Tuesday 24 September 2019

அரசன்   அடியாரின்   ஸ்பரிசத்தால்   மெய்சிலிர்த்து   போனான் .  அவன்   கண்ட   காட்சி   அவரை   புல்லரிக்க   வைத்தது .   வானளாவிய    கோபுரம்   எங்கும்   மங்கள   ஒலி .  வேத   மந்திரங்கள்   ஓத   அர்ச்சகர்கள்   குடங்களில்   மந்திரித்த    நீரை   ஐயன்   திருமேனியில்   அபிஷேகம்   செய்யும்   அரிய   காட்சி .  அரசன்   மெய்சிலிர்த்து   போனான் .  எப்பேர்ப்பட்ட   அரிய   காட்சி .  தன்னை   மறந்தான் .   தன்நினைவு   பெற்ற   அரசன்   பூசலார்   காலடியில் விழுந்து      வணங்கினான் .  அவரிடம்   'ஸ்வாமி   தங்கள்   அருளால்   காண   கிடைக்காத    காட்சி   கண்டேன் .  தங்கள்   மனதில்   எழுந்த   இந்த   அற்புத   ஆலயத்தை   நான்   கண்டிப்பாக   நினைவாக்குவேன் .   விரைவிலேயே   ஆலய   பணிகளை   துவங்குகிறேன் .'  என்று   கூறி   ஆசிபெற்று   காஞ்சி   திரும்பினான் .   ஊர்   மக்கள்   அவருடை   பெருமையை   உணர்ந்து      கொண்டு   அவரை   வெகுவாக   கொண்டாடினர் .  அவரும்   ஈசன்    தொண்டில்   தொடர்ந்து    அர்ப்பணித்து   வாழ்ந்து   சிவமானார் .       

No comments:

Post a Comment