அரசன் அடியாரின் ஸ்பரிசத்தால் மெய்சிலிர்த்து போனான் . அவன் கண்ட காட்சி அவரை புல்லரிக்க வைத்தது . வானளாவிய கோபுரம் எங்கும் மங்கள ஒலி . வேத மந்திரங்கள் ஓத அர்ச்சகர்கள் குடங்களில் மந்திரித்த நீரை ஐயன் திருமேனியில் அபிஷேகம் செய்யும் அரிய காட்சி . அரசன் மெய்சிலிர்த்து போனான் . எப்பேர்ப்பட்ட அரிய காட்சி . தன்னை மறந்தான் . தன்நினைவு பெற்ற அரசன் பூசலார் காலடியில் விழுந்து வணங்கினான் . அவரிடம் 'ஸ்வாமி தங்கள் அருளால் காண கிடைக்காத காட்சி கண்டேன் . தங்கள் மனதில் எழுந்த இந்த அற்புத ஆலயத்தை நான் கண்டிப்பாக நினைவாக்குவேன் . விரைவிலேயே ஆலய பணிகளை துவங்குகிறேன் .' என்று கூறி ஆசிபெற்று காஞ்சி திரும்பினான் . ஊர் மக்கள் அவருடை பெருமையை உணர்ந்து கொண்டு அவரை வெகுவாக கொண்டாடினர் . அவரும் ஈசன் தொண்டில் தொடர்ந்து அர்ப்பணித்து வாழ்ந்து சிவமானார் .
No comments:
Post a Comment