காம்பிலி நகரத்தில் சாலியர் குலத்தில் நேசர் எனும் பெயர் கொண்ட அன்பர் ஒருவர் வாழ்ந்து வந்தார் . அவர் சிவபெருமானை மிக்க பக்தியுடன் சேவிப்பவர் . அவருடைய அபார சிவபக்தியும் அவருடை நற்குணங்களும் அவரை அக்குல தலைவன் ஆக்கியது . மகிழ்ச்சியுடன் அப்பொறுப்பை ஏற்று மக்களுக்காக மிக பாடுபட்டு உழைத்தார் . நெஞ்சத்தில் எம்பெருமானையே நினைத்து கொண்டு பஞ்சாக்ஷரத்தை ஜபித்தபடியே இருப்பார் . அடியார்களுக்கு வேண்டியதை மனம் குளிர செய்து மகிழ்வார் . இவ்வாறே வாழ்ந்து இறைவன் திரு அருளுக்கு பாத்திரமாகி அவர் திருவடியையே அடைந்தார் .
No comments:
Post a Comment