அவருடைய உறவினர்களும் ஒப்புக்கொண்டு பொறுப்பேற்றனர் . அனால் விதி விளையாடியது . அவ்வூரில் கடும் பஞ்சம் ஏற்பட்டது . யாவரும் உணவு கிடைக்காமல் அவதியுற்றனர். பொறுக்க முடியாத நிலை அடைந்தனர் . ஐயனுக்கான தானியத்தை உபயோகித்துவிட்டு நிலைமை சரியானதும் திரும்ப சேர்த்து விடலாம் என்று முடிவு செய்து அத்தானியத்தை உபயோகித்து பசியாறினர் . அனால் துரதிஷ்டவசமாக போர் முடிந்து வெற்றிவாகை சூடி கோட்புலியார் திரும்பினார் . அவர் சிவாபராதம் நேர்ந்திருப்பதை கண்டதும் கோபவெறி அவரை நிலை தடுமாற செய்தது. தம் சேவகனை அனுப்பி வெற்றி வாகை சூடியதை கொண்டாட பரிசளிப்பதாக கூறி உறவினர்களை வரச்செய்து தன் உடைவாளால் அனைவரின் தலைகளையும் கொய்தான் . சிறு பாலகன் அவனை வெட்ட துணிந்த போது காவலன் தடுத்தான் . ஆனால் கோட்புலியார் கேட்கவில்லை . தவறு செய்த தாயிடம் பாலுண்டவன் என்று கூறி பாலகனை கொன்றான் . அப்போது ஈசன் தோன்றி அவன் பக்தியை மெச்சி அவனால் கொல்லப்பட்ட எல்லோருக்கும் சிவபதம் அருளி அவரையும் தன்னிடம் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment