சிலந்தியின் தூய பக்தி காரணமாக அந்த வலை பின்னியது என்ற உண்மை அறியாத அந்த யானை தான் அபிஷேகம் செய்து மலர் அர்ச்சனை செய்த அவ்விடத்தை அசுத்தம் செய்வதாக எண்ணியது . இவ்வாறு தினம்நடப்பதை கண்ட யானை வலையை அறுத்து எறிய ஆரம்பித்தது . இவ்வாறு சிலந்தி வலை பின்னுவதும் யானை அறுப்பதும் தொடர்ந்தது .தன் ஈசன் தொண்டிற்கு அந்த யானை இடர் விளைவிப்பதாக கருதிய சிலந்தி அதன் துதிக்கையினுள் புகுந்து கடித்தது . யானை வலி பொறுக்காமல் தன் துதிக்கையை தரையில் அடித்து கொண்டு இறந்தது . சிலந்தியும் வலி பொறுக்காமல் இறந்தது . பக்தியில் முழு ஈடுபட்டிருந்த இரு ஜீவன்களும் முக்தி அடைந்தன . எம்பெருமானை உள்ளன்போடு வழிப்பட்ட யானை சிவலோகம் அடைந்தது . சிலந்தி சோழ ராஜ குமாரனாக மறு பிறவி எடுத்தது .
No comments:
Post a Comment