Monday 30 September 2019

சிலந்தியின்   தூய   பக்தி   காரணமாக   அந்த   வலை   பின்னியது   என்ற   உண்மை   அறியாத   அந்த   யானை   தான்   அபிஷேகம்   செய்து   மலர்   அர்ச்சனை   செய்த   அவ்விடத்தை   அசுத்தம்   செய்வதாக  எண்ணியது .  இவ்வாறு   தினம்நடப்பதை   கண்ட   யானை வலையை     அறுத்து   எறிய   ஆரம்பித்தது .  இவ்வாறு   சிலந்தி   வலை   பின்னுவதும்   யானை    அறுப்பதும்   தொடர்ந்தது .தன்   ஈசன்   தொண்டிற்கு   அந்த   யானை   இடர்   விளைவிப்பதாக   கருதிய   சிலந்தி   அதன்   துதிக்கையினுள்  புகுந்து   கடித்தது .    யானை   வலி   பொறுக்காமல் தன்   துதிக்கையை   தரையில்   அடித்து   கொண்டு   இறந்தது .  சிலந்தியும்    வலி   பொறுக்காமல்   இறந்தது .   பக்தியில்   முழு   ஈடுபட்டிருந்த   இரு   ஜீவன்களும்   முக்தி   அடைந்தன .  எம்பெருமானை   உள்ளன்போடு    வழிப்பட்ட   யானை   சிவலோகம்    அடைந்தது .   சிலந்தி    சோழ   ராஜ   குமாரனாக   மறு   பிறவி   எடுத்தது .   

No comments:

Post a Comment