொன்ன
பண்ணுதலை  பத்தும்  பயின்றாடி  பாடினார்
எண்ணுதலை  பட்டாங்கு  இனிதா  இருப்பாரே | 

Wednesday 11 November 2015

pattu

 அவர்  பாடிய  முதல்  பாட்டு ;
மையல்  மாதொரு  கூறன்  மால்  விடையேறி  மான்மறியேந்திய  தடம்
கையன் கார்புரையும்  கறை கண்டன்  கனல்  மழுவான்
ஐய ம்  ஆரழல்  ஆடுவான்  அணி  நீர்வயல்  தில்லை  அம்பலத்தான்
செய்ய  பாதம்  வந்தென்  சிந்தை  உள்ளிடம்  கொண்டனவே |

 

Tuesday 10 November 2015

valiyamuthanar

அடுத்து  256 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  திருவாலியமுதனார் . அவரை  பற்றியும்  அதிக  தகவல்கள்  கிடைக்கவில்லை . அவர்  வேதம்  ஓதுகிற  வைஷ்ணவ  குடும்பத்தை  சேர்ந்தவர் . ஆயினும்  அவர்  அம்பலகூத்தனின்  மேல்  அதிகமான  பக்தி  உடையவராக  இருந்தார் . அவருடைய  முன்னோர்கள்  சீர்காழி  அருகில்  உள்ள  திருவாலி  எனும்  க்ஷேத்திரத்தில்  எழுந்தருளி  இருக்கும்  பெருமாள்  அமுதனாரிடம்  மிகுந்த  பக்தி  உடையவர்கள் . ஆதலால்  இவருக்கு  வாலியமுதனார்  என்று  பெயரிட்டனர் . அவர் தன்னை  மயிலையார் மன்னவன்  என்று  குறிப்பிட்டிருக்கிறார் . ஆதலால்  அவர்  மயிலையை  சேர்ந்தவர்   என்று  கூறப்படுகிறது . சிலர் மயிலாடுதுறை என்றும்  சொல்வர் . அவர்  மனம்  விஷ்ணுவை  நாடாமல்  தில்லை  கூத்தனை  நாடியது . அம்பலவாணனிடம்  மிகுந்த  பக்தி  கொண்டு  அவர்மேல்  பாடல்கள்  பாடினார் . அவை  திருவிசைபாவில்  இடம்  பெருகின்றன .

Thursday 5 November 2015

pattu

அடிகளின்  திருவிசைப்பாவில்  முதல்  பாட்டு ,

துச்சான  செய்திடினும்  பொறுப்பரன்றே  ஆளுகப்பார்
கைச்சாலும்  சிறு கதலி இ : வேம்பும்  கறி  கொள் வார்
எச்சாவும்  இல்லாமை  நீயறிந்தும்  எனது  பணி
நச்சாய்  காண் ; திரு  தில்லை  நடம்  பயிலும்  நம்பானே |

Tuesday 3 November 2015

venattadikal. the

அடுத்து திருவிசைப்பா  205-214 இயற்றியவர்  வேணாட்டடிகள்  ஆவார் . அவர்  கேரளத்தை  சேர்ந்த  வேனா ட்டில் வாழ்ந்த  சிறந்த   சிவ  பக்தர் . அவர் ராஜபரம்பரையை  சேர்ந்தவர்  என்றும்  கூறப்படுகிறாது.அவர்  சிவயோகி . தென்னாட்டில்  சிவதலம்களை எல்லாம்  தரிசித்து  நிறைய  பாடல்கள்  பாடியுள்ளதாக  தெரிகிறது . ஆனால்  நமக்கு  கிடைத்தவை  10 பாடல்களே . தில்லை  ஆண்டவனை  பாடியவை