Saturday 14 September 2019

மனதில்   கோயில்   அமைக்க   முடிவு   செய்து   உடனே  பூசலார்   மன   அமைதி   பெற்று    அப்பணி     துவக்க   நல்ல   நாள்   குறித்தார் .  அந்த   நல்ல   முகூர்த்த   நாளில்   நல்ல   வேளையில்   ஏரிக்கரையில்   அமைதியான   நல்ல   இடத்தை   தேர்ந்தெடுத்தார் .   சுத்தமாக   தீர்த்தமாடி   எம்பெருமானை   மனதார  தோத்திரம்   செய்து   கண்களை   மூடிக்கொண்டு   அங்கு   அமர்ந்தார் .  அவர்   மனக்கண்முன்   கட்டுமான   பணிக்கான   கல் ,  மண் .  சுன்ணான்பு   மற்ற   சாமான்கள்  மற்றும்   வேலை   செய்ய   ஆட்கள்   எல்லாம்   தயாராக   வந்து   சேர்ந்தன .  பூமி   பூஜை   போட   பூஜை   செய்பவர்கள்   வந்து   சாஸ்திரப்படி   பூஜை   செய்து  வேலை   துவங்கி   வைக்கப்   பட்டது .   பூசலார்   மனதார   இவைகளை   கண்டு   பரவசமாகி   களிப்பில்   மூழ்கி    இருந்தார் 

No comments:

Post a Comment