Friday 16 August 2019

கடல்   சூழ்ந்த   உலகெல்லாம்   காக்கின்ற   பெருமான்
காடவர்கோன்   கழற்சிங்கன்   அடியார்க்கும்   அடியேன் |

பல்லவ   குலத்தில்   பிறந்த   கழற்சிங்கன்   எனும்   அரசன்   நாட்டை   ஆண்டு   கொண்டிருந்தான் .   அவன்  சிவபெருமானிடம்   அளவற்ற   பக்தி   கொண்டவன் .   அவ்வீ சன்   பேரருளால்   பகைவர்களை   வென்று  சைவநெறி   எங்கும்   தழைக்க   செய்து   நல்லாட்சி   புரிந்து   வந்தார் .    அப்போது   அவருக்கு   அரனார்   ஆலயங்களையெல்லாம்    சேவித்து   வர   பெரும்   ஆவல்   உண்டாயிற்று .   மனைவியுடன்   தல   யாத்திரை   புறப்பட்டார் .   அவ்வாறு   ஆலயங்களை   தரிசித்து   கொண்டு   திருவாரூர்   வந்து   சேர்ந்தனர் .   அங்கு   ஐயன்   ஆலயத்தில்   நுழைந்ததும்   அரசர்   எம்பெருமான்   சன்னதிக்குள்   சென்று   அவரை   மனம்   குளிர   தரிக்கலானார் .   ராணியார்   பிரகாரங்களை   சுற்றி   பார்க்க   கிளம்பினார் .சுற்றி   பார்த்துக்கொண்டு   வந்தவர்   அழகை   ரசித்தபடி    எம்பெருமானுக்கு   பூத்தொடுக்கும்   மண்டபம்   வந்தடைந்தார் .  அங்கு   கீழே  விழுந்திருந்த    ஒர்   அழகிய   மலரை   எடுத்து   முகர்ந்தார் .    

No comments:

Post a Comment