மனதில் கோயில் அமைக்க முடிவு செய்து உடனே பூசலார் மன அமைதி பெற்று அப்பணி துவக்க நல்ல நாள் குறித்தார் . அந்த நல்ல முகூர்த்த நாளில் நல்ல வேளையில் ஏரிக்கரையில் அமைதியான நல்ல இடத்தை தேர்ந்தெடுத்தார் . சுத்தமாக தீர்த்தமாடி எம்பெருமானை மனதார தோத்திரம் செய்து கண்களை மூடிக்கொண்டு அங்கு அமர்ந்தார் . அவர் மனக்கண்முன் கட்டுமான பணிக்கான கல் , மண் . சுன்ணான்பு மற்ற சாமான்கள் மற்றும் வேலை செய்ய ஆட்கள் எல்லாம் தயாராக வந்து சேர்ந்தன . பூமி பூஜை போட பூஜை செய்பவர்கள் வந்து சாஸ்திரப்படி பூஜை செய்து வேலை துவங்கி வைக்கப் பட்டது . பூசலார் மனதார இவைகளை கண்டு பரவசமாகி களிப்பில் மூழ்கி இருந்தார்
No comments:
Post a Comment