Thursday 31 December 2015

இத்தகைய  மானிட  பிறவிக்கே  எக்காலத்தை  சேர்ந்தவர்கள்  ஆனாலும்  பொருந்தும்  சிறந்த  அறிவு  பொக்கிஷமாக  நமக்கு  கிடைத்த  இரு  நூல்கள்  திருக்குறளும் , திருமந்திரமும்  ஆகும் . ஆனாலும்  திருமந்திரம்  அவ்வளவு    புரிந்து  கொண்டு  பின்பற்றுவது  என்பது  மிகக்கடினம் . குறள்  பல  பாஷைகளில்  மொழி பெயற்க்கப்பட்டுள்ளது . தமிழர்கள்  இதற்காக  பெருமை  கொள்ளலாம் .
திருமூலரின்  வழி  நடந்தவர்கள்  என்று  இருவரை  கூறலாம் . அவர்கள்  தாயுமானவர்  மற்றும்  வள்ளலார்  ராமலிங்க  அடிகளார் .
திருமந்திரம்  9 தந்திரங்களாக  பிரிக்கப்பட்டு  எழுதப்பட்டது . ஒவ்வொரு  தந்திரமும்  ஒவ்வொரு  ஆகமத்தை  விளக்குகிறது . ஆடவல்லானின்  பெருமைகளையும்  அவருடைய  திருவிளையாடல்களையும்  முதல்  சில  தந்திரங்கள்  குறிப்பிடுகின்றன .மற்ற  தந்திரங்கள்  வேதத்ததை  மூலமாக  கொண்டு  ஜாதி ,இனம் , மதம்  என்ற  எந்த  வேறுபாடும்  இன்றி  மனித  இனத்திற்கே  உயர்ந்த  வாழ்வு  வாழ்ந்து  ஈசனை  அடையும்  உயர்ந்த  மார்கத்தை  போதிக்கிறது . இது  உலக  பொது  மறை .  "யாம்  பெற்ற  இன்பம்  பெருக  இவ்வையகம் " இது  திருமூலர்  வாக்கு .எத்தகைய  பெரிய  உள்ளம்  அப்பெருமகனார்க்கு .

Monday 28 December 2015

திருமந்திரம்   எனும்  அரிய  நூல்  சிவபெருமான்  தம்  திருவாக்கால்   உலகம்  உய்ய  அளித்த  9 ஆகமங்களை  மக்களுக்கு   புரியும்  வகையில்    திருமூலரால்  தமிழில்  எழுதப்பட்டது .ஒவ்வொரு  பாடலும்  அவரால்  ஒரு  வருட  த்யானத்திற்கு  பின்  எழுதப்பட்டதாக  கூறப்படுகிறது.    

Wednesday 23 December 2015

திருமுலர்  தன்  குருவான  அகத்தியரை  வணங்கி  அவர்  ஆசியுடன்  நூலை  தொடங்குகிறார் . திருமந்திரம்  ஓர்  அரிய  படைப்பு  . திருஆவடுதுறையில்  ஒரு  மரத்தின்  பொந்தில்  த்யானத்தில்  அமர்ந்து  கொண்டு  வருடத்திற்கு  ஒரு  பாடலாக  3000   பாடல்கள்  எழுதியாதாக  கூறப்படுகிறது . அவை  இனம்  மொழி , நாடு  என்ற  பாகுபாடு  இன்றி  மனித  குலத்திற்கே  பொதுவான  படைப்பாகும் '.ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன் " இது  திருமூலரின்  வாக்கு . மனித  இனமே  மேம்பட  அவர்  உலகுக்கு  ஈந்த  கொடை . " என்னை  நன்றாக  இறைவன்  படைத்தனன்  தன்னை  நன்றாக  தமிழ்  செய்யுமாறே ."  இது  அவர்  வாக்கு . 

Friday 18 December 2015

ஆவினங்களின்  மீது  தன்  உயிரையே  வைத்திருந்த  மூலன் . அவ்வாவினங்களு க்காக  தன்  ஆன்மாவை  ஈந்த  சித்தர்  இவர்களின்  அன்பை  கண்ட  ஈசன்  உமை  அன்னை  தன்னை  பசுவின்  வடிவில்  பூசித்த  திரு ஆவடுதுறை   என்னும்  இடத்தை  தேர்ந்து  எடுத்து  அவ்விடத்தில்  தன்  மேலான  பணியை  தொடங்குமாறு   திருமூலருக்கு  ஆணை  இடுகிறார் . அவ்வாறே  திருமூலரும்  மூலனின்  மனைவியிடம்   விடை  பெற்றுக்கொண்டு    புறப்படுகிறார் .  

Thursday 17 December 2015

thirumoolar cont.

விதி  தன்  விளையாட்டை  ஆரம்பிக்கிறது . சுந்தரநாதர்  கிராம  மக்களை  அழைத்துக்கொண்டு  தான்  தன்  உடலை  மறைத்து  வைத்த  இடத்தை  அடைகிறார் . பெரும்  அதிர்ச்சிக்கு  உள்ளாகிறார் . அங்கு  அவர்  மறைத்து  வைத்த  இடத்தில்  அவர்  உடலை  காணவில்லை . மனம்  நொந்து  ஈசனை  துதிக்கிறார் .   உலகுக்கு  தான்   செய்ய  வேண்டிய  கடமை  செய்ய  தனக்கு  அந்த  உடலின்  அவசியத்தை  எண்ணி  மலைக்கிறார் .  தன்  குருவான  அகத்தியரிடம்  ஆசி  பெற்று  சைவ  ஆகமங்களை  எளிய  தமிழில்  தொகுத்து  மக்களுக்கு  அளிக்க  வேண்டிய  தன்  கடைமையை  செய்ய  முடியாமல்  போய்விடுமோ  என்று  அஞ்சி  ஈசனை  மனமுருக  வேண்டுகிறார் . ஈசனும்  தானே  அவர்  உடலை  மறைத்ததாகவும்  மூலன்  தன்னை  அடைந்துவிட்டதாகவும்  கூறுகிறார் .  வயது , அறிவு  முதிர்ச்சியால்  பாமர  மக்களுக்கு  புரியும்  வகையில்  தமிழ்  மறையை  எழுத  மூலன்  உடலில்  இருந்துகொண்டு  எழுதுவதே  பொருந்தும்  என்று  தானே  அவ்வாறு  செய்ததாக  கூறூகிறார் அசரீரியாக.  அந்த  மக்கள் அதை  கேட்டு   மெய் சிலிர்த்து  அவரை  வணங்கி  வழி  அனுப்புகின்றனர் .  சுந்தரநாதர்  திருமூலர்  ஆகிறார் .

Friday 11 December 2015

thirumoolar

பசுக்கள்  மூலனை  உயிருடன்  கண்டதும்  அடைந்த  மகிழ்ச்சி  சொல்லில்  அடங்காது . சுந்தரநாதரும்  அவைகளை   கொட்டிலில்  சேர்த்துவிட்டு  கிளம்ப  எண்ணினார் .விதிவசத்தால்   அங்குள்ள  மக்களுக்கு  விளக்கமளிக்க  நேர்ந்தது .முதலில்  நம்ப  மறுத்த  மக்கள்  பிறகு  நம்பி  மூலனின்  உடலை  ஒப்படைத்து  முறைப்படி  இறுதி  சடங்குகளை  முடிக்க  உதவுமாறு  வேண்டுகின்றனர் . அவரும்  சம்மதிக்கிறார் .

Tuesday 8 December 2015

moolan

 சுந்தரநாதர்  அன்று  மாலை  இறங்கி  மலை  அடிவாரத்தை  அடைந்தபோது  அவர் கண்ட  காட்சி
அவரை  திடுக்கிட  வைத்தது. அவர்  அந்த  காட்சியை  கன்டு  மிகுந்த  வேதனை யுற்றார் . மூலன்  அங்கு  உயிரற்ற  நிலையில்  இருந்தான் . பசுக்கள்  அவனை  சுற்றி  கண்ணீருடன்  புல்லை  கூட  அருந்தாமல்  மிக்க  விசனத்துடன்  கத்திக்கொண்டிருந்தன . சித்தர்  ஞான  திருஷ்டியால்  அவன்  விதி  முடிந்து  ஈசனை  அடைந்துவிட்டதை  உணர்கிறார் . அந்த  வாயில்லா  ஜீவன்களின்  துக்கம்  அவரை  மிகவும்  நெகிழ  வைக்கிறது . அவைகளை  எப்படியாவது  சமாதானம்  செய்து  அவைகளின்  இருப்பிடத்தை  அடைய  செய்ய  வேண்டும்  என  தீர்மானிக்கிறார் . உடனே  மலைமேல்  ஒரு  மறைவான  இடத்தை  அடைந்து  தன்  உயிரை  மூலனின்  உடலில்  பிரவேசிக்க  செய்து   மூலனை  உயிர்  பெற  செய்கிறார் . தன்  உடலை  மறைவான  இடத்தில்  கிடத்துகிறார் . 

Friday 4 December 2015

thirumoolan

ஒருநாள்  மூலன்  பசுக்களை  சுந்தரர்  தியானத்தில்  அமர்ந்திருந்த  மலை  அடிவாரத்தில்    மேய  விட்டிருந்தான் . அவன்  தியானத்தில்  அமர்ந்திருந்த  சித்தரை  கண்டு  அவர்  மீது  மிக்க  அனுதாபத்துடன்  அவரை  அணுகி  இங்கு  உணவு  ஒன்றும்  கிடைக்காது  பசியுடன்  இருப்பீர்கள்  என்று  தன்னுடைய  சாப்பாடை  எடுத்து  கொள்ளுமாறு  வற்புர்த்துகிறான் . அவர்  தன்போன்ற   சித்தர்களுக்கு  பசி  தாகம்  எதுவும்  கிடையாது  என்று  கூறியும்  மூலன்  நம்ப  மறுக்கிறான் . அவரும்  அவன்  அன்பான  கோரிக்கையை  மறுக்க  மனமில்லாமல்  அதை  பெற்றுக்கொள்கிறார் . இந்த  அன்புக்கு  பிரதியாக  தான்  ஏதாவது  செய்ய  விரும்புவதாக  கூறுகிறார் . ஆனால்  மூலன்  தான்  ஒரு  குறையும்  இல்லாமல்  சந்தோஷமாக  இருப்பதால்  தனக்கு  ஏதும்  தேவை  இல்லை  என்று  மறுக்கிறான் . அவரும்  தேவை  வரும்போது  தருவதாக கூறி  விடை  பெறுகிறார் . 

Thursday 3 December 2015

moolan

இப்போது  திருமூலராக  புதுப்பிறவி  எடுக்கும்  மூலனை  பற்றி  காண்போம் . சாத்தனூர்  கிராமத்தை  சேர்ந்த  மூலன்  ஒரு  அபூர்வ மான  மனிதன் . அன்பும்  மனிதநேயமும்  மிகுந்தவன் . அங்குள்ள  எல்லா  பசுக்களையும்  மேய்த்து  பாதுகாப்பவன் . அவன் பால்  ஐந்து  அறிவு  கொண்ட  அந்த  ஜீவன்கள்  காட்டும்  நன்றியும்  அன்பும்  யாரையும்  வியக்க  வைக்கும் . அவ்வூர்  மக்கள்  அவனிடம்  தங்கள்  பசுக்களை  ஒப்படைத்து  விட்டு  கவலையற்று  இருந்தனர் . அவனும்  அவன்  மனைவியும்  அவைகளை  தங்கள்  குழந்தைகளைப்போல்  பாதுகாத்து  வந்தனர் .

Tuesday 1 December 2015

thirumoolar

பயிற்ச்சி  முடிந்து  கைலையில்  இருந்து  புறப்பட்டு  சுந்தரர்  அகத்தியரை  காண  தெற்கு  நோக்கி  புறப்படுகிறார் .அவர்  நேபாளம்  பசுபதி  நாதர்,  கேதாரிநாதர்  காசி , திருகாளத்தி  காஞ்சி  மற்றும்  பல  க்ஷேத்திரங்களில்  சிவபெருமானை  சேவித்துகொண்டு  வருகிறார் . திரு ஆவடுதுறை   நோக்கி  வருகிறார் . வழியில்  சாத்தனூர்  எனும்  கிராமத்தை  அடைகிறார் . அங்கு  அவர்  ஓரிடத்தில்   த்யானத்தில்  அமர்கிறார் .

Monday 30 November 2015

sundaranar

திருமூ லராக  திருமந்திரம் எனும்  அறிய  பொக்கிஷத்தை  உலகுக்கு  அளித்த  சுந்தரன்  அகத்தியரின்  மாணவர் . அகத்தியர்  அவரை  மேற்கொண்டு   கல்வி  பயில  கைலையில்  நந்திதேவரிடம்  அனுப்பி  வைக்கிறார் . அவரும்  நந்திதேவரிடம்  பயின்று  தேர்ச்சி  பெறுகிறார் . அவர்  பாடலிலிருந்து  அவர்  சனகாதி  முனிவர்கள் , பதஞ்சலி ,வ்யாக்ரர்  போன்ற  மகா  யொகிகளுடன்  பயின்றதாக  தெரிகிறது .  சிவனாரிடமிருந்து  பார்வதிதேவியுடன்  நந்திதேவரும்  உபதேசம்  பெற்ற  அவ்வறி ய  வேத  பாடங்களை  நந்திதேவர்  இவர்களுக்கு  உபதேசிக்கிறார் .

Tuesday 24 November 2015

thirumular

10ஆம்  திருமுறை  திருமூலர்  எழுதிய  திருமந்திரம்  ஆகும் . மிக  பழைமை  வாய்ந்தது . 3000  ஆண்டுகளுக்கு  முன்பே  எழுதப்பட்டது .வேதத்திற்கு  ஒப்பானது . இதில்  வேத  ஆகமங்கள் ,தர்மம் , கர்மம் , யோகம் ,உடற்கூரு  சாஸ்திரம் ,மனோதத்துவம்  மற்றும்  சூரிய  சந்திர  மண்டலங்கள்  எல்லா  துறைகளையும்  ஆராய்ந்து  எழுதப்பட்ட  ஒப்பற்ற  பாடல்களாகும் . இதை இயற்றிய  திருமூலரும்  அகத்தியர்  பதஞ்சலி  போன்றோருக்கு  ஒப்பான  மஹா  சித்தர்  ஆவார் . அவர்  அட்டமா  சித்திகளில்  தேர்ச்சி  பெற்றவர் . சுந்தரநாதனான  அவர்  பரகாய  பிரவேசம்  செய்து உயிரற்ற   மூலன்  உடலில்  தன்  ஜீவனை   பிரவேசிக்க  செய்து  திருமூலராகிறார் 

Friday 20 November 2015

9 ஆம்  திருமுறை  திருப்பல்லாண்டும்  சேர்ந்ததே . சேந்தனார்  அருளிய  திருப்பல்லாண்டு  முன்பே  பார்க்கப்பட்டது .13 பாக்களே  கொண்ட  பல்லாண்டு  மிக  பெருமை  வாய்ந்தது . தினமும்  எல்லா  சிவாலயங்களிலும்  தீபாராதனையுடன்  பாடப்படும்  பெருமை  பெற்றது . 

Thursday 19 November 2015

sethirayar

அடுத்த  பத்து  பாக்களை  பாடியவர்  சேதிராயர்  ஆவர் . அவர்  மன்னர்  பரம்பரையை  சேர்ந்தவர் . அவர்  நமக்கு  முன்பே  நமக்கு  அறிமுகமான  நரசிங்க  முனையரையர்  வம்சாவளியாவார் .  நரசிங்க  முனையரையர்  சுந்தரரின்  வளர்ப்பு  தந்தை  ஆவர் சேதிராயர்  சேதி  நாட் டின்  கிளீயூரை  தலைநகராக  கொண்ட  பிரதேசத்தை  ஆண்டு வந்தார் . அவரும்  தன்  முன்னோர்களை  போன்றே  சிறந்த  சிவ  பக்தராய்  விளங்கினார் .   அவர்   கூத்தனை  பாடிய  10 பாடல்கள்  திருவிசைப்பாவில்  இடம்  பெறுகிறது . 

Tuesday 17 November 2015

purushoththama

257 முதல்  278 பாட்டுகளை  பாடியவர்  புஷோத்தம நம்பி  ஆவர் .  அவரை  பற்றியும்  அதிகமாக  ஒன்றும்  தெரியவில்லை .விஷ்ணுவின்  நாமங்களில்  ஒன்றான  புருஷோத்தமன்  என்கிற  நாமம்  கொண்டதால்  அவரு ம்  வைணவர்  என்று  தெரிகிறது . வேத  விற்பன்னர்  குடும்பத்தை  சேர்ந்தவர்  என்று  தெரிகிறது . அவரே  தன்னை  பற்றி  மாசிலா  மறைபால  ஒதுனவன்  என்று  கூறிக்கொள்வதால்  அவரும்  வேதவிற்பன்னர்  என்று  தெரிகிறது . அவரும்  மிக்க  படித்தவர் . நிறைய  பாடல்கள்  புனைந்துள்ளார் . அவர்  11 நூற்றாண்டில்  வாழ்ந்தவர்  என்று கூறப்படுகிறது . அவர் வைஷ்ணவர்  ஆயினும்  அவர்  மனம்  தில்லை  கூத்தனை  நாடியே  சென்றது . அவர்  தில்லையே  இருப்பிடமாக  கொண்டு  ஆடலரசனை  பாடியே  வாழ்ந்தார் . அவர் பாடிய கடைசி  திருவிசைப்பா ,
ஒண்ணுதலி  காரணமா  உம்பர்  தொழுதேத்தும்
கண்ணுதலான்  தன்னை  புருடோத்தமன்  சொன்ன
பண்ணுதலை  பத்தும்  பயின்றாடி  பாடினார்
எண்ணுதலை  பட்டாங்கு  இனிதா  இருப்பாரே | 

Wednesday 11 November 2015

pattu

 அவர்  பாடிய  முதல்  பாட்டு ;
மையல்  மாதொரு  கூறன்  மால்  விடையேறி  மான்மறியேந்திய  தடம்
கையன் கார்புரையும்  கறை கண்டன்  கனல்  மழுவான்
ஐய ம்  ஆரழல்  ஆடுவான்  அணி  நீர்வயல்  தில்லை  அம்பலத்தான்
செய்ய  பாதம்  வந்தென்  சிந்தை  உள்ளிடம்  கொண்டனவே |

 

Tuesday 10 November 2015

valiyamuthanar

அடுத்து  256 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்  திருவாலியமுதனார் . அவரை  பற்றியும்  அதிக  தகவல்கள்  கிடைக்கவில்லை . அவர்  வேதம்  ஓதுகிற  வைஷ்ணவ  குடும்பத்தை  சேர்ந்தவர் . ஆயினும்  அவர்  அம்பலகூத்தனின்  மேல்  அதிகமான  பக்தி  உடையவராக  இருந்தார் . அவருடைய  முன்னோர்கள்  சீர்காழி  அருகில்  உள்ள  திருவாலி  எனும்  க்ஷேத்திரத்தில்  எழுந்தருளி  இருக்கும்  பெருமாள்  அமுதனாரிடம்  மிகுந்த  பக்தி  உடையவர்கள் . ஆதலால்  இவருக்கு  வாலியமுதனார்  என்று  பெயரிட்டனர் . அவர் தன்னை  மயிலையார் மன்னவன்  என்று  குறிப்பிட்டிருக்கிறார் . ஆதலால்  அவர்  மயிலையை  சேர்ந்தவர்   என்று  கூறப்படுகிறது . சிலர் மயிலாடுதுறை என்றும்  சொல்வர் . அவர்  மனம்  விஷ்ணுவை  நாடாமல்  தில்லை  கூத்தனை  நாடியது . அம்பலவாணனிடம்  மிகுந்த  பக்தி  கொண்டு  அவர்மேல்  பாடல்கள்  பாடினார் . அவை  திருவிசைபாவில்  இடம்  பெருகின்றன .

Thursday 5 November 2015

pattu

அடிகளின்  திருவிசைப்பாவில்  முதல்  பாட்டு ,

துச்சான  செய்திடினும்  பொறுப்பரன்றே  ஆளுகப்பார்
கைச்சாலும்  சிறு கதலி இ : வேம்பும்  கறி  கொள் வார்
எச்சாவும்  இல்லாமை  நீயறிந்தும்  எனது  பணி
நச்சாய்  காண் ; திரு  தில்லை  நடம்  பயிலும்  நம்பானே |

Tuesday 3 November 2015

venattadikal. the

அடுத்து திருவிசைப்பா  205-214 இயற்றியவர்  வேணாட்டடிகள்  ஆவார் . அவர்  கேரளத்தை  சேர்ந்த  வேனா ட்டில் வாழ்ந்த  சிறந்த   சிவ  பக்தர் . அவர் ராஜபரம்பரையை  சேர்ந்தவர்  என்றும்  கூறப்படுகிறாது.அவர்  சிவயோகி . தென்னாட்டில்  சிவதலம்களை எல்லாம்  தரிசித்து  நிறைய  பாடல்கள்  பாடியுள்ளதாக  தெரிகிறது . ஆனால்  நமக்கு  கிடைத்தவை  10 பாடல்களே . தில்லை  ஆண்டவனை  பாடியவை 

Friday 30 October 2015

thiruvisaipa

மின்னார்  உருவம்  மேல்  விளங்க  வெண்  கொடி , மாளிகை  சூழ
பொன்னார்  குன்றம்  ஒன்று  வந்து  நின்றது  போலும்  என்னா
தென்னா  என்று  வண்டு  பாடும்  தென்  தில்லை  அம்பலத்துள்
என்னார்  அமுதை  எங்கள்  கோவை  என்று   கொல்  எய்துவதே
 இதுவே  அவர்  எழுதிய  முதல்  திருவிசைப்பா .

Thursday 29 October 2015

kandarathithar

  1. 195 முதல்  204 வரை  உள்ள  பாடல்களை  பாடியவர்    சோழ  அரச  குடும்பத்தை  சேர்ந்த  கண்டிராதித்தர்  ஆவர் . அவர்  சோழ  மன்னன்  பராந்தக  சோழனின்  மகனாவார் . பராந்தக  சோழன்  தில்லையில்  பொற்கூரை  வேய்ந்த  சோழன்  என  புகழ்  பெற்றவன் . தில்லை  அம்பலவாணனிடம்  மிக்க  பக்தி  கொண்டவர்கள் . கண்டராதித்தர்  950 முதல்  957 வரை  சோழ  நாட்டை  ஆண்டார் . அவர்  அரசனாக  இருந்தாலும்  அவர்  மனம்  ஈசனை  நாடியே   சென்றது . மூவர்  தேவாரத்தில்  மிக்க  நாட்டமுடையவராக  திகழ்ந்தார் . ஈசன் மீது  பாக்கள்  நிறைய  புனைந்தார் . அநேக  ஆலையங்களையும்  கட்டினார் .  அவர்  சைவ  வைஷ்ணவ  பேதம்  பாராமல்  சமமாக  பாவித்தார் . ஒரு  வைஷ்ணவ  கோவிலையும்  நிர்மாணித்தார் .  957 க்கு  பிறகு  அவர்  அரசை  துறந்து  தல  யாத்திரை  புறப்பட்டு  விட்டார் . அவர்  மனைவி  செம்பியன்  மாதேவியும்  சிறந்த  சிவ பக்தை . நிறைய  நற்பணிகளை  மேற்கொண்டு  அரசருக்கு  உறுதுணையாக  இருந்தார் .  கண்டராதித்தர்  பாடிய  முதல்  பாடல் ,





Sunday 25 October 2015

song cont.

அல்லியம்  பூம்பழனத்து  ஆமூர்  நாவுக்கரசை
செல்ல  நெறி வகுத்த  சேவகனே  தென்  தில்லை
கொல்லை  விடையேறி  கூத்து  ஆடரங்காக
செல்வம்  நிறைந்த  சிற்றம்பலமே  சேர்ந்தனையே |

களையா  உடலோடு  சேரமான்  ஆரூரன்
விளையா  மதமாறா  வெள்ளானை  மேல்  கொள்ள
முளையா  மதி  சூடி  மூவாயிரவரொடும்
அளையா  விளையாடும்  அம்பலம்  நின்  ஆடரங்கே 

Friday 23 October 2015

poonthuru nambi

அடுத்து  183 முதல்  194 பாடல்  வரை  பாடல்களை  பாடியவர்  பூந்துருத்தி  நம்பி  காட  நம்பி .இவர்  திருவையாறு  அருகில்  உள்ள  பூந்துருத்தி  எனும்  ஊரை  சேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தர் . இவர்  எல்லா  சிவாலயங்களையும்  சேவித்தபடி  தேவாரங்களை  மனமுருக  பாடுவதை  வழக்கமாக  கொண்டிருந்தார் . இவர்  சம்பந்தர் , அப்பர் ,சுந்தரர் , கண்ணப்பர்  மேலும்  பல பல  நாயன்மார்களை  பாடி  இருக்கிறார் . இவர்  10 ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்தவர் . அவர்  பாடிய  பாக்களில்  சில.

எம்பந்த வல்வினை நோய்  தீர்த்திட்டு  எமையாளும்
சம்பந்தன்  காழியர்  கோன்  தன்னையும்  ஆட்கொண்டருளி
அம்புந்து  கண்ணாலும்  தானும்  அணிதில்லை ச்
செம்பொன் செய்  அம்பலமே  சேர்ந்திருக்கை  ஆயிற்றே |


     

Tuesday 13 October 2015


 கருவூர்  தேவர்  பாடிய திருவிசைப்பா  பாடல்களில்  தஞ்சை  ராஜராஜே சரத்தை  பாடிய  பா டல் ,

உலகெலாம்  தொழவந்து  எழுகதிர்  பருதி  ஒன்று  நூறாயிரகோ டி
அலகெலாம்  பொதிந்த  திருவுடம்பு  அச்சோ  அங்ஙனே  அழகிதோ ,அரணம்
பலகுலாம்  படைசெய்  நெடுநிலை  மாடம் பருவரை  ஞாங்கர்  வெண்  திங்கள்
இலை  குலாம்  பதணத்து  இஞ்சி சூழ்  தஞ்சை  இராஜராஜேச்சரத்து  இவர்க்கே |    

Saturday 10 October 2015

cont;

கருவுர்தேவர்  வடமாநிலங்களில்  பல  திருத்தலங்களை  சேவித்துகொண்டு   வந்து  திருப்புடைமருதூர்  வந்தடைகிறார் . தாமிரபரணி  பெருக்கெடுத்துகொண்டு  ஓடியதால்  அவர்  நரம்புநாதரை   அழைக்க   தண்ணீர்  வழிவிட்டதாகவும்  ஈசன்  அவருக்கு  பாத  தீக்ஷை  வழங்கியதாகவும்  கூறப்படுகிறது . பிறகு  பொதிகை  மலை  அகத்தியரை  வழிபடுகிறார் .ராஜராஜசோழன்  தஞ்சையில்  அடிமுடி  காண  முடியாத  ஈசனுக்கு  பிம்மாண்டமான  கோவில்  கட்டுகிறான் . பிரம்மாண்டமான  நந்தியும்  லிங்கமும்  அமைக்க  எண்ணுகிறான் . அஷ்டபந்தன  மருந்து  மருந்து  கெட்டிபடாமல்  அத் தனை  பெரிய  லிங்க  வடிவை  பிரதிஷ்டை  செய்ய  இயலாமல்  மலைத்தனர் . அப்போது  போகநாதர்  ஆணையின்  பேரில்  கரூவூர்  தேவர்  தன்  யோகசித்தியால்  மருந்தை  கெட்டிப்பட  செய்து  லிங்க  பிரதிஷ்டை  குறையில்லாமல்  நிறைவேற்றுகிறார் . இவ்வாறு  ராஜராஜசோழனுக்கு  நெருக்கமாகிறார் . இவர்  ஆற்றிய சாதனைகள்  அநேகம் . 

Thursday 8 October 2015

karuur

அடுத்து  102 திருவிசைபாக்களை  பாடியவர்  சித்தர்  கருஊர்தேவர்  ஆவார் . மிக  அதிக  பாக்களை  பாடியவர்  இவரே . இவர் கருஊரில்  பிறந்தவர் .  சிறந்த  சிவபக்தர் . போக நாதரிடம்  தீக்ஷை  பெற்றவர் . நான்கு  வேதங்களையும்  கற்றவர் . பக்தி  தமிழ் பாக்களை  இனிமையாக  பாடுவார் . அவர்   சிவயோகம்  பயின்று  பல  அதிசயமான  சித்திகளை  பெற்றவர் . இத்தகைய பேறுகளை  பெற்றும்
அவர்  மிக  எளிமையாக  வாழ்ந்தார் . கந்தல்  உடைகளை  அணிந்து  பரட்டை  தலையுடன்  சுற்றுவார் .

Friday 2 October 2015

அவர்  பாடிய  முதல்  பல்லாண்டு ,

மன்னுக  தில்லை ! வளர்க  நம்  பக்தர்கள் ! வஞ்சகர்  போய்  அகல
பொன்னின்செய் ! மண்டபத்துள்ளே  புகுந்து  புவனியெல்லாம்  விளங்க
அன்னநடை  மடவாள்  உமைகோன் அடியோமுக்கு  அருள்  புரிந்து
பின்னை  பிறவியறுக்க  நெறி  தந்த  பித்தர்க்கு  பல்லாண்டு  கூறுதுமே !
 

senthanar

அடுத்த  34 திருவிசைபாக்களையும்  13 திருப்பல்லாண்டுகளையும்  பாடியவர்  சேந்தனார்  ஆவார் . அவர்  நாங்கூர்  எனும் இடத்தில்  வாழ்ந்தவர் . பட்டினத்தார்  அவர்களிடம்  கணக்கராக  வேலை  செய்தவர் . அப்போது  சேந்தனார்  பட்டினத்தடிகள்  சொல்படி  அவருடைய  செல்வத்தை  ஏழைகளுக்கு  தானமாக  வழங்கிவிட  அவர்  சிறையில்  அடைக்க  படுகிறார் . பட்டினத்தார்  ஈசனிடம்  வேண்டி  அவரை  சிறையிலிருந்து  மீட்கிறார்.  பிறகு   சேந்தனார்  தில்லை  சென்று  அங்கு  விறகு  வெட்டி  அந்த  வருவாயில்  ஜீவனம்  நடத்துகிறார் .அவர்  தான்  பக்தியுடன்  போற்றும்  தில்லை  கூத்தனின்  அடியார்  ஒருவருக்கு  தான்  உண்ணும்  கூழை  அளிக்காமல்  தான்  உண்ணவே  மாட்டார் . அப்போது  ஒரு  நாள்  அம்பலவாணரெ  அடியாராக  வந்து  கூழு  அருந்தி  அதை  தன மேனியில்  காண்பித்து  எல்லோரும்  அறிய  செய்கிறார் . ஒரு  சமயம்  தில்லை யில்  திருவாதிரை  திருநாளன்று  ஈசனின்  தேர்  நகராமல்  போககண்டு  எல்லோரும்  திகைத்து  நிற்க  இவர்  திருப்பல்லாண்டு  13 பாக்களை  பாடி  தேர்  வீதி  வலம்  வர  செய்கிறார் . எல்லோரையும்  வியப்பில்  ஆழ்த்துகிறார் . அவர் பாடிய  பல்லாண்டு  13 பாக்களே  ஆனாலும்  பெரிதும்  போற்றப்பட்டது . தினமும் எல்லா   சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பின்  பாடப்படும்  பஞ்ச  புராணம்  எனும்  திருமுறை  தொகுப்பில் பல்லாண்டும்  அடங்கும் .  பிறகு  சேந்தனார்  சேந்த மங்கலம்  எனும்  இடத்தில்  ஆசிரமம்  அமைத்து  முருகனையும் வழிபட்டு  வந்தார்  ஒரு தை  பூச  நன்னாளில்  ஈசனடி  சேர்ந்தார் .       

Friday 25 September 2015

paadal

திருமாளிகை தேவர்  பாடிய  முதல்  திருவிசைப்பா ,
ஒளி  வளர்  விளக்கே  உவப்பிலா  ஒன்றே  உணர்வு  சூழ்  கடந்ததோர்  உணர்வே
தெளிவளர்  பளிங்கின்  திரண்மணிக்  குன்றே சித்தத்துள்  தித்திக்கும்  தேனே
அளிவளர்  உள்ளத்து  ஆனந்த  கனியே  அம்பலம்  ஆடரங்காக
வெளிவளர் தெய்வ  கூத்து  உகந்தாயை  தொண்டனேன்  விளம்புமா விளங்கே 

Thursday 24 September 2015

cont2

ஒரு  முறை  திருவீழிமிழலை  உ த் சவத்தின்  போது  தேர்  ஓரிடத்தில்  நகராது  நின்றுவிட்ட  போது  இவர்  அத்தேரை  வடமே  இல்லாமல்  ஓட  வைத்து  வீதி  வலம்  வரசெய்தார் . யோக  பலத்தால்  அவருடைய  தேகம்  அதிக  பொலிவுடன்  திகழ்ந்தது . அவருடைய  தேக  காந்தி  பல  பெண்களை   வசீகரித்தது . அவருடைய  ஆத்ம  சக்தியால்  பல பெண்கள்  அவரை  போல உருவமுடைய  பிள்ளைகளை  ஈன்றனர் . இதை  கண்ட  மன்னன்  மாளிகைதேவரை  சந்தேகித்து  அவரை  தண்டிக்க  வீரர்களை  அனுப்பினான் .  அனால்  அங்கு  கோவில்  மதில்  சுவற்றில்  அமைக்கப்பட்டிருந்த  நந்தி  சிலைகள்  உயிர்பெர்று  அவ்வீரர்களை  தாக்கி  விரட்டின . இவ்வாறு  பல  அற்புதங்களை  புரிந்த  சித்தராவர் . இவர் தில்லை  கூத்தனின்  மேல்  மிக  பக்தியுடன்  பாடிய  பாடல்கள்  திருவிசைப்பா வில்  அடங்கும் .

Wednesday 23 September 2015

cont1

மாளிகைதேவர்  ஒரு நாள்  குளித்துவிட்டு  பூஜா  திரவியங்களை  கையில்  ஏந்திக்கொண்டு  கோவிலை  நோக்கி  சென்றார் . அப்போது  ஒரு  சவ  ஊர்வலம்  எதிரே  வரக்கண்டார் . பூஜை  பொருள்கள்  அசுத்தமாகி  விட  கூடாதென்று  அவற்றை  ஆகாயத்தை  நோக்கி  தூக்கி  எறிந்து   அவைகளை  அங்கேயே  இருக்க  செய்தார் .பிறகு  இறந்தவரை  எழுந்து  இடுகாடு  வரை  நடந்து  போக  ஆணை  இட்டார் .  அவர்  சென்றதும்  பூஜை  திரவியங்களை  மறுபடி  வரசெய்து  கோவில்  அடைந்தார்  என்று  கூறப்படுகிறது . அவர்  தன்  யோக  சக்தியால்  பல  அபூர்வ  சாதனைகள்  புரிந்துள்ளார் .

Monday 21 September 2015

thirumaalikaithevar

9ஆம்  திருமுறை  திருவிசைப்பா, திருப்பல்லாண்டு   அடங்கிய  301 பாக்களை  கொண்டது .  முதல்  45 பாக்கள்  திருமாளிகை  தேவரால்  பாடப்பட்டவை . இவர்  சைவ  வேளாளர்  குலத்தை  சேர்ந்தவர் . இவரின்  முன்னோர்கள்  மாளிகை  மடத்தை  செர்ந்தவர்கள்  . ஆதலால்  இவர்  மாளிகைதேவர்  என்று  அறியப்பட்டார் . சிறந்த  சிவபக்தர் . அவர் திரு ஆவடுதுறை யில்  மடம்  அமைத்து  அங்கு  ஒரு  அரச  மரத்தடியில்  த்யானத்தில்  அமர்ந்தார் . போகநாதரிடம்   ஞான  உபதேசம்  பெற்றார் . சைவ சித்தாந்த்தத்தில்  ஆராய்ச்சி  மேற்கொண்டார் . சிறந்த  யோக  சித்திகளை   பெற்றதால்  இவர்  தேகம்  மிக  ஒளிபெற்று  பார்ப்போரை  கவர்வதாக  இருந்தது . தன்  யோக  சித்தியால்  இவர்  பலப்பல  அதிசயங்களை  நிகழ்த்தியுள்ளார் .

 

Thursday 17 September 2015

9 thirumurai

9 திருமுறை  பல  பக்தர்களால்  பாடப்பட்ட  திருவிசைப்பா  மற்றும்  திருப்பல்லாண்டு . 301 பாடல்கள்  கொண்டது . திருவிசைப்பா  ஒன்பது  பக்தர்களாலும்  திர்ப்பல்லாண்டு  சேந்தனார்  எனும்  பக்தராலும்   பாடப்பெற்றவை .திருவிசைப்பா  பாடிய  ஒன்பது  பக்தர்கள் ,
திருமாளிகைத்தேவர்
சேந்தனார்
கருவூர்தேவர்
பூந்துருத்தி நம்பி  காடநம்பி
கண்டராதித்தர்
வேணாட்டடிகள்
திருவாலியமுதனார்
புடோத்தம நம்பி
சேதிராயர்
திருப்பல்லாண்டு  பாடியவர்  சேந்தனார்  ஆகும் . இவை  மொத்தம்  301 பாடல்கள் . எல்லா சிவாலயங்களிலும்  ஈசன்  தீபாராதனைக்கு  பிறகு  ஒதுவா முர்த்திகளால் பாடப்படும்  பஞ்ச புராண  தேவார பாடல்களில்  இவையும்  இடம்  பெறும் .  

Sunday 13 September 2015

cont2

 நானேயோ  தவம்செய்தேன்  சிவாய  நமவெனப்பெற்றென்
தேனாய் இன்னமுதுமாய் தித்திக்கும்  சிவபெருமான்
தானெவந்தெனதுள்ளம் புகுந்தடியே ர்கருள்  செய்தான்
ஊனாருமுயிர்  வாழ்க்கை  ஒறுத்தன்றே  வெறுத்திடவே |
மாணிக்கவாசகர்  பாக்கள்  அனைத்துமே  மெய்யுருக  செய்பவை . சில பாடல்கள்   குறிப்பிட்டிருக்கிறேன் . அவர்  பாடிய  திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி  இவை  இரண்டும்  மார்கழி  மாதம்  முழுவதும்  எல்லா  சிவாலயங்களிலும் , வைணவ  ஆலயங்களில்  திருப்பாவை  ஓதுவது  போன்று  ஓதப்படுகின்றன . அவருடைய  மேன்மை  சொல்லில்  அடங்காதது
  1.  அடுத்து  9 திருமுறை  திருவிசைப்பா . திருப்பல்லாண்டு . இவை  அநேக  பக்தர்களால்  பாடப்பட்டவை . அவர்களை  பற்றி  பார்ப்போம் .   

Thursday 10 September 2015

cont

மெய்தா அரும்பி , வித்ர்விதிர்த்து  உன்  விரை  ஆர்  சூழற்கு  என்
கைதான்  தலை  வைத்து  கண்ணீர்  ததும்பி  வெதும்பி  உள்ளம்
பொய்தான்  தவிர்ந்து  உன்னை  போற்றி செய  செய  போற்றி  என்னும்
கைதான்  நெகிழ  விடேன்  உடையாய்  என்னை கண்டு  கொள்ளே |




 

Friday 4 September 2015

cont2

அம்மையே  அப்பா  ஒப்பிலாமணியே  அன்பினில்  விளைந்த  ஆரமுதே
பொய்மையே  பெருக்கிப்  பொழுதினை  சுருக்கும்  புழுத்தலை  புலையனேன்  தனக்கு
செம்மையே  ஆய  சிவபதம்  அளித்த  செல்வமே  சிவபெருமானே
இம்மையே  உனை  சிக்கெனப்  பிடித்தேன்  எங்கு  எழுந்தருளுவது  இனியே |


பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து , நீ   பாவியேன்  உடைய
ஊனினை  உருக்கி  உள்ளொளி  பெருக்கி  உலப்பிலா  ஆனந்தமாய
தேனினை  சொரிந்து  புறம்  புறம்  திரிந்த  செல்வமே  சிவபெருமானே
யான்  உனை  தொடர்ந்து  சிக்கெனப்பிடித்தேன்  எங்கு  எழுந்து  அருளுவது  இனியே 

Thursday 3 September 2015

thiruvasakam cont.

மாணிக்கவாசகர்  பக்தி  அதிசயிக்கத்தக்கது . ஈசனிடம்  திருவடி   தீக்ஷை  பெற்றபின்  அவர்  தன்னை  முழுமையாக   அவரிடம்  அர்ப்பணித்து  விட்டார் . ஈசனை  தவிர  வேறு  சிந்தனையே  அவருக்கு  எழவில்லை . சிக்கென  பிடித்தேன்  என்று  பாடுகிறார் . எத்தனை  கடுமையான  சோதனைகளுக்கு  ஆட்படு த்தப்பட்ட  போதிலும்  அவர் தன்  நிலை  மாறவில்லை.  அத்தனை  சோதனைகளையும்  அவர்  ஏற்றுக்கொண்ட  பாங்கு  ஈசனையே  வியக்க  வைத்திருக்கும் . அதுவே  அவரை கூலி    ஆளாக  வரவைத்து பிரம்படியும்பட  வைத்தது . இத்தனைக்கு  பிறகும்  அவர்   தன்னை  எத்தனை  தாழ்த்தி  கொண்டு  பாடுகிறார்  . அவருடைய  தன்னடக்கம்  எல்லை  இல்லாதது .  

Tuesday 1 September 2015

thiruvasakam

 சிவாலயங்களில்  தீபாராதனைக்கு  பிறகு  பஞ்ச  புராணம்  என்று  திருமுறை  தொகுப்பு  தினமும்  பாடப்படுவது  ராஜராஜன்  காலம்  முதல்  வழக்கமாகும் . அதில்  முறையாக  மூவர்  தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு  மற்றும்  பெரிய  புராணம் இவை ஓ துவா மூர்த்திகளால்  பாடப்படுவது  வழக்கம் . அதில்  திருவாசகம்  மோகன  ராகத்தில்  பாடப்படுவது  வாடிக்கை
   வள்ளலார்  ராமலிங்க  அடிகளார்    மாணிக்கவாசகர்  வழி  வந்தவர்  என்று  தன்னை  பெருமையுடன்  அறிமுகப் படுத்திக் கொள்வார் . இனி  நெஞ்சைத்தொடும்  சில  திருவாசகங்களை  காண்போம்  

Thursday 27 August 2015

pope

போப்  அவர்களின்  கடிதத்தை  கண்ணுற்ற கிருஸ்துவ  சமய  பாதிரிமார்கள்  கிருஸ்துவ  மதத்தை  பரப்ப  அனுப்பப்பட  போப்  அவர்கள் சைவ  சமய  பாக்களில்  இவ்வாறு   உணர்ச்சி  வசப்பட்டு  அனுபவிப்பதை  காண  சகியாமல்  அவரை  கண்காணிக்க   மற்றொரு  பாதிரியாரை  அனுப்புகிறார்கள் .அவர்  திருவாசகத்தை  படித்துவிட்டு  மெய்மறந்து  இத்தகைய  பாக்களை  படித்துவிட்டு  இதுவரை  மதம்  மாறாமல்  அவர்  இருப்பதே  அவருடைய  மேன்மையை  காட்டுவதாக  இருப்பதாகவும்  அவரை  சந்தேகிக்க  வாய்ப்பில்லை  என்று  எழுதுகிறார் . அத்தகைய  பெருமை  வாய்ந்தது  திருவாசகம் .
 மற்ற  சிவனடியார்கள்  தொழுது  தொழுது  ஈசனை  பாட  மாணிக்கவாசகர்  மட்டும்  அழுது  அழுது  அரற்றி  ஈசனை  சரணடைகிறார் . அவர் படுகிறார் ,
   யானே  பொய்  என்  நெஞ்சும்  பொய்  என் அன்பும்  பொய்
   ஆனால்  வினையேன்  அழுதால்    உன்னை  பெறலாமே |

Monday 24 August 2015

இலங்கையை  சேர்ந்த  புத்த  பிக்ஷுக்கள்  சிலர்  சிதம்பரத்தில்  இருந்தனர் . அவர்கள்  சிவபெருமானின்  பெருமையை  உணராதவர்கள் . அவரை  பலவாறு  இகழ்ந்து  பேசிவந்தனர் . ஐயனின்  ஆணைப்படி  அவர்களுக்கு  அறிவு  புகட்ட  மாணிக்கவாசகர்  ஓர்  ஊமை  பெண்ணை  பேச  வைக்கிறார்  அவளுடன்  சேர்ந்து   பிக்ஷுக்களுடன்  வாதிட்டு  அவர்களை  வென்று  அவர்களை  பேச  முடியாத  ஊமை  ஆக்குகிறார் . அவர்களும்  தங்கள்  தவறை  உணர்ந்து  மாணிக்கவாசகர்  அருளால்  மீண்டும்  பேசும்  திறனை  அடைந்து  அம்பலகூத்தனை  சரணடைகின்றனர் .
   திருவாசகம்  பாடல்கள் எவ்வாறு  நெஞ்சை  உருக்கும்  என்பதை  உணர்த்தும்  சம்பவம்  காணலாம் . கி.உ. போப்  எனும்  ஆங்கிலேயர்  தமிழ்  ஆராய்ச்சி  செய்ய  தமிழகம்  வந்தவர் . அவர்  திருவாசகத்தை  படித்து  அதில்  நெஞ்சை  பறிகொடுத்தவர் .அதை  ஆங்கிலத்தில்  மொழி  பெயர்க்கிறார்   ஒரு  கடிதத்தில்  திருவாசகத்தை  எழுதுகையில்  உணர்ச்சி வசப்பட  அவர்  கண்கள்  கண்ணீர்  சிந்துகின்றன . அவரும்  அதை  மறைக்க  நினைக்காமல்  அப்படியே  அதை  அனுப்பி  விடுகிறார் . 

Wednesday 19 August 2015

manivasakar

முக்திநெறி  அறியாத  மூர்க்கரொடு  முயல்வேனை
பக்தி நெறி  அறிவித்து  பழவினைகள்  பாறும்  வண்ண
சித்தமலம்  அறுவித்து  சிவமாக்கி  எனை  ஆண்ட
அத்தன்  எனக்கருளியவாறு  ஆர்  பெறுவார்  அச்சோவே |

மாணிக்கவாசகர்   சிவமாகிய  அக்காட்சி  எல்லோரையும்  மெய்சிலிர்க்க  வைக்கிறது . அச்சோவே  பதிகங்கள்  அவர்  கடைசியாக  பாடியது . மாணிக்கவகரின்  பாடல்கள்  ஈசன்  கைப்பட  எழுதப்பட்ட  காரணத்தால்  நமக்கு  முழுமையாக  கிடைத்தது . மற்ற  தேவார  பாடல்கள்  நமக்கு  முழுமையாக . கிடைக்கவில்லை . அப்பர், சம்பந்தர்  சுந்தரர்  இவர்கள்  பாடிய  பதிகங்கள்   முழுமையாக  பெறு ம்
பாக்கியம்  நமக்கு  கிட்டவில்லை . இயற்கையின்  சீற்றத்துக்கு  அவை  தப்பவில்லை . ஈசனே  தன்  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு  வைத்த  அதிசயத்தை  விட  மணிவாசகருடைய  பெருமையை  விளக்க  வேறு  சான்று  தேவையில்லை . ஆனாலும்  தில்லையில்  நடந்த  ஒரு  நிகழ்ச்சி  குறிப்பிட  தக்கது
 

Tuesday 18 August 2015

thirruvasakam4

மாணிக்கவாசகர்  ஓடி  சென்று  ஈசனிடம்  தன நன்றியை  தெரிவிக்கிறார் . தில்லை  தீக்ஷிதர்கள்  அவரிடம்  வந்து  அவர் பாடல்களின்  பொருளை  விளக்குமாறு  வேண்டுகின்றனர் .  மணிவாசகர்  தில்லை  கூத்தன்  சன்னதியில்  பாடல்களின்  பொருளை  விளக்குவதாக  கூருகிறார் . இச்செய்தி   பாண்டிய  அரசர்  மற்றும்  சான்றோர்களுக்கும்  அறிவிக்க  படுகிறது .  எல்லோரும்  ஆவலுடன்  அம்பலவாணன்  சன்னதியில்   கூடுகின்றனர் .மாணிக்கவாசகர்   எல்லா  பாடல்களுக்கும்  பொருள்  ஒன்றே . அது  அதோ  அந்த   அம்பலவாணன்  மட்டுமே  என்று  நாத்தழுதழுக்க   இருகைகளும்  கூப்பி  அவரை  நெருங்கி  ஜோதியில்  கலக்கின்றார் . அனறு  ஆனி  மகம் .

Friday 14 August 2015

thiruvasakam3

ஆடவல்லான்  மாணிக்கவாசகர்  பாடிய  திருவாசகம்  ,திருக்கோவையார்  சேர்ந்த  1000 பாடல்களை ஏடுகளில்  பிரதி  எடுத்து  அதில்  மாணிக்கவாசகர்  பாட  சிற்றம்பலத்தான்  கைப்பட  எழுதியது  என்று  கையொப்பமிட்டு  தில்லை  அம்பலவாணன்  சன்னதி  வாயிற்படியில்  வைத்து  மறைகிறார் . மறுநாள்  காலை  சன்னதி  திறந்த  கோயில்  தீட்சிதர்கள்  அந்த  ஓலை  சுவடிகளை  கண்டு  பெரும்  அதிசயம்  அடைந்து  அதை  எடுத்துக்கொண்டு  மாணிக்கவாசகரை  தேடி  வருகின்றனர் .இத்தனை  காலம்  இத்தகைய  மகான்  கோயில்  அருகிலேயே  இருந்தும்  கவனிக்க  தவறியதை  எண்ணி  மனம்  வருந்தி  மாணிக்கவாசகரிடம்  இந்த  ஓலையை  காண்பித்து  அவரை  வணங்குகின்றனர் . முதியவராக  வந்து  தன்  பாடல்களை  எழுதிக்கொண்டவர்  தில்லை   கூத்தன்  என்று  உணர்ந்த  மணிவாசகர்  ஈசனின்  கருணையை  நினைந்து  நெக்குருகி   கண்ணீர்  மல்க  ஸ்தம்பித்து  நின்றார் .

Tuesday 28 July 2015

thiruvasakam2

ஆடவல்லான்  இந்த  எண்ணம்  மனத்தில்  கொண்டு  இத்தேனை  வரும்  கால  மக்களுக்கு  கொண்டு  சேர்ப்பதை  முக்கிய   கடமையாக  கொண்டார் . உடனே  ஒரு  முதியவராக  உருமாறி  மாணிக்க வாசகரை  அணுகினார் . தாங்கள்  பாடிய  திருவாசகம்  எழுத்து  வடிவில்  உள்ளதா  என  வினவினார் . மணிவாசகர்  இல்லை  என  பதில்  உரைத்தார் . உடனே  ஈசன்  தாம்  அதற்காகவே  வந்திருப்பதாகவும்  அவருக்கு   மறுப்பு  ஏதும்  இல்லை  என்றால்  தானே  அவர்  சொல்ல  சொல்ல  ஓலையில்  எழுதி  கொள்வதாக  கூறுகிறார் .மணிவாசகரும்  ஒப்புக்கொண்டு  பாட  ஆரம்பிக்கிறார் . ஈசனும்  எழுதி  கொண்டே  போகிறார் . மிகவும்  ரசித்து  எழுதுகிறார் .முடிந்ததும்  ஈசன்   எல்லா  பாக்களும்  மிக  அருமையாக  இருப்பினும்  எல்லாம்  அறம்  சார்ந்ததாகவே  இருப்பதாக  கூறி  ஈசனை  நாயகனாக  பாவித்து  தன்னை  காதலியாக  பாவித்து அந்த  பாவத்தையும்  பாடுமாறு  விண்ணப்பிக்கிறார் . ''பாவை  பாடிய  வாயால்  கோவை  பாடுக '' என்று  கேட்டுக்கொள்கிறார் . அவரும்  அவ்வாறே  பாடுகிறார் . அதுவே  திருக்கோவையார்  ஆகும் . 

Monday 27 July 2015

thiruvsakam

தில்லையில்  மடம்  அமைத்து  மாணிக்கவாசகர்  ஈசனை  துதித்தவாறு  அமைதியாக  வாழ்ந்து  வந்தார் .தில்லை  அம்பலத்து  ஈசனுக்கு  திருவாசகம்  வரும் சந்ததியினருக்கு   கிடைக்க  பெறாமல்  போய்விடுமோ  என்ற  அச்சம்  உண்டாயிற்று . மாணிக்கவாசகர்  பாடிகொண்டே  இருந்தாரே  தவிர  அதை  எழுதி  வைக்கும்   மனநிலையில்  அவர்  இருந்ததில்லை . அவர்  மனம்  முழுமையாக  அம்பலவாணன்  திருவடியிலேயே  லயித்து  இருந்ததால்  அவருக்கு  அந்த  எண்ணமே  எழவில்லை .  

Wednesday 22 July 2015

punitha payanam

மாணிக்கவாசகர்  தம் புனித  பயணம்  தொடங்கி  திருப்பெருந்துறை ,உத்திரகோசமங்கை .திருவாரூர் ,திருவிடைமருதூர் ,சீர்காழி ,திரு  அண்ணாமலை  என்று  எல்லா  தலங்களையும்  தரிசித்து  தேனினிய  திருவாசகங்கள்  பாடிக்கொண்டே  தில்லையை  அடைகிறார் . அங்கு  தில்லை  கூத்தனிடம்  மனம்  பறிகொடுத்து  அங்கேயே  ஒரு  மடம்  நிறுவி   அதிலேயே  தங்கி  விடுகிறார் .

Tuesday 21 July 2015

manivasagar8

தன தவறை  உணர்ந்து  மிக்க  அதிர்ச்சி  அடைந்த  அரிமர்தன  பாண்டியன்  மாணிக்கவாசகரை  தேடி  ஓடி  சென்று  அவர்  கால்களில்  வீழ்ந்து  மன்னிப்பு  கோருகிறான் . மாணிகவாசகரும்  பெருந்தன்மையுடன்  எல்லாம்  ஈசன்  திருவிளையாடல் ,ஆதலால்  வருந்தவேண்டாம்  தனக்கு  அவர்மீது  வருத்தம்  ஏதும்  இல்லை  என்று  சொல்லி  தேற்றினார் . அரசன் அவரை மீண்டும்  அமைச்சராக   வருமாறு  அழைத்தார் . ஆனால்  அவர்  தனக்கு  பதவியில்  நாட்டமில்லை  என்றும்  பல  சிவாலயங்களுக்கு  சென்று  ஈசனை  மனமுருக  பாடுவதையே  தம்  மனம்  விரும்பி நாடுவதாகவும் , தனக்கு  விடை  கொடுக்குமாறு  கோருகிறார் . அரசனும்  அதை  தடுக்க  மனமில்லாமல்  விடை  கொடுக்கிறார் . மாணிக்கவாசகரும்  தன்  புனித  பயணத்தை  தொடங்குகிறார் . தமிழுலகத்திற்கு  திருவாசகம்  எனும் விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷத்தை  அடையும்  பேறு  கிடைக்கிறது .   

Thursday 16 July 2015

cont 7

கூலி  ஆளாக  வந்தியின்  சார்பில்  வந்த  ஈசன்  தானும்  ஒரு  வேலையும்  செய்யாமல்  மற்றவரையும்  வேலை  செய்யவிடாமல்  கூத்தாடுகிறார் .இதைக்கண்ட  சேவகன்  அரசனிடம்  சென்று  முறை  இடுகிறான் . அரசன்  வெகுண்டு  அவனை  இழுத்து  வருமாறு  ஆணை  இடுகிறார் .இதனிடையில்  மணிவாசகரும்  மக் களுக்கு  ஏற்பட்ட  அவதியை  கேள்வியுற்று  மிக  மன  வேதனை  அடைகிறார் .ஈசனை  பிரார்த்திக்கிறார் . அரசன்  கூலி  ஆளாக  வந்த  ஈசனை  கடுமையாக  விசாரிக்கிறார் . அவருடைய  பதில்களால்  மேலும்  கோபமுற்று  பிரம்பால்  ஈசனை  அடிக்கிறார் . ஆனால்  பிரம்படி மன்னன்  உள்ளிட்ட  அனைத்து  ஜீவராசிகள்  முதுகிலும்  விழ  அரசன்  அதிர்ந்து  போகிறான் .உடனே  ஈசன்  கரைதானே  அடைபடவேண்டும் .  நானே  அடைக்கிறேன்  என்று  சொல்லி  ஒரு  பிடி  மணலை  எடுத்து  போட  கரை  அடைபடுகிறது . உடனே  ஈசன்  மாணிக்கவாசகர் என்று  எம்மால்  பெயர்  சூட்டப்பட்ட  எம் பக்தனை  இவ்வாறு  கொடுமை  செய்வதை  பொறுக்காமல்  யாமே  இத்திருவிளையாடல்  புரிந்தோம் . இனியாவது  அவரது  பெருமையை  உணருங்கள்  என்று  சொல்லி  மறைந்தார்  

Tuesday 14 July 2015

cont.6

ஈசன்  வந்தி  கிழவியிடம்  கூலியாக  என்ன  தருவாய் ? என  வினவுகிறார் . அதற்கு  அவள்  தன்னிடம்  வேறு  என்ன  உள்ளது  அவள்  செய்யும்  பிட்டில்  உதிர்வதை  உனக்கு  கொடுக்கிறேன்  என்று  கூறினாள் . அன்று  அவள்  செய்த  மொத்த  பிட்டும்  உதிர்ந்து  விட்டது . அவளும்  மகிழ்ச்சியுடன்  அத்தனையும்  கொடுத்தாள் . மீதம்  இருந்தால்  அவள்  அதை  விற்று  அதனால்  அவளுக்கு  மீண்டும்  வினை  சேரும் . அதன்  பயனை  கழிக்க  இப்புவியில்  இன்னும்  சிறிது  காலம்  வாழ  வேண்டியதாகிவிடும்  என்பதால்  அன்பே  உருவான  ஈசன்  அவ்வாறு  செய்கிறான் .அவன்  கருனைதான்  என்னவென்பது ? அவளை  தன்னிடம்  சேர்த்தும்  கொள்கிறான் . அவருடைய  விளையாடல்  தொடர்கிறது . அவர்  கரையை  அடைக்கும்  பணி  நடந்து  கொண்டிருக்கும்  இடத்தை  அடைகிறார் .

Monday 13 July 2015

manivasakar cont

அன்பே  வடிவான  ஈசன்  தன்  அடியனான  மணிவாசகர்  இவ்வாறு  அவதி யுறுவதை  கண்டு பொறுப்பாரா ? வறண்டு  கிடந்த  வைகையில்  வெள்ளம்  பெருக  வைக்கிறார்  கரையிலுள்ளொர்  பெரும்  அவதிக்கு  ஆளானார்கள் . மன்னனிடம்  செய்தி  தெரிவிக்கப்பட்டது . திடீரென  இவ்விதம்  நேர  என்ன  காரணம்  என வியந்தார் . உடனே  வீட்டுக்கொரு  ஆள்  அனுப்பி  எல்லோரையும்   கரையை  அடைக்கும்  பணியில்  ஈடுபடுத்துமாறு  ஆணை  இட்டான் . அந்த ஊரில்  வந்தி  எனும்  பிட்டு  விற்கும்  கிழவி  இருந்தாள்  சிறந்த  சிவபக்தை . அவள்  யாருமற்ற  அநாதை .அனுப்ப  அவள்  வீட்டில்  யாரும்  இல்லை . ஈசன்  லீலை தான்  என்னவென்பது ? ஈசனே  ஒரு  கூலி  ஆளை போல்  அவளிடம்  வந்து  மன்னனின்  ஆணையை  நிறைவேற்ற  அவளுடைய  சார்பாக  தான்  செல்வதாக  கூறுகிறார்   

Friday 10 July 2015

manivasakar cont

நள்ளிரவு  ஆனதும்  நரிகள்  தங்கள்  சுயரூபம்  அடைந்தன .அவை  அங்கு  இருந்த  குதிரைகளை  கடித்து  குதறிவிட்டு  ஊருக்குள்  ஓடி  ஜனங்களை  அச்சுறித்தன .மன்னனுக்கு  செய்தி  சென்றது . மன்னன்  கடும்  கோபம்கொண்டு  வாதவூரரை  கடும்  சித்திரவதை  செய்ய  கட்டளை  இட்டான் .வறண்டு  கிடந்த  வைகை  மணலில்  அவரை  நிற்க  வைத்து  தலையில்  பெரும்  பாறை  ஏற்றி  கைகால்  கட்டி  நிற்க  வைத்து  சித்திரவதை  செய்தனர் . கொதிக்கும்  மணலில்  தலையில்  பாரத்துடன்  அவர்  அவதிப்படுவதை  கண்டு  மகிழ்ந்தனர் . ஆனால்  மாணிக்கவாசகரோ  எவ்வித  உணர்வும்  இன்றி  பஞ்சாக்ஷரம்  ஓதியபடி  அமைதியாக  இருந்தார் .  

Wednesday 8 July 2015

manivasakar cont3

மன்னனும்  மணிவாசகர்  சொன்னதுபோல் ஆவணி  மூலம்  வரை  காத்திருக்க  சம்மதிக்கிறான் . நாள்  நெருங்க  நெருங்க  குதிரைகள்  அனுப்பிய  தகவல் எங்கிருந்தும்  கிடைக்காதலால்  சஞ்சலம்  அடைந்து  வாதவூரரை  சிறையில்  அடைக்கிறான் .வாதவூரர்  என்று  முன்பு  அழைக்கப்பட்ட  மாணிக்கவாசகர்  சிறிதும்  சலனமின்றி  இருந்தார் . ஈசனிடம்  தன்னை  ஒப்படைத்தவர்  இனி  எது வாயினும்  அவன்  பொறுப்பு  என்று  அமைதியாக  த்யானத்தில்  இருந்தார் . இந்த  பாட்டு  அவருடைய  நிலையை  சொல்லும் .
அன்றே எந்தன்  ஆவியும்  உடலும்  உடைமை யெல்லாமும்
குன்றே  அனையாய் யென்னை யாட்கொண்டபோதே  கொண்டிலையோ
இன்றோர்  இடையூரெனக்குண்டோ  முக்கண்  எம்மானே
நன்றே  செய்வாய்  பிழை  செய்வாய்  நானோ  இதற்கு  நாயகமே
  இப்பாடலுக்கு  உருகாத  நெஞ்சம்  உண்டோ ? அவர் அமைதியாக  இருந்தாலும்  ஈசன்  பொறுப்பாரா ? தன்  விளையாட்டை  ஆரம்பித்தார் . காட்டில்  நரிகளை  பிடித்து  அவைகளை  குதிரைகளாக  மாற்றி  ஆவணி  மூலத்தன்று  தானே  குதிரை  வியாபாரியாக  வந்து  அரசனிடம்  குதிரைகளை  ஒப்படைத்து  கயிறு  மாற்றிக்கொண்டு  இனி  எது  நேர்ந்தாலும்  தனக்கு  பொறுப்பு  இல்லை  என்று  சொல்லி  மறைந்தார் . அரசனும்  குதிரைகளின்  அழகில்  மயங்கி  ஒபுகொண்டுவிட்டார் 

Tuesday 7 July 2015

cont2

மாணிக்கவாசகரின் பக்தி  வியக்கத்தக்கது . தன்  குருவைத்தவிர  வேறு  எந்த  சிந்தனையும்  அவருக்கு  இல்லை .அவர்  சொல்லே  வேதவாக்கு . அதன்  விளைவை  பற்றி  அவருக்கு  எவ்வித  கவலையும்  இல்லை . சரணாகதி  நிலை .ஈசனும்  அவருக்கு  தீக்ஷை  கொடுத்துவிட்டு  சென்று  விட்டார் . அவரால்  உலகுக்கு  கிடைக்க  வேண்டிய  பொக்கிஷம்  கிடைக்கும்  வரை  அவர்  வாழ  வேண்டுமே . அவருக்காக  மெய்சிலிர்க்க  வைக்கும்  திருவிளையாடல்கள்  ஆட வெண்டும்  அல்லவா ? மாணிக்கவாசகர்  குரு  சொற்படியே  மன்னனிடம்  சென்று  அந்த  மாணிக்கத்தை  கொடுத்து  ஆவணி  மூலம் அன்று  குதிரைகள்  வந்துவிடும்  என்று  உரைய்க்கிறார் .

Monday 6 July 2015

cont.

தக்ஷிணாமூர்த்தியால்  தீக்ஷை  பெற்ற  மாணிக்கவாசகரின்  வாக்கிலிருந்து  அருவியாக  வந்த  பாடல்களில்  ஈசன்  மயங்கியதில்  ஆச்சர்யம்  என்ன  உள்ளது . அவரும்  தன்னை  மறந்து  பாடிக்கொண்டு  கையிலுள்ள  திரவியத்தை கொண்டு  கோயில்  கட்டும்  பணியில்  மும்மரமாக  ஈடுபட்டிருந்தார் . அப்போதுதான்  அரசனின்  ஆட்கள்  அவரை   தேடி  வந்தனர் . மணிவாசகர்  தன்  குருவை  நாடினார் . குரு  அவரிடம்  ஒரு மாணிக்க  கல்லை  கொடுத்து  இதை  அச்சாரமாக  கொடுக்க  சொல்லி  ஆவணி  மூலம்  அன்று  குதிரைகள்  வரும்  என்று  சொல்ல  செய்தார் .    

Sunday 5 July 2015

maikavasakar2

ஈசனே  வந்து  தனக்கு  தீக்ஷை  தந்தார்  என்பதையும்  தனக்கு  மாணிக்கவாசகர்  என்று  பெயர்  சூட்டினார்  என்பதையும்  அவர்   அறியவில்லை .மாணிக்கவாசகர்  ஈசனை  மனமுருகி  துதித்து  பாடியவாறே  திருகொயில்களை  தரிசித்தவாறே  நாட்கள்   கழித்து  கொண்டிருந்தார் . வெகு  நாட்களாகியும்  குதிரைகளுடன்  அமைச்சர்  வராத  காரணத்தால்  அரசன்  கடும்  கோபம்  கொண்டான் .

Friday 3 July 2015

manivasakar

வாதவூரர்  தமிழக  கீழ்கடற்கரையை  நோக்கி  புறப்பட்டார் . அவர்  மனம் மட்டும்  நல்ல  குருவை  தேடிய  வன்ணமே அலைந்து  கொண்டு  இருந்தது .ஈசன்  தன்  விளையாடலை  தொடங்குகிறார் . வாதவூரர்  வழியில்  திருப்பெருந்துறையை  அடைகிறார் . அங்கு  ஒரு குருந்தை  மரத்தடியில்  ஒரு  சிவனடியார்  தன்  சிஷயர்கள்  புடை  சூழ  அமைந்திருப்பதை  காண்கிறார் . அவரை  கண்ட  மாத்திரத்திலேயே வாதவூரர்  மனம்  சிலிர்க்கிறது . ஓடி  சென்று  அவர்  காலடியில்  வீழ்கிறார் . அவரும்  வாதவூரரை  ஆசீர்வதித்து  பாததீக்ஷை  வழங்குகிறார் . வதவூரரும்  அளவிலா  ஆனந்தம்  அடைகிறார் .அவ்வளவே . அவர் தன்னை  மறக்கிறார் . தான்  அமைச்சர்  தன்  கடமைகள்  எல்லாம்  மறந்து  விடுகிறது . குருவின்    பின்னே  செல்கிறார் . குருவும்  அவரை  ஈசனை  பாடவும் திருப்பெருந்துறை  கோவிலை  புனருத்தாரணம்  செய்யவும்  பணிக்கிறார் . வாதவூரரும்  அவ்வாறே  சிவபுராணம்  பாடுகிறார் . குருவும்  மெய்மறந்து  ரசித்து  இனி  நீ  மாணிக்கவாசகர்   என்று  அழைக்கப் படுவாய்  என்று  ஆசி  கூறுகிறார் . வாதவூரர்  இவ்வாறு  மாணிக்கவாசகர்  ஆகிறார் . 

Monday 29 June 2015

vadavurar

அரிமர்த்தன  பாண்டியன்  வாத வூரரை மதுரைக்கு  வரவழைத்து  தன்  விருப்பத்தை  முக்கியஸ்தர்களுக்கு  சொல்லி    வாதவூரரை  சபைக்கு  அறிமுகப்படுத்துனார் . அவர்களும்  வாதவூரரின்  அறிவுத்திறன்  கண்டு  மகிழ்ந்தனர் .  அரசனும்  அவரை  தன்  பிரதான  மந்திரி  ஆக்கிக்கொள்கிறார் . வாதவூரரின்  மனதில்  அந்த  "தேடல் '' இருந்துகொண்டே  இருந்தாலும்  தன்  கடமைகளை  சரிவர  செய்து  கொண்டிருந்தார் . அப்போது  பாண்டியர்  படை  பலத்தை  கண்காணித்த  படை  தலைவன்  குதிரை  படையை  பலப்படுத்த  வேண்டியது  அவசியம்  என்று  தெரிவித்தார் .அரசனும்   குதிரைகள்  வாங்கும்  பொறுப்பை  வாதவூரரிடம்  ஒப்படைக்கிறார் .  அவரும்  வேண்டிய  திரவ்யங்களுடன்  குதிரை  வாங்க  புறப்படுகிறார் .  

Saturday 27 June 2015

vathaurar

வாதவூரர்  சகல  சாச்த்திரங்களையும்  படித்து  சிறந்த  மேதையாக  விளங்கினார் . ஆனால்  மனதில்  ஒரு  குழப்பம் .ஒரு சிறந்த  குருவை  தேடி  அலைந்தது  மனம் . அப்போது  மதுரையை  ஆண்ட  அரிமர்த்தன  பாண்டியன்  ஒரு  முறை  திருவாதவூர்  ஈசனை  தரிசனம்  செய்ய  வந்தபோது  வாதவூரரின்    அறிவாற்றலையும்  சாதுர்யத்தையும்  காண  நே ர்கிறது  . அப்போது  அவரது  முதல்  அமைச்சர்  வயது  முதிர்ந்த  காரணத்தால்  பதவி  விலக  இருந்ததால்   மன்னன்  வாதவூரரை  தன்  முதல்  அமைச்சராக்கிகொள்ள  தீர்மானித்தார் .

Thursday 25 June 2015

manivasakar

வைகை  நதிக்கு  ஒரு  தனி  பெருமை  உண்டு . எல்லா  நதிகளையும்  போல்  அது  கடலிலோ  சமுத்திரத்திலோ  கலந்து  உப்பு  நீராவதில்லை . குட்டை  குளங்களை  நிரப்பிக்கொண்டு  அந்த  எல்லையிலேயே  இருப்பது . அப்பேற்பட்ட  வைகை  கரையில்  உள்ள  ஒரு  இடம்  திருவாதவூர் . அங்கு  ஒரு  அந்தணர்  குலத்தில்  பிறந்தவர்  வாதவூரர்  அவர் தந்தை  யாக   யக்ஞங்களை  முறையோடு  செய்பவர் . சிறந்த  பிராம்மணர் . வாதவூரர்  சிறு  வயது  முதலே  ஈசனிடம்  சிறந்த  பக்தி  உடையவர் . ஆனால்  மற்ற  சடங்குகளில்  ஈடுபாடு  இல்லாமல்  இருந்தார் . ஆனாலும்  எல்லாவற்றையும்  படித்து  அறிந்து  கொள்ளும்  ஆர்வமுடன்  பல  நூல்களை  படித்து  ஆராய்ந்து  கொண்டிருந்தார் .

Friday 19 June 2015

manivasagar

9 ம்  நூற்றாண்டில் வாழ்ந்தவர்  மாணிக்கவாசகர் . வைகை  கரையிலுள்ள  வாதவூர்  இவர்  பிறந்த  இடம் . இவர்  இயற்பெயர்  வாதவூரர் . இவர்  63 நாயன்மார்களின்  வரிசையில்  இடம்  பெறவில்லை . சுந்தரரால்  திருத்தொண்டர்  தொகையில்  பாடப்பெற்றவர்களே  63 நாயன்மார்களில்  அடங்குவர் . இவர்  சுந்தரர்  வாழ்ந்த  காலத்திற்கு  பின்பு  இருந்தவர் . ஆனால்  சைவசமயத்தையும்  பக்தி  நெறியையும்  நிலைநாட்ட  அவதரித்த  சமயகுரவர்  நால்வரில் இவரும்   ஒருவராவார்.  மற்ற  மூவர்  அப்பர்  சம்பந்தர்  மற்றும்  சுந்தரர்  ஆவர் . அப்போது  பௌத்த , சமண  மதங்கள்  மன்னர்கள்  ஆதரவுடன்  தங்கள்  சமயத்தை  பரப்பினர் . யாக  யஞைகளையும்  நிந்தித்தனர் . அவர்களை   வாதில்  வென்று  சைவ சமயத்தை  நிலை நாட்ட   அவதரித்தவர்கள்  இந்நால்வரும் .
''வேத  வேள்வியை  நிந்தனை  செய்துழல்   ஆதமில்லி யமனொடு  தேரரை
 வாதில்  வென்றழிக்க  திருவுள்ளமே  பாதி  மாதுடனாய  பரமனே
 ஞாலமே  நின்புகழே  மிக  வேண்டுந்தென்  ஆலவாயிலுறையும்  எம்மாதியே |
இவ்வாறு  ஞானசம்பந்த  மூர்த்தி  பாடுகிறார் .
  •  

Tuesday 16 June 2015

thiruvasakam

திருவாசகத்துக் கு உருகாதார்  எவ்வாசகத்துக்கும்  உருகார்   இது  எல்லோ  ரும்  அறிந்த  வழக்கு .திருவாசகத்தேன்  என்று  சான்றோரால்  உயர்வாக  சொல்லப்படுகிறது . தேன்  ஒரு அற்புத  பொருள் . தேன்  எத்தனை  காலம்  வைத்தாலும்  கெடாது . தேனில்  எதை  போட்டு  வைத்தாலும்  அந்த  பொருளும்  கெடாது . அத்தனை  உயர்ந்தது  திருவாசகமும் . மாணிக்கவாசகர்   ஈசனிடம்  எதை  வேண்டியோ  எதையாவது   பெறவோ  பாடியது  அல்ல  திருவாசகம் . நெஞ்சம்  உருகி  கண்ணீர்  ஆறாய்  பெருக  உணர்ச்சி  வயப்பட்டு  இதயத்திலிருந்து  பொங்கி  வழிந்த  வார்த்தைகள் . கேட்போர்  நெஞ்சையும்  கலங்க  வைக்கும்  பாக்கள் . ஈசனே  மாணிக்கவாசகர்  சொல்லகேட்டு  ஓலையில்  எழுதி  கையொப்பமிட்டு   தில்லை  கோயில்  நடராஜர்  சன்னதி  முன்  வைத்தார்  என்றால்  இதன்  பெருமைதான்  என்னவென்று  சொல்ல . ஈசன்  கருணையை  தான்  எப்படி  போற்ற ?  இதனால்  தான்  திருவாசகம்  நமக்கு  சேதமில்லாமல்  முழுமையாக  கிடைத்திருக்கிறது .

Sunday 14 June 2015

manivaasakar

இனி  அடுத்து  நாம்  சிந்திக்க  போவது  8ஆவது  திருமுறை  மாணிக்கவாசகர்  என்று  ஈசனால்  அழைக்க  படும்  பாக்கியம்  பெற்ற  மாணிக்கவாசகரால்  பாட  பெற்றது . திருவாசகம் ,திருக்கோவையார் ,  இதில்  அடங்கும் . இது  மிக ,மிக  பெருமை  வாய்ந்தது .எப்படியெனில்  மாணிக்கவாசகர்  சொல்ல  ஈசனே  கைப்பட  எழுதி  கையொப்பமிட்டு   தில்லையில்  நடராஜர்  சன்னதி   படியில்  வைக்கப்பட்டிருந்தது . இதன்  பெருமை  என்னவென்று  சொல்வது .

Wednesday 10 June 2015

thanenai

சுந்தரர்  பரவைனாச்சியாருடன்  சில காலம்  திருவாரூரில்  தங்கி  இருந்தார் . அப்போது  சேரமான்  பெருமான்  நினைவு  வர சேரநாடு  செல்கிறார்  திருஅஞ்சய்களம்   வந்து  ஈசனை  த்யானிக்கிறார் .அப்போது  அவர்  மனம்  பெரும்  சஞ்சலத்தில்  ஆழ்கிறது . கைலைவாச  ஞாபகம்  அவரை  வாட்டுகிறது . எத்தனை  நாள்  இவ்வாறு  ஐயனை  பிரிந்திருப்பது  என்ற   வேதனை  அவரை  துன்புறுத்துகிறது . ஈசனிடம்  மிக வருந்தி  போற்றுகிறார் . அப்போது  அவருக்கு  இன்ப  அதிர்ச்சி  .வெளியில்  தேவர்கள்  யானை  அம்பாரியுடன்  சுந்தரரை  அழைத்து  செல்ல  காத்திருக்கின்றனர் . மெய்சிலிர்த்து  சுந்தரர்  இப்பாடல்  பாடுகிறார் .
தானெனை  முன் படைத்தான்   அதறிந்து  தன்  பொன்னடிக்கே
நானென்ன  பாடலெந்தொ  நாயினேனை  பொருட்படுத்து |
வானெனை  வந்தெதிர்கொள்ள  மத்த யானை  அருள்  புரிந்து
ஊனுயிர்  வேறு  செய்தான்  நொடித்தான்  மலை  உத்தமனே |
இவ்வாறு  சுந்தரர்   பூமியில்  தன்  கடமையை  செவ்வனே  முடித்து  மீண்டும்  கைலாயம்  செல்கிறார் . அவர்  நமக்கு  அளித்த  விலை  மதிக்க  முடியாத  பொக்கிஷம்  அவருடைய  திருதொண்டர்தொகை . அதனால்  கிடைத்த  நாயன்மார்கள்  வரலாறு .

Sunday 7 June 2015

avinasicont.

அந்த  தம்பதியின்  கதை  கேட்டு  சுந்தரர்  மனம்  மிக  வேதனை  அடைகிறது . அவர்  உடனே  ஈசனை  துதித்து  இப்பதிகம்  பாடுகிறார் .
எற்றான்   மறக்கேன்  எழுமைக்கும்  எம்பெருமானையே
உற்றாய்  என்று  உன்னையே உள்குகின்றேன்  உணர்ந்து  உள்ளத்தால்
 புற்றாடு   அரவா  புக்கொளியூர்  அவிநாசியே
 பற்றாக  வாழ்வேன்  பசுபதியே  பரமேட்டியே

புக்கொளியூர்  அவிநாசியே  கரைக்கால்  முதலையை  பிள்ளை
 தரச்சொல்லு  காலனையே |

இப்பதிகம்  பாடி  முடிந்ததும்  முதலை  ஒன்று  அந்த  சிறுவனை  கரையில்  கொண்டு  வந்து  விட்டு  சென்றது . பெற்றோரின்  மகிழ்ச்சிக்கு  எல்லை  ஏது ? சுந்தரரை  போற்ற  வார்த்தைகளே  இல்லை ,இவ்வாறு  சுந்தரரும்  ஒரு சிறுவனுக்கு  மறு  வாழ்வு  அளிக்கிறார் .

 

Friday 5 June 2015

avinasi

சுந்தரர்  தன்  யாத்திரையில்   ஒரு   முறை  அவினாசி அடைந்தார் . அங்கு  ஒரு  வீட்டில்  ஒரு  பையனுக்கு  உபநயனம்  நடந்து  கொண்டிருந்தது . ஊரே  மகிழ்ச்சியில்  திளைத்திருக்க  ஒரு  வீட்டில்  மட்டும்  அழுகை  ஒலி  கேட்பதை  கண்டு  சுந்தரர்  அதன்  காரணத்தை  வினவுகிறார் .சில  காலம்   முன்   இவர்கள்  மகனும்  அவனுடைய  வயது  ஒத்த  அந்த  உபநயன  சிறுவனும்  ஒன்றாக  நீராட  போன  சமயம்  இவர்கள்  மகனை  முதலை  இழுத்து  சென்று  விட்டதாக  கூறுகின்றானர் . பெற்றொர்கள்  தங்கள்  பிள்ளையை   நினைந்து  அவன்   உயிரோடு  இருந்திருந்தால்  அவனுக்கும்  இவ்வாறு  இந்த  விசேஷம்  நடந்திருக்கும்  என்று  அது  நிறைவேறாதது  வேதனை  அவர்களை  மிக  வாட்டுவதை  தெரிவிக்கின்றனர் .
 

Wednesday 3 June 2015

namasivaaya

சுந்தரரின் நமசிவாய  பதிகம் .
மற்று  பற்றெனக்கின்றி  நின்  திரு  பாதமே  மனம்  பாவித்தேன் ,
பெற்றலும்  பிறந்தேன்  இனிப் பிறவாத  தன்மை  வந்து  எய்தினேன் |
கற்றவர்  தொழுது  ஏத்தும்  சீர்கரை  யூரில்  பாண்டிகொடுமுடி
நற்றவா  உனை  நான்  மறக்கினும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே |
எல்லா பாக்களும்  சொல்லும்  நா  நமச்சிவாயவே  என்றே  முடியும் .
 

Tuesday 2 June 2015

yezhisai

சுந்தரர்  திருவாரூர்  ஈசனை காணாமல்  நெக்குருகி  பாடிய  பாடல்கள்  அநேகம் .
ஏழிசையாய்  இசைபயனாய்  இன்னமுதாய்  என்னுடைய ,
தோழனுமாய்  யான் செய்யும்  துரிசுகளுக்கு  உடனாகி
மாழை  யொண்கண்  பரவையை  தந்து  ஆண்டானை  மதியில்லா
ஏழையேன்  பிரிந்திருக்கேன்  என்  ஆரூர்  இறைவனையே |

முத்தினை  மாமணிதன்னை  வயிரத்தை  மூர்க்கனே  ன் 
எத்தனை  நாள்  பிரிந்திருக்கேன்  என் ஆரூர்  இறைவனையே |  

Monday 1 June 2015

vitru kol

சுந்தரர்  பாடிய  மற்றொரு  பாடல்  இங்கு  குறிப்பிடுகிறேன் .
விற்று  கொள்வீர்  ஒற்றீயல்லே ன்   விரும்பி  ஆட்பட்டேன்
குற்றம்  ஒன்றும்  செய்தது  இல்லை   கொத்தை  ஆக்கினீர்
எற்றுக்கு  அடிகேள்  என்  கண்  கொண்டீர்  நீரே  பழி  பட்டீர்
மற்றை  கண் தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே |
காஞ்சியில்  ஒரு  கண்  பார்வை  திரும்ப  பெற்றார்   சுந்தரர் . பிறகு  திருவாரூர்  வந்தடைந்து  திருவாரூர்  ஈசனிடம்  மற்ற  கண்  பார்வையை  உரிமையுடன்  யாசிக்கிறார் . பெறவும்  செய்கிறார் .
 

Saturday 30 May 2015

thinkaL

சுந்தரர்  பாடல்கள்  அழ்ந்த  பக்தியுடன்  பாடப்பட்ட பாடல்கள்  என்பதில்  ஐயமில்லை , ஆனால்  சில    தோழமையால்  அதிக  சலுகை     எடுத்து  கொண்டு   விட்டாரோ  என்று  தோன்ற  வைக்கும்  பாடல்களும்  உண்டு .
 திங்கள்  தங்கு  சடைகள்  மேலோர்   திரைகள்  வந்து  புரள  வீசும்
கங்கையாளேல்  வாய்  திறவாள் ; கணபதியே ல்  வயிறூதாரி ;
அங்கை  வேலோன்  குமரன்  பிள்ளை ;  தேவியார்கோ ற்  றட்டி யாளார்
உங்களுக்காட்  செய்ய  மாட்டோம்  ஓணகாந்தன் றளீயுளீ ரே |
இந்த  பாடல்  சுந்தரர்  நிதி  வேண்டி  பாடிய  பாடல்  என்பது  குறிப்பிட  வேண்டும் .  

Thursday 28 May 2015

kachchur

முதுவாய்   ஓரி கதற  முதுகாட்டெரி  கொண்டாடல்  முயல்வானே
மதுவார்  கொன்றை புதுவீசூடும் மலையான்  மகள்  தன்  மணவாளா 
   கதுவாய்  தலையிற்  பலி  நீ  கொள கண்டால்  அடியார்  கவலாரே 
   அதுவே  ஆமாறிதுவோ  கச்சூர்  ஆலக்கோயில்  அம்மானே |
   சுந்தரர்  பரிவாங்களுடன்  திருக்கச்சூர்  அடைந்த  போது  பசி  மிகுதியால்  களைத்திருந்தனர் . அவர்கள்  பசியை  போக்க  ஈசன்  அந்தணர்  உருவில்  வந்து  அங்குள்ள  வீடுகளில்  பிக்ஷை  வாங்கி  அவர்களுக்கு  அன்னமிட்டு  மறைந்து  போனார் . வந்தது  ஈசன்  என்பதை  உணர்ந்த  சுந்தரர்  மெய்  சிலிர்த்து  பாடிய  பாடலே  இந்த  பாடல் .       

Monday 25 May 2015

paduvar

பாடுவார்  பசி  தீர்ப்பாய்  பரவுவார்  பிணி  களைவாய் |ஓடு  நன்  கலனாக  உண்பலிக்கு உழல்வாரே
காடு  நல்லிடமாக  கடுவிருள்  நடமாடும்   , வேடனே குருகாவூர்  வெள்ளடை  நீயன்றே ||

 சுந்தரர்  சம்பந்தர்  பிறந்த  தலமாகிய  சீர்காழி யை  தரிசித்து  வந்ததும்  அவரும் அடியார்களும் மிகுந்த  களைப்புடன்  திருகுருகாவூர்  வந்தடைகின்றனர் . அங்கு  ஒரு முதியவர்  ஒரு  பந்தலில்  எல்லோரையும்  அமர  செய்து  அமுது  படைக்கிறார் . எல்லோரும்  உறங்கி  எழுந்த போது  அங்கு  பந்தல்  முதியவர்  காணப்படவில்லை . வந்து  அன்னம்  படைத்து  மறைந்தது  ஈசனே  என்று  உணர்ந்து  நெஞ்சு  உருகி  இப்பதிகம்  பாடுகிறார் .

Tuesday 19 May 2015


thirupungur

வையகமுற்றும்  மாமழை  மறந்து  வயலில்  நீரிலை  மாநிலந்தருகோம் ,
உய்யக்கொள்க  மற்றெங்களை  என்ன  ஒலி கொள் ,வெண்முகிலாய்  பரந்தெங்கும்
பெய்யுமாமழை  பெருவெள்ளம்  தவிர்த்து  பெயர்த்தும்  பன்னிரு  வெலிகொண்டருளூம்

செ ய்கை  கண்டு நின்  திருவடி  அடைந்தேன்  செழும்  பொழில்  திருபுன்கூர்  உளானே |
   சுந்தரர்  தன்  தல  யாத்திரையில்  ஒரு  முறை  திருப்புன்கூர்  வருகிறார் . அப்போது  அங்கு  மழை  இல்லாமல்  ஊர்  வறண்டு  மக்கள்  பெரும்  துன்பத்திற்கு  ஆளாயிருந்தனர் . சுந்தரரை  மக்கள் 
சரணடைந்தனர் . சுந்தரர்  அவர்களை  திருப்புன்கூர்  ஈசனுக்கு  12 வேலி  நிலம்  வழங்க  கேட்டுகொண்டார் . அவர்களும்  சம்மதித்தனர் .சுந்தரர்  பாட  மழை  பொழிந்தது . ஆனால்  மழை  நீடித்து  வெள்ளம்  பெருக  மக்கள்   மறுபடி  சுந்தரரை  அணுகினர் . மேலும்  12 வேலி  நிலம்  ஈசனுக்கு  வழங்க  கோரிக்கை  வைத்தார் . மக்களும்  சம்மதிக்க  பதிகம்  பாடி  மழை  நிறுத்தினார் .சுந்தரர்  பாடி பெறுவது யாவும்  ஈசனுக்காகவே . 

Friday 15 May 2015

padal

சுந்தரரின்  முதல்  பாடல் .
   பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா | எத்தான்  மறவாதே  நினைக்கின்றேன்  மனத்துன்னை |
 வைத்தாய் பெண்ணை  தென்பால்  வெண்ணை  நல்லூர்  அருட்றுறையுள் |அத்தா  உனக்கு   ஆளாயினி
                                                                                                                            அல்லேன்  எனலாமே |
அவருடைய  மிக  முக்கியமான  அவர்  பிறவி  நோக்கம்  நிறைவே ற்றப்பட்ட  பாடலும்  த்யாகேசரால்   அடியெடுத்து  கொடுக்கப்பட்ட  பதிகமே . அது வே  'தில்லை  வாழ் அந்தணர்  தம்   அடியார்க்கு  அடியேன் ' ஆகும் .  
          

Thursday 14 May 2015

padal

இனி  சுந்தரரின்  பாடல்களை  நோக்குவோம் . முதல்  பாடல்  ஈசனே  அடியெடுத்து  கொடுத்து  பாட  வைக்கிறார் .  முதியவராக  தோன்றி  சுந்தரரின்  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொள்ள  வந்த  ஈசனை  அடையாளம்  கண்டுகொள்ள  முடியாததால்  சுந்தரர்  அவரை   பித்தா ,பேயா  என்றெல்லாம்  ஏசுகிறார் . அவரை  ஆட்கொண்ட  ஈசன்  ,சுந்தரரை  பாட  சொல்ல  சுந்தரர்  என்ன  பாடுவது  என்று  தெரியாமல்  விழித்தபோது  ஐயனே  'பித்தா' என்று  அடியெடுத்து  கொடுத்து  பாட  சொல்கிறார் . திருவெண்ணை நல்லூரில்  பாடும்  அப்பாடல்  அவருடைய  முதல்  பாடலாகும் .

Monday 11 May 2015

இதுவரை  சுந்தரர்  வரலாறு  கண்டோம் .சுந்தரர்  பக்தி  மிக  உயர்ததானாலும்  ஈசன்  அவர்  மீது  காட்டிய  பரிவு  நம்மை  அதிசயிக்க  வைக்கிறது . சுந்தரர்  பசியோடு  வந்தபோது  சிறு  அந்தணர்  உருவில்   அங்குள்ள  அந்தணர்  வீடுகளில்  உஞ்சவ்ருத்தி  செய்து  அவருக்கு  உணவு  படைத்த  விந்தையை  என்ன  சொல்ல ? ஸ்ரீமன்  நாராயணானாலும்  காணமுடியாததும் ,அண்ட  சராசரங்களையும்  ஆட்டுவிக்கும்  நடனமாடும்  பாதங்களால்  திருவாரூர்  வீதிகளில்  சுந்தரருக்காக  தூது  நடந்த  விந்தை  தான்  என்னவென்று  சொல்வது ? ஈசனின்  கருணைக்கு  எல்லை  ஏது ? சுந்தரும்  இரண்டு  பெண்களை  மணந்து  இல்லறம்  நடத்துபவரும்  ஈசன்மேல்  அளவு  கடந்த  பக்தி  செலுத்த  முடியும்  என்று  உணர்த்துகிறார் .அதேபோல்  ஈசனும்  தனக்கு  எத்தனை  அன்பனானாலும்  தவறு  செய்தால்  தண்டனை  நிச்சயம்  என்பதை  உணர்த்த  சுந்தரர்  செய்த  சத்தியத்தை  மீறியதும்  கண்களை   பறிக்கிறார் . இதனால்  சுந்தரர்  வரலாறு  பெரிய புராணத்தில்  அதிக  முக்கியத்துவம்  பெறுகிறது . அவர்  39000 பதிகங்கள்  பாடியதாக  சொல்லப்பட்டாலும்  நமக்கு  கிடைத்தவை  1000 பதிகங்களே . 

Thursday 7 May 2015

ஏயர்கோன்  கலிகாமர்  சுந்தரர்  பெருமையை  உணர்கிறார் . இருவரும்  சிறந்த  நண்பர்கள்  ஆகின்றனர் .இவ்வாறு   சுந்தரர்  தம்மை  வெறுப்பவரையும்  ஈசன் அருளால்  தோழராக்கி  கொள்கிறார் சுந்தரர்   வரலாற்றை  படிக்கும்போது  இன்று  சிவாலயங்களில்  63 நாயன்மார் களாக  கொலுவிருக்கும்  பக்தர்களில்  6 நாயன்மார்களையும்  அறிகிறோம் .அவர்கள்  சுந்தரரின்  பெ ற்றொர்கள்  சடையனார்  மற்றும்  இசைஞானியார் , அவரை  வளர்த்த  தந்தையான  நரசிங்க  முனையரையர் ,விறன்மிண்ட  நாயனார்   மேலும்  ஏயர்கோன்  கலிக்காம  நாயனார்  மேலும்  சேரமானார்  பெருமான்    ஆ வர்கள் .

Wednesday 6 May 2015

cont2

 சுந்தரர்  கலிகாமனார்  வீட்டை  அடைகிறார் . பண்பு  மிக்க  அவர்  மனைவி  பெரும்  சிவ  பக்தரான  அவரை  உபசரிப்பதே  கடமை  என்று  கணவன்  மறைந்ததை  மறைத்து  சுந்தரரை  வரவேற்கிறாள் . சுந்தரர்  கலிகாமரை  காண  வெண்டும்  என்று  வலியுருத்தையதால்  வேறு  வழியின்றி  நடந்த  உண்மையை  கூருகிறாள் .  மனம்  மிக நொந்த  சுந்தரர்  தானும்  வாழ  விரும்பாமல்  தன்னை  மாய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  கலிகாமரை  பிழைக்க  வைத்து  அவராலேயே  சுந்தரரை  அப்பாவ  காரியத்தை   செய்யாது  தடுக்கிறார் .       

Tuesday 5 May 2015

cont

இருவரும்  சொல்லொணா  வருத்தத்தில்  ஆழ்ந்தனர் . சுந்தரர்  மீது  அவர்களுக்கு  ஏற்பட்ட  ஆத்திரம்  தணிவதாக  இல்லை . ஈசன்  இவர்களுக்கு  சுந்தரரின்  உண்மை  பக்தியை  உணர்த்த  முற்பட்டார் . ஏயர்கோன்  கலிக்கமருக்கு  கடும்  சூலை  நோயை  கொடுத்து  அவர் கனவில்  அந்நோயை  சுந்தரரால்  மட்டுமே  தீர்க்க  இயலும்  என்று  உரைக்கிறார் . ஆனால்  கலி காமனார்  சுந்தரரால்  குணமாவதை  விட  தன்னை  மாய்த்து  கொள்வதே  மேல்  என்று  எண்ணி  கத்தியால்  தன்னை  தானே  மாய்த்துகொள்கிறார் . ஈசன் சுந்தரரை  அவரை   குணப்படுத்த சொல்லி  அனுப்ப  சுந்தரரும்  அவ்வாறே  செல்கிறார் . 

yeyarkon

ஏயர்கோன் கலிகாமன்   எனும்  மற்றொரு  சிறந்த  சிவதொண்டர்  திர்புன்கூர் எனும் இடத்தில்  வாழ்ந்து   வந்தார் . அவரும் அவர்  மனைவியும்  சிவபெருமானிடத்தில்  பெரும்  பக்தி  கொண்டவர்கள் . சுந்தரருக்காக  ஈசன்  திருவாரூர்  வீதியில்  நடந்து  பரவையார்  வீட்டிற்கு  தூது  சென்றதை  கேள்வியுற்று  பெரும்  அதிர்ச்சி  அடைந்தனர் . சுந்தரர்  மீது  அளவு  கடந்த  ஆத்திரம்  அடைந்தனர் . ஈசன்  மீதும்  கோபம்  கொண்டனர்   

Saturday 2 May 2015

viranmindar

சுந்தரரை  பேசும்போது   இன்னும்  இரண்டு  நாயன்மார்களை  சொல்ல  வேண்டியது  அவசியம் . ஒன்று   விரன்மிண்ட  நாயனார் . சேர  நாட்டில்  இன்று  திருச்செங்கோடு  என்று  அழைக்கப்படும்  இடத்தில்  பிறந்தவர்  விரன்மிண்டர் . அவர்  சிறந்த  சிவபக்தர்  . சிவன்  அடியார்களை   மிகவும்  பக்தியுடன்  போற்றுபவர் . அவர்  பல  சிவ  தல ங்களை  சேவித்து  விட்டு  திருவாரூர்  வந்து  சேர்ந்தார் . அங்கு  சிவடியார்கள்  எல்லோரும்  சேர்ந்து  ஒரு  கூடத்தில்  சிவ  த்யானத்தில்  இருந்தனர் . அப்போது  சுந்தரர்  இவர்கள்  யாரையும்  கவனியாமல்  நேராக  ஈசன்  சன்னதிக்கு  சென்றார் . சிவனடியார்களை  வணங்காமல்  சென்ற  சுந்தரரை  கண்டு  மிக  கோபம்    கொண்ட  விரன்மிண்டர்   சுந்தரரையும்  அவரை  ஏற்று  கொண்ட  ஈசனையும்  கடுமையாக  ஏசுகிறார் . அதிர்ச்சி  அடைந்த  சுந்தரர்  ஈசனிடம்  மிக  வருத்தத்துடன்  முறையிடுகிறார் . ஈசன்  சுந்தரரை  சமாதானம்  செய்து  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் '' என்று  அடியெடுத்து  கொடுத்து  சிவனடியார்கள்  பெருமையை   பாடும்படி  ஆணை  இடுகிறார் . சுந்தரரும்  அவ்வாறே  ஆரம்பித்து  சிவத்தொண்டர்கள்  பெருமையை பாடுகிறார் . அதுவே  ''திருத்தொண்டர்  தொகை '' என்று  பெருமை  பெறுகிறது . அவர்  பாடும்போது  உள்ளே  நுழைந்த  விறன்மிண்டர் ''விரிபொழில்  சூழ்  குன்றையார்  விரன்மிண்டற்கு  அடியேன் '' என்ற  வரிகளை  கேட்டு  மெய்  சிலிர்த்து  சுந்தரர்  காலடியில்  வீழ்கிறார் . மன்னிப்பும்  கேட்கிறார் . அவரும்  சுந்தரர்  தோழறாகிறார் . இவ்வாறு  விறன்மிண்டர்  இந்த  பொக்கிஷம்  நமக்கு  கிடைக்க  ஒரு  மறைமுக  காரணமாகிறார் .
  

Friday 1 May 2015

kailaayam

கோயில்  வாயிலில்  இந்திராதி  தேவர்கள்  யானையுடன்  சுந்தரரை  வரவேற்க  காத்திருப்பதை  கண்டு  மெய்  சிலிர்க்கிறார் . சுந்தரரை  எப்போதும்  பின்  தொடர்வேன்  என்று  சத்தியம்  செய்த  சேரமானும்  ஓடி  வருகிறார் . தான்  இப்போதும்  சத்தியத்தை  மீறாமல்  தன்  குதிரையின்  காதில்  பஞ்சா க்ஷரத்தை  ஓதி  சுந்தரரை  பின்  தொடர  செய்கிறார் .இவ்வாறு  இருவரும்  சேர்ந்து  கைலாயம்  செல்கின்றனர் .
  இதே  சமயத்தில்  பர வை நாச்சியார்  இனி  இவ்வுலகி ல்   இருக்க  விரும்பாமல்   சங்கிலி  நாச்சியாரை  சந்தித்து  தங்கள்  பிறவி  ரகசியத்தை  அவருக்கு  உணர்த்தி  தாமும்  கைலை  சேர  நேரம்  வந்து  விட்டதை  உணர்த்தி  ஈசனிடம்  இருவரும்  தாள்  பணிந்து  தங்களை  அழைத்து  கொள்ளுமாறு  மனமுருக  வேண்டுகின்றனர் . ஈசனும்  மனமிரங்கி  அவர்களையும்  அழைத்து  கொள்கிறார் .

seramaanaar2

சிறிது  காலம்  சென்றபின்  சுந்தரர்  சேரமானாரை  காணும்   ஆவலுடன்  சேரநாடு  செல்கிறார் .அங்கு  சில காலம்  தங்கியபின்  கைலாயம்  நினைவு  வர  அங்கு  செல்ல  அவர் மனம்  மிக ஆவல  கொள்கிறது .அவர் திருவஞ்சை களம்  சென்று  ஈசனிடம்  தன்  ஆவலை  பாடுகிறார் . ஈசன் அறியாதது  உண்டா ?

Wednesday 29 April 2015

seraman

ஒரு  நாள்  சேரமானார்  பூஜை  முடித்து  வெகு  நேரம்  ஆகியும்  சலங்கை  ஒலி  கேளாததால்  மிக  துக்கமுற்று  தன்னை  மா.ய்த்துக்கொள்ள  முனைகிறார் . அப்போது  ஈசன்  அவரிடம்  தில்லையில்  சுந்தரர்  பாடிக்கொண்டிருந்த  பதிகங்களை  கேட்டு  தான்  மெய்  மறந்து  போனதே  கால  தாமதத்திற்கு  காரணம்  என்று  விளக்குகிறார் . இதை  கேட்ட  சேரமானார்  சுந்தரர்  மீது  மிகுந்த  பக்தி  கொண்டார் . அவருடைய  மற்ற  பெருமைகளையும்  கேட்டு  உணர்ந்து  அவருடைய  பக்தி  வெகுவாக  உயர்ந்தது . உடனே  அவரை  காண  திருவாரூர்  விரைகிறார் . இருவரும்  சேர்ந்து  பல  சிவாலயங்களை  தொழுது  நிறைய  பதிகங்கள்   பாடி  மகிழ்ந்தனர் . தம்பிரான்தோழன்  என பெருமை  பெற்ற  சுந்தரர்  சேரமான்  தோழனாகவும்  ஆகிறார  சே ரமாநாரும்  63 நாயன்மார்களில்  ஒருவர்  ஆவார் .  

Tuesday 28 April 2015

paravaiyar2

சுந்தரரும்  பரவைநாச்சியாரும்  சிறிது  காலம்  திருவாரூரில்  வாழ்கின்றனர் . சுந்தரரும்  பல  திருத்தலங்களை  சேவித்து  பல  பதிகங்கள்  பாடி  ஈசனை  துதித்தவாறு  இருந்தார் . அந்த  காலத்தில்  அவருக்கு  சேரநாட்டில்  ஒரு சிற்றாறரசரான  சேரமான்  பெருமானாரின்  நட்பு  கிடைக்கிறது .
சேர மான்   பெருமானார்  வெகு  சிறந்த  சிவபக்தர் .கேட்பாருக்கு  யாராயினும்  எதுவாயினும்  இல்லை  எனாது  வழங்கும்  பண்பாளர் . தில்லை  அம்பலவாணரிடம்  அளவு  கடந்த  பக்தி  உடையவர் . இதனால்  தினமும்  இவர்  பூஜை  முடிந்ததும்  தில்லை  நடராஜரின்  சலங்கை  ஓசை  அவருக்கு  கேட்குமாம் . அத்தகைய  பேறு  பெற்றவர் .
  

Thursday 23 April 2015

paravaiyaar

சுந்தரர்  வரவை  அறிந்த  பறவை நாச்சியார்  மகிழ்ச்சி  அடைந்தாலும்  அவர்  சங்கிலியாரை இரண்டாவதாக  மணந்த  செய்தி  அறிந்ததால்  வெகுண்டு  வாயிற்கதவை  தாளிட்டு  யாரையும்  அனுமதிக்க  மறுக்கிறார் . மனம்  வருந்திய  சுந்தரர்  ஈசனை  சரண்  அடைகிறார் .ஈசன்  தன்  பக்தனுக்காக  பரவையாரிடம்  தூது  செல்லவும் தயாராகிறார் . மு தியவராக  சென்று  பரவையை  சமாதானம்  செய்ய  முடியாமல்   தன்  சுய  உருவத்தை  அவருக்கு  காட்டி  நடந்த  உண்மையை  உரைத்து  அவர்கள்  பிறவி  ரகசியத்தையும்  உணர்த்தி  அவளை  சமாதான  படுத்துகிறார் . உண்மை  உணர்ந்து  அவளும்  சுந்தரரை  வரவேற்கிறாள் .

Saturday 18 April 2015

cont2

கண்  பார்வை  இழந்தாலும்  திருவாரூர்  ஈசனை  காணும்  ஆவல்  குறை யாதவராய் அடியார்களுடன்   பல  சிவதலங்களை  சே வித்தவாறே  யாத்திரை  தொடங்குகிறார் .கடைசியாக  காஞ்சி  வந்தடைகிறார் . காமாக்ஷி  அன்னையை  மனமுருக  வேண்டிக்கொண்டு   ஏகாம்பரேஸ்வரர்  முன்  மண்டியிட்டு  ஈசனை காணும்  பாக்கியம்  பெற  கண்ணொளி  வேண்டுகிறா ர் ..ஈசன்  பெரும்  கருணையால்  ஒரு  கண்ணில்  ஒளி  பெறுகிறார் . நன்றி  பெருக்குடன்  அவரை  வாயார  பாடி  துதிக்கிறார் . பிறகு  பயணத்தை . தொடர்கிறார் .   கடைசியாக  திருவாரூர்  வந்தடைகிறார் . பலகாலம்  பிரிந்த  நண்பனை  காணும்   மனம்  எத்தனை  ஆனந்தம்  அடையுமோ  அத்தனை  ஆனந்தத்துடன்  அவரை  தரிசிக்க  வருகிறார் . அவரை  உரிமையுடன்  (மற்றை  கண்தான்  தாராது  ஒழிந்தால்  வாழ்ந்து  போதீரே !) என்று  பாடுகிறார் .ஈசன்  பிரிய  நண்பனை  கைவிடுவாரா ? உடனே  மற்றைய  கண்   ஒளியையும்  பெறுகிறார் .

Thursday 16 April 2015

sundarar cont.

வீட்டை  விட்டு வெளியேறிய  சுந்தரர்  திருவாரூரை  நோக்கி   புறப்பட்டார் . திருவாரூர்  எல்லையை  தாண்ட  கால்  எடுத்து  வைத்ததும்  அவருடைய  இரு  கண்களும்  பறிபோயின . நண்பனாக  இத்தனை  பரிவுடன்  உதவிய  ஈசன்  தவறிய  போது  தண்டிக்க  தவறுவானா ? ஈசன்  முன்  செய்த  சத்தியத்தை  மீறி  திருஒற்றியூரின்  எல்லையை  தாண்ட  முயன்றதால்  உண்டான  விளைவு . சுந்தரர்  துடிக்கிறார் . ஈசனை  இனி காண  முடியாது  எனும்  எண்ணமே  அவரை  வாட்டுகிறது .     

Monday 13 April 2015

sngiliyar

சநகிலியா ருடன்  சிறிது காலம்   வாழ்ந்த  சுந்தரர்  திருவாரூர்  ஈசனை  காணாமல்  இனியும்  இருப்பது  சாத்தியம்  இல்லை  எனும்  நிலையை  அடைகிறார் .ஒரு  நாள்  இரவு  சங்கிலியாரிடம்  சொல்லிக்கொள்ளாமல்  வீட்டை  விட்டு  வெளியேறுகிறார் . காலையில்  எழுந்த  சங்கிலி நாச்சியார்  சுந்தரரை  காணாமல்  தடுமாறுகிறார்  .பிறகு  எல்லாம்  ஈசன்  செயல்  என்று  தன்னை  தானே  தேற்றிக்கொண்டு  தன்  மலர்  கைங்கர்ய  சேவையை  தொடர்கிறார் .

Friday 10 April 2015

sangiliyar2

இந்த நிபந்தனையை  கேட்ட  சுந்தரர்  அதிர்ச்சி  அடைகிறார் .திருவாரூர்  வீதி  விடங்கரை  மறந்து  வாழ்வது  சாத்தியமா ? என  யோசித்து  திருஒற்றியூர்  ஐயனை  அணுகி  உரிமையுடன்  அவரை  லிங்க  திருமேனியிலிருந்து  தல  வ்ருக்ஷத்தில்  எழுந்து  இருக்க  வே ண்டுகிறார் . அவரும் சம்மதிக்கிறார் . அனால்  சங்கிலியாரின்  கனவில்  தோன்றி  ஈசன்  அந்த வ்ருக்ஷ த்தின்  முன்  சத்தியம்  வாங்க  கோருகிறார் . மறுநாள்  சங்கிலியாரின்  இந்த  கோரிக்கையை  கேட்டு  அதிர்ந்த  சுந்தரர்  மறுக்க  முடியாமல்  அவ்வாறே  மரத்தின்முன்  சத்தியம்  செய்கிறார் .சிறிது  காலம்  இன்பமாக  வாழ்ந்த  சுந்தரர்   திருவாரூர்  ஈசன்  நினைவு  அவரை  அலைக்கழிக்கிறது 

Wednesday 8 April 2015

sangiliyar

சங்கிலி  நாச்சியார்  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்து  கொண்டு  மனதை  அவரிடமே  செலுத்திக்  கொண்டு  திருமணத்தில்  நாட்டமில்லாமல்  வாழ்ந்து  வந்தார் . சுந்தரரை  கண்டு  சிறிது  சலனப்பட்டாலும்  தன்னை  மணப்பதற்கு  சுந்தரர்  திருஒற்றியூ ர்  எல்லையை  தாண்ட  மாட்டேன்  என்று  ஈசன்  மீது   ஆணை  இட  வேண்டும்  என்னும்  நிபந்தனை  வைக்கிறாள்  

Monday 6 April 2015

sangiliyar

இப்போது  சுந்தரர்  கைலையில்  அவர்  கண்டு  மையல்  கொண்ட  இரண்டாவது  மங்கையை  மணந்த  சம்பவத்தை  நோக்குவோம் .
சுந்தரர்  பல  கிராமங்களில்  உள்ள  கோயில்களை  அடைந்து  ஈசனை  மனமுருகி  பாடிக்கொண்டு  செல்கிறார் . அவ்வாறு  யாத்திரை  செய்துகொண்டு  திருஒற்றியூரை  அடைகிறார் .  அவர் கைலையில்  மனம்  பறிகொடுத்த  மங்கை  அங்கு  ஈசனுக்கு  மலர்  கைங்கர்யம்  செய்துகொண்டு  ஈசனிடம்  மிக்க  பற்று கொண்டவளாக  வாழ்ந்து  கொண்டிருந்தாள் . சுந்தரர்  அவளை  கண்ட  உடனேயே  அவளிடம்  மனம்  பறிகொடுக்கிறார் . ஈசனிடம்  விண்ணப்பிக்கிறார் . 

Wednesday 1 April 2015

cont.

சுந்தரர்  திரு  ஓணகாந்தன்தளி  என்னும்  தலத்தை  அடைந்து  அந்த  ஈசனை  உரிமையுடன்  பாடி  நிதி  பெற்று  வருகிறார் . இவை  எதுவுமே  சொந்த  தேவைக்காக  பெறவில்லை . பொதுநல  தேவைக்கே . இவை  சுந்தரர்  நிதி  பெற்ற  சம்பவங்கள்  . ஆனால்  ஈசன்  குறிப்பறிந்து   அவருடைய  பசி  ஆற்றிய  சம்பவங்கள்  மெய்  சிலிர்க்க  வைக்கும் . அவர் இதை     உருகி  பாடி  இருக்கிறார் . பல  கோயில்களை  வழிபட்டு  பிறகு  அவர்  தன் அடியார்களுடன்  சம்பந்தமூர்த்தி  பிறந்த  இடமான  சீர்காழி  வந்தடைகிறார் . ஈசனை பாடி  துதித்து மிகவும்  களைப்படைந்து  வெளியே  வந்தனர் . அங்கு  ஒரு  முதியவர்  ஒரு பந்தலில்  எல்லோரையும்  அமர  செய் து அமுது  படைத்தார் . எல்லோரும்  உண்டு  உறங்கி  எழுந்த  போது  பந்தல்  எல்லாம்  மாயமாக  மறைந்து  விட்டிருப்பதை  கண்டு  அமுது  படைத்தது  ஈசன்  என்பதை  உணர்ந்து  அவருடைய  நெகிழ்ச்சி  சொல்ல  வார்த்தை  இல்லை .இதற்க்கெல்லாம்  மேலாக  ஈசன்  திருக்கச்சூரில்  ஆடிய  திருவிளையாடல்  சுந்தரர்  மேல்  அவர்   கொண்ட  பாசம்  நன்றாக  விளங்கும் . சுந்தரர்  அடியார்களுடன்  மிகுந்த  பசியுடன்  திருக்கச்சூர்  அடைந்த  போது  ஈசன்  அந்தணர்  வடிவில்  தோன்றி  அந்த  பிராம்மணர்கள்  இல்லங்களிலிருந்து  உஞ்ச விருத்தி  செய்து  அமுது  படைக்கிறார் . ஈசனின்  அன்புதான்  என்னே ? 

Tuesday 31 March 2015

esan kodai

 ஈசன்  சுந்தரருக்கு  அளித்த  கொடைகள்  பிரமிக்க  வைக்கும் . பங்குனி  உத்திரத்தன்று  தன்  அடியார்களுக்கெல்லாம்  தானம்  வழங்க  பொருள் வேண்டி திருபுகலூர்  ஈசனிடம்  தஞ்சம்  அடைகிறார் . அவரை  பாடி  துதித்து  களைப்பு  மேலிட  செங்கல்களை  அடுக்கி  அதில்  தலை  வைத்து  படுக்கிறார் . எழுந்து  பார்க்கையில்  அவை  தங்கமாக  மாறி  இருப்பது  கண்டு  ஈசனின்  கருணையை  கண்டு  வியந்து  பாடுகிறார் 

Friday 27 March 2015

paravaiyar

கைலையில்  சுந்தரரை  கவர்ந்த  மங்கையரில்  ஒருவர்  திருவாரூரில்  பிறந்து  வாழ்கிறார்  .பரவையார்  என்பது  அவர்  பெயர் . அழகிலும்  மற்ற  கலைகளிலும்  தேர்ந்தவர் . சிறந்த  சிவபக்தி  உடையவர் . தினமும்  த்யாகேசர்  முன் பாடி  ஆடும்  பழக்கமுடையவர் . தியாகேசர்  அருளால்  அவர்கள்  சந்திக்க  நேர்கிறது . ஈசன்  திருவருளால்  அவர்கள்  திருமணம்  இனிதே  நடைபெருகிறது . சுந்தரர்  அழகும்  பக்தியும்   அவர் பாடிய  பாக்களும்  அவருக்கு பெரும்  மதிப்பை  எற்படுத்தி  இருந்தது . சில  பெரியவர்கள்  தங்கள்  பெண்களை  மணக்குமாறு  சுந்தரரை   வேண்டினர் . ஆனால்  சுந்தரர்  மறுமுறை  அத்தவறை  செய்வாரா ? அப்பெண்களை  தன்  மடியில்  இருத்தி  காதில்  மந்திரம்  ஓதி  தன்  மகளாக  ஏற்று   கொள்கிறார் . இவர்கள்  பற்றி  தன்  பாடலிலும்  குறிப்பிட்டிருக்கிறார் .  

Monday 23 March 2015

thirvarur

சுந்தரர்   திருவாரூர்  அடைகிறார் . திருவாரூர்  த்யாகேசர்  கண்டு  வணங்கி  எழுகிறார் . அப்போதே  அவ்விருவருக்கும்  ஒரு  அசைக்கமுடியாத  பந்தம்  ஏற்படுகிறது . அவர்  சுந்தரருக்காக ஆற்றிய  பணிகள்  வியக்க  வைக்கும் . அப்படிப்பட்ட  தோழமை . அவரே  ''தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு   அடியேன் ''  என்று  அடி  எடுத்து  கொடுத்து  சிறந்த  சிவ  பக்தர்கள்  அனைவரையும்  பாட  வைக்கிறார் . அதுவே  திருத்தொண்டர்  தொகை  என  புகழ்  பெற்றது . இவர்  பாடிய  சிவ  தொண்டர்களே  பிற்காலத்தில்  63 நாயன்மார்களாக  எல்லா  சிவாலயங்களிலும்  வீற்றுருக்கின்றனர் .இதுவே  சிறப்புமிக்க  சேக்கிழார்  பெருமானின்  பெரியபுராணம்  உருவாக  காரணமாக  இருந்தது . பெரியபுராணத்தில்  முதலிலும்  கடைசியிலும்  சுந்தரர்  இடம்  பெறுகிறார் . சுந்தரர்  இப்பதிகத்தில்  திருவாரூர்  பிறந்தார்கள்  எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் 

Sunday 22 March 2015

sndarar

'பால்  நினைந்து  ஊட்டும்  தாயினும்  சால  பரிந்து '  என்ற  வாசகத்தின்படி  சுந்தரர்  பசியால்  வாடும்போது ஈசனே   அவருக்கு  பசியாற  அன்னமிட்ட  சம்பவங்களும்  உண்டு . கேட்கவே  மெய்  சிலிர்க்கிறது  அல்லவா? ஆனால்  தவறு  செய்தபோது  தண்டிக்கவும்  தவறவில்லை . அதை  பிறகு  பார்க்கலாம் . சுந்தரர்  இரு  பெண்களை  கண்டு  தடுமாறியதால்  அவர்  புவியில்  பிறந்தார்  என  நினைப்பது  தவறாகும் . அவருடைய  பாக்கள்  சைவத்திற்கு  கிடைக்க  வேண்டும்  என்பதே  ஐயனின்  இச்சை . அவர் பாடிய  'திரு  தொண்டர்  தொகை ' சைவத்திற்கே  ஒரு  பொக்கிஷம் . அவர்  ஆலயங்களை  வழிப்பட்டுகொண்டே  தில்லையை  அடைந்தார் . அங்கு  அவர்  தன நிலை  மறந்து  தொழுது  கொண்டிருந்த  போது  சுந்தரா  திருவாரூர்   செல்  என்ற  கட்டளையை  கேட்டு  திருவாரூர்   செல்கிறார் 

thiruathikai

திருஅதிகை  அப்பர்  அடிகள்  பிறந்து  வாழ்ந்த  இடம்  .ஆதலால்  சுந்தரர்  அந்த  மண்ணில்  கால்  வைக்க  கூசி  ஊர்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகிறார் . இதை அறிந்த  ஈசன்  சுந்தரரை  காண  தான்  சென்று  இந்த  நாடகமாடுகிறார் . சுந்தரரின்  பக்தி  அத்தனை  உயர்வானது . ஆலால  சுந்தரர்  கைலையில்  ஈசனுடன்  இருந்தபோது   பாற்கடலில்  எழுந்த  விஷத்தை  இவர்  ஏந்தி  ஈசனிடம்  ஒப்படைத்ததால்  இவருக்கு  ஆலால  சுந்தரர்  எனும்  பெயர்  வழங்கலாயிற்று . இதன்  காரணாமாக  ஈசனுக்கு  அவர்  மீது  அத்தனை  வாஞ்சை .

Wednesday 18 March 2015

cont.

சுந்தரருக்கு  வாக்களித்தபடி  ஈசன்  அவருக்கு  தன்னை  காட்டிகொண்ட  நிகழ்ச்சிகள்  பல .முதல்  முறையாக  சுந்தரர்  தன்னை  மறந்து  ஒரு பெண்ணை  மணக்க  முனைந்த  போது  முதியவராக  வந்து  திருமணத்தை  நிறுத்தி  அவரை  ஆட்கொண்டது  கண்டோம் . பிறகு  திருவதிகை  என்னும்  ஊரின்  வெளியே  ஒரு  சத்திரத்தில்  உறங்குகையில்  சுந்தரர்  தன தலை  மீது  யாரோ  பாதம்  வைப்பதை உணர்ந்து  வேறு  பக்கம்  தலை  வைத்து  படுக்கிறார் . அப்போதும்  அதே  போல்  தன்  தலைமேல்  பாதம்  வைப்பதை  கண்டு  வியப்படைகிறார் . அப்போது  ஈசன்  சுந்தரா , என்னை  தெரியவில்லையா ?   என்று  கேட்டு  மறைகிறார் .சுந்தரர்  ஈசன்  கருணையை  நினைத்து  நெ க்குருகுகிறார் . 

sundararcont.

சுந்தரரின்  பக்தி  தோழமையான  பக்தி  நிறைய  பாடல்களில்  அது  வெளிப்படும் . சில பாடல்களில்  அதிக சலுகை  எடுத்து  கொள்வதாககூட  தோன்றும் . ஈசனும்  அவ்வாறே  அவருடன் தோழமையுடன்  பழகியதை  காணமுடிகிறது . சுந்தரருக்காக  தூது  செல்கிறார் . ஈசன் கருணை  தான்  என்னே ? இதன்  காரணாமாக  சுந்தரருக்கு  தம்பிரான்  தோழன்  என்ற  பெயரும்  உண்டு  

Tuesday 17 March 2015

cont.

சுந்தரர்  இவ்வாறு  ஈசனுடன் வாதம்  செய்து   பின்  கண்டுகொண்டு  சரணடைந்ததால்  அவருக்கு  வந்தொண்டன்  என்ற  பெயர்  வழங்கலாயிற்று .  

Friday 13 March 2015

sundarar2 cont.

சுந்தரர் 3 படிக்குமுன்  இந்த  பகுதியை  படிக்குமாறு  கேட்டுக்கொள்கிறேன் . எழுதியது  கை  தவறுதலால்  அழிந்துவிட்டது . மன்னிக்கவும் .
 சுந்தரரின்  அழகை  கண்டு  திருமுனைப்பாடி அரசன்  நரசிங்க முனையரையன்  சுந்தரரை  தானே  வளர்க்கிறான் . அரண்மனையில்  வளர்ந்தாலும்  சுந்தரர்  தன குல தர்மம்  மறக்காமல்  வேத  பாடங்களையும்  கற்று  தேர்ந்தான் . அவனுக்கு  தக்க  வயது  வந்தபோது  பெரியோர்கள்  சுந்தரருக்கு  திருமணம்  செய்ய  ஏற்பாடுகள்  செய்தனர் . திருமண  சடங்குகள்  நடக்கையில்  அங்கு  ஒரு முதியவர்  தோன்றி  ஒரு  ஓலையை  காண்பித்து  சுந்தரர்  குடும் பத்தவர்  3தலைமுறையாக  தம்  குடும்பத்திற்கு  அடிமை  என்று  சொல்லி  திருமணத்தை  நிறுத்த  ஆணை  இடுகிறார் . பெரும்  கோபம்  கொண்ட  சுந்தரர்  அந்த  ஓலையை  கிழித்து  எறிந்து  அந்தணர்களை  அடிமை  படுத்த இயலாது  என்று  பித்தன்  பேயன்  என்று   பலவாறு  ஏசுகிறார்    

Thursday 12 March 2015

s.4

சுந்தரா  என்னை  நீ  உணரவில்லையா ? என்ற  குரலை  கேட்ட  சுந்தரர்  பிரமித்து  போய்  தன்  தவறை  உணர்கிறார் . வந்தது  ஈசன்  என்பதை  உண ர்கிறார் .தனக்கு  வார்த்தை  கொடுத்ததை  ஈசன்  மறவாமல்  தான்  செய்ய  இருந்த  பெரும்  பாவத்திலிருந்து  தன்னை  காத்த  ஈசனின்  அன்பை  வியந்து  நெகிழ்ந்து  பலவாறு  பிதற்றுகிறார் . ஈசன்  'என்னை  பாட  அல்லவோ  நீ  பிறந்தாய் ? பாடு ' என  கட்டளை  இடுகிறார் . என்ன  பாடுவேன்  என  தன அறியாமையை நினைந்து   நெக்குறுகி  வினவுகிறார் . ஈசன்  தன்னை  பித்தா  என்றெல்லாம்  ஈசினாயே  அதையே  பாடு  என்று  சொல்ல  ''பித்தா  பிறை  சூடி  பெருமானே  அருளாளா '' என்ற  பதிகம்  பாடுகிறார் .