பூசலார் திடுக்கிட்டார் . தம் மனதிற்குள் ஆலயம் எழுப்புவது தன்னையன்றி ஓர் ஈ எறும்பு கூட அறியாதே மன்னவர் எவ்வாறு அறிந்தார் என்று அதிசயித்து 'மன்னவா ஆலயமா ? தடுமாறினார் . அரசன் இரவு தன் கனவில் ஈசன் தோன்றி கூறியதை பூசலாரிடம் வியப்புடன் தெரிவித்தார் . கும்பாபிஷேகத்தை காணவே தான் அவசரமாக விடிகாலையிலேயே கிளம்பி ஆலயத்தில் பிரவேசிக்கும் ஐயனை மனம் குளிர தரிசிக்க வந்ததாக அரசன் ஆச்சர்யத்துடன் தெரிவித்தார் . பூசலார் கண்கள் கண்ணீரை சொரிந்தது . அவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த இயலவில்லை . மன்னவா நான் ஆலயம் எழுப்ப பேராவல் கொண்டது உண்மை . ஆனால் அது நிறைவேறாது போனதால் என் மனதிலேயே ஆலயம் எழுப்பினேன் . என் ஏமாற்றம் தணிய அவ்வாறு செய்து இப்போது கட்டி முடிந்து கும்பாபிஷேகம் நடக்கும் தருவாயில் இருப்பதாக கூறி விட்டு இதோ தயாராக இருக்கிறது . அர்ச்சகர்கள் தயாராகி கொண்டிருக்கிறார்கள் . எம்பெருமான் என்னையும் ஒரு பொருட்டாக மதித்து உன்னையும் அனுப்பி இருக்கிறாரே ! கண்களில் நீர் ததும்ப உணர்ச்சி வசப்பட்டு மன்னரை நீயும் தரிசிக்க வேண்டாமா ? என்று கூறி அவர் கையை தன் மார்பில் வைத்து அவரை அணைத்து கொண்டார் .
No comments:
Post a Comment