Friday 27 September 2019

  காம்பிலி   நகரத்தில்   சாலியர்   குலத்தில்   நேசர்   எனும்   பெயர்   கொண்ட   அன்பர்   ஒருவர்   வாழ்ந்து   வந்தார் .  அவர்  சிவபெருமானை   மிக்க   பக்தியுடன்   சேவிப்பவர் .  அவருடைய   அபார   சிவபக்தியும்   அவருடை   நற்குணங்களும்   அவரை   அக்குல   தலைவன்     ஆக்கியது .   மகிழ்ச்சியுடன்   அப்பொறுப்பை   ஏற்று   மக்களுக்காக   மிக   பாடுபட்டு   உழைத்தார் .     நெஞ்சத்தில்   எம்பெருமானையே   நினைத்து   கொண்டு   பஞ்சாக்ஷரத்தை    ஜபித்தபடியே   இருப்பார் .   அடியார்களுக்கு   வேண்டியதை   மனம்   குளிர   செய்து   மகிழ்வார் .   இவ்வாறே   வாழ்ந்து   இறைவன்    திரு   அருளுக்கு   பாத்திரமாகி   அவர்     திருவடியையே   அடைந்தார் .      

No comments:

Post a Comment