Wednesday 4 September 2019

அவருடைய   உறவினர்களும்   ஒப்புக்கொண்டு   பொறுப்பேற்றனர் . அனால்    விதி   விளையாடியது .   அவ்வூரில்   கடும்   பஞ்சம்   ஏற்பட்டது .  யாவரும்   உணவு   கிடைக்காமல்   அவதியுற்றனர்.  பொறுக்க   முடியாத   நிலை   அடைந்தனர் .  ஐயனுக்கான   தானியத்தை    உபயோகித்துவிட்டு    நிலைமை   சரியானதும்   திரும்ப   சேர்த்து   விடலாம்   என்று    முடிவு  செய்து   அத்தானியத்தை   உபயோகித்து   பசியாறினர் .   அனால்   துரதிஷ்டவசமாக போர்   முடிந்து   வெற்றிவாகை   சூடி   கோட்புலியார்   திரும்பினார் .   அவர்   சிவாபராதம்   நேர்ந்திருப்பதை   கண்டதும்   கோபவெறி   அவரை   நிலை   தடுமாற   செய்தது.   தம்   சேவகனை   அனுப்பி   வெற்றி   வாகை   சூடியதை   கொண்டாட    பரிசளிப்பதாக   கூறி   உறவினர்களை   வரச்செய்து   தன்   உடைவாளால்     அனைவரின்   தலைகளையும்      கொய்தான் .   சிறு     பாலகன்   அவனை   வெட்ட   துணிந்த    போது   காவலன்   தடுத்தான் .  ஆனால்   கோட்புலியார்   கேட்கவில்லை .  தவறு  செய்த   தாயிடம்   பாலுண்டவன்   என்று   கூறி       பாலகனை   கொன்றான் .    அப்போது   ஈசன் தோன்றி   அவன்   பக்தியை   மெச்சி   அவனால்   கொல்லப்பட்ட   எல்லோருக்கும்    சிவபதம்   அருளி   அவரையும்   தன்னிடம்   சேர்த்துக்கொண்டார் .     

No comments:

Post a Comment